என் மலர்
விளையாட்டு
- 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்பிரிக்க மண்டல தகுதி சுற்று நைஜீரியாவில் நடந்து வருகிறது.
- லாகோஸ் நகரில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் நைஜீரியா- ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின.
லாகோஸ்:
2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்பிரிக்க மண்டல தகுதி சுற்று நைஜீரியாவில் நடந்து வருகிறது. இதில் லாகோஸ் நகரில் நடந்த 'சி' பிரிவு ஆட்டம் ஒன்றில் நைஜீரியா - ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நைஜீரியா செலிம் சாலு (112 ரன்) சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.
இதைத்தொடர்ந்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐவரிகோஸ்ட் அணி, நைஜீரியா வீரர்களின் மிரட்டலான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 7.3 ஓவர்களில் வெறும் 7 ரன்னில் சுருண்டது. இதனால் நைஜீரியா அணி 264 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.
ஒற்றை இலக்க ரன்னில் அடங்கிய ஐவரிகோஸ்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்னில் சுருண்ட அணி என்ற மோசமான சாதனைக்கு சொந்தமானது. இதற்கு முன்பு கடந்த செம்டம்பரில் நடந்த சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் மங்கோலியா அணியும், 2023-ம் ஆண்டு ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ஐல் ஆப் மேன் தீவு அணியும் தலா 10 ரன்னில் அடங்கியதே மோசமான சாதனையாக இருந்தது.
- ரிஷப் பண்ட், பூரன், மார்க்கிராம், மில்லர் போன்ற பல வீரர்கள் தலைமை ஏற்கும் நிலையில் உள்ளனர்.
- கேப்டன் யார் என்பதை பின்னர் முடிவு செய்வோம் என லக்னோ அணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்-ஐ லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதுபோக மிட்செல் மார்ஷ், மார்க்கிராம், டேவிட் மில்லர் போன்ற வீரர்களையும் எடுத்துள்ளது.
இந்த அணியில் ரிஷப் பண்ட், பூரன், மார்க்கிராம், மில்லர் போன்ற பல வீரர்கள் தலைமை ஏற்கும் நிலையில் உள்ளனர். இதனால் கேப்டன் யார் என்பதை பின்னர் முடிவு செய்வோம் என லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கே தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளது. அத்துடன் வெஸ்ட் இண்டீசின் ஷமர் ஜோசப் உள்ளார். மிட்செல் மார்ஷும் இருக்கிறார். இவர்கள் பந்து வீச்சில் எப்படி ஆதிக்கம் செலுத்த இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பேட்டிங்கில் தொடக்க வீரர்களை களம் இறக்குவதில் லக்னோவிற்கு சவால் இருக்கும். மிடில் ஆர்டர்களில் பண்ட், பூரன், மார்க்கிராம், ஆயுஷ் படோனி உள்ளிட்டோர் உள்ளனர்.
24 பேர் கொண்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி:-
1. நிக்கோலஸ் பூரன் (வெளிநாட்டு வீரர்), 2. ரவி பிஷ்னோய், 3. மயங்க் யாதவ், 4. மொஹ்சின் கான், 5. ஆயுஷ் படோனி, 6. ரிஷப் பண்ட், 7. டேவிட் மில்லர் (வெளிநாட்டு வீரர்), 8. எய்டன் மார்க்கிராம் (வெளிநாட்டு வீரர்), 9. மிட்செல் மார்ஷ் (வெளிநாட்டு வீரர்), 10. ஆவேஷ் கான், 11. அப்துல் சமத், 12. ஆர்யன் ஜூயல், 13. ஆகாஷ் தீப், 14. ஹிம்மத் சிங், 15. எம். சித்தார்த், 16. திக்வேஷ் சிங், 17. ஷாபாஸ் அகமது, 18. ஆகாஷ் சிங், 19. ஷமர் ஜோசப் (வெளிநாட்டு வீரர்), 20. பிரின்ஸ் யாதவ், 21. யுவராஜ் சவுத்ரி, 22. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், 23. அர்ஷின் குல்கர்னி, 24. மேத்யூ பிரீட்ஸ்கே (வெளிநாட்டு வீரர்).
- ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கவுள்ளது.
- இதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கவுள்ளது. இதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. ஏலத்தின் முடிவில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் ஏலம் போகவில்லை.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகனான அர்ஜூன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அதன்பின் ஏலம் முடிந்த பிறகு கையில் இருக்கும் தொகையின் அடிப்படையில் எந்த வீரரையும் எடுக்கலாம். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நிமிடத்தில் அர்ஜூனை ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவர் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் மட்டுமே விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.
அர்ஜூனை ஏலத்தில் எடுத்தது சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளும் மீம்ஸ்களும் உலா வருகின்றனர். பலர் சச்சின் மகன் என்பதால் அவரை ஏலம் எடுத்ததாகவும் இவரை போன்றவர்களால் தான் பல திறமையுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி என்றாலே நடுவரையும் வாங்கி விடுவார்கள் என மற்ற அணி ரசிகர்கள் கூறுவதுண்டு. முக்கியமாக சிஎஸ்கே ரசிகர்கள் அதை வைத்து கலாய்ப்பதுண்டு. அந்த வகையில் ஏலம் முடிந்த பிறகும் ஒரு வீரரை வாங்க முடியும் என்றால் அது மும்பை அணியால் மட்டுமே முடியும் எனவும் மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.
- புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் பந்து வீச்சில் பக்கபலமாக இருப்பார்கள்
- பேட்டிங்கில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், வலிங்ஸ்டோன், பில் சால்ட் உள்ளனர்.
cஐ.பி.எல். 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரணடு நாட்கள் நடைபெற்றது. இதில் தக்கவைத்த வீரர்கள் தவிர்த்து 182 வீரர்கள் வீரர்கள் 639.15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
இந்த ஏலத்தின்போது மிகவும் விமர்சனத்திற்கு உள்ளான அணி ஆர்.சி.பி.தான். ஏனென்றால் கே.எல். ராகுலை அந்த அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி எளிதாக எடுத்தது. இதனால் அந்த அணியின் ஏல யுக்திதான் என்ன? என்பது வியப்பாக இருந்தது.
ஜேக் வில்ஸை மும்பை இந்தியன்ஸ் 5.25 கோடி ரூபாய்க்கு எடுத்தது. ஆனால் ஆர்.சி.பி. ஆர்.டி.எம்.-ஐ கூட பயன்படுத்தவில்லை. இதனால் ஆகாஷ் அம்பானி ஆர்.சி.பி. அணி நிர்வாகிகளுக்கு வந்து கைக்கொடுத்துவிட்டு சென்றார்.
ஆர்.சி.பி. முக்கியமாக வேகப்பந்து வீச்சாளர்களை எடுப்பதில் கவனம் செலுத்தியது. புவி, ஹேசில்வுட் உள்ளிட்டோரை எடுத்துள்ளது சற்று ஆறுதல்.
ஆர்.சி.பி. விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோரை தக்கவைத்திருந்தது. ஏலத்தில் புவி, ஹேசில்வுட், நுவான் திஷாரா, லுங்கி நிகிடி ஆகிய வேகப்பந்து வீச்சாளரை எடுத்துள்ளது.
