என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது புகார் எழுந்தது.
    • தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    காத்மண்டு:

    நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 2022-ம் ஆண்டு ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது பாலியல் புகார் எழுந்தது

    இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

    தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது

    எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சேனின் விசாவை நிறுத்தி வைத்தது. அமெரிக்க தூதரகத்தின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக சந்தீப் லமிச்சேன் தெரிவித்தார்.

    இந்நிலையில், நேபாள வீரர் சந்தீப் லமிச்சேனின் அமெரிக்க விசா விண்ணப்பம் 2-வது முறையாக நிராகரிக்கப்பட்டது. இதனால் டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

    • மூன்று கூட்டமைப்புகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன.
    • இம்மாத இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

    உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) சார்பில் இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 15, 2024 வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்த தொடரில் அடுத்த இரு ஆண்டுகள் உலக செஸ் சாம்பியனாக இருக்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்துவிடும். உலக செஸ் சாம்பியன் படத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் சீனாவின் டிங் லைரென் களமிறங்குகிறார்.

    மறுப்பக்கம் செஸ் வரலாற்றிலேயே இளம் வயதில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற பெருமையுடன் இந்திய வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளார். உலகின் அடுத்த செஸ் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டிகளை நடத்த உலக செஸ் கூட்டமைப்பிடம் மூன்று கூட்டமைப்புகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன.

    இதில் தமிழ்நாடு அரசு சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்றும் டெல்லியில் நடத்த வேண்டும் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடத்த அந்நாட்டு அரசும் விண்ணப்பித்துள்ளன.

    மூன்று விண்ணப்பங்களும் அடுத்த வாரம் நடைபெறும் உலக செஸ் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும். இந்த ஆலோசனை கூட்டத்தில் விண்ணப்பதாரர்கள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஆலோசனை கூட்டத்தில் செஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான கேள்விகளுக்கு பிரதிநிதிகள் பதில் அளிக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக இம்மாத இறுதியில் உலக செஸ் கூட்டமைப்பு சார்பில் முடிவுகள் அறிவிக்கப்படும். 

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷியா வீரர் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷிய வீரரான ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டுடன் மோதினார்.

    இதில் அர்னால்டு 7-6 (8-6), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 4-வது சுற்றில் அர்னால்டு, சிட்சிபாசை சந்திக்கிறார்.

    • புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
    • நியூ யார்க் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தார்.

    உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இந்த தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறப்பு மற்றும் குழந்தைக்கு அவர்கள் சூட்டிய பெயரை அறிக்கை வாயிலாக அறிவித்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி, இந்த நேரத்தில் தங்களுக்கு தனிமை அவசியம் என்றும் பொது வெளியில் தங்களது குழந்தைகளை யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

    இந்த நிலையில், தங்களது கோரிக்கைய ஏற்று தனியுரிமையை பாதுகாத்ததற்காக புகைப்பட கலைஞர்களுக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக விராட் கோலி இந்தியாவில் இருந்து நியூ யார்க் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தார்.

    தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுக்கு விமான நிலையத்தில் வைத்து புகைப்பட கலைஞர்கள் விராட் கோலியிடம் நன்றி தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த விராட் கோலி அவை தனது மனைவியின் ஏற்பாடு என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



    • பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.
    • 4 போட்டி கொண்ட டி20 தொடரில் 2-0 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.

    லண்டன்:

    பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.

    4-வது டி20 போட்டி நடைபெற்ற நேற்று முன்தினம் பாகிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கானை பெண் ரசிகை ஒருவர் சந்தித்து அவரது பார்ம் குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பான உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது ஷதாப் கான் ரசிகர்களுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது ஒரு பெண் ரசிகர், ஷதாப் கானிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். நீங்கள் ஏன் இவ்வளவு சிக்சர்களை விட்டுக் கொடுக்கிறீர்கள்? நீங்கள் மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டும். அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என வற்புறுத்தினார்.

    பெண் ரசிகையின் கேள்விக்கு ஷதாப் கான் மௌனமாக புன்னகைத்தார். இந்த உரையாடல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் விரைவாக பரவியது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடந்தது.
    • அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் சிஹாரு ஷிடா-மத்சுயுமா ஜோடியுடன் மோதியது.

