என் மலர்
விளையாட்டு
- மாறுபட்ட ரோல் மூலமாக மீண்டும் ஐபிஎல் தொடரில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டாகலாம்.
- என்னுடைய இதயம் ஆர்சிபி-யேடு இருக்கிறது. எப்போதும் இருக்கும்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய தலைசிறந்த வீரர்களில் ஒருவர் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவர் ஆர்சிபி அணிக்காக 157 போட்டிகளில் விளையாடி 4522 ரன்கள் குவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஆர்சிபி அணியின் ஆலோசகர் அல்லது பயிற்சியாளராக பதவிக்கான வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வேன். அதன்மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-
மாறுபட்ட ரோல் மூலமாக மீண்டும் ஐபிஎல் தொடரில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டாகலாம். தொழில்முறை திறனுடன், சீசன் முழுவதும் ஈடுபடுவது உண்மையிலேயே ட்ரிக்கியானதாக இருக்கும். அந்த நாளும் முடிந்து விட்டன என நம்புகிறேன். என்னுடைய இதயம் ஆர்சிபி-யோடு இருக்கிறது. எப்போதும் இருக்கும். பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பதவி எனக்கானது என்று ஆர்சிபி உணர்ந்தால், என்னுடைய நேரம் வரும்போது, நான் தயாராக இருப்பேன். இது நிச்சயமாக ஆர்சிபிக்காக இருக்கும்.
இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.
டி வில்லியர்ஸ் ஆர்சிபி அணியில் 2011ஆம் ஆண்டு இணைந்தார். அதற்கு முன்னதாக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கும்போது டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணியில் இடம் பிடித்திருந்தார்.
- Snatch முறையில் 84 கிலோ தூக்கினார்.
- clean and jerk முறையில் 109 கிலோ தூக்கினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த்த சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில் மீரா பாய் மொத்தமாக 193 கிலோ பளு தூக்கி தங்கம் வென்றார். ஸ்னட்ச் முறையில் 84 கிலோவும், க்ளீன் மற்றும் ஜெர்க் முறையில் 109 கிலோவும் தூக்கி காமன்வெல்த் சாம்பியன்ஷிப்ஸ் சாதனையும் படைத்தார்.
இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர் ஆவார். மலேசிய வீராங்கனை (161 கிலோ) வெள்ளி்ப் பதக்கமும், வேல்ஸ் வீராங்கனை (150 கிலோ) வெண்கல பதக்கமும் வென்றனர். 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருநது, 48 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.
இவர் உலக சாம்பியன்ஷிப் டைட்டில் மற்றும் இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கமும் வென்றுள்ளார்.
- சுனில் சேத்ரி கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
- பயிற்சியாளர் கேட்டுக் கொண்டதால் இந்த வருடம் நான்கு போட்டிகளில் விளையாடினார்.
இந்தியாவில் தற்போது வரை சுனில் சேத்ரியை தவிர, தரமான வீரர் கிடையாது என இந்திய கால்பந்து அணி தலைமை பயிற்சியாளர் கலித் ஜமில் தெரிவித்துள்ளார்.
CAFA நேஷன்ஸ் கோப்பை ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான தேசிய முகாமில் சேத்ரி இடம் பெறவில்லை. இது அக்டோபர் மாதம் முக்கியமான ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளுக்கான தயார் படுத்துதல் தொடர். அக்டோபர் 9ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14ஆம் தேதி சிங்கப்பூருக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் சுனில் சேத்ரி விளையாடுவார் எனத் தெரிவித்தார்.
சுனில் சேத்ரி குறித்து தலைமை பயிற்சியாளர் கலித் ஜமில் கூறுகையில் "இந்தியாவில் சுனில் சேத்ரியைத் தவிர்த்து தரனமான (Quaity) வீரர் கிடையாது. அவர் விளயைாடுவதற்கு தயாராக இருக்கும்போது, அவரை ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது. அவருடைய அனுபவம் நமக்கு தேவை. அவர் ஒரு லெஜெண்ட். நாட்டிற்காக பலவருடங்கள் விளையாடி பங்களிப்பை கொடுத்துள்ளார்" என்றார்.
