என் மலர்
விளையாட்டு
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் டெல்லி அணி வென்று 12-வது வெற்றியைப் பதிவு செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
இதில் சிறப்பாக ஆடிய தபாங் டெல்லி அணி 33-31 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் 40-40 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் முடிந்தது.
- கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
- இந்த முறை சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இது குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி என்பதால் இது ஒரு அங்கீகரிக்கப்படாத போட்டியாகவே அமைகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் திரிபுரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 405 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சமீர் ரிஸ்வி 13 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 97 பந்தில் 201 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அதிவேக இரட்டை சதத்தை அடித்து சமீர் ரிஸ்வி சாதனை படைத்துள்ளார்.
பொதுவாக மாநிலங்களுக்கு இடையே ஆன அங்கீகரிக்கப்பட்ட லிஸ்ட் ஏ போட்டியில் நாராயணன் ஜெகதீசன் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் 114 பந்துகளில் அதிவேக இரட்டை சதத்தை அடித்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு முன்பாக முதலிடத்தில் நியூசிலாந்தின் சாரட் போவ்ஸ் இருக்கிறார். கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய் கொடுத்து ஆச்சரியப்படும் இடத்தில் வாங்கியது.
ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பெரிய அளவில் சொபிக்கவில்லை. இதனால் இந்த முறை சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை. டெல்லி இவரை வெறும் 95 லட்ச ரூபாய்க்கு வாங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பாண்ட்யா நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே எதிர்ப்பை கிளப்பியது.
- ஹர்திக் பாண்ட்யா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
மும்பை:
2024-ம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யாவால் மறக்க முடியாத ஒரு ஆண்டாக இருக்கும். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு ஹர்திக் பாண்ட்யா மிகவும் சிறப்பாக செயல்பட்டார். 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் அவர் பலராலும் வெறுக்கப்பட முக்கிய காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி தான்.

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியை ஏற்றார். அதனால் பெரும்பாலான ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக விமர்சனத்தை முன் வைத்து வந்தனர்.
இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முதன்முறையாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமான தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது.
ஆனால், அடுத்து நடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா ஆல் ரவுண்டராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். அந்தத் தொடரில் அவர் எட்டு போட்டிகளில் 144 ரன்கள் எடுத்ததோடு, 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதன்மூலம் 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்று இருந்தார்.

உலகக் கோப்பை முடிந்த உடன் ஹர்திக் பாண்ட்யா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு அடுத்ததாக இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் ஹர்திக் பாண்ட்யாவும், அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

