என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • உலகக் கோப்பையில் பங்கேற்ற ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் நாடு திரும்ப தாமதம் ஏற்பட்டது.
    • அவர்களுக்கு பதிலாக ஹர்ஷித் ரானா, சாய் சுதர்சன், ஜிதேஷ் சிங் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே செல்கிறது. முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.

    உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதற்கிடையே, அவர்களுக்கு பதிலாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றதன் அடிப்படையில் ஹர்ஷித் ரானா, சாய் சுதர்சன், ஜிதேஷ் சிங் ஆகியோர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ளனர்.

    ஆனால், முன்னணி வீரர்களான இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், வருண் சக்ரவர்த்தி, மயங்க் யாதவ், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் போன்றோரை சேர்க்காதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் வரை இந்திய அணியின் அனைத்து வடிவ வீரராக இருந்த இஷான் கிஷன், பிசிசிஐயிடம் ஓய்வு கேட்டார். தென் ஆப்பிரிக்கா தொடருக்கும், டி20 உலகக் கோப்பை 2024 அணித் தேர்வுக்கும் இடையில் நிறைய நடந்தது. இது மும்பை இந்தியன்ஸ் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரை ஓரங்கட்டி வைக்க தேர்வாளர்களைத் தூண்டியது.

    இஷான் தேர்வுக்கு பரிசீலிக்கப்பட வேண்டுமெனில் ஜார்க்கண்டிற்காக ரஞ்சி டிராபி மற்றும் வேறு சில உள்நாட்டு போட்டிகளில் விளையாடும்படி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் ஐ.பி.எல். தொடருக்காக ஹர்திக் பாண்ட்யாவுடன் பயிற்சிபெற முடிவு செய்திருந்தார்.

    இஷான் கிஷனின் இத்தகைய நகர்வு பிசிசிஐ முதலாளிகள் மற்றும் ஜிம்பாப்வே தொடருக்கு அவரைத் தேர்வு செய்யாத தேர்வாளர்களுடன் சரியாகப் போகவில்லை. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் இஷான் கிஷனை விட பந்தயத்தில் முன்னிலையில் உள்ளனர்.

    இதேபோல கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 7 வீரர்களிடமும் இதேபோன்ற கேள்விகள் கேட்கப்படலாம்.

    • தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.
    • ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாடும் இருதரப்பு போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என ரஷித்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மனித உரிமைகள் மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடரை மீண்டும் தொடங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி சம்மதம் தெரிவித்துள்ளார்.

    மேலும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு வாழ்த்துக்கள் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி தெரிவித்தார்.

    • இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணி மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றது.

    மும்பை:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே செல்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் அணி, மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வேயில் இருக்கும் ஹராரே நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

    அப்போது, மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங் செய்யும்போது, எனது பாஸ்போர்ட்டை காணவில்லை என இந்திய வீரர் ரியான் பராக் கூறியுள்ளார். அவரது பையில் நடத்தப்பட்ட சோதனையில் பாஸ்போர்ட் கிடைத்ததால் பராக் ஹராரேவுக்கு பறந்தார்.

    இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. இணையதளத்திற்கு பேட்டி அளித்த பராக், மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங்கில் எனது பாஸ்போர்ட்டை காணவில்லை. நல்லவேளை, அதே பையில் தான் இருந்திருக்கிறது. இது கவனக்குறைவு கிடையாது. இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்காக ஆர்வமாக உள்ளேன். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்தபின் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் எனது பாஸ்போர்ட், செல்போன் உள்ளிட்ட பொருட்களை எங்கு வைத்தேன் என்பதையே மறந்து விட்டேன். இந்திய அணிக்கு ஆடப்போகிறோம் என்ற ஆர்வத்தில் இந்த தவறு நடந்தது என தெரிவித்தார்.

    • இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் பெரில் என்ற புயல் அவர்களை மேலும் 2 நாட்கள் பர்பட்டாசில் காக்க வைத்து விட்டது. இதனையடுத்து பர்பட்டாசில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை 6 மணி அளவில் புது டெல்லியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

    இந்நிலையில் உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். காலை 11 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக, ரசிகர்கள் படை சூட திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் பயணிப்பார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    பேரணி முடித்தபின் மும்பை வான்கடே மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

    • டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தஸ்கின் அகமது விளையாடவில்லை.
    • பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியலில் அவர் இல்லாததால் போட்டியில் விளையாடவில்லை.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியலில் அவர் இல்லை. இதனால் அவர் போட்டியில் விளையாடவில்லை.