பேட்டிங்கில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், வலிங்ஸ்டோன், பில் சால்ட் ஆகியோரை தவிர குறிப்பிடத்தகுந்த பேட்ஸ்மேன்கள் இல்லை என்பது அந்த அணிக்கு ஒரு குறையாக இருக்கலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி, 2. ரஜத் படிதார், 3. யாஷ் தயாள், 4. லியாம் லிவிங்ஸ்டோன் (வெளிநாட்டு வீரர்கள்), 5. பில் சால்ட் (வெளிநாட்டு வீரர்கள்), 6. ஜிதேஷ் சர்மா, 7. ஜோஷ் ஹேசில்வுட் (வெளிநாட்டு வீரர்கள்), 8. ரசிக் தார், 9. சுயாஷ் சர்மா, 10. க்ருனால் பாண்டியா, 11. புவனேஷ்வர் குமார், 12. ஸ்வப்னில் சிங், 13. டிம் டேவிட் (வெளிநாட்டு வீரர்கள்), 14. ரொமாரியோ ஷெப்பர்ட் (வெளிநாட்டு வீரர்கள்), 15. நுவான் துஷாரா (வெளிநாட்டு வீரர்கள்), 16. மனோஜ் பந்தேஜ், 17. ஜேக்கப் பெத்தேல் (வெளிநாட்டு வீரர்கள்), 18. தேவ்தத் படிக்கல், 19. ஸ்வஸ்திக் சிகாரா, 20. லுங்கி நிகிடி (வெளிநாட்டு வீரர்கள்), 21. அபிநந்தன் சிங், 22. மோஹித் ரதி.
- பட்லரை ஏலத்தில் எடுக்க குஜராத், லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது.
- இறுதியில் ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது ஏலதாரர் மல்லிகா சாகர் சில தவறுகளை செய்துள்ளார். இது அணி உரிமையாளர்களை சற்று வேதனையடைய செய்துள்ளது.
அந்த வகையில் டெல்லி அணி ஏலத்தைக் கவனிக்காததால் உத்தரபிரதேச பேட்டர் ஸ்வஸ்திக் சிகாராவை ஆர்சிபிக்கு ஏலதாரர் விற்றார். உடனே டெல்லி நிர்வாகம் நாங்கள் துடுப்பை உயர்த்தினோம் என கூறினார். ஆனால் அதற்கு ஏற்கனவே ஆர்சிபி-க்கு விற்று விற்றதாக கூறி மன்னிப்பு கேட்டார். இதனால் டெல்லி அணி அதிருப்தி அடைந்தது.
இதனை தொடர்ந்து ஜாஸ் பட்லரை ஏலத்தில் விற்கும் போதும் சில தவறுகளை செய்ததால் குஜராத் அணிக்கு ரூ. 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பட்லரை ஏலத்தில் எடுக்க குஜராத் - லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. இறுதியில் ரூ.15.50 கோடிக்கு குஜராத் ஏலம் எடுத்தது. அதை ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்க விரும்புகிறீர்களா என லக்னோ அணியிடம் கேட்டார். உடனே லக்னோ மறுத்து விட்டது. இதனையடுத்து ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணிக்கு விற்றது.
குஜராத் ரூ.15.50 கோடிக்கு கடைசியாக ஏலம் எடுத்தது. ஆனால் ஏலதாரர் ரூ.15.75 கோடிக்கு விற்றது. இதனால் அந்த அணி 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏலதாரர் மல்லிகா சாகர் மீது இது குறித்து எதிர்ப்புகளை அணி நிர்வாகிகள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கான்பெர்ராவில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தின்போது அணியுடன் இருக்கமாட்டார்.
- அடிலெய்டு டெஸ்டின்போது இந்திய அணியுடன் இணைந்து கொள்வார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடுத்த டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல்-இரவு பிங்க் பால் டெஸ்ட் போட்டியாகும். இதற்கு முன்னதாக இரண்டு நாட்கள் கொண்ட பிங்க் பால் பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்தியா விளையாடுகிறது. இந்த போட்டி வருகிற 30-ந்தேதி கான்பெர்ராவில் தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் அவசரமாக இந்தியா திரும்புகிறார். குடும்பம் தொடர்பான தனிப்பட்ட எமர்ஜென்சி காரணமாக நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் டிசம்பர் 30-ந்தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டத்தின்போது அவர் அணியுடன் இருக்கமாட்டார். அதேவேளையில் டிசம்பர் 6-ந்தேதி நடைபெற இருக்கும் பிங்க் பால் போடடியின்போது அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா புறப்பட்டுள்ளார். இந்திய அணி புதன்கிழமை கான்பெர்ரா புறப்படுகிறது. ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்திய அணிக்கு விருந்து அளிக்கிறார். இதில் அனைத்து வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி பிரதமர் லெவன் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. பிரதமர் லெவன் அண முற்றிலும் இளைஞர்களை கொண்டதாகும். இந்த பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு அடிலெய்டு டெஸ்டிற்கு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களுக்கு இந்த ஏலத்தில் ஜாக்பார்ட் அடித்துள்ளது.
- வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் நம்ப முடியாத விலைக்கு ஏலம் போனார்கள்.
ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் தற்போது நடந்து முடிந்துள்ளது. ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு இந்த ஏலத்தில் ஜாக்பார்ட் அடித்துள்ளது. மேலும் வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் நம்ப முடியாத விலைக்கு ஏலம் போனார்கள். இருப்பினும் சில வீரர்கள் எந்த அணியையும் ஈர்க்கவில்லை. இதற்கு முன்பு நட்சத்திர வீரர்களாக இருந்த போதிலும் இந்த ஏலத்தில் விற்பனையாகவில்லை.
டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், கேசவ் மகராஜ், மயங்க் அகர்வால், பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்கள் கூட ஏலத்தில் போகவில்லை.
ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள்:-
முஜீப் உர் ரஹ்மான்
பியூஷ் சாவ்லா
கேன் வில்லியம்சன்
மயங்க் அகர்வால்
பிருத்வி ஷா
ஷர்துல் தாக்கூர்
ஷாய் ஹோப்
ஸ்ரீகர் பாரத்
அலெக்ஸ் கேரி
கார்த்திக் தியாகி
டேவிட் வார்னர்
ஜானி பேர்ஸ்டோவ்
க்ரிவிட்சோ கென்ஸ்
ஷிவாலிக் சர்மா
லியுஸ் டு ப்ளூய்
டாம் லாதம்
உமங் குமார்
திக்விஜய் தேஷ்முக்
யாஷ் தபாஸ்
இளவரசர் சௌத்ரி
தனுஷ் கோட்யான்
முருகன் அஸ்வின்
சஞ்சய் யாதவ்
டுவைன் பிரிட்டோரியஸ்
முசரபானி ஆசீர்வாதம்
பிராண்டன் மெக்முல்லன்
அதிட் ஷெத்
விஜய் குமார்
ரோஸ்டன் சேஸ்
நாதன் ஸ்மித்
கைல் ஜேமிசன்
கிறிஸ் ஜோர்டான்
ரிபால் படேல்
அவினாஷ் சிங்
அனிருத் சௌத்ரி
வில்லியம் ஓ ரூர்க்
சேதன் சகாரியா
சந்தீப் வாரியர்
அப்துல் பாசித்
தேஜஸ்வி தஹியா
லான்ஸ் மோரிஸ்
ஒல்லி ஸ்டோன்
ராஜ் லிம்பானி
சிவா சிங்
ஆடம் மில்னே
நவ்தீப் சைனி
சல்மான் நிசார்
எமன்ஜோத் சிங் சாஹல்
நமன் திவாரி
திவேஷ் சர்மா
மைக்கேல் பிரேஸ்வெல்
தில்ஷான் மதுஷங்க
ஒட்னீல் பார்ட்மேன்
சிவம் மாவி
அல்சாரி ஜோசப்
லூக் வூட்
சச்சின் தாஸ்
அர்பித் குலேரியா
சர்பராஸ் கான்
கைல் மேயர்ஸ்
மத்தேயு ஷார்ட்
ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
ரிச்சர்ட் க்ளீசன்
டேரில் மிட்செல்
ரிஷி தவான்
சிவம் சிங்
எல்ஆர் சேத்தன்
ராகவ் கோயல்
பைலபுடி யஸ்வந்த்
பிராண்டன் கிங்
பாத்தும் நிஸ்ஸங்க
ஸ்டீவ் ஸ்மித்
கஸ் அட்கின்சன்
சிக்கந்தர் ராசா
ரிஷாத் ஹொசைன்
ராஜன் குமார்
பிரசாந்த் சோலங்கி
ஜாதவேத் சுப்ரமணியன்
ஃபின் ஆலன்
டெவால்ட் ப்ரீவிஸ்
பென் டக்கெட்
ஜோஷ் பிலிப்
முஸ்தாபிசுர் ரஹ்மான்
நவீன்-உல்-ஹக்
உமேஷ் யாதவ்
வித்வத் கவேரப்பா
அகேல் ஹொசின்
ஆடில் ரஷித்
கேசவ் மகாராஜ்
மாதவ் கௌசிக்
புக்ராஜ் மான்
மயங்க் தாகர்
ஆரவெல்லி அவனிஷ்
ஹர்விக் தேசாய்
சாகிப் உசேன்
விஜயகாந்த் வியாஸ்காந்த்
வக்கார் சலாம்கெயில்
அன்மோல்பிரீத் சிங்
யாஷ் துள்
உத்கர்ஷ் சிங்
உபேந்திர யாதவ்
- வில் ஜேக்சை ரூ.5.25 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.
