என் மலர்
நீங்கள் தேடியது "இருதரப்பு தொடர்"
- தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.
- விளையாட்டு தேசத்தை ஒன்றிணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
உலகக் கோப்பை டி20 தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நாளையுடன் சூப்பர் 8 சுற்றும் முடிவடைய உள்ளது. இதன் முடிவில் குரூப் 2-ல் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 2 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள 4 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.
இந்த குரூப்-ல் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாட முடியும்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என ரஷித் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக ஒத்திவைத்து வந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் இந்த கேள்வியை முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். விளையாட்டு தேசத்தை ஒன்றிணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
எனவே, என்னைப் பொறுத்தவரை, எந்த அணிக்கு எதிராகவும் விளையாடுவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். சில விஷயங்கள், அரசாங்கம் மற்றும் அரசியல் விஷயங்கள், எனக்கு இந்த விஷயங்களைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு அது பிடிக்கவில்லை.
ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாட முடியும்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஏன் விளையாட முடியாது. நான் எப்போதும் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட விரும்புகிறேன். பிக்பாஷ் கிரிக்கெட் மூலம், அங்குள்ள ரசிகர்களிடமிருந்து எனக்கு அன்பும் ஆதரவும் கிடைத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.
இவ்வாறு ரஷித் கான் கூறினார்.
- தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.
- ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாடும் இருதரப்பு போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என ரஷித்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மனித உரிமைகள் மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடரை மீண்டும் தொடங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு வாழ்த்துக்கள் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி தெரிவித்தார்.
- பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மறுஆய்வுக் கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
- ரோகித் சர்மா, கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த சில மாதங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனை காலமாக இருந்தது. நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியில் 1-3 என்ற கணக்கில் அடைந்த தோல்வி என தோல்விகள் இந்திய அணியை சுழற்றி சுழற்றி அடித்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பெரிய புள்ளிகள் இந்த தொடர் தோல்விகளால் புழுங்கிக்கொண்டு உள்ளனர். இந்நிலையில் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மறுஆய்வுக் கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் , வீரர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப தொடரில் இருந்து விலக இனிமேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி இருதரப்பு தொடரில் [bilateral series] இனிமேல் வீரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு முடிவெடுக்க முடியாது
இருதரப்பு தொடர்களில் இருந்து விலக விரும்பினால், வீரர்கள் முறையான மருத்துவ காரணங்களை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை பிசிசிஐ வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.







