என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது.
    • ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

    ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.

    கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

    இந்நிலையில், டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கு சென்றுள்ள ரிஷப் பண்ட் குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ரிஷப் பண்ட் நீங்கள் எப்போதும் என்னுடைய தம்பியாகவே இருப்பீர்கள். என் இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்களை நான் நேசிக்கிறேன். உங்களை எனது குடும்பத்தில் ஒருவராக கருதி, முடிந்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயன்றுள்ளேன். நீங்கள் வேறு அணிக்கு செல்வதை பார்க்க வருத்தமாகவும் உள்ளது. எப்போதும் நீங்கள் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஒரு அங்கம்தான். என்றாவது ஒருநாள் நாம் மீண்டும் ஒன்றுசேர்வோம் என்று நான் நம்புகிறேன்.

    எல்லாவற்றிற்கும் நன்றி ரிஷப். நாங்கள் எப்போதும் உன்னை நேசிப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் டெல்லி அணிக்கு எதிராக விளையாடும்போது நான் உங்களை உற்சாகப்படுத்துவேன். உங்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    இதனிடையே, டெல்லி அணியில் 9 ஆண்டுகள் விளையாடியது குறித்து ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இந்தப் போட்டியில் குகேஷ், சீனாவின் டிங் லிரென் ஆகியோர் மோதினர்.

    சிங்கப்பூர்:

    இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் டிங் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என முன்னிலை பெற்றார்.

    இந்நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய 2-வது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் ஆடினார். இதில் குகேஷ்- டிங் லிரென் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

    முதல் போட்டியில் தோல்வி அடைந்த குகேஷ், இதன்மூலம் மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார் என ரசிகர்கள் தெரிவித்தனர்.

    • டெல்லி கேப்பிடல் உடனான எனது பயணம் அற்புதமானது.
    • நான் களத்தில் இறங்கும் போதெல்லாம் உங்களை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.

    கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

    இந்நிலையில், டெல்லி அணியில் 9 ஆண்டுகள் விளையாடியது குறித்து ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் , "குட்பை சொல்வது ஒருபோதும் எளிதானது அல்ல. டெல்லி கேபிட்டல்ஸ் உடனான எனது பயணம் அற்புதமானது. நான் நினைத்துப் பார்க்காத வகையில் வளர்ந்துள்ளேன். நான் ஒரு இளைஞனாக டெல்லி அணிக்கு வந்தேன். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம்.

    இந்தப் பயணத்தை பயனுள்ளதாக்கியது ரசிகர்களாகிய நீங்கள்தான். என் வாழ்க்கையின் கடினமான ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை அரவணைத்து, என்னை உற்சாகப்படுத்தி, எனக்கு ஆதரவாக நின்றீர்கள். நான் முன்னேறும்போது, உங்கள் அன்பையும் ஆதரவையும் என் இதயத்தில் சுமக்கிறேன். நான் களத்தில் இறங்கும் போதெல்லாம் உங்களை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது குடும்பமாக இருப்பதற்கும் இந்தப் பயணத்தை மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 145 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18.2 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வென்றது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 32.3 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டியான் மையர்ஸ் 33 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 31 ரன்னும், எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், ஆகா சல்மான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் ஆட்டக்காரர் சயீம் அயூப் அதிரடியில் மிரட்டினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சயீம் அயூப் 62 பந்தில் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 சமனிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சயீம் அயூப் தேர்வு செய்யப்பட்டார்.

    • தமிழக வீரர் நடராஜனை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு எடுத்தது.
    • கடந்த ஐபிஎல் சீசன் வரை ஐதராபாத் அணியில் நடராஜன் விளையாடி வந்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கவுள்ளது. இதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.

    முதல்நாள் ஏலத்தில் தமிழக வீரர் நடராஜனை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு எடுத்தது. கடந்த ஐபிஎல் சீசன் வரை ஐதராபாத் அணியில் நடராஜன் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், டெல்லி அணியில் இணைந்ததை குறித்து தமிழக வீரர் நடராஜன் மகிழ்ச்சி தெரிவிக்கும் வீடியோவை டெல்லி அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    • கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நிதிஷ் ராணா 4-ம் இடத்தில உள்ளார்.
    • நிதிஷ் ராணாவை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி ஒருமுறை கூட முயற்சிக்கவில்லை.

