என் மலர்
விளையாட்டு
- 13 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.
- வைபவ் சூரியவன்ஷி-க்கு அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட மிக இளம் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த 13 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது. வைபவ் சூரியவன்ஷி-க்கு அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதற்கு பிறகு பிறந்து, அதில் விளையாட தேர்வான முதல் வீரர் என்ற பெருமையை 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்
- யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி 18 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
- இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன 4 ஆவது வீரர் என்ற சாதனை சாஹல் படைத்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் ஏலத்தில் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி 18 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன 4 ஆவது வீரர் என்ற சாதனை சாஹல் படைத்தார்.
இந்நிலையில் பஞ்சாப் அணியில் சாஹல் இணைந்ததை குறிக்கும் விதமாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல் மைதானத்திற்கு வெளியே படுத்திருக்கும் புகைப்படம் மீம் மெட்டிரியலாக வைரலாகியது. அந்த புகைப்படத்தையும் கங்காரு படுத்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்து ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், எனது சாம்பியன் சகோதரர் சாஹலுக்கு 18 கோடி. பஞ்சாபிற்கு வரவேற்கிறோம். பாட்ஷா பந்துவீச்சாளரே கங்காரு உங்களை கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டது.
- வேறொரு ஐபிஎல் அணிக்காக தீபக் சாஹர் களமிறங்க இருக்கிறார்.
- தீபக் சாஹரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக திகழ்ந்தவர் தீபக் சாஹர். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் முன்னாள் சென்னை அணி வீரர் தீபக் சாஹரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
சி.எஸ்.கே. அணியில் தீபக் சாஹர் மற்றும் எம்.எஸ். டோனி இடையே நல்லுறவு இருந்து வந்தது. களத்தில் இருவரின் சேட்டை சம்பவங்கள் கடந்த ஐபிஎல் சீசனில் மிகவும் வைரல் ஆகி இருந்தது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு வேறொரு ஐபிஎல் அணிக்காக தீபக் சாஹர் களமிறங்க இருக்கிறார்.
இதையொட்டி, தீபக் சாஹரிடம் எம்.எஸ். டோனியை மிஸ் செய்கிறீர்களா என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த தீபக் சாஹர், எம்.எஸ். டோனியை யார் தான் மிஸ் செய்ய மாட்டார்கள். நிச்சயம் அவர் மிஸ் செய்கிறேன் என்று பதில் அளித்தார்.
- ரஞ்சி போட்டியில் அரியானா அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் விளையாடி வருகிறார்.
- ரஞ்சி போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அன்ஷுல் கம்போஜ் அசத்தினார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ்-ஐ 3.4 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அண்மையில், ரஞ்சி போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அன்ஷுல் கம்போஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2023 பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.
- 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் ஏலத்தை மல்லிகா சாகர் என்பவர் நடத்தி வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த கலை சேகரிப்பாளரான மல்லிகா சாகர், அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள பிரைன் மாவ்ர் கல்லூரியில் கலை வரலாறு பட்டப்படிப்பை படித்தார்.
2021 புரோ கபாடி லீக் வீரர்களின் ஏலத்திற்கான ஏல மேலாளராக மல்லிகா சாகர் பணியாற்றினார். பின்னர் 2023 பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்தினார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தை நடத்திய மல்லிகா, ஐபிஎல் மெகா ஏலத்தை தற்போது நடத்தி வருகிறார்.
இதற்கு முன்னதாக ரிச்சர்ட் மேட்லி மற்றும் ஹியூ எட்மீட்ஸ் போன்றவர்கள் ஏலத்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இதுவரை ஒட்டுமொத்தமாக 8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆகாஷ் தீப் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது பெங்களூரு அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்-ஐ ரூ.8 கோடி கொடுத்து லக்னோ அணி வாங்கியுள்ளது. இவரின் அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஒட்டுமொத்தமாக 8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆகாஷ் தீப்-ஐ ரூ.8 கோடி கொடுத்து லக்னோ வாங்கி வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- துஷார் தேஸ்பாண்டேவை 6.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியது.
- தீபக் சஹாரை ரூ.9. 25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் துஷார் தேஸ்பாண்டேவை 6.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியது. இவரின் அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதுபோல் சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் தீபக் சஹாரை ரூ.9.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இவரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
- சாம் கரணை சென்னை ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைப்பர்.
- கடந்த 3 ஆண்டுகளாக பஞ்சாப் அணியில் சாம் கரண் விளையாடி வந்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சாம் கரணை 2.4 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சாம் கரணின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது
கடந்த 3 ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் விளையாடி வந்த சாம் கரண் அதற்கு முன்பு சென்னை அணியில் விளையாடி வந்தார். அப்போது சாம் கரணை சென்னை ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
- கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் ஐதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை 3.2 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது. வாஷிங்டன் சுந்தரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் ஐதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+8
- ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.
- 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.
- ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.
பெர்த்:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங் சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது.
46 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஷ்வால் (161 ரன்), விராட் கோலி (100 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார்.
534 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன் எடுத்து இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெற்றிக்கு மேலும் 522 ரன் தேவை.கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. இறுதியில் ஆஸ்திரேலியா 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இந்தியா 110 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா 90 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது.
- பும்ரா இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்தினார்.
- 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால், விராட் கோலி சதம் விளாசி அணியின் ஸ்கோருக்கு உதவியாக இருந்தனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ராவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 104 ரன்னில் சுருண்டது.
46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சதங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கு 534 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா.

534 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது களம் இறங்கியது. பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்த ஆஸ்திரேலியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. உஸ்மான் கவாஜ் உடன் ஸ்மித் ஆட்டத்தை தொடங்கினார். கவாஜா 4 ரன்னிலும், ஸ்மித் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்மித் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 79 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது.
அதன்பின் டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு நிலைத்து நின்று விளையாடியது. குறிப்பாக டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடினார். அவரை பும்ரா 89 ரன்னில் வீழ்த்தினார்.

அப்போது ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில் மிட்செல் மார்ஷை 47 ரன்னில் நிதிஷ் ரெட்டி வீழ்த்தினார்.
தேனீர் இடைவேளைக்கு முன் வாஷிங்டன் சுந்தர் ஸ்டார்க்கை 12 ரன்னில் வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்து தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 227 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் வாஷிங்டன் சுந்தர் பந்தில் நாதன் லயன் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 227 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி விக்கெட்டுக்கு அலேக்ஸ் கேரியுடன் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்தார். 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்தில் க்ளீன் போல்டாக ஆஸ்திரேலியா 238 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி பெர்த் மைதானத்தில் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம் பெர்த்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.






