என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
    • அந்த அணி 0-1 என்ற வகையில் முன்னணி பெற்றது.

    யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று த்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

    அந்த வகையில், நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டிகளில் ரோமானியா - நெதர்லாந்து அணிகளும், அதன் பிறகு நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகளும் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ரோமானியா - நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி அமைதியாகவே துவங்கியது.

    பிறகு, நீண்ட நேரம் பந்தை வைத்திருந்து நெதர்லாந்து அணியின் கோடி கேக்போ பெனால்டி பகுதி அருகே இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற வகையில் முன்னணி பெற்றது. இந்த கோல் மூலம் நடப்பு யூரோ கோப்பையில், கோடி கேக்போ தனது மூன்றாவது கோலை நிறைவு செய்தார்.

    இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மற்றொரு கோல் அடிப்பதில் முனைப்பு காட்டின. எனினும், போட்டியின் முதல் பாதி வரை மற்றொரு கோல் அடிக்கப்படவில்லை. இதன் காரணமாக முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என்ற வகையில் முன்னணியில் இருந்தது. போட்டியின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர் மலென் கோல் அடிக்க அந்த அணி 2-0 என முன்னணி பெற்றது.

    மறுபுறம் பதில் கோல் அடிக்க ரோமானியா அணி வீரர்கள் தீவிரம் காட்டினர். எனினும், அந்த அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் திணறினர். பிறகு சில நிமிடங்களில் மீண்டும் மலென் கோல் அடிக்க நெதர்லாந்து அணி 3-0 என்று தொடர்ச்சியாக முன்னணியில் இருந்தது. போட்டி முடியும் வரை ரோமானியா அணி கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 3-0 என்ற வகையில் போட்டியில் வெற்றி பெற்றது. 



    இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே விறுவிறுப்பு பற்றிக் கொண்டது. இந்த போட்டி துவங்கிய 58 நொடியில் துருக்கி வீரர் மெரி டெமிரல் கோல் அடிக்க, அந்த அணி துவக்கத்திலேயே முன்னணி வகித்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரியா அணி கோல் அடிக்க முனைப்பு காட்டியது.

    எனினும், அந்த அணி வீரர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. போட்டியின் 59-வது நிமிடத்தில் துருக்கி அணி மற்றொரு கோல் அடித்தது. இதைத் தொடர்ந்து போட்டியின் 66-வது நிமிடத்தில் ஆஸ்திரியா கோல் அடித்தது. இதன் காரணமாக ஆஸ்திரியா போட்டியில் தனது முதல் கோலை பதிவு செய்தது.

    துருக்கி 2-1 என்ற நிலையில், போட்டி தொடர்ந்த நிலையில், ஆஸ்திரியா வீரர்கள் மற்றொரு கோல் அடிக்க அதிக தீவிரமாக முயற்சித்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த அணி ஒரு கோல் அடிக்கவும் செய்தது, எனினும், துருக்கி அணியின் கோல் கீப்பர் மெர்ட் குனோக் சாமர்த்தியமாக கோலை தடுத்ததால், ஆஸ்திரியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    போட்டி முடிவில் துருக்கி 2-1 அடிப்படையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அத்தியது. அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற இரு போட்டிகளில் விளையாடிய நான்கு அணிகளில் நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தின. 

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது.
    • நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மோதின. இதில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் முயற்சியில் டேவிட் மில்லர் பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவின் அபாராமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அந்த கேட்ச் தான் இந்த போட்டியின் முடிவையும் மாற்றியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி குறித்து டேவிட் மில்லர் மௌனம் கலைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த தோல்வி ரொம்ப வலிக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது. நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனக்குத் தெரிந்த ஒன்று, இந்த யூனிட்டைப் பற்றி நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்பதுதான்.

    இந்த பயணம் நம்பமுடியாத ஒன்றாக இருந்தது, மாதம் முழுவதும் உயர்வும் தாழ்வும் இருந்தது. நாங்கள் வலியை சகித்துக் கொண்டோம். ஆனால் இந்த தோல்வி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், நாங்கள் தொடர்ந்து சிறப்பாக எங்களது விளையாட்டை கொடுப்போம்.

    என்று மில்லர் கூறினார்.

    • நான் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன்.
    • இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவு பெற்றது.

    இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை பார்த்து அன்று இரவு முழுவதும் அழுததாக கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அந்த ஒரு போட்டியை பார்த்து நான் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

    இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உண்மையில் நான் அன்று இரவு முழுவதும் அழுதேன். அதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ நான் அப்படி எதற்குமே அழுதது கிடையாது.

    அப்போது எனக்கு 11 வயது. நான் இரவு முழுவதும் அழுதேன். நான் அப்பொழுதுதான் இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992-ல் முடிவு செய்து 2011-ம் ஆண்டு நிறைவேற்றினேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் பார்க்க மாட்டேன் என்று பராக் கூறியிருந்தார்.
    • அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன்.

    ஐபிஎல் தொடரில் பெரிய அளவிள் விளையாடாத ரியான் பராக். 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இதனால் டி20 உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    அதனை தொடர்ந்து தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன? என்று பராக் தெரிவித்திருந்தார். அத்துடன் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே அதைப்பற்றி கவலைப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் ஃபைனலில் மட்டும் எந்த அணி வெல்லப் போகிறது என்பதை செய்தியில் பார்த்து தெரிந்து கொள்வேன் என்றும் ரியான் பராக் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்து ஏற்கனவே இந்திய ரசிகர்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் இடம்பிடித்துள்ள அவர் முதலில் நாட்டுப்பற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என்று சில இளம் வீரர்கள் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன். அதன் பின்பே நீங்கள் கிரிக்கெட்டின் ரசிகனாக இருக்க வேண்டும்.

    உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நாட்டுக்காக தேர்வாகியுள்ள வீரர்களுக்காக நீங்கள் முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    என ஸ்ரீசாந்த் கூறினார்.

    • உருகுவே மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
    • பனமா இரண்டு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று காலை இரண்டு போட்டிகள் நடைபெற்றன. குரூப் "சி"யில் இடம் பிடித்துள்ள பனமா- பொலிவியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பனமா 3-1 என பொலிவியாவை வீழ்த்தியது.

    ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் பனமா வீரர் ஜோஸ் பஜார்டோர் முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் பனமா 1-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது நேர ஆட்டம் தொடங்கிய நிலையில் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் பொலிவியா வீரர் புருனோ மிரண்டா கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக பனமா வீரர் குயெர்ரேரோ 79-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மேலும், 91-வது நிமிடத்தில் செசர் யானிஸ் கோல் அடிக்க பனமா 3-1 என வெற்றி பெற்றது.

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உருகுவே- அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் 2-வது பாதி நேர ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் மத்தியாஸ் ஆலிவெரா கோல் அடிக்க உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.

    அதன்பின் அமெரிக்கா கோல் அடிக்க முயற்சித்தது. அதற்கு பலன் கிடைக்கவில்லை. உருகுவே அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் உருகுவே 1-0 என வெற்றி பெற்றது.

    "சி" பிரிவில் உருகுவே 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. பனமா இரண்டு வெறறி, ஒரு தோல்வி மூலம் 6 புள்ளிகள் பெற்றி 2-வது அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.

    அமெரிக்கா (ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 3 புள்ளிகள்), பொலிவியா (3 போட்டிகளிலும் தோல்வி) காலிறுதி வாய்ப்பை இழந்தன.

    • 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகி சர்மா தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    அதேசமயம் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீதும் அந்த அணி கேப்டன் பாபர் அசாம் மீதும் கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்கள் அணியின் சிறந்த வீரர் யார்? என கேட்டால், பாபர் அசாம் என்று தான் கூறுவோம். ஆனால் குறிப்பிட்ட வடிவத்தில் நான் முதல் 4-5 அணிகளைப் பற்றி பேசுகிறேன். ஏனெனில் அந்த அணிகளின் விளையாடும் லெவனில் பாபர் அசாம் இடம் இருக்குமா? அதிலும் டி20 வடிவத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா அல்லது இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் பாபர் அசாம் இருப்பாரா? என்று கேட்டால் என்னுடைய பதில் இல்லை என்பது மட்டும் தான்.

    என்னைக்கேட்டால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது.

    இவ்வாறு மாலிக் கூறினார்.

    • இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்திய வீரர்களான சாய் சுதர்சன், பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் இந்திய இளம் வீரர்களான சாய் சுதர்சன், பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இதில் சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். முதல் இன்னிங்சில் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இதேபோல், நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாடிய பிரித்வி ஷா முதல் இன்னிங்சில் 31 ரன்னும், 2வது இன்னிங்சில் 37 ரன்னும் எடுத்தார்.