    ஐ.பி.எல். மெகா ஏலத்திற்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியி ரிங்கு சிங், சுனில் நரைன், ரஸல், ரமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகிய 6 வீரர்களை 57 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.

    ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா வீரரான வெங்கடேஷ் ஐயரை மிக அதிக விலையான 23.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    அதே சமயம் கடந்த 7 ஆண்டுகளாக கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடி நிதிஷ் ராணாவை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி ஒருமுறை கூட முயற்சிக்கவில்லை. இறுதியாக நிதிஷ் ராணாவை ரூ.4.2 கோடி கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது.

    கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நிதிஷ் ராணா 4-ம் இடத்தில உள்ளார். 2023 ஆம் ஆண்டு காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடாத போட்டிகளில் நிதிஷ் ராணா தான் கேப்டன் பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி ஆர்வம் காட்டாமல் இருந்ததை அவரின் மனைவி சாச்சி மார்வா தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "விசுவாசம் என்பது மிகவும் விலை உயர்ந்தது, எல்லாராலும் அதை வாங்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    அதே சமயம் நிதிஷ் ராணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது விசுவாசம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தான்" என்று ஸ்டோரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 145 ரன்களில் ஆல் அவுட்டானது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 32.3 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டியான் மையர்ஸ் 33 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 31 ரன்னும், எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், ஆகா சல்மான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

    • குஜராத் அணி அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
    • பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை 12.25 கோடி ரூபாய்க்கு குஜராத் வாங்கியது.

    2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அந்த தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. 2023 ஐபிஎல் தொடரில் பைனல் வரை சென்று நூலிழையில் கோப்பையை தவறவிட்டு ரன்னர் அப் ஆனது.

    அறிமுகமான முதல் 2 ஐபிஎல் தொடரிலும் பைனல் வரை சென்ற குஜராத் அணி கடந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. முதல் 2 ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா கடந்த சீசனில் மும்பை அணிக்கு சென்றதால் குஜராத் அணியை கடந்த சீசனில் சுப்மன் கில் வழிநடத்தினார்.

    இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக விளையாட என்ற முனைப்போடு இருக்கும் குஜராத் அணி ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரஷித் கான் (ரூ. 18 கோடி), சுப்மன் கில் (ரூ. 16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ. 8.50 கோடி), ராகுல் தெவாடியா (ரூ. 4 கோடி), ஷாருக் கான் (ரூ. 4 கோடி) ஆகிய 5 வீரர்களை 51 கோடி கொடுத்து தக்க வைத்தது.

    கையில் 69 கோடியுடன் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட குஜராத் அணி அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அடுத்ததாக பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை 12.25 கோடிக்கும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவை 10.75 கோடிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை 9.50 கோடிக்கும் வாங்கியது.

    வரும் ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் உடன் இணைந்து சுப்மன் கில் களமிறங்குவார். மிடில் ஆர்டரில் விளையாட சாய் சுதர்சன், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    ரஷித் கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் ககிசோ ரபாடா, முகமது சிராஜ், ஜெரால்ட் கோட்சீ போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் குஜராத் அணியில் உள்ளனர்.

    அதனால் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கண்டிப்பாக கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    25 பேர் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி:

    1. ரஷித் கான், 2. சுப்மன் கில், 3. சாய் சுதர்சன், 4. ராகுல் தெவாடியா, 5. ஷாருக் கான், 6. ககிசோ ரபாடா, 7. ஜோஸ் பட்லர், 8. முகமது சிராஜ், 9. பிரசித் கிருஷ்ணா, 10. நிஷாந்த் சிந்து, 11. மஹிபால் லோம்ரோர், 12. குமார் குஷாக்ரா, 13. அனுஜ் ராவத், 14. மானவ் சுதார், 15. வாஷிங்டன் சுந்தர், 16. ஜெரால்ட் கோட்சீ , 17. குர்னூர் ப்ரார், `18. ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், 19. சாய் கிஷோர், 20. இஷாந்த் சர்மா, 21. ஜெயந்த் யாதவ், 22. க்ளென் பிலிப்ஸ், 23. கரீம் ஜனத், 24. குல்வந்த் கெஜ்ரோலியா. 25. அர்ஷத் கான்

    • ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது.
    • லக்னோ அணி கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.

    ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகிய 4 வீரர்களை மொத்தமாக 44 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.

    கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணி தக்க வைக்காதது பேசுபொருளானது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

    அதே சமயம் கடந்த சீசனில் லக்னோ அணி கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது. கே.எல்.ராகுலை பெங்களூரு அணி வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி அணி வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆகவே டெல்லி அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹாரி புரூக் என அதிரடி காட்ட பலர் வரிசை கட்டி காத்திருக்கின்றனர். அது சமயம் மிடில் ஆர்டரில் விளையாட டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அசுதோஷ் சர்மா, சமீர் ரிஸ்வி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    அக்சர் படேல், குல்தீப் யாதவ் என சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், முகேஷ் குமார், மோகித் சர்மா என்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் டெல்லி அணியில் உள்ளனர்.

    ஆகவே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான வீரர்களை கொண்டுள்ள டெல்லி அணி வரும் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    23 பேர் கொண்ட டெல்லி கேபிட்டல்ஸ் அணி:

    1. அக்சர் படேல், 2. குல்தீப் யாதவ், 3. டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 4. அபிஷேக் போரல், 5. மிட்செல் ஸ்டார்க், 6. கேஎல் ராகுல், 7. ஹாரி புரூக், 8. ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், 9. டி.நடராஜன், 10. கருண் நாயர், 11. சமீர் ரிஸ்வி, 12. அசுதோஷ் சர்மா, 13. மோகித் சர்மா, 14. ஃபாஃப் டு பிளெசிஸ், 15. முகேஷ் குமார், 16. தர்ஷன் நல்கண்டே, 17. விப்ராஜ் நிகம், 18. துஷ்மந்த சமீரா, 19. டோனோவன் ஃபெரீரா, 20. அஜய் மண்டல், 21. மன்வந்த் குமார், 22. திரிபுரானா விஜய், 23. மாதவ் திவாரி.

    • பேட்டிங்கில் சாம்சன், ஜெய்ஸ்வா், பராக், ஜூரெல், ஹெட்மையர் உள்ளனர்.
    • வேகப்பந்து வீச்சில் சந்தீப் ஷர்மா, ஆர்ச்சர், மபாகா, பரூக்கு ஆகியோரை கொண்டுள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40.70 கோடி ரூபாயில் 14 வீரர்களை எடுத்துள்ளது. பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அனுபவமான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    பேட்டிங்கை பொறுத்தவரை சாம்சன், ஜெய்ஸ்வால், பராக், ஜூரெல், ஹெட்மையர், நிதிஷ் ராணா உள்ளனர். வேகப்பந்து வீச்சில் சந்தீப் ஷர்மா, ஆர்ச்சர், மபாகா, பரூக்கு ஆகியோர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

    சுழற்பந்து வீச்சில் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:-

    1. சஞ்சு சாம்சன், 2. ஜெய்ஸ்வால், 3. ரியான் பராக், 4. துருவ் ஜூரெல், 5. ஹெட்மையர் (வெளிநாட்டு வீரர்), 7. சந்தீப் ஷர்மா, 8. ஜாஃப்ரா ஆர்ச்சர் (வெளிநாட்டு வீரர்), 9. மகேஷ் தீக்ஷனா (வெளிநாட்டு வீரர்), 10. வனிந்து ஹசரங்கா (வெளிநாட்டு வீரர்), 11. ஆகாஷ் மத்வால், 12. குமார் கார்த்திகேயா, 13. நிதிஷ் ராணா, 14. துஷார் தேஷ்பாண்டே, 15. ஷுபம் துபே, 16. யுத்ஹவிர் துபே, 17. மபாகா (வெளிநாட்டு வீரர்), 18. குணால் ரத்தோர், 19. அசோக் ஷர்மா, 20. பரூக்கி (வெளிநாட்டு வீரர்)

    • கம்மின்ஸ், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட்டை தக்கவைக்க 75 கோடி ரூபாய்.
    • இஷான் கிஷன், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, உனத்கட் போன்றோரை ஏலத்தில் எடுத்துள்ளது.

