என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி வென்று 8 வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    இதில் சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் 42-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 47-30 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வென்றது.

    • கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் துவங்கும் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என அழைப்பர்.
    • 4-வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட்டில் இந்தியாவும் 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையினால் டிரா ஆனது.

    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் உள்ளது. இதனையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி மெர்ல்போனில் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் போட்டி பாக்சிங் டே போட்டியாக நடைபெற உள்ளது. பொதுவாகவே, டிசம்பர் 26-ம் தேதி துவங்கும் டெஸ்ட்களை பாக்சிங் டே டெஸ்ட் என அழைப்பார்கள்.

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் துவங்கும் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என ஒவ்வொரு ஆண்டும் விளையாடப்படுகிறது. இதனால் 4-வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.

    இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி புதிய லுக்கில் இருக்கும் விடியோவை ஆஸ்திரேலியாவின் பிரபல சிகையலங்கார நிபுணர் ஜோர்டான் தபக்மேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், 'கிங்'கிற்கு புத்தி கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. விராட்கோலி எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்" என்று ஜோர்டான் தபக்மேன் பதிவிட்டுள்ளார். கோலியின் இந்த புதிய லுக் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டானார்
    • மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஸ்மிருதி மந்தனா விளையாடி வருகிறார்

    வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    315 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 26.2 ஓவர்கள் முடிவில் 103 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இப்போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் இந்த சாதனையை பாராட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. அப்புகைப்படத்தில் , 'மகாராணி' போல இருக்கும் ஸ்மிருதி மந்தனா அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் வகையில் எடிட் செய்துள்ளனர்.

    மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஸ்மிருதி மந்தனா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டானார்
    • இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    315 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 26.2 ஓவர்கள் முடிவில் 103 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாகி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    • சஞ்சு சாம்சன் 2018 ஆம் ஆண்டு சாருலதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
    • அப்புகைப்படத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய அவரது மனைவி சாருலதா கீப்பிங் செய்கிறார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி சாருலதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் திருமண நாளை ஒட்டி இன்ஸ்டாகிராமில் தங்களது புகைப்படத்தை பகிர்ந்து சஞ்சு சாம்சனின் மனைவி வாழ்த்து கூறியுள்ளார். அப்புகைப்படத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய அவரது மனைவி சாருலதா கீப்பிங் செய்கிறார்.

    இந்த பதிவிற்கு கீழே வாழ்நாள் முழுவதும் என்னை காப்பவர் (keeper for life) என்று சஞ்சு சாம்சன் கமெண்ட் செய்துள்ளார்.

    • முதல் டி20 போட்டி ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
    • 2 அணிகளுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    முதலில் டி20 தொடரும் அதற்கடுத்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது. அதன்படி முதல் டி20 போட்டி ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2 அணிகளுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விரைவில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இதே இங்கிலாந்து அணியே விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி சுமித், லியாம் லிவிங்ஸ்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், ஜோ ரூட், சாகிப் மக்மூத், பில் சால்ட், மார்க் உட்

    இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி சுமித், லியாம் லிவிங்ஸ்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சாகிப் மக்மூத், பில் சால்ட், மார்க் வுட்

    • பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டானார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    315 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து களமிறங்கவுள்ளது.

    இப்போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

    • அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் எடுத்த 765 சர்வதேச விக்கெட்டுகளில் ஒவ்வொன்றும் சிறப்பானது.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று டிராவில் முடிந்தது. இந்த தொடரில் அஸ்வின் 2-வது போட்டியில் மட்டுமே விளையாடினார். முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

    அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

    ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் அஷ்வினை பாராட்டி பிரதமர் மோடி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் அஸ்வினின் ஓய்வு எதிர்பாராதது என்று கூறிய பிரதமர் மோடி, "இன்னும் உங்களிடம் பல ஆப்-பிரேக்குகளை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், நீங்கள் ஒரு கேரம் பந்தை (ஓய்வு அறிவிப்பு) வீசினீர்கள்" என்று தெரிவித்தார்.

