என் மலர்
விளையாட்டு
- ஷிகர் தவானின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால், அக்ஷய் குமார் தவானின் கதாபாத்திரத்தில் நடிக்க சிறந்த தேர்வாக இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
- தினேஷ் கார்த்திக் விராட் கோலியுடன் ஐ.பி.எல் போட்டியில் ஆர்சிபி அணியில் விளையாடி உள்ளார்.
இந்தியாவின் நட்சத்தி கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். 2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமான விராட் கோலி ஒருநாள், டெஸ்ட், டி20 கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.
இவர் பாலிவுட் நடிகரான அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், விராட் கோலியின் சுயசரிதையில், விராட் கோலி காதாபாத்திரத்தை சிறப்பாக செய்வார் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

கோலி எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார் என்பதை ரன்பீரால் பிரதிபலிக்க முடியும் என்று நம்புவதாகவும் இது மிகவும் முக்கியமான பகுதியாக உள்ளது என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ஷிகர் தவானின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால், அக்ஷய் குமார் தவானின் கதாபாத்திரத்தில் நடிக்க சிறந்த தேர்வாக இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
தினேஷ் கார்த்திக் விராட் கோலியுடன் ஐ.பி.எல் போட்டியில் ஆர்சிபி அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சானியா மிர்சா பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார்
- 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிக்கு செல்ல காரணமானவர் ஷமி.
புதுடெல்லி:
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்துள்ளார். இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த தகவல் வைரலானது.
இதுதொடர்பாக சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் கூறுகையில், இது முற்றிலும் வதந்தி. இதுவரை முகமது ஷமியை சானியா மிர்சா சந்தித்ததுகூட கிடையாது என தெரிவித்தார்.
டென்னிசில் இருந்து ஓய்வுபெற்ற சானியா மிர்சா மதிப்புமிக்க பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார் என்பதும், முகமது ஷமி 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி செல்ல முக்கிய காரணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா வெற்றி பெற்றுள்ளார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்திய சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் காலிறுதியில் சபலென்கா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவை சந்திக்கிறார்.
- ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 53 ரன்களை குவித்தார்.
- வங்காளதேசம் சார்பில் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாயினிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இதனிடையே 11.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆஸ்திரேலியா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சார்பில் டேவிட் வார்னர் 53 ரன்களுடனும், கிளென் மேக்ஸ்வெல் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் சார்பில் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
- முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
அட்லாண்டா:
உலககோப்பை கால்பந்து, ஐரோப்பிய கால்பந்து போட்டிகளுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியாகும்.
வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களை சேர்ந்த நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இப்போட்டி பழமையானதாகும். 1916-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
கடைசியாக 2021-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது.
48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இந்திய நேரடிப்படி இன்று காலை அமெரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இன்று காலை நடந்த தொடக்க ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா-கனடா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
49-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரசும், 88-வது நிமிடத்தில் லாடரோ மார்டினெசும் கோல் அடித்தனர்.
- ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
- கேப்டன் நஜ்முல் 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் ஆக அமைந்தது.
இந்த போட்டியில் மஹ்மதுல்லா, மஹெதி ஹாசன் மற்றும் தவ்ஹித் ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் எடுத்து அசத்தினார். 4 ஓவர்களை வீசிய பேட் கம்மின்ஸ் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்று இருக்கிறார்.
- இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் குரூப் 'சி' பிரிவில் உள்ள டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் டென்மார்க் அணி வீரர் மோர்டன் ஹூல்மண்ட் ஒரு கோல் அடித்தார்.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கடைசி வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
- ஸ்பெயிண் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
- இத்தாலி அணி அடுத்த போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் குரூப் "பி"-யில் இடம் பிடித்துள்ள இத்தாலி- ஸ்பெயின் அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் ஸ்பெயின் அணி வீரர் ரிக்கார்டோ கலாஃபியோரி ஒரு கோல் அடித்தார்.