    இதில் ஜப்பான் ஜோடியிடம் 21-23, 11-21 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • ஐபிஎல் தொடரில் கேகேஆர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் விளங்கியதால் அவருக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
    • இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் பதவியேற்கும் பட்சத்தில் கே.கே.ஆர் அணியின் பயிற்சியாளர் பணியிலிருந்து அவர் விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சயாளர் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் ஐசிசி 2024 உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த பதிவிக்கான விண்ணப்பம் கடந்த மே 27 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் 3000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    வி.வி.எஸ் லக்ஷ்மண், கௌதம் கம்பீர், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் முதலில் அடிபடத் தொடங்கின. இவர்களுள் கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ தொடக்கத்திலிருந்தே மிகுந்த ஆர்வம் காட்டி வந்தது.

    ஐபிஎல் தொடரில் கேகேஆர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் விளங்கியதால் அவருக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

     

    ஆனால் கே.கே.ஆர் இணை உரிமையாளர் ஷாருக் கான், காம்பீரை தங்கள் அணியிலேயே தக்கவைத்துக்கொள்ள விரும்புவதால் காம்பீர், இந்தியஅணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பாரா? அல்லது நிராகரிப்பாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் விரைவில் பதவி ஏற்க உள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

     

    இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் பதவியேற்கும் பட்சத்தில் கே.கே.ஆர் அணியின் பயிற்சியாளர் பணியிலிருந்து அவர் விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
    • ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன.

    கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய அணியின் கேப்டனாக சவுதி ப்ரோ லீக் தொடரில் அவ்வணியை திறமையாக வழிநடத்தி பைனல்ஸ் வரை அழைத்து வந்தார். அதன்படி நேற்று (மே 31) சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ள கிங் அப்துல்லா மைதானத்தில் வைத்து நடந்த கிங் கப் சவுதி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அல்- ஹிலால் அணியை ரொனால்டோவின் அல்- நாசர் அணி எதிர்கொண்டது.

    இந்த போட்டியில் இறுதிவரை போராடிய அல்- நாசர் அணி பெனால்டி ஷூட்டை தவறவிட்டதன் மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணியிடம் தோற்றது. இந்நிலையில் பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

    ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன. அவர் அழும் வெடியோவைப் பகிர்ந்து அவருக்கு நெட்டிசன்களும் ரொனால்டோ ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    கால்பந்து விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவரான ரொனால்டோ தோல்விக்காக கண்ணீர் விட்டு அழுத்தத்தில் ஆச்சர்யம் இல்லை என்று கூறும் நெட்டிசன்கள், கிரிக்கெட்டை போல் வணிக லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ரொனால்டோ போன்ற உண்மையான வீரர்கள் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்று கருத்து கூறி வருகின்றனர்.

    முன்னதாக லீக் தொடரில் அல் நசர் அணி, அல் இத்திஹாத் அணியுடன் மோதிய போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்கு முன் ஒரு கோல், ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் மற்றொரு கோல் என இரண்டு கோல்களை ரொனால்டோ அடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் 35 கோல்களை அடித்து, ஒரே சீசனில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா- கனடா அணிகள் இன்று களம் காணுகின்றன.
    • உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன.

    20 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா- கனடா அணிகள் களம் காணுகின்றன.

    அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் வடிவிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது உலகக் கோப்பையில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வரலாறு படைத்தது.

    ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டதை தவிர்த்து, 2 ஆண்டுக்கு ஒரு முறை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன.

    இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.

    இதில் அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய குட்டி அணிகள் 20 ஓவர் உலகக் கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கின்றன.

    அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.

    சூப்பர்-8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதி முன்னேறும்.

    வெஸ்ட் இண்டீசில் 6 மைதானங்களில் இறுதிப்போட்டி உள்பட 39 ஆட்டங்களும், அமெரிக்காவில் 3 மைதானங்களில் 16 ஆட்டங்களும் நடக்கின்றன. அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.

    முன்னணி அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு வருவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தான் நீயா-நானா குடுமிபிடி ஆரம்பிக்கும்.

    இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் அல்லது வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு வரும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாகும்.

    அதே சமயம் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, அயர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் அளித்தால், கணிப்புகள் மாறலாம்.

    இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆகி விட்டது. 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணிக்கு ஐ.சி.சி. உலக போட்டிகளில் ஒரே சறுக்கல் தான். ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி அந்த நீண்டகால ஏக்கத்தை தணிக்குமா என்பதே ரசிகர்களின் ஆவலாகும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வருகிற 5-ந்தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது.