    மேலும் அக்கடிதத்தில், "உங்களின் ஜெர்சி எண் 99 இழப்பை உணரவைக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் எடுத்த 765 சர்வதேச விக்கெட்டுகளில் ஒவ்வொன்றும் சிறப்பானது. டெஸ்ட் போட்டிகளில் அதிக தொடர் ஆட்டக்காரர் விருதுகளை நீங்கள் பெற்றுள்ளதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அணியின் வெற்றியில் உங்களது பங்களிப்பை உணர முடிகிறது.

    2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் புகழ்பெற்ற போட்டியில் (இந்தியா - பாகிஸ்தான் போட்டி) ஒரு பந்தை அடிக்காமல் விட்டதற்காக நீங்கள் நினைவுகூரப்படும் வீரராக உள்ளீர்கள். அப்போது நீங்கள் அடித்த வெற்றிக்கான ஷாட் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. அதற்கு முந்தைய பந்தை நீங்கள் அடிக்காமல் விட்டு அதை வைட் பந்தாக மாற்றியது உங்களின் விழிப்பான மனதை எங்களுக்கு காட்டியது" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இந்திய மகளிர் அண்டர் 19 கிரிக்கெட் அணி வங்கதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக மகளிர் யு19 ஆசிய கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் கோங்கடி திரிஷா அபாரமாக ஆடி 52 ரன்களை விளாசினார். இவர் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இடையில் கேப்டன் நிகி பிரசாத், மிதிலா வினோத் மற்றும் ஆயுஷி சுக்ளா மட்டும் இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். இவர்கள் முறையே 12, 17 மற்றும் 10 ரன்களை அடித்து அவுட் ஆகினர். வங்கதேசம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபர்ஜானா எஸ்மின் 4 விக்கெட்டுகளையும், நிஷிதா 2 விக்கெட்டுகளையும், ஹபிபா இஸ்லாம் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய வங்கதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனைகளில் ஒருவரான மொசாமத் எவா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய ஃபஹோமிதா சோயா 18 ரன்களையும், அடுத்து வந்த சௌமியா அக்தெர் 8 ரன்களிலும் அவுட் ஆகினர்.

    அடுத்து வந்தவர்களில் ஜூரியா ஃபெர்டோஸ் மட்டும் 22 ரன்களை அடிக்க மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் வங்கதேசம் அணி 18.3 ஓவர்களில் வெறும் 76 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 41 ரன்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆயுஷி சுக்ளா 3 விக்கெட்டுகளையும், பருனிகா சிசோடியா மற்றும் சோனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோஷிதா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • பும்ரா இல்லையென்றால் முதல் டெஸ்டில் தோற்று இருக்கும்.
    • ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது.

    பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் அவர் தலைமை பொறுப்பை ஏற்று இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். அந்த டெஸ்டில் பும்ரா 8 விக்கெட் (முதல் இன்னிங்ஸ் 5, 2-வது இன்னிங்ஸ் 3)வீழ்த்தினார். 295 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற அவரது பந்து வீச்சு காரணமாக அமைந்தது. 2-வது டெஸ்டில் 4 விக்கெட்டும், 3-வது டெஸ்டில் 9 விக்கெட்டும் (முதல் இன்னிஸ் 6, 2-வது இன்னிங்ஸ் 3) கைப்பற்றினார்.

    இந்த தொடரில் அவர் 3 டெஸ்டில் 21 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும் 3-வது டெஸ்டில் ஆகாஷ் தீப்புடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்து பாலோ ஆனை தவிர்த்தார்.

    இந்த நிலையில் பும்ராவை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், டெலிவிசன் வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தனி ஒருவராக இந்திய அணிக்காக போராடி தற்காத்து வருகிறார். பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆகாஷ் தீப்புடன் இணைந்து பாலோ ஆனை தவிர்த்தார். பும்ரா இல்லையென்றால் முதல் டெஸ்டில் தோற்று இருக்கும். பந்து வீச்சில் அவர் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார்.