- கடந்த ஐ.பி.எல். தொடரில் வில் ஜேக் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக ஆடியவர்.
ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் பிரபல வீரர் வில் ஜேக்சை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது.
கடந்த ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக ஆடியவர். இந்த ஏலத்தில் இவரை பெங்களூர் அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அவரை ஏலத்தில் மும்பை அணியிடம் விட்டுக் கொடுத்தது ஆர்சிபி.
வில் ஜேக்சை அடிப்படை விலையான 2 கோடியில் இருந்து ரூபாய் 5.25 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. அப்போது, ஆர்டிஎம் முறைப்படி வில் ஜேக்சை தக்க வைத்துக் கொள்கிறீர்களா? என்று ஆர்.சி.பி. அணி நிர்வாகத்திடம் கேட்டபோது ஆர்.சி.பி. நிர்வாகம் இல்லை என்று கூறினர். இதனால், மும்பை அணியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மகிழ்ச்சியில் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிர்வாகத்தினர் இருக்கைக்கே சென்று கை கொடுத்து நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வில் ஜேக்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த சீசனில் மிரட்டலாக ஆடி சதம் விளாசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிக பட்சமாக ரிஷப் பண்டை எல்.எஸ்.ஜி. அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
- வைபவ் சூர்யவன்ஷி (13 வயது) ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ஆனார்.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.
இதனை தொடர்ந்து ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது. 2 நாட்களில் 182 வீரர்களுக்காக 639.15 கோடியை 10 அணி உரிமையாளர்கள் செலவிட்டுள்ளனர்.
அதிக பட்சமாக ரிஷப் பண்ட் (ரூ. 27 கோடி, எல்.எஸ்.ஜி.), ஷ்ரேயாஸ் அய்யர் (ரூ. 26.75 கோடி, பஞ்சாப்) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (ரூ. 23.75 கோடி, கே.கே.ஆர்) ஆகிய மூவரும் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்கள். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் ஆனார். ராஜஸ்தான் அணி அவரை ரூ 1.10 கோடிக்கு வாங்கியது.
சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக விலைக்கு யுஸ்வேந்திர சாஹல் ஏலம் போனார். ரூ. 18 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
ஏலத்தின் 2-வது நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் ரூ. 10.75 கோடிக்கு ஏலம் போனார். அவரை ஆர்சிபி தட்டி தூக்கியது.
- முதல் சுற்றில் சென்னையைச் சேர்ந்த குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
- லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முதல் சுற்றில் சென்னையைச் சேர்ந்த குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
இதில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் குகேசை விட வேகமாக காய்களை நகர்த்திய லிரெனின் கை ஆரம்பத்திலேயே ஓங்கியது. 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். அப்போது அவரை விட எதிராளியிடம் 3 காய்கள் அதிகமாக இருந்தன. கிளாசிக்கல் வடிவிலான செஸ்சில் டிங் லிரென் 10 மாதங்களுக்கு பிறகு பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் 2-வது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காயுடன் ஆடுகிறார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- குறிப்பாக 3 தமிழக வீரர்கள் சென்னையில் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது.