சுனில் சேத்ரி கடந்த வருடம் ஜூன் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு கடந்த மார்ச் மாதம் மாலத்தீவு அணிக்கெதிராக களம் இறங்கினார். அப்போதைய தலைமை பயிற்சியாளர். மனோலோ மார்க்யூஸ் வேண்டுகோளை தொடர்ந்து அணிக்கு திரும்பினார்.
அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகு நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு கோல் அடித்துள்ளார். அந்த போட்டியில் இந்தியா 3-0 என வெற்றி பெற்றது. இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக 0-0 என டிரா செய்தது. ஹாங்காங்கிற்கு 0-1 என தோல்வியடைந்தது. தாய்லாந்துக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் 0-2 எனத் தோல்வியடைந்தது.
- டெஸ்ட் போட்டிக்கு தயார் படுத்துதல் முக்கியமானது.
- முதல்தர போட்டிகளுக்கு தயார் படுத்திக் கொள்வது, டெஸ்ட் போட்டியில் தாக்குப்பிடிக்க உதவியாக இருக்கும்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா மூன்று விடிவிலான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். ஏற்கனவே டி20-யில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். 38 வயதான ரோகித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் 4301 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.58 ஆகும்.
ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் நீங்கள் ஐந்து நாட்கள் விளையாட வேண்டும். மனதளவில் இது பெரிய சவாலாகும். அது நம்மை சோர்வடையச் செய்யும். ஆனால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் முதல்தர கிரிக்கெட் விளையாடி அதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்தவர்கள்.
மும்பை கிரிக்கெட், கிளப் கிரிக்கெட் போன்ற போட்டி அளவிலான கிரிக்கெட்டில் விளையாட தொடங்கும்போது அது இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் கொண்டதாக இருக்கும். மிகவும் இளம் வயதிலேயே அதற்கு ஏற்றவாறு விளையாடும் வகையில் தயார் படுத்தப்படுவோம். அப்படி தயார்படுத்துதல் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி போன்ற கடுமையான சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது எளிதாக இருக்கும்.
தயார் படுத்தலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று இளம் வீரர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆனால், படிப்படியாக மிகப்பெரிய அளவில் கற்றுக் கொள்கிறார்கள். நான் கிரிக்கெட் விளையாட்டை தொடங்கும்போது வேடிக்கை பார்ப்பது. அனுபவிப்பது என்பதாக இருந்தது.
இளையோர் பருவத்தில் தயார் படுத்துதல் குறித்து புரிந்து கொள்வதில்லை. ஆனால், அதற்கு அடுத்தக்கட்டத்திற்கு செல்லும்போது, புரிந்து கொள்வார்கள். நமக்கு சரியாக என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு தயார் படுத்துவார்கள்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
- DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
- இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது புதிய ஸ்பான்சர் ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கும்.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார்.
இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது புதிய ஸ்பான்சர் ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஸ்பான்சருக்கான போட்டி எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இதில் முக்கியமாக டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் ஃபின்டெக் ஸ்டார்ட் அப் ஆகிய நிறுவனங்கள் டீம் இந்தியாவின் டைட்டில் ஜெர்சி ஸ்பான்சராக ஆர்வம் காட்டியுள்ளன.
- செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார்.
- டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 5-வது பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை ஷகிப் எட்டினார்.
2025 கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் ஷகிப் அல் ஹசன் விளையாடி வருகிறார். இதில் செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஷகிப் அல் ஹசன் தனது அபாரமான பந்துவீச்சால் 2 ஓவர்களில் வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 5-வது பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை ஷகிப் எட்டினார்.