    கவுன்டி போட்டிகளில் விளையாடி வரும் இளம் இந்திய வீரர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் குறைந்த ரன்களில் அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.

    • என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன்.
    • எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன்.

    பார்படாஸ்:

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் பார்படாஸ் மைதானத்தின் மண்னை ரோகித் சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது என இதற்கான காரணம் குறித்து ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அது போன்ற விஷயங்களை என்னால் விவரிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனெனில் அது கதையாக எழுதப்பட்டது கிடையாது. அவை அனைத்தும் உள்ளுணர்வில் இருந்து வருவதாகும். அந்த தருணத்தில் பிட்ச் அருகே சென்று அதை நான் உணர்ந்தேன். ஏனெனில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது. அதில் விளையாடி நாங்கள் வென்றோம்.

    என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன். எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன். அந்தத் தருணம் மிகவும் ஸ்பெஷலானது. அந்த இடத்தில்தான் எங்களுடைய கனவு நிஜமானது. எனவே அதை கொஞ்சம் நான் வைத்துக் கொள்ள விரும்பினேன். உலகக்கோப்பையை வென்றது உண்மையில் அற்புதமான உணர்வு. அது இன்னும் மூழ்கவில்லை என்று நான் சொல்வேன்.

    என்று ரோகித் கூறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீராங்கனைகள் காயத்தால் முதல் சுற்றில் வெளியேறினர்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான பெலாரசின் அரினா சபலென்கா மற்றும் பெலாரசின் விக்டோரியா அசரென்கா ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினர்.

    பெலாரசின் விக்டோரியா அசரென்கா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் மோத இருந்தார். தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இதேபோல், பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் எமினா பேக்தாசுடன் மோத இருந்தார். காயம் காரணமாக சபலென்காவும் போட்டியில் இருந்து விலகினார்.

    முன்னணி வீராங்கனைகளான அரினா சபலென்கா, விக்டோரியா அசரென்கா ஆகியோர் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    சமீபத்தில் நடந்த பெர்லின் ஓபன் தொடரிலும் சபலென்கா காயம் காரணமாக காலிறுதியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக இந்தோனேசிய பேட்மிண்டன் சங்கள் தெரிவித்துள்ளது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சீனாவை சேர்ந்த 17 வயது இளைஞரான ஜாங் ஜிஜி, இந்தோனேஷியாவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி கீழே விழுந்தார். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

    பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவர் கீழே விழுந்து கிட்டதட்ட 40 வினாடிகள் கழித்தே மருத்துவர்கள் அவரை சோதனை செய்வது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. உடனே மருத்துவர்கள் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து சோதனை நடத்தி இருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாமா என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

    இதனையடுத்து அதிகாரிகளின் கேள்விக்கு, அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்ததாக இந்தோனேசிய பேட்மிண்டன் சங்கள் தெரிவித்துள்ளது.

    • ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.
    • ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இந்த சுற்றுபயணத்தில் விளையாடுகின்றனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் வெஸ்ட் இண்டீஸில் இருந்து நாடு திரும்ப தாமதமாவதால் அவருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா, ஹர்சித் ரானா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பையை விட 2024 -ம் ஆண்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது.
    • ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான்.

    2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1- ந் தேதி தொடங்கி ஜூலை 29-ந் தேதி முடிவடைந்தது. இதில் இறுதிபோட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    இந்த 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. நியூசிலாந்து வீரர் பெர்குசன் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசினார். இந்த உலகக் கோப்பை அதிக பவுண்டரிகள் விளாசப்பட்டது. ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான். அதிக சிக்சர் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையை அந்த அணி வீரரான பூரன் முறியடித்தார்.

    அந்த வகையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இதுவரை இல்லாத அளவாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. 2007-ல் தொடங்கப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் முதல், 2024 ஆண்டு வரை 152 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.

    2024-ம் ஆண்டு அதிகபட்சமாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 2012-ம் ஆண்டில் 21 மெய்டன்கள் வீசப்பட்டது. 2009-ம் ஆண்டில் வெறும் 5 மெய்டன்களே வீச்சப்பட்டது.

    ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை தொடரில் வீசப்பட்ட மெய்டன் ஓவர்கள் விவரம்:-

    15 - 2007

    05 - 2009

    11 - 2010

    21 - 2012

    13 - 2014

    09 - 2016

    17 - 2021

    17 - 2022

    44 - 2024

    ×