    இதனால், ஹசன் சாகிப் மற்றும் முஸ்தபிசுர் ரகுமான் என்ற 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் வங்காளதேச அணி போட்டியை எதிர்கொண்டது. தஸ்கின் போட்டியில் விளையாடாமல் போனது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் நிபுணர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    அடுத்து நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தஸ்கின் அகமது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் போனதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

    அறையில் படுத்து தூங்கிய அவர், போட்டிக்காக விளையாட எழுந்து வரவில்லை. இதனால் அணி வீரர்களுக்காக தயாராக இருந்த பஸ்சிலும் அவர் ஏறவில்லை. சரியான நேரத்திற்கு வராத சூழலில் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவரை அணி நிர்வாகமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்பின் பஸ்சை தவற விட்டதற்காக சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் தஸ்கின். ஆனாலும் அவரை இந்திய அணிக்கு எதிரான போட்டியில், விளையாட வைக்கவேண்டாம் என அணியின் பயிற்சியாளர் முடிவு செய்திருக்கிறார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் தூக்கம் காரணமாக ஓட்டல் அறையில் மூத்த வீரர் ஒருவர் படுத்துக்கொண்டு, விளையாடாமல் போனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் 144 ரன்களும் பந்து வீச்சில் 11 விக்கெட்டும் பாண்ட்யா வீழ்த்தியுள்ளார்.
    • இவருடன் சேர்ந்து முதல் இடத்தை இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா பகிர்ந்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்த தொடரில் பேட்டிங்கில் 144 ரன்களும் பந்து வீச்சில் 11 விக்கெட்டும் பாண்ட்யா வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார்.

    இவருடன் சேர்ந்து முதல் இடத்தை இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா பகிர்ந்துள்ளார். இருவரும் 222 புள்ளிகளுடன் உள்ளனர். 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னிஸ் உள்ளார். 4, 5 இடங்கள் முறையே சிக்கந்தர் ராசா, சகிப் அல் ஹசன் ஆகியோர் உள்ளனர்.

    இந்திய அணியின் மற்றொரு ஆல் ரவுண்டரான அக்சர் படேல் 7 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இந்தத் தோல்வியால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தத் தோல்வியால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். சில முன்னாள் வீரர்கள் ஒட்டுமொத்த அணியையும் நீக்கவேண்டும் என கோரினர். அணிக்குள் குழுவாதம் பற்றிய வதந்திகளும் உள்ளன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அணிக்குள் சில அரசியல் இருப்பதாகவும், சில வேறுபாடுகள் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

    ஏதேனும் வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் இதற்கு முன் ஆட்டங்களை இழந்திருக்கிறோம். இது வெறும் வெளிப்புற உரையாடல்.

    இதே அணி இறுதிப்போட்டி, அரையிறுதியில் விளையாடியிருந்தாலும் கோப்பையை வெல்லவில்லை என்பது உண்மைதான்.

    அணி எதிர்கொள்ளும் விமர்சனம் நியாயமானது. நாங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் இதற்கு நாங்கள் தகுதியானவர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத வீரர்களால் வெற்றிபெற முடியாது.

    டி20 உலகக் கோப்பையில் எங்கள் ஆட்டத்தில் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நமது இழப்புகளுக்குப் பின் பல காரணங்கள் உள்ளன. ஒரு அணி தோற்றால் பந்துவீச்சும், பேட்டிங்கும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
    • இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியா அணி தாயகம் திரும்பவதாக இருந்தது. அந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

    இருப்பினும், அங்கு சகஜ நிலை திரும்ப தாமதமானதால் இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர். இந்த விமானம் நாளை அதிகாலை டெல்லியில் தரையிறங்கும். வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது.


    நாடு திரும்புவதை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உலகக் கோப்பையுடன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் போஸ் கொடுத்தனர்.


    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், செக் குடியரசைச் சேர்ந்த விட் கோப்ரிவா உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸ், ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வரேவ் 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ராபர்டோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பார்படாஸில் ஏற்பட்ட ‘பெரில்’ புயலால் நாடு திரும்ப முடியாமல் வீரர்கள் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை இந்திய வீரர்கள் டெல்லி வந்தடைகிறார்கள்.

    இந்திய வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் சமூக வலைத்தளத்தில் மில்லியன் கணக்கான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளனர். அவர்கள் பதிவிடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

    இந்த நிலையில், விராட் கோலி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி தன் மனைவி அனுஷ்காவுடன் வீடியோ காலில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பார்படாஸில் ஏற்பட்ட 'பெரில்' புயலால் நாடு திரும்ப முடியாமல் வீரர்கள் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்போது புயலால் ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றும் பயங்கர சூறாவளி காற்றை வீடியோ கால் மூலம் தனது மனைவி அனுஷ்காவுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யும் விராட் கோலியின் வீடியோ வைரலானது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

    இதனிடையே, சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை இந்திய வீரர்கள் டெல்லி வந்தடைகிறார்கள். வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளதால் நாளை டெல்லி விமான நிலையத்தில் கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது.

    • புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
    • பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. 'பிரிவு-5' வகையை சேர்ந்த புயல் என்பதால், மணிக்கு 260 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தீவிர புயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், பிரிட்ஜ்டவுன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

    பலத்த மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. வீரர்கள் பிரிட்ஜ்டவுனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் தங்கினர். இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

    இருப்பினும், அங்கு சகஜ நிலை திரும்ப தாமதமானது. இதனால் இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், இந்தியா அணி நாளை காலை நாடு திரும்புகிறது. அணியுடன் புறப்படும் சிறப்பு விமானம் நாளை அதிகாலை டெல்லியில் தரையிறங்குகிறது.

    பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்பாடு செய்து விமானம் மூலம் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என அனைவரும் நாடு திரும்புகின்றனர்.

    வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளதால் நாளை டெல்லி விமான நிலையத்தில் கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.

    • டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளனர்.
    • ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக கைப்பற்றி ராகுல் டிராவிட் இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறுகிறார்.

    ராகுல் டிராவிட்-ஐ தொடர்ந்து இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட இருக்கிறார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதன்படி முன்னாள் இந்திய அணி வீரர்களான கவுதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோர் இந்தியாவின் அடுத்த பயிற்சியாளருக்கான போட்டியில் உள்ளனர்.


     

    இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் நியமனம் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்பது ஒருபுறம் இருந்தாலும், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளனர்.

    எனினும், இவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு ஐ.சி.சி. போட்டி தொடர்கள் நடைபெற உள்ளன. 2025 ஆம் ஆண்டு துவக்கத்தில் சாம்பியன்ஸ் டிராஃபி, இதைத் தொடர்ந்து 2027 ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    அப்போது இந்திய வீரர் ரோகித் சர்மா 40 வயதை கடந்திருப்பார். விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா 39 வயதில் இருப்பர். அந்த வகையில், 2027 உலகக் கோப்பை தொடரில் இவர்கள் விளையாடுவது அவரவர் உடல்திறன் சார்ந்தே முடிவு செய்யப்படும். அந்த வகையில், புதிய தலைமை பயிற்சியாளர் 2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு பின்பு இந்திய அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும் மிகமுக்கிய பொறுப்பில் இருப்பார்.

     


    இதைத் தொடர்ந்து இந்திய அணியில் மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஏற்ற வைகயில், பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மென்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என சரியான வீரர்களை கண்டறிவது மற்றும் வீரர்களை சரியாக பயன்படுத்திக் கொள்வது அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவது புதிய தலைமை பயிற்சியாளருக்கு சவாலாக இருக்கும்.

    டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறும் நிலையில், இவருக்கு மாற்றாக டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறந்த தேர்வாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தவிர கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் இந்த பதவிக்கு கடும் போட்டியாளர்களாக இருப்பர். டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்கல் இருக்காது என்ற வகையில், ஒருநாள் போட்டிக்கான அடுத்த கேப்டனை தேர்வு செய்வது மிக முக்கிய பணியாக இருக்கும்.

    தற்போதைய கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக பங்காற்றி வருகிறார். அந்த வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரை தொடர்ந்து கேப்டன் பொறுப்பை ஏற்கும் வீரர் யார் என்பதை முடிவு செய்வதும் அதிக சவாலான ஒன்றாக இருக்கும்.

     


    கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.சி.சி. தொடர்களில் இந்திய அணி கடுமையான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடைசியாக விளையாடிய இரண்டு ஐ.சி.சி. தொடர்களில் நடைபெற்ற 20 போட்டிகளில் 19 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.

    அந்த வகையில், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார், டி20 அணிக்கு அடுத்த கேப்டன் யார் என பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் இந்திய அணி தற்காலிக கேப்டன், தற்காலிக பயிற்சியாளருடன் அடுத்தக்கட்ட போட்டிகளுக்கு முன்னேற துவங்கி உள்ளது.

    உலக கிரிக்கெட்டில் வலிமை மிக்க இந்திய அணியை அடுத்து வழிநடத்தப் போவது யார், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் இந்திய அணியின் எதிர்காலம் புதியவர்கள் கையில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

    ×