என் மலர்
விளையாட்டு
- இந்திய அணிக்காக இவ்வளவு காலம் விளையாடியது மிகவும் அதிர்ஷ்டமே.
- 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது எனது சிறந்த சாதனைகளில் ஒன்றாகும்.
ராஜ்கோட்:
இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனான புஜாரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 37 வயதான அவர் கடைசியாக 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடி இருந்தார்.
டிராவிட்டுக்கு அடுத்து 'இந்தியாவின் சுவர்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் ஓய்வு பெற்றதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஓய்வு பெற்றதால் எந்த வருத்தமும் இல்லை என்று புஜாரா தெரிவித்து உள்ளார். சொந்த ஊரான குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓய்வு பெற்றதில் எந்த வருத்தமும் இல்லை. இந்திய அணிக்காக இவ்வளவு காலம் விளையாடியது மிகவும் அதிர்ஷ்டமே. பல வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே எனக்கும், எனது குடும்பத்துக்கும், ஆதரவளித்த மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.
கிரிக்கெட்டை முடித்துக் கொண்டதில் மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் அதன் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். டெலிவிஷன் வர்ணனை செய்கிறேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறந்த தருணங்கள் இருந்தது. 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது எனது சிறந்த சாதனைகளில் ஒன்றாகும். 2010-ம் ஆண்டு நான் டெஸ்டில் அறிமுகம் ஆனேன். இது எனது கிரிக்கெட் பயணத்தின் பெருமைமிக்க தருணங்களில் ஒன்றாகும்.
ராகுல் டிராவிட், டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமணன், ஷேவாக், கவுதம் காம்பீர் போன்ற வீரர்களின் பெயர்களை நான் இன்னும் நினைவில் வைத்து உள்ளேன். அவர்களை பார்த்து நான் வளர்ந்தேன்.
இவ்வாறு புஜாரா கூறியுள்ளார்.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி விளையாடுகிறது.
- கலப்பு அணிகள் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிரஸ்டோ ஜோடிகள் விளையாடுகிறது.
பாரீஸ்:
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 21-வது இடம் வகிக்கும் லக்ஷயா சென், எச்.எஸ். பிரனாய், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவரும், 2019-ம் ஆண்டு உலக சாம்பியனுமான பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் களம் இறங்குகிறார்கள். ஆனால் இவர்கள் தொடக்க சுற்றுகளை தாண்டுவதே சிக்கல் தான். அந்த அளவுக்கு போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது.
2021-ம் ஆண்டு உலக பேட்மிண்டனில் வெண்கலம் வென்றவரான லக்ஷயா சென் தனது முதல் சுற்றில் 'நம்பர் ஒன்' வீரரான சீனாவின் ஷி யூ கியுடன் கோதாவில் குதிக்கிறார். அவருக்கு எதிராக இதுவரை 4 முறை மோதியிருக்கும் லக்ஷயா சென் அதில் ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளார். பிரனாய் தனது முதல் சுற்றில் பின்லாந்தின் ஜோகிம் ஓல்டோர்ப்பை எதிர்கொள்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றில் 2-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டோன்சனுடன் மோத வேண்டி இருக்கும்.
கடந்த 2 ஆண்டுகளாக பார்மின்றி தடுமாறும் சிந்து, கலோயானா நல்பந்தோவாவுடன் (பல்கேரியா) தனது சவாலை தொடங்குகிறார். இந்திய ஓபனில் கால்இறுதிவரை முன்னேறியதே இந்த சீசனில் அவரது சிறந்த செயல்பாடாக இருப்பது கவனிக்கத்தக்கது. பெண்கள் ஒற்றையரில் ஒலிம்பிக் சாம்பியனான அன்சே யங் (தென்கொரியா), சீனாவின் வாங் ஷி யி, சென் யூ பே ஜப்பானின் அகானே யமாகுச்சி ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் இணையான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, கலப்பு அணிகள் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிரஸ்டோ ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகிறது.
- தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
- ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த விஷாலுக்கு சிறப்பு பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 64-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேருஸ்டேடியத்தில் கடந்த 5 தினங்களாக நடைபெற்றது.
போட்டி முடிவில் தமிழக அணி 11 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை குவித்தது. இதன் மூலம் ஆண்கள் ( 101 புள்ளிகள்) மற்றும் பெண்கள் ( 90 புள்ளிகள்) அணிகள் பிரி வில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 195 புள்ளிகளுடன் தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அரியானா 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.
தனிநபர் சாம்பியன் ஷிப் பட்டத்துக்கு ஆண்கள் பிரிவில் தமிழகத்தின் விஷால் (400 மீட்டர் ஓட்டம்), பெண்கள் பிரிவில் உத்தரகாண்டின் அங்கிதா (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் தேவாரம், தலைவர் ராஜேந்திரன், செயலாளர் லதா, ஆக்கி இந்தியா பொருளாளர் சேகர் மனோகரன், மார்ட்டின் குரூப் நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
தேசிய சீனியர் தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகளம் சார்பில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதோடு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், வெண்கல பதக்கத்துக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த விஷாலுக்கு சிறப்பு பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
64-வது தேசிய தடகள போட்டியில் பதக்கத்தை வென்று சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.10 லட்சம் பரிசு தொகை அளிக்கப்பட்டது.தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் டபிள்யு. ஐ.தேவாரம், தலைவர் டி.கே.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் சி.லதா ஆகி யோர் விழாவில் பங்கேற்று வீரர், வீராங்கனைகளை பாராட்டி பரிசு தொகைகளை வழங்கினார்கள்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 ஒருநாள் தொடர்களை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது.