இப்படியாக 2024-ம் ஆண்டில் உலகக் கோப்பை வென்று இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல மோசமான நிகழ்வுகளையும், ஏமாற்றங்களையும், சோகங்களையும் ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார்.
- அஸ்வின் ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
- அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய ஊடங்களும் கலந்து கொண்டனர்.
பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.
அவரது ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய ஊடங்களும் கலந்து கொண்டனர்.
அப்போது பேட்டி அளித்த ஜடேஜா முழுவதுமாக ஹிந்தியில் பேசியுள்ளார். இதனையடுத்து ஜடேஜா ஆங்கிலத்தில் பேசவில்லை என ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்து உள்ளனர்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டது பெரும்பாலான இந்திய ஊடகங்கள் மட்டுமே. இதனால் ஜடேஜா இந்தியில் பேசினார்.
ஆஸ்திரேலிய ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையை கிளப்பவே எப்போதும் முயற்சி செய்கின்றன என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய செய்தியாளர் சுபயன் சக்ரவர்த்தி கூறினார்.
அஸ்வின் ஓய்வை அறிவிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் அந்த தகவல் தனக்கு தெரியும் என்று நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.
- கோலிக்கு நோட்டீஸ் அனுப்பி ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டது.
- பப்பு நள்ளிரவு 1 மணிக்கு மேல் செயல்பட்டதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலிக்கு சொந்தமாக 'One8 Commune' என்கிற பார் மற்றும் உணவகம் இயங்கி வருகிறது.
இது, எம்ஜி சாலையின் அருகே காஸ்டர்பா சாலையில் உள்ள ரத்னம்ஸ் வளாகத்தின் 6வது மாடியில் அமைந்துள்ளது. இந்த பப் தீ பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் என்ஓசி இல்லாமல் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், தீ பாதுகாப்பு மீறல்களுக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி கோலியின் பப்பிற்கு தீ பாதுகாப்பு விதிமுறைகள் மீறியதாக நோட்டீஸ் அனுப்பியது.
சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி அதிகாரடிகள் நடவடிக்கை எடுத்தனர். முதல் முறையாக கடந்த நவம்பர் 29ம் தேதி அன்று கோலிக்கு நோட்டீஸ் அனுப்பி ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டது. ஆனால், கோலி தரப்பில் இருந்து பதில் இல்லை.
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி கோலிக்கு 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, One8 Commune பப்பு நள்ளிரவு 1 மணிக்கு மேல் செயல்பட்டதற்காக கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வின் செய்தியாளர்களை சந்திப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் எனக்கு தெரியும்.
- அவர் ஓய்வை அறிவிக்க போகிறேன் என்பது குறித்து சின்ன சிக்னல் கூட எனக்கு கொடுக்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் அந்த தகவல் தனக்கு தெரியும் என்று நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அஸ்வினின் ஓய்வு குறித்து ரவீந்திர ஜடேஜா பேசுகையில், கடைசி நிமிடத்தில் தான் அஸ்வின் ஓய்வு பெறும் முடிவு தெரிய வந்தது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், அஸ்வின் செய்தியாளர்களை சந்திப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் எனக்கு தெரியும். அந்த செய்தியே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் அன்றைய நாள் முழுவதும் நானும், அவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது அவர் ஓய்வை அறிவிக்க போகிறேன் என்பது குறித்து சின்ன சிக்னல் கூட எனக்கு கொடுக்கவில்லை. ஆனால் அஸ்வினின் சிந்தனை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
கிரிக்கெட் களத்தில் விளையாடும் போது அஸ்வின் தான் என்னுடைய ஆலோசகர் போல் இருப்பார். கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் களத்தில் இருவரும் மாற்றி மாற்றி தகவலை பகிர்ந்து கொண்டுள்ளோம்.
ஆட்டத்தின் சூழல் என்ன, பேட்ஸ்மேன் என்ன செய்ய முயற்சிக்கிறார், அவருக்கு எதிராக என்ன திட்டம் அமைக்கலாம் என்று ஆலோசித்திருக்கிறோம். இவை அனைத்தையும் நிச்சயம் மிஸ் செய்வேன். ஆனால் அஸ்வினின் இடத்தில் மற்றொரு ஆல்ரவுண்டரை களமிறக்க வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட்டை பொறுத்தவரை யாரின் இடத்தையும் நிரப்ப முடியாது என்று கிடையாது. யார் சென்றாலும், அந்த இடத்திற்கு மற்றொருவர் கொண்டு வரப்படுவார். தற்போது அஸ்வின் ஓய்வு பெற்று சென்றுள்ளதால், இளம் வீரர்களுக்கு அவரின் இடத்தில் களமிறங்கி தங்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இருவரும் இணைந்து இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 587 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 12 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தியதற்கு இவர்கள் இருவரும் தான் முதன்மை காரணமாக அமைந்துள்ளனர்.
- ரூ.23 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
- மோசடி புகாரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வந்தவர் ராபின் உத்தப்பா. இந்நிலையில், அவருக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடகா மாநிலத்தின் புலகேசிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக செஞ்சுரிஸ் லைப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் நிர்வாகத்தை ராபின் உத்தப்பா நடத்தி வந்தார். இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பங்களிப்பைக் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் அவர்களின் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவில்லை. ரூ.23 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உத்தப்பாவை பிடித்து அவரிடம் நேரில் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ராபின் உத்தப்பா 2006-ல் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார். அவர் 2006 முதல் 2015 வரை 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 25.94 சராசரியில் 934 ரன்கள் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ராபின் உத்தப்பா அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.
ஐபிஎல் தொடரில் அவர் 130.41 ஸ்ட்ரைக் ரேட்டுடன் கிட்டத்தட்ட 5000 ரன்களை அடித்துள்ளார். மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் முறையே 2012 மற்றும் 2022 இல் ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவினார்.
- நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை.
- தொடரின் பாதியிலேயே மெக்ஸ்வீனியை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மெல்போர்ன்:
இந்தியாவுக்கு எதிரான ஆலன் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி 2 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து தொடக்க வீரர் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார். 25 வயதான அவர் முதல் 3 டெஸ்டிலும் முறையே 10, 0,39,10,9,4 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு முறை கூட அரை சதத்தை தொடவில்லை. அவருக்கு பதிலாக 19 வயதான இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மெக்ஸ்வீனி நீக்கம் தொடர்பாக ஆஸ்திரேலிய தேர்வு குழுவை முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை. தேர்வு குழுவினர் இந்த விஷயத்தில் தவறான முடிவை எடுத்து விட்டார்கள். உஸ்மான் கவாஜாவுக்கு 38 வயதாகிறது. அவர் போதுமான ரன்களை எடுக்கவில்லை. தொடரின் பாதியிலேயே மெக்ஸ்வீனியை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
- இவரது தலைமையில் மும்பை அணி சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை சமீபத்தில் வென்றது.
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் முதன்மையான ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை- கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.
கர்நாடகா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களம் இறங்கியது.
தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆயுஷ் மத்ரே உடன் ஹர்திக் தமோர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 148 ரன்னாக இருக்கும்போது ஆயுஷ் மத்ரே ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து மும்பை அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். அவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்க விட்டார். 51 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் சதத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 55 பந்தில் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும்.
ஷிவம் டுபே 36 பந்தில் 63 ரன்கள் விளாசினார். ஹர்திக் தமோர் 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்களும் சேர்த்தனர். பின்னர் 383 ரன்கள் அடித்தால் வெற்றி என இமாலய இலக்குடன் கர்நாடகா பேட்டிங் செய்து வருகிறது.
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் விளையாடினால்தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ கறாராக தெரிவித்ததால் இவருக்கும் பிசிசிஐ-க்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியது.
இதற்கிடையே 2024 ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் இவர் தலைமையிலான மும்பை அணி சில நாட்களுக்கு முன் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஷ்ரேயாஸ் அய்யரை ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தானை சேர்ந்த சுசீலா மீனா என்ற பள்ளிச் சிறுமியின் வேகப்பந்து வீச்சு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
- ஏற்கனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்
ராஜஸ்தானை சேர்ந்த சுசீலா மீனா என்ற பள்ளிச் சிறுமியின் வேகப்பந்து வீச்சு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இது மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

சுசீலா மீனாவின் பந்துவீச்சு திறனை பார்த்து வியந்த சச்சின் அவரின் வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுடன் சுஷீலா மீனாவின் பந்துவீச்சு பாணியை ஒப்பிட்டு எழுதினார்.
ஹைலைட் என்னவென்றால் இந்த பதவிக்கு ஜாகீர் கானும் பதில் அளித்துள்ளார். தனது பதிவில் ஜாகீர் கான் கூறியதாவது, நீங்கள் அதை [சிறுமியின் பந்துவீச்சு பாணியை] கவனித்தரிந்துள்ளீர்கள், அதை நான் முற்றிலும் ஏற்கிறன், அவளது விளையாட்டு மென்மையாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது, ஏற்கனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

- இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி
- பிரிவு 10(17A) இன் கீழ் உள்ள விலக்கு பொருந்தாது
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ் சுமார் ரூ. 11 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார். அதாவது இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி.
போட்டியின் விதிமுறைப்படி 13 சுற்றுகளில் யார் முதலில் 6.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுவார்கள். விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வெற்றிக்கும் அந்த வீரருக்கு சுமார் ரூ.1.68 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும்.

அந்த வகையில், குகேஷ் மொத்தம் மூன்று வெற்றிகளைப் பெற்று இருந்த நிலையில் அவருக்கு ரூ.5.04 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. டிங் லிரன் இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில், அவருக்கு ரூ. 3.36 கோடி கிடைத்தது. மீதமுள்ள பரிசுத் தொகை இருவருக்கும் இடையே சரி சமமாகப் பிரித்துத் தரப்பட்டது.
இதன் மூலம் குகேஷ் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மூலமாக ரூ. 11.34 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெற்று இருக்கிறார். இந்த முழு தொகை குகேஷுக்கு அப்படியே போகாது என்றும் வரி பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10(17A) இன் கீழ், மத்திய அரசு, மாநில அரசு வழங்கியிருந்தால், பொது நலன் கருதி விருது அல்லது வெகுமதியாக, பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்கப்படுவதற்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இருப்பினும், குகேஷுக்கு வழங்கப்பட்ட விருதை சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) வழங்கியுள்ளது, இது செஸ் விளையாட்டிற்கான உலகளாவிய நிர்வாக அமைப்பாகும், இது இந்திய மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக தகுதி பெறவில்லை.
எனவே, பிரிவு 10(17A) இன் கீழ் உள்ள விலக்கு பொருந்தாது, ஏனெனில் இந்த ஏற்பாட்டின் பயன் இந்திய அரசு அதிகாரிகள் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் விருதுகளுக்கு மட்டுமே.

இந்த நிலையில், குகேஷ் பரிசுத் தொகையான ரூ.11 கோடியில் ரூ.4 கோடியை வரியாக செலுத்துகிறார் என்று தகவல் பரவியது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதினார்.
மேலும் சில அரசியல் தலைவர்களும் இணைய வாசிகளும் இதுகுறித்து கவலை தெரிவித்தனர். இந்நிலையில் குகேஷின் பரிசுத்தொகையில் ரூ. 4 கோடி வரி பிடித்தம் செய்யாமல் விலக்கு அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக பேசிய அமைச்சக அதிகாரி ஒருவர், நாட்டிற்கு குகேஷ் கொண்டு வந்த மகத்தான பெருமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
அவரது வெற்றிகளுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிப்பது மிகவும் பொருத்தமானது, மேலும் அவர் தனது எதிர்காலத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தவும், அவரது திறனை மேம்படுத்தவும் அது அனுமதிக்கும் என்று கூறியிருக்கிறார்.
- மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் ரே மிஸ்டீரியோ.
- ரே மிஸ்டீரியோவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகிவில்லை.
டபுள்யூ டபுள்யூ இ எனப்படும் உலக மல்யுத்த விளையாட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் ரே மிஸ்டீரியோ (66).
இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். 90ஸ் கிட்ஸ் மனதில் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு. ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் நியாபகம் வரும்.
இந்நிலையில், ரே மிஸ்டீரியோ நேற்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு குறித்து அவரின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இருப்பினும், ரே மிஸ்டீரியோவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகிவில்லை.
ரே மிஸ்டீரியோவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