    4-வது டெஸ்டில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பெரிய வீரர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு கை கொடுக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே கடைசி 2 டெஸ்டில் வெற்றி பெற இயலும்.

    ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். அவரது ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஹெட் இந்திய அணிக்கு தொடர்ந்து தலைவலியாக உள்ளார். அவரை டிராவிஸ் 'ஹெட்ஏக்' (தலைவலி) என்று தான் செல்லமாக அழைக்கின்றனர்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    • ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
    • கடன்கள் வடிவில் நிதி அளித்ததால் இயக்குநராக நியமிக்கப்பட்டேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தவர் ராபின் உத்தப்பா. தற்போது கிரிக்கெட் மட்டுமின்றி தொலைக்காட்சி தொகுப்பாளர், வர்ணனையாளர் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில், ராபின் உத்தப்பாவுக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தன் மீதான கைது வாரண்ட் குறித்து ராபின் உத்தப்பா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "எனக்கு எதிரான பி.எஃப். வழக்கு தொடர்பான சமீபத்திய செய்திகளைத் தொடர்ந்து, ஸ்ட்ராபெரி லென்செரியா பிரைவேட் லிமிடெட், சென்டௌரஸ் லைஃப்ஸ்டைல் பிரான்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் பெர்ரிஸ் ஃபேஷன் ஹவுஸ் உடனான எனது தொடர்பு குறித்து சில விளக்கங்களை வழங்க விரும்புகிறேன்.

    2018-19 ஆம் ஆண்டில், நான் இந்த நிறுவனங்களுக்கு கடன்கள் வடிவில் நிதி அளித்ததால் நான் இயக்குநராக நியமிக்கப்பட்டேன். இருப்பினும், நான் நிர்வாகப் பொறுப்பிலோ, அல்லது அந்நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லை. ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர், டிவி தொகுப்பாளர் மற்றும் வர்ணனையாளர் என்ற வகையில், அந்நிறுவனங்களின் செயல்பாடுகளில் பங்கேற்க எனக்கு நேரமும் நிபுணத்துவமும் இல்லை. உண்மையில், இன்றுவரை நான் நிதியளித்த வேறு எந்த நிறுவனங்களிலும் நான் நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.

     


    வருந்தத்தக்க வகையில், இந்த நிறுவனங்கள் நான் கடனாகக் கொடுத்த நிதியைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதால், சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு என்னை இட்டுச் சென்றது. நானும் பல வருடங்களுக்கு முன் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.

    வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நிலுவைத் தொகையை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியபோது, எனது சட்டக் குழு பதிலளித்தது. இந்த நிறுவனங்களில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது மற்றும் எனது ஈடுபாடு இல்லாததை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நிறுவனங்களிடமிருந்து வழங்கியது.

    இருந்த போதிலும், வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளனர். மேலும் எனது சட்ட ஆலோசகர்கள் வரும் நாட்களில் இந்த பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். முழுமையான உண்மைகளை தயவுசெய்து முன்வைக்கவும், பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும் ஊடகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கர்நாடக அணி 383 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • அந்த அணியின் கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்கள் குவித்தார்.

    அகமதாபாத்:

    விஜய் ஹசாரா கோப்பை ஒருநாள் தொடர் (50 ஓவர்) நேற்று தொடங்கியது. ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டி ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கர்நாடகா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சதத்தின் உதவியுடன் 382 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மத்ரே (78 ரன்), ஹர்திக் தாமோர் (84 ரன்), ஷிவம் துபே (63 ரன்) ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.

    இதையடுத்து, 383 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கர்நாடக அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான நிகின் ஜோஸ் 21 ரன்னும், மயங்க் அகர்வால் 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின், கர்நாடக அணி வீரர்கள் அதிரடியில் மிரட்டினர். அனீஷ் 82 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கர்நாடக அணி 46.2 ஒவரில் 3 விக்கெட்டுக்கு 383 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்களுடனும், பிரவீன் துபே 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ×