என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
- அஸ்வினுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரில் பாதியில் தமிழக வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். அவருக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் முதல் தர கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் விளையாடி 41.21 சராசரியுடன் 2523 ரன்கள் விளாசியுள்ளார். பந்து வீச்சில் 101 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
- பிக் கிரிக்கெட் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் சதர்ன் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் மும்பை மரைன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
- இதில் இர்பான் தலைமையிலான மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.
பிக் கிரிக்கெட் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் சதர்ன் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் மும்பை மரைன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் சதர்ன் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னாவும், மும்பை மரைன்ஸ் அணியின் கேப்டனாக இர்ஃபான் பதானும் செயல்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த சதர்ன் ஸ்பார்ட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை மரைன்ஸ் 19.1 ஓவரில் மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து 7 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிக் கிரிக்கெட் லீக் தொடரை மும்பை மரைன்ஸ் அணி வென்றது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை வென்ற போது ரோகித் சர்மா ஸ்டைலாக வந்து உலகக் கோப்பையை வாங்குவார். அதே போல பிக் கிரிக்கெட் லீக் கோப்பையை வாங்கிய இர்பான் பதான், ரோகித் ஸ்டைலில் கோப்பையை கொண்டு தனது அணி வீரர்களிடம் சேர்ப்பார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. நியமிக்கப்பட்டுள்ளார்.
- இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா
இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அதன்பிறகு ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளது.
இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் வில்லியம்சன் மற்றும் கான்வே இந்த தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி விவரம்:
சரித் அசலங்கா (C), பாதும் நிசங்கா, அவிஷ்க பெர்னாண்டோ, நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, சமிது விக்கிரமசிங்க, அசித்த பெர்னாண்டோ, முகமது ஷிராஸ், லஹிரு குமார, எஷான் மலிங்கா
- தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை.
- நாளை ஐதராபாத்தில் பி.வி.சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.
முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நாளை ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஆனால் இன்னமும் தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை. இந்நிலையில், பி.வி. சிந்துவின் திருமண புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
சிந்துவின் கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொடர்ச்சியாக அதிக இன்னிங்சில் டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தை அப்துல்லா ஷபிக் பிடித்துள்ளார்.
- இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில் தொடக்க வீரராக களமிறங்கிய அப்துல்லா ஷபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் அப்துல்லா ஷபிக் டக் அவுட்டில் வெளியேறியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த முதல் தொடக்க வீரர் எனும் சாதனையை இவர் படைத்துள்ளார்.
முன்னதாக, பார்ல் மற்றும் கேப்டவுனில் நடந்த முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் மார்கோ ஜான்சனின் பந்துவீச்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த அப்துல்லா ஷபிக், கடைசி ஒருநாள் போட்டியின் போது காகிசோ ரபாடா பந்துவீச்சில் 0 ரன்களில் வெளியேறியதன் காரணமாக இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு ஒருநாள் தொடரில் சூர்யகுமார் தொடர்ந்து மூன்று முறை 0 அவுட்டாகியுள்ளார்.
அதன்படி அவர் கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் டக் அவுட்டாகினார். இருப்பினும் அவர் மிடில் ஆர்டரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக இன்னிங்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த வீரர்கள் வரிசையிலும் இரண்டாம் இடத்தை அப்துல்ல ஷபிக் பிடித்துள்ளார்.
இவரைத் தவிர்த்து இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங், இலங்கை அணியின் ஜெயவர்தனே, இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஷேன் வாட்சன், பாகிஸ்தானின் சல்மான் பட், ஷோயப் மாலிக், உள்ளிட்ட பல வீரர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.
- இந்த 2 தொடர்களில் இருந்தும் வில்லியம்சன் மற்றும் கான்வே விலகியுள்ளனர்.
- இலங்கைக்கு எதிரான தொடரில் அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் அறிமுகமாகி உள்ளார்.
இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அதன்பிறகு ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளது.
டி20 தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந் தேதி முடிகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 5-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக மிட்செல் சாட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த 2 தொடர்களில் இருந்தும் வில்லியம்சன் மற்றும் கான்வே விலகியுள்ளனர்.