    கம்மின்ஸ், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் ஆகியோரை தக்கவைத்துக் கொள்ள 75 கோடி ரூபாய் செலவிட்டாலும் 44.80 கோடி ரூபாயில் 15 பேரை வெற்றிகரமாக ஏலம் எடுத்துள்ளது சன்ரைசரஸ் ஐதாராபாத்.

    இஷான் கிஷன், முகமது ஷமி, ஆடம் ஷம்பா, ஹர்ஷல் பட்டேல், ராகுல் சாஹர் என அமர்க்களப்படுத்தியுள்ளது.

    பேட்டிங்கில் கிளாசன், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், அதர்வா டைடு உள்ளனர். வேகப்பந்து வீச்சில் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷல் பட்டேல், உனத்கட் முக்கிய நபர்களாக திகழ்வார்கள்.

    கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஐதராபாத் இந்த முறை சாம்பியனுக்கு மல்லுகட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

    சன்ரைசரஸ் ஐதாராபாத் அணி விவரம்:-

    1. கம்மின்ஸ் (வெளிநாட்டு வீரர்), 2. அபிஷேக் சர்மா, 3. நிதிஷ் ரெட்டி, 4. ஹென்ரிச் கிளாசன் (வெளிநாட்டு வீரர்), 5. டிராவிஸ் ஹெட் (வெளிநாட்டு வீரர்), 6. முகமது ஷமி, 7. ஹர்ஷல் பட்டேல், 8. இஷான் கிஷன், 9. ராகுல் சாஹர், 10. ஆடம் ஜம்பா (வெளிநாட்டு வீரர்), 11. அதர்வா டைடு, 12. அபினவ் மனோகர், 13. சிமர்ஜீத் சிங், 14. ஜீஷன் அன்சாரி, 15. ஜெய்தேவ் உனத்கட், 16. பிரைடன் கார்சே (வெளிநாட்டு வீரர்), 17. அனிகெட் வர்மா, 18. அனிகேத் வர்மா, 19. எஷான் மலிங்கா (வெளிநாட்டு வீரர்), 20. சச்சின் பேபி.

    • பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் ஒவ்வொரு சீசனிலும் புதிய கேப்டனை அறிவிப்பார்கள்.
    • இந்த முறை ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் பஞ்சாப் அணி களமிறங்கும்.

    கடந்த ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. இதனையடுத்து அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன் மூலம் ஏலத்தில் வந்த அவரை பஞ்சாப் அணி ரூ. 26.75 கோடிக்கு வாங்கியது.

    பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் ஒவ்வொரு சீசனிலும் புதிய கேப்டனை அறிவிப்பார்கள். அந்த வகையில் இந்த முறை ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் பஞ்சாப் அணி களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

    பஞ்சாப் அணியில் பேட்டிங் ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், நேஹல் வதேரா, ஆகியோர் உள்ளனர். உள்ளூர் வீரர்களான ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங் போன சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரயும் கவர்ந்தனர்.

    ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ் உள்ளனர். அதே அணியை சேர்ந்த மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா அணியில் மட்டுமே பார்மில் இருப்பார். ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சன், முஷீர் கானும் சுழற்பந்து வீச்சில் ஹர்பிரீத் ப்ரார், சாஹல், மேக்ஸ்வெல் உள்ளனர்.

    ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், அர்ஷ்தீப் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், நேஹல் வதேரா, ஹர்பிரீத் ப்ரார், விஷ்ணு வினோத், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லாக்கி இங்கிலிஸ், லாக்கி ஹர்மாட், லாக்கி ஃபிர்மட் , குல்தீப் சென், பிரியான்ஷ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே.

    ×