search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ivory Coast"

    • 2013லிருந்து இந்தியாவில் எதேச்சதிகாரம் (autocracy) நிலவுகிறது என்கிறது இந்த ஆய்வு
    • உலகளவில் 42 நாடுகளில் எதேச்சதிகாரம் நிலவுகிறது என குறிப்பிட்டது இந்த ஆய்வறிக்கை

    179 நாடுகளில் ஜனநாயகம் எவ்வாறு உள்ளது என வி-டெம் (V-Dem) எனும் அமைப்பு ஆய்வு நடத்தி சுதந்திர ஜனநாயகத்தை (Liberal Democracy) கடைபிடிக்கப்படும் நாடுகளை பட்டியலிட்டது.

    இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் நைஜர் (Niger) மற்றும் ஐவரி கோஸ்ட் (Ivory Coast) ஆகிய இரு நாடுகளுக்கு இடையே 104-வது இடத்தில் இந்தியா உள்ளது.

    இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

    உலகளவில் 42 நாடுகளில் எதேச்சதிகாரம் நிலவுகிறது.

    2013லிருந்து இந்தியாவில் எதேச்சதிகாரம் (autocracy) நிலவுகிறது.

    எதேச்சதிகாரம் அதிகம் நிலவும், முதல் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

    சுமார் 140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியா எதேச்சதிகாரத்தில் சிக்கி உள்ளது.

    "முழு ஜனநாயகம்" (complete democracy) அல்லாமல் "தேர்தல் வழி எதேச்சதிகாரம்" (electoral autocracy) கடைபிடிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி விட்டது.


    காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவர் கொண்டு வந்த "அவசர நிலை" (emergency) காலகட்டத்தில் இருந்ததை போன்று தற்போதும் எதேச்சதிகாரம் மிகுந்த நாடாக இந்தியா உருவெடுத்து விட்டது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


    உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் பெய்து வரும் பலத்த மழைக்கு 18 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். #IvoryCoast #Abidjan #Flood
    அபித்ஜான்:  

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரிகோஸ்ட் நாட்டில் உள்ள அபித்ஜான் நகரில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழைக்கு 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் பலர் தங்களது வீட்டை இழந்து தத்தளித்து வருகின்றனர். பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.

    வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 115 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அரசின் நிவாரண முகாம்க்ளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளதாக அரசு இணைய தளங்களில் பதிவிட்டுள்ளனர். #IvoryCoast #Abidjan #Flood
    ×