இதன்பின் இத்தாலி அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஸ்பெயிண் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இத்தாலி அணி அடுத்த போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.
- சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.
- பசல்ஹாக் பரூக்கி, ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 8 மற்றும் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 20 ரன்களை அடித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.
அடுத்து வந்த ஷிவம் துபே 10 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களை அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சேர்த்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் பசல்ஹாக் பரூக்கி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நவீன் உல் ஹக் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் ஹசரதுல்லா சசாய் மற்றும் இப்ராகிம் சத்ரான் 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குல்பதின் நயிப் 17 ரன்களை சேர்த்தார்.
அசமதுல்லா ஒமர்சாய் 26 ரன்களை சேர்த்தார். நஜிபுல்லா சத்ரான் 19 ரன்களை சேர்க்க அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 47 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்திய சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் அரை சதம் விளாசினார்.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பருக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பிரிஜ்டவுன்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இன்று ஆப்கானிஸ்தான்- இந்தியா மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சிராஜ்-க்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - விராட் கோலி களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே தடுமாறினர். இதனால் ரோகித் வழக்கம் போல இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பரூக்கி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பண்ட் வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
11 பந்தில் 20 ரன்கள் விளாசிய பண்ட், ரஷித் கான் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். உடனே எதிர்முனையில் இருந்த விராட் கோலி அவுட் என கூற அதற்கு பண்ட் பேட்டில் பட்டது என கூறிய ரிவ்யூ கேட்டார். ஆனால் பேட்டில் படாமல் சென்றது. இதனால் இந்தியாவுக்கு ஒரு ரிவ்யூ வீணானது.
அதனை தொடர்ந்து மிகவும் மந்தமாக விளையாடிய விராட் கோலி 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த துபே 10 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து சூர்யகுமார் மற்றும் பாண்ட்யா ஜோடி ஆப்கானிஸ்தான் பந்து சிறப்பாக எதிர் கொண்டு ரன்களை குவித்தனர்.
குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் அரை சதம் விளாசினார். அடுத்த பந்தே அவரும் வெளியேறினார். 32 ரன்னில் இருந்த நிலையில் பாண்ட்யாவும் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து 7 ரன்னில் ஜடேஜாவும் நடையை கட்டினார்.
இறுதி ஓவரில் அக்சர் படேல் ஏதாவது செய்து அணியின் ஸ்கோரை உயர்த்துவாரா என எதிர்பார்த்த நிலையில் 2 பவுண்டரி விளாசி ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார். கடைசி ஓவரில் மட்டும் 14 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பருக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- முதல் பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- கடைசி நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி செர்பியா கோல் அடித்தது.
யூரோ 2024 கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு நடைபெற்ற போட்டியில் குரூப் "சி"-யில் இடம் பிடித்துள்ள ஸ்லோவேனியா- செர்பியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களாகும் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை.
இறுதியாக ஸ்லோவேனியா 69-வது நிமிடத்தில் கோல் அடித்தது. கோல் கம்பத்திற்கு இடது புறத்தில் இருந்து பாஸ் செய்த பந்தை ஜான் கார்னிக்னிக் கோலாக்கினார். இதனால் ஸ்லோவேனியா 1-0 என முன்னிலை பெற்றது.
அதன்பின் 90 நிமிடம் வரை செர்பியா அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் நிறுத்தம் மற்றும் இன்ஜூரிக்கான நேரமாக கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
95-வது நிமிடத்தில் செர்பியாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை லூகா ஜோவிக் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
ஸ்லோவேனியா அணிக்கு 4 கார்னர் வாய்ப்பும், செர்பியா அணிக்கு 9 கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. இரு அணிகளும் கோல் கம்பத்தை நோக்கி தலா 4 முறை டார்கெட் செய்தனர். செர்பியா வீரர்கள் 586 பாஸ் செய்த நிலையில், ஸ்லோவேனியா வீரர்கள் 347 பாஸ் செய்தனர்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் கோகோ காப் 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.