- ஆஸ்திரலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை தென்னாப்பிரிக்கா தொடர்ந்து கைப்பற்றி சாதனை
தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா வரலாறு படைத்தது.
இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக முறை ஒருநாள் தொடரை வென்ற அணி என்ற புதிய சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 ஒருநாள் தொடர்களை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் இங்கிலாந்து (8)இந்தியா (6) உள்ளன.
மேலும், 2016 முதல் தற்போது வரை ஆஸ்திரலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை தொடர்ந்து கைப்பற்றி தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது.
- ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்கள் அடித்துள்ளார்.
- போர்ச்சுக்கல் அணிக்காக ரொனால்டோ 138 கோல்கள் அடித்துள்ளார்.
கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் அணியை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், 4 வெவ்வேறு கால்பந்து க்ளப்கள் மற்றும் நாட்டுக்காக 100+ கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற அபார சாதனையை ரொனால்டோ.படைத்துள்ளார்
ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்களும் MAN UTD அணிக்காக 145 கோல்களும் PORTUGAL அணிக்காக 138 கோல்களும் JUVENTUS அணிக்காக 101 கோல்களும் AL NASSR அணிக்காக 100 கோல்களும் அடித்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
- சஞ்சு சாம்சனை கொச்சி ப்ளூ டைகர்ஸ் 26.8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
- கேரள கிரிக்கெட் லீக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.
அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கொல்லம் - கொச்சி அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்லம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 94 ரன்களும் சச்சின் பேபி 91 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 237 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொச்சி அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அவுட்டனார். சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
- பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரிட்டனின் எம்மா ராடுகானு 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் இனா ஷிபஹராவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 200 சிக்சர் விளாசினார் பொல்லார்டு.
- இந்தியாவின் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக 223 சிக்சர் அடித்துள்ளார்.
செயின்ட்லூசியா:
வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் 13-வது சீசன் நடந்து வருகிறது.
செயின்ட்லூசியாவில் நடந்த போட்டியில் டிரிபாகோ அணி, செயின்ட்லூசியா அணியை சந்தித்தது. முதலில் ஆடிய டிரிபாகோ 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய செயின்ட் லுசியா 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 18 ரன் வித்தியாசத்தில் டிரிபாகோ அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 29 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் விளாசிய டிரிபாகோ அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் போலார்டு, ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில், கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 200 சிக்சர் விளாசிய 2-வது வீரர் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் பொல்லார்டு.
பொல்லார்டு இதுவரை 128 போட்டியில் 203 சிக்சர் பறக்கவிட்டுள்ளார்.
ஏற்கனவே செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் எவின் லீவிஸ் 200 சிக்சர் அடித்திருந்தார்.
ஒட்டுமொத்த டி 20 லீக் வரலாற்றில் இரு அணிகள் சார்பில் தலா 200 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் பொல்லார்டு. இவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 223 சிக்சர் (189 போட்டி) அடித்துள்ளார்.
ஒட்டுமொத்த டி 20 வரலாற்றில் கிறிஸ் கெய்லுக்கு (14,562 ரன், 1056 சிக்சர்) பிறகு அதிக ரன்கள் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரரானார் பொல்லார்டு (13,181 ரன், 941 சிக்சர்).
கெயில் 1056 சிக்சர்கள் உள்பட 14,562 ரன்கள் குவித்துள்ளார். இவரை தொடர்ந்து பொல்லார்டு 941 சிக்சர் உள்பட 13181 ரன்கள் அடித்துள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
- இதில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சக நாட்டவரான எமிலோ நவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றார்.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் பிரதாப் சிங் கைப்பற்றிய 3வது தங்கம் இதுவாகும். இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளார்.
- அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார்.
- டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு 3-வது வீரராக நீண்டகாலமாக விளையாடினார்.
அகமதாபாத்:
அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர்
ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும், 3-வது வீரராக நீண்டகாலமாக விளையாடினார். புஜாரா ஓய்வு குறித்து பலரும் ஆதரவும், எதிர்ப்புமாக தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் புஜாராவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, பூபேந்திர படேல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், குஜராத்தின் பெருமைக்குரிய செதேஷ்வர் புஜாராவின் ஒரு குறிப்பிடத்தக்க கிரிக்கெட் பயணம். உங்கள் அமைதியான இருப்பு, குறைபாடற்ற நுட்பம் மற்றும் அசைக்க முடியாத மன உறுதி - குறிப்பாக இந்தியாவின் வரலாற்று வெளிநாட்டு வெற்றிகளில் - தேசத்திற்கு போற்றுவதற்கு எண்ணற்ற தருணங்களை அளித்துள்ளன. ராஜ்கோட்டிலிருந்து உலக அரங்கம் வரை குஜராத்தின் கிரிக்கெட் உணர்வை நீங்கள் உண்மையிலேயே வெளிப்படுத்தி உள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறவும், எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
- 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்தது.
- அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார்.
தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 - 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.
இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஹெட் - மார்ஸ் ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறவிட்டனர். அதிரடியாக விளையாடி சதம் அடித்த டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ரன்கள் அடித்து அவுட்டானார்.
250 ரன்கள் அடித்தநிலையில் தான் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய மார்ஸ் சதம் அடித்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கேமரூன் கிரீன் - அலெக்ஸ் கேரி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்தது.
கிரீன் 118 ரன்களுடனும் அலெக்ஸ் கேரி 50 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டேவால்ட் ப்ரீவிஸ் 49 ரன்கள் அடித்தார்.
இதன்மூலம் 276 ரன்கள் வித்தியசாத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஹெட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹாராஜ் தொடர் நாயகன் விருதை வென்றார்.






