என் மலர்
விளையாட்டு
- இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பையை விட 2024 -ம் ஆண்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது.
- ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான்.
2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1- ந் தேதி தொடங்கி ஜூலை 29-ந் தேதி முடிவடைந்தது. இதில் இறுதிபோட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்த 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. நியூசிலாந்து வீரர் பெர்குசன் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசினார். இந்த உலகக் கோப்பை அதிக பவுண்டரிகள் விளாசப்பட்டது. ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான். அதிக சிக்சர் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையை அந்த அணி வீரரான பூரன் முறியடித்தார்.
அந்த வகையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இதுவரை இல்லாத அளவாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. 2007-ல் தொடங்கப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் முதல், 2024 ஆண்டு வரை 152 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.
2024-ம் ஆண்டு அதிகபட்சமாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 2012-ம் ஆண்டில் 21 மெய்டன்கள் வீசப்பட்டது. 2009-ம் ஆண்டில் வெறும் 5 மெய்டன்களே வீச்சப்பட்டது.
ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை தொடரில் வீசப்பட்ட மெய்டன் ஓவர்கள் விவரம்:-
15 - 2007
05 - 2009
11 - 2010
21 - 2012
13 - 2014
09 - 2016
17 - 2021
17 - 2022
44 - 2024
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜப்பான் வீராங்கனை முதல் சுற்றில் வென்றார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானைச் சேர்ந்த நவாமி ஒசாகா, பிரான்சின் டயான் பாரியுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை ஒசாக 6-1 என கைப்பற்றினார். 2வது செட்டை பாரி 1-6 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.
இறுதியில், 6-1, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற நவாமி ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நவாமி ஒசாகா, 2018-ம் ஆண்டுக்குப் பிறகு விம்பிள்டனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார் ஒசாகா.
- கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடக்கிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.
லண்டன்:
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல், தரவரிசையில் 53-ம் நிலை வீரரான செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சுடன் முதல் சுற்றில் நேற்று மோதினார்.
இதில் சுமித் நாகல் 2-6, 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- 700 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர்.
- மூன்றாவது பந்துவீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அடுத்து, அந்த அணியின் ஆலோசகர் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுகிறார். இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட் வரலாற்றில் 700 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இதுதவிர இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
- 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார்.
- இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் மக்கள் கொண்டாடினர். இந்த வெற்றிக்கு வீரர்களின் உழைப்பு காரணமாக இருந்தாலும் டிராவிட்டின் முயற்சிகள் பின்னணியில் மகத்தானவையாக பார்க்கப்படுகிறது.
ஆனால், கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணிக்கு டிராவிட் தொடர்ந்து பயிற்சியளிப்பார் என்று யாரும் நம்பவில்லை. ஆனால், கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இருந்து வந்த ஒரு போன்தான் டிராவிட்டை மாற்றியுள்ளது.
ரோஹித் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் டிராவிட்டை 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரை இந்திய பயிற்சியாளராக தொடர எப்படி சமாதானப்படுத்தினார்கள் என்பதை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
பார்படாஸில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற பிறகு, "நவம்பரில் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி, ரோஹித்" என்று டிராவிட் தெரிவித்து இருந்தார்.
முன்னதாக, பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார்.
இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி உள்ளார்.
- தமிழக வீரர்களாக குகேஷ் ஏழாவது இடத்திலும் பிரக்ஞானந்தா எட்டாம் இடத்திலும் உள்ளனர்.
- அர்ஜூன் மற்றும் அரவிந்த் இருவரும் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
சர்வதேச செஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக 3 இந்திய வீரர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி நான்காம் இடத்திலும், தமிழக வீரர்களாக குகேஷ் ஏழாவது இடத்திலும் பிரக்ஞானந்தா எட்டாம் இடத்திலும் உள்ளனர்.
பிரக்ஞானந்தா தனது மதிப்பீட்டை 10 புள்ளிகள் அதிகரித்து முதல் முறையாக உலகின் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
தற்போது முதல் 11 இடங்களில் 4 இந்தியர்களும், 22 இடங்களில் 5 இந்தியர்களும், 29 இடங்களில் 6 இந்தியர்களும், 37 இடங்களில் 7 இந்தியர்களும், 46 இடங்களில் 8 பேரும் உள்ளனர்.
அர்ஜூன் மற்றும் அரவிந்த் இருவரும் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
- ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார்.
- ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 0-0 என்ற கோல் கணக்கில் இரண்டு அணிகளும் இருந்ததால் பெனால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது இந்த போட்டியில் தனது முதலாவது கோலை அடிக்க முயன்ற போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார். கோலை மிஸ் செய்த அதிர்ச்சியில் ரொனால்டோவின் கணகளில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.
ஆனால் அதன்பின்னர் சுதாரித்த ரொனால்டோ போட்டியின் அடுத்த பாதியில் போர்ச்சுகல் அணிக்கான முதல் கோலை ஸ்கோர் செய்து தொடர்ந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் தனது முதல் கோலை மிஸ் செய்ததால் ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

சமீபத்தில் சவுதி யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தனது அல்- நாசர் அணி தோல்வி அடைந்ததால் ரொனால்டோ மைத்தனத்தில் கதறி அழுத்து குறிப்பிடத்தக்கது.
- இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார், ரியான் பரக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், உலகக் கோப்பைத் தொடருக்கான ரிசர்வ் வீரர்களான ரிங்கு சிங், கலீல் அகமது ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்திய அணி ஜிம்பாப்வே-க்கு புறப்பட்டு சென்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது.
- ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டி முறை கொண்டுவரப்பட்டது. போர்ச்சுகல் அணி வெற்றிக்கு ரொனால்டோ முதல் கோல் அடித்து அசத்தினார். மறுபுறம் போர்ச்சுகல் அணி கோல் கீப்பர் டியோகோ கோஸ்டா மூன்று பெனால்டி ஷூட்-அவுட்களை தடுத்து தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பை தொடர்களில் ஏழாவது முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இதுவரை எந்த அணியும் இத்தனை முறை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.
- பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஜெர்மனி நாட்டில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.
எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் இரண்டாவது பாதியில் எந்த அணி கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் போராட்டத்தில் தீவிரம் காட்டினர்.
போட்டி முடிய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், பெல்ஜியம் வீரர்களின் ஓன் கோல் காரணமாக பிரான்ஸ் அணி போட்டியில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால், போட்டி முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி போர்ச்சுகல் அணியை எதிர்கொள்கிறது.
- ஓன் கோல் மூலம் ஜார்ஜியாவுக்கு முதல் கோல் கிடைத்தது.
- அதன்பின் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி 4 கோல்கள் அடித்தனர்.
ஜெர்மனி நாட்டில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்ற வருகின்றன.
இன்று இரவு நடைபெற்ற போட்டி ஒன்றில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் விளையாடின. இதில் ஸ்பெயின் 4-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஜார்ஜியா வீரர் அடித்த பந்தை கோல் விழாமல் தடுக்க முயன்றார் ஸ்பெயின் வீரர் ராபின் லே நோர்மண்ட். ஆனால் பந்து அவர் மீது பட்டு கோலாக மாறியது. இதனால் ஜார்ஜியாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் அடித்தது.
ஆனால் 39-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோட்ரி இடது பக்கம் இருந்து பாஸ் செய்யப்பட்ட பந்தை சிறப்பான வகையில் கோலாக்கினார். இதனால் முதல் பாதி நேர ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.
2-வது பாதி நேர ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார். 51-வது நிமிடத்தில் ஃபேபியன் ரூய்ஸ், 75-வது நிமிடத்தில் நிகோ வில்லியம்ஸ், 83-வது நிமிடத்தில் டேனி ஆல்மோ கோல் அடிக்க ஸ்பெயின் 4-1 என வெற்றி பெற்றது. ஸ்பெயின் காலிறுதியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது.
- அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம்.
- அவரை நீட்டிக்க நான் வற்புறுத்த விரும்பவில்லை.
17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை இந்திய அணி கைப்பற்றியது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் தலைமையில் கீழ் இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது.
இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் ஏன் விண்ணப்பிக்கவில்லை என்ற காரணத்தை ஜெய்ஷா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குடும்பக் கடமைகள் காரணமாக அவர் விலக விரும்புவதாக தெரிவித்தார். அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவரை நீட்டிக்க நான் வற்புறுத்த விரும்பவில்லை.
ராகுல் பாய் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்துள்ளார். அவர் மூன்று ஆண்டுகள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக இருந்தார். பின்னர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.
இந்த டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றதில் ரோகித் சர்மாவைப் போலவே ராகுல் டிராவிட்டின் பங்கும் முக்கியமானது. அவர் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றார். ஆனால் அதில் தோலிவியடைந்தால் மீண்டும் பயிற்சியில் தொடர விரும்பினார்.
என்று அவர் கூறினார்.