    இன்றைய தொடக்க நாளில் புதுமுக அணிகளான அமெரிக்காவும், கனடாவும் டல்லாஸ் நகரில் உள்ள கிரான்ட் பிராரி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

    அமெரிக்க அணியின் கேப்டன் மோனக் பட்டேல் இந்தியாவைச் சேர்ந்தவர். மேலும் 3 இந்தியர்கள் அந்த அணியில் உள்ளனர். நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன் ஓய்வுக்கு பிறகு அமெரிக்க அணியில் இணைந்து விட்டதால் அந்த அணி வலுப்பெற்றுள்ளது. உள்ளூர் சூழலில் சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றியதால் கூடுதல் நம்பிக்கையுடன் வரிந்து கட்டுவார்கள்.

    கனடா அணி சாத் பின் ஜாபர் தலைமையில் களம் இறங்குகிறது. இவ்விரு அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் அமெரிக்காவும், 2-ல் கனடாவும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    அமெரிக்கா: மோனக் பட்டேல் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ், ஆன்ட்ரியாஸ் கவுஸ், நிதிஷ்குமார், ஷயான் ஜஹாங்கிர், ஸ்டீவன் டெய்லர், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், மிலிண்ட் குமார், நிசார்க் பட்டேல், ஷட்லே வான் ஸ்சால்க்விக், அலிகான், ஜஸ்தீப்சிங், நோஸ்துஸ் கென்ஜிகே, சவுரப் நெட்ராவல்கர்.

    கனடா: சாத் பின் ஜாபர் (கேப்டன்), நவ்னீத் தலிவால், ஆரோன் ஜான்சன், ஸ்ரேயாஸ் மோவா, ரவிந்தர்பால் சிங், தில்பிரீத் பஜ்வா, ஜூனைட் சித்திக், நிகோலஸ் கிர்டான், பர்கத் சிங், ரேயான் பதான், ஹர்ஷ் தாகெர், நிகில் தத்தா, ஜெரிமி கார்டன், திலோன் ஹெய்லிஜர், ரிஷிவ் ஜோஷி, கலீம் சனா.

    • 14 வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாட தயாராக உள்ளனர்.
    • சூழலை சாதகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணி ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இதன்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேசத்தை நியூயார்க் நகரில் இன்று சந்திக்கிறது. நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று தான் இந்திய அணியுடன் இணைந்தார். இதனால் அவர் உடனடியாக ஆடுவாரா என்பது சந்தேகம் தான். மற்ற 14 வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாட தயாராக உள்ளனர். பயிற்சி ஆட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடையாது என்பதால் 14 வீரர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு.

    தொடக்க ஆட்டத்திற்கு சரியான ஆடும் லெவன் அணியை கண்டறிய இந்த பயிற்சி போட்டி உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். இதற்கு முன்பு இந்திய அணியினர் நியூயார்க்கில் விளையாடியதில்லை. அதனால் அங்குள்ள சீதோஷ்ண நிலையை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்வது முக்கியம். இங்குள்ள சூழலை சாதகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்திய அணி வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்தியாவின் முதல் பயிற்சி அமர்வில் ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பந்து வீசினார்.
    • இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஜூன் 5-ம் தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்க உளள்து.

    இந்த தொடரில் இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஜூன் 5-ம் தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி நாளை சனிக்கிழமை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இந்திய அணி வீரர்கள் நியூயார்க்கில் உள்ள கான்டியாக் பார்க் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நியூயார்க்கில் நடந்த இந்தியாவின் முதல் பயிற்சி அமர்வில் ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பந்து வீசினார். நடப்பு ஐ.பி.எல் சீசனில் அவரது ஆல்ரவுண்டர் திறம் பெரும் விவாதப் பொருளாக மாறி இருந்த நிலையில், அவரது பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    ஹர்திக் கணிசமான நேரத்தை நெட்ஸில் பேட்டிங்கிற்கு செலவிட்டதாகவும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.
    • இந்திய வீரர்கள் அனைவரும் சில நாட்கள் முன்பே நியூயார்க் சென்று பயிற்சிகளைத் தொடங்கிவிட்டனர்.

    நியூயார்க்:

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.

    இந்நிலையில் விராட் கோலி முதல் போட்டியில் விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய வீரர்கள் அனைவரும் சில நாட்கள் முன்பே நியூயார்க் சென்று பயிற்சிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், விராட் கோலி நேற்று இரவுதான் நியூயார்க் புறப்பட்டார். இதனால் அவர் பங்கேற்பது கடினம் என தெரிய வந்துள்ளது. ஆனால் ஜூன் 5-ம் தேதி நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

    ×