இந்த தொடரில் அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் அறிமுகமாகி உள்ளார். இவர் இரு தொடர்களிலும் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து டி20 அணி விவரம்:-
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபௌல்க்ஸ், மிட்ச் ஹே, மாட் ஹென்றி, பெவோன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், நாதன் ஸ்மித்
நியூசிலாந்து ஒருநாள் அணி விவரம்:-
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, மிட்ச் ஹே, மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, வில் யங், நாதன் ஸ்மித்.
- தடுப்பாட்ட மனநிலையை கைவிட்டு, அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும்.
- இதை செய்தால் அவர் பார்முக்கு திரும்புவதற்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் வழிவகுக்கும்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் இணைந்து விளையாடுகிறார்கள். மனைவிக்கு குழந்தை பிறந்ததால் முதலாவது டெஸ்டை தவற விட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2-வது டெஸ்டுக்கு தான் திரும்பினார். வழக்கமான தொடக்க வரிசைக்கு பதிலாக தற்போது 6-வது பேட்டிங் வரிசையில் ஆடுகிறார். ஆனால் எதிர்பார்த்தபடி அவர் ெஜாலிக்கவில்லை. இரு டெஸ்டில் வெறும் 19 ரன் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு சில யோசனையை வழங்கியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், 'ரோகித் சர்மா தனது யுக்திகளை சிறிது மாற்றிக்கொண்டு விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்.
ஏனெனில் 6-வது வரிசையிலும் அவரால் அபாயகரமான ஒரு பேட்ஸ்மேனாக செயல்பட முடியும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்க வேண்டும். கடந்த முறை அவர் களம் இறங்கிய போது தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதா? அல்லது தாக்குதல் பாணியை கடைபிடிப்பதா? என்ற குழப்பத்தில் இருந்தார்.
தடுப்பாட்ட மனநிலையை கைவிட்டு, அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும். இதை செய்தால் அவர் பார்முக்கு திரும்புவதற்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் வழிவகுக்கும்' என்றார்.
- நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (11, 89, 140, 152 மற்றும் 17 ரன்) சிறப்பாக விளையாடி வருகிறார்.
- டெஸ்டில் அவரை கட்டுப்படுத்த எந்த மாதிரி திட்டங்களை வகுத்துள்ளோம் என்பதை வெளிப்படுத்த முடியாது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று பேட்டிங் பயிற்சியின் போது இடது கால்முட்டியில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவருக்கு பிசியோ சிகிச்சை அளித்ததுடன், ஐஸ்கட்டி ஒத்தடம் போட்டார். அவரது காயத்தன்மை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு, வலை பயிற்சியில் பேட்டிங் செய்த போது பந்து கையில் தாக்கியது.
பின்னர் ஆகாஷ் தீப் நிருபர்களிடம் கூறுகையில், 'கிரிக்கெட் விளையாடும்போது இது போன்று அடிபடுவது சகஜம். நாங்கள் பயிற்சி மேற்கொண்ட ஆடுகளம் வெள்ளைநிற பந்துக்குரியது என்று நினைக்கிறேன். அதனால் நிறைய பந்துகள் தாழ்வாகவே வந்தன. இருப்பினும் பயிற்சியின் போது இவ்வாறு அடிபடுவது வாடிக்கை தான். காயம் பயப்படும் அளவுக்கு இல்லை. ரோகித் சர்மா காயம் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை' என்றார்.
மேலும் ஆகாஷ் தீப்பிடம் பிரிஸ்பேன் டெஸ்டில் (31 ரன் எடுத்தார்) பும்ராவுடன் இணைந்து பாலோ-ஆனை தவிர்த்து இந்திய அணியை காப்பாற்றியது குறித்து கேட்ட போது, 'நானும், பும்ராவும் பின்வரிசையில் ஆடக்கூடியவர்கள். இது போன்று 20-30 ரன்கள் எடுப்பது அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அணிக்காக எந்த வழியிலாவது எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது மட்டுமே மனதில் ஓடியது. பாலோ-ஆனை தவிர்க்க வேண்டும் என்பதை எதிர்நோக்கி விளையாடவில்லை. அன்றைய தினம் ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். கடவுளின் அருளால் எங்களால் பாலோ-ஆனை தவிர்க்க முடிந்தது. இது போன்ற சூழலில் நீங்கள் நன்றாக ஆடும் போது, அது ஒட்டுமொத்த அணிக்கும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும். அது தான் வீரர்களின் ஓய்வறையில் எதிரொலித்தது.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (11, 89, 140, 152 மற்றும் 17 ரன்) சிறப்பாக விளையாடி வருகிறார். அடுத்த டெஸ்டில் அவரை கட்டுப்படுத்த எந்த மாதிரி திட்டங்களை வகுத்துள்ளோம் என்பதை வெளிப்படுத்த முடியாது. சொன்னால் அதற்கு ஏற்ப தயாராகி விடுவார். டிராவிஸ் ஹெட் 'ஷாட்பிட்ச்' பந்துகளில் தடுமாறக்கூடியவர். அவரை களத்தில் நிலைத்துநின்று ஆட விடக்கூடாது. அவருக்கு எதிராக குறிப்பிட்ட இடத்தில் பந்தை பிட்ச் செய்து வீசுவதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு வீசும் போது அவர் தவறிழைத்து விக்கெட்டை இழக்க வாய்ப்பு உருவாகும்' என்றார்.
- 3 வடிவிலான தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
- இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
ஜோகனஸ்பெர்க்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் டக்வொர்த் லிவிஸ் முறையில் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சயீம் அயூபுக்கு அளிக்கப்பட்டது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்த அணி என்ற வரலாற்று சாதனை படைத்தது பாகிஸ்தான். 3 போட்டிகள் கொண்ட தொடரை 0-3 என கைப்பற்றியது.
- இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள முடியாது என கூறியது.
- போட்டிகள் பொதுவான இடத்தில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது. இந்தத் தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இதனால் இந்த தொடரின் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டது. எனினும், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள முடியாது என கூறியது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இடையே கடும் இழுபறி சூழல் நிலவி வந்தது. பிறகு, இந்திய அணி விளையாடும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்தது.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளன. இரு அணிகள் இடையிலான பொதுவான இடமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்வு செய்துள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் ஆமிர் மிர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஐக்கிய அரபு அமரீகத்தின் கிரிக்கெட் வாரிய தலைவர், "பொதுவான களம் குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.-யிடம் அறிவித்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்."
"சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பொதுவான இடம் பற்றிய முடிவை, இந்தத் தொடரை நடத்தும் பாகிஸ்தான் தான் எடுக்க வேண்டும். இதுப்பற்றிய இறுதி முடிவு மொசின் நக்வி மற்றும் ஷேக் அல் நயன் இடையிலான ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்டது," என்று தெரிவித்தார்.
- முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 314 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார்.
வதோதரா:
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஹர்மன்பிரீத் கவுர் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
பெண்கள் ஒருநாள் போட்டியில் 1000 ரன் எடுத்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார் ஹர்மன்பிரீத் கவுர். இவர் கேப்டனாக 26 போட்டியில் மொத்தம் 1,012 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே மிதாலி ராஜ் (5319 ரன், 155 போட்டி) இம்மைல்கல்லை எட்டினார். ஒட்டுமொத்த இந்திய கேப்டன் பட்டியலில் 10-வது இடம் பிடித்தார் ஹர்மன்பிரீத் கவுர்.
முதல் மூன்று இடங்களில் எம்.எஸ்.டோனி (6,641 ரன், 200 போட்டி), கோலி (5,449 ரன், 95 போட்டி), மிதாலி ராஜ் (5,319 ரன், 155 போட்டி) உள்ளனர்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 308 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் சயீம் அயூப் சதமடித்து அசத்தினார்.
ஜோகனஸ்பெர்க்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என வென்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரை சதம் கடந்தனர். சல்மான் ஆகா 33 பந்தில் 48 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பவுமா 8 ரன்னிலும், ஜோர்ஜி 26 ரன்னிலும், மார்கிரம் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஹென்ரிச் கிளாசன் ஒரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து 81 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் கார்பின் போஸ்ச் 40 ரன் எடுத்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 42 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் டக்வொர்த் லிவிஸ் முறையில் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
பாகிஸ்தானின் சுபியான் மகீம் 4 விக்கெட்டும், நசீம் ஷா, ஷாஹின் அப்ரிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சயீம் அயூபுக்கு அளிக்கப்பட்டது.






