என் மலர்
விளையாட்டு
- முதல் லீக் ஆட்டத்தில் பெங்காலை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றது.
- 2வது போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பெங்களூரு அணியை வீழ்த்தியது.
புதுடெல்லி:
11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது. தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ், தபாங் டெல்லி, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.
இறுதியில் இந்த ஆட்டத்தில் 39-34 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றது.
மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 36-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்தது.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று மற்றும் அரையிறுதி முடிந்துள்ளன.
இந்நிலையில், துபாயில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அமெலியா கெர் 43 ரன்களும் ப்ரூக் மேரி ஹாலிடே 38 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஓரளவு தாக்குப் பிடித்து 33 ரன்கள் எடுத்தார்.
முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் ரஷிய வீராங்கனை ஆண்ட்ரிவா தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மீரா ஆண்ட்ரிவா, சக நாட்டு வீராங்கனை டேரியா கசட்கினா உடன் மோதினார்.
இதில் கசட்கினா முதல் செட்டை 6-0 என கைப்பற்றினார். 2வது செட்டை ஆண்ட்ரிவா 6-4 என கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை கசட்கினா 6-4 என வென்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
- டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின.
- டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.
இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் முன்னேறின. நியூசிலாந்து அணி 3-வது முறையாக (2009, 2010, 2024) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2-வது தடவையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத 2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளதால் யார் தங்களது முதல் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்களும் ப்ரூக் மேரி ஹாலிடே 38 ரன்களும் அடித்தனர்.
- நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
- அக்டோபர் 24 ஆம் தேதி புனேவில் 2 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்
அண்மையில் ரஞ்சி கோப்பையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளை வென்று இந்திய அணியை தொடரை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
அக்டோபர் 24 ஆம் தேதி புனேவில் 2 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன் ), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன் ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), ), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தை கே.எல்.ராகுல் தொட்டு பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கே.எல்.ராகுல் 2 ஆவது இன்னிங்சில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாளில் ஆட்டம் நடந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் 2 ஆவது இன்னிங்சில் இந்திய அணி 462 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 107 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு எளிதாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தை கே.எல்.ராகுல் தொட்டு பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தை தொட்டு பார்ப்பார். அதனையும் கே.எல்.ராகுலின் இந்த வீடியோவையும் நெட்டிசன்கள் தொடர்புப்படுத்தி தனது கடைசி டெஸ்டில் கே.எல். ராகுல் விளையாடியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கே.எல்.ராகுல் 2 ஆவது இன்னிங்சில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
இப்போட்டியில் காயம் காரணமாக விளையாடாத சுப்மன் கீல் அடுத்த போட்டியில் இந்திய அணியில் இணையவுள்ள நிலையில் கே.எல்.ராகுலின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி 2 ஆவது இன்னிங்சில் சதமடித்ததால் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின.
- இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடர் ஓமன் நாட்டில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் இந்த தொடர் நடைபெறுகிறது.
இந்த தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை இந்திய அணி எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 44 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 36 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் சுபியான் முகீம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அராபத் மின்ஹாஸ் 41 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும் ராசிக் சலாம் மற்றும் நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்
இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடி வந்த யாசிர் கான் தூக்கி அடித்த பந்தை ஓடிச்சென்று பாய்ந்து ஒற்றை கையால் ரமன்தீப் சிங் பிடித்தார்.
ரமன்தீப் சிங்கின் அந்த கேட்ச் ஒரு இந்தியரின் மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்று என்று முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.
- பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கண்காணிப்பில் சுப்மன் கில்லுக்கு முகமது சமி பந்துவீசியுள்ளார்.
- முகமது சமி இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தோல்விக்கு மத்தியில் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. சின்னசாமி மைதானத்தில் வலைப்பயிற்சியின் போது பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கண்காணிப்பில் சுப்மன் கில்லுக்கு முகமது சமி பந்துவீசியுள்ளார்.
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷமி 11 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத முகமது சமி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை முகமது சமி வீழ்த்தியிருந்தார்.
முகமது சமி இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வரும் சமி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்தது.
- டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஜிம்பாப்வே அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக பல அணிகள் குவாலிபையர் சுற்றில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அணிகள் தற்போது விளையாடி வருகிறது. அதில் ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, காம்பியா, மொசாம்பிக், சீஷெல்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் மோதுகின்றனர்.
இதில் நேற்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் சீஷெல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சீஷெல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 91, டி மருமணி 86 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய சீஷெல்ஸ் அணி 6.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஜிம்பாப்வே அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 286 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் அதிக ரன்கள் குவித்த 3-வது என்ற சாதனையை ஜிம்பாப்வே அணி படைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் (314) நேபாள் அணி உள்ளது. 2-வது இடத்தில் (297) இந்திய அணி உள்ளது.
- தமிழ் தலைவாஸ் நேற்று வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
- மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்தான் 35-25 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டிலர்சை வீழ்த்தியது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழ் தலைவாஸ் நேற்று வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. அந்த அணி 44-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்தான் 35-25 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டிலர்சை வீழ்த்தியது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8), குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்களுரூ புல்ஸ் (இரவு 9) அணிகள் மோதுகின்றன.
- நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
- இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாளில் ஆட்டம் நடந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே 91 ரன்களும், வில் யங் 33 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 134 ரன்களும்ம், டிம் சௌதி 65 ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 52, விராட் கோலி 70, சர்ஃபராஸ் கான் 150, ரிஷப் பண்ட் 99 ரன்களை அடிக்க இந்திய அணி 462 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 107 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், நியூசிலாந்து அணி களமிறங்கியது.
துவக்கத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறிய நியூசிலாந்து அணி மிக கவனமாக ஆடி வந்தது. அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இவருடன் களமிறங்கிய டெவான் கான்வே 17 ரன்களில் அவுட் ஆனார்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் அந்த அணி முதல் டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் வில் யங் 48 ரன்களையும் ரச்சின் ரவீந்திரா 39 ரன்களையும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை 93 ரன்னில் இந்திய அணி ஆல் அவுட் ஆக்கியது.
- இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்னில் சுருண்டது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்து 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 462 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்துக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
முதல் 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் 5-வது நாள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட்டில் குறைவான இலக்கை நிர்ணயித்து 2004-ம் ஆண்டு வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு 107 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்த இந்திய அணி, 13 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இதேபோல இறுதிநாளான இன்று நியூசிலாந்து அணி வெல்ல 107 ரன்கள் தேவை என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில் 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