இந்த ஏலத்தில் முதல் நாளில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழு வீரர்களை வாங்கியது. 2-ம் நாளில் 13 வீரர்களை வாங்கியது. அதிக தொகையாக அஸ்வினை ரூ. 9.75 கோடிக்கு வாங்கி அசத்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக 3 தமிழக வீரர்கள் சென்னையில் அணியில் இடம் பிடித்துள்ளனர். தமிழகத்தை மையமாக கொண்டு விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்கத்தில் தமிழக வீரர்கள் இடம் பிடித்தனர். அதன்பிறகு அணியில் இடம் பிடித்திருந்தாலும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கபடவில்லை. அதன்பிறகு அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம் பிடித்ததில்லை.
இதனை வைத்து, சென்னை அணி என்று தான் பெயர். ஆனால் ஒரு தமிழக வீரர்கள் கூட இல்லை என மீம்ஸ்களை மற்ற அணி ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த முறை ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர், ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய 3 தமிழக வீரர்கள் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர். இது சென்னை ரசிகர்களுக்கு மிகுந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:-
1. எம் எஸ் டோனி ரூ. 4 கோடி
2. ருதுராஜ் கெய்க்வாட் ரூ. 18 கோடி
3. பத்திரனா ரூ.13 கோடி
4. சிவம் துபே ரூ.12 கோடி
5. ஜடேஜா ரூ. 18 கோடி
ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை அணி வீரர்கள்:-
1. டெவோன் கான்வே - ரூ 6.25 கோடி
2. ராகுல் திரிபாதி - ரூ 3.4 கோடி
3. ரச்சின் ரவீந்திரா - ரூ 4 கோடி
4. ரவிச்சந்திரன் அஸ்வின் - ரூ 9.75 கோடி
5. கலீல் அகமது - ரூ 4.80 கோடி
6. நூர் அகமது - ரூ.10 கோடி
7. விஜய் சங்கர் - ரூ 1.2 கோடி
8. சாம் கர்ரன் - ரூ 2.4 கோடி
9. ஷேக் ரஷீத் - ரூ 30 லட்சம்
10. அன்ஷுல் கம்போஜ் - ரூ 3.4 கோடி
11. முகேஷ் சவுத்ரி - ரூ 30 லட்சம்
12. தீபக் ஹூடா - ரூ 1.7 கோடி
13. குர்ஜப்னீத் சிங் - ரூ 2.2 கோடி
14. நாதன் எல்லிஸ் - ரூ 2 கோடி
15. ஜேமி ஓவர்டன் - ரூ.1.5 கோடி
16. கமலேஷ் நாகர்கோடி - ரூ.30 லட்சம்
17. ராமகிருஷ்ண கோஷ் - ரூ 30 லட்சம்
18. ஷ்ரேயாஸ் கோபால் - ரூ 30 லட்சம்
19. வான்ஷ் பேடி - ரூ 55 லட்சம்
20. ஆண்ட்ரே சித்தார்த் - ரூ 30 லட்சம்
- ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும்.
சென்னை:
சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக ஆசிய போட்டிக்கு தகுதி பெறும். 'இ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணியின் 4-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் உலக தரவரிசையில் 76-வது இடத்தில் இருக்கும் இந்தியா, 69-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானுடன் மோதியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் கால்பகுதியில் 9-18 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த இந்திய அணி சரிவில் இருந்து மீண்டதுடன் அபாரமாக செயல்பட்டு தனது முன்னிலையை அதிகரித்தது. முடிவில் இந்திய அணி 88-69 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்தது.
இந்திய அணியில் பிரின்ஸ், கன்வார் சந்து தலா 17 புள்ளியும், அமய்ஜோத் சிங் 15 புள்ளியும், சஹாய் செகோன் 12 புள்ளியும் சேர்த்தனர். கடந்த 27 ஆண்டுகளில் கஜகஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.