அவரது 500-வது விக்கெட்டாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட அவர், 18 பந்துகளில் 25 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த ஆல்-ரவுண்டர் திறனுக்காக அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 7000+ ரன்கள் மற்றும் 500+ விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது வீரர் ஷகிப். இதற்கு முன் டுவைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரைன் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ், பென் ஷெல்டன் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
- பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பயோலினி (இத்தாலி), ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
நியூயார்க்:
ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது.
24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் ( செர்பியா) முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த லேனர் டியனை எதிர் கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
4-ம் நிலை வீரரான டெய்லர் பிரிட்ஸ், 6-வது வரிசையில் உள்ள பென் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
மகளிர் ஆட்டங்களில் 4-ம் நிலை வீராங்கனை பெகுலா (அமெரிக்கா), 7-வது வரிசையில் உள்ள ஜாஸ்மின் பயோலினி (இத்தாலி), 10-ம் நிலை வீராங்கனை ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
- ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் மெத்வதேவ், பெஞ்சமின் போன்சி ஆகியோர் மோதினர்.
- இந்த ஆட்டத்தில் பெஞ்சமின் வெற்றி பெற்றார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான மெத்வதேவ் (ரஷியா) இத்தாலியை சேர்ந்த பெஞ்சமின் போன்சி ஆகியோர் மோதினர்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த பெஞ்சமின் போன்சி 6-3, 7-5, 6-7, (5-7), 0-6, 6-4 என்ற செட் கணக்கில் மெட்வதெவை போராடி வீழ்த்தினார்.
தோல்வியால் விரக்தியடைந்த மெத்வதேவ் தனது டென்னிஸ் பேட்டை அடித்து உடைத்தார். சிறிது நேரம் அமைதியாக சுற்றி பார்த்து விட்டு மீண்டும் பேட்டை அடித்து உடைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஜம்மு-காஷ்மீரின் ஒரு இளம் மற்றும் திறமையான கிரிக்கெட் வீரராக ஃபரீத் ஹுசைன் இருந்தார்.
- ஃபரீத் ஹுசைன் ஒரு சாலை விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் மற்றும் திறமையான கிரிக்கெட் வீரராக ஃபரீத் ஹுசைன் இருந்தார். அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, தனது திறமையால் பிரபலமானவராக அறியப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் ஃபரீத் ஹுசைன் ஒரு சாலை விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை திடீரென உரிமையாளர் திறந்ததால் அந்த கதவில் மோதி, அவர் கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார்.
உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற அலட்சிய செயல்களால் ஒரு உயிர் பறிபோனது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிக்சர் அடித்த வீரர் தனது சக வீரரிடம் பேசத் தொடங்கினார்.
- திடீரென்று வீரர் தரையில் மயங்கி விழுந்தார்.
கிரிக்கெட் விளையாடும் போதும், நடன ஆடும் போதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் ஒரு உள்ளூர் போட்டியில் கிரிக்கெட் விளையாடும் போது சிக்சர் அடித்த வீரர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிக்சர் அடித்த வீரர் தனது சக வீரரிடம் பேசத் தொடங்கினார். அப்போது திடீரென்று வீரர் தரையில் மயங்கி விழுந்தார். அங்கிருந்த வீரர்கள் உடனடியாக அவரை எழுப்ப முயன்று தண்ணீர் கொடுத்தனர். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. மைதானத்திலேயே அவருக்கு CPR கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு, வீரருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சில வினாடிகளுக்கு முன்பு சிக்சர் அடித்து அனைவரின் இதயங்களையும் வென்ற வீரர் இப்போது இந்த உலகில் இல்லை என்பதை மக்களால் நம்பவே முடியவில்லை.
விளையாட்டுகளைத் தொடங்குவதற்கு முன் மருத்துவ பரிசோதனை மற்றும் உடற்தகுதி குறித்து கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்பதை இதுபோன்ற விபத்துகள் நமக்குக் கற்பிக்கின்றன.
- ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
- வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- டெனியல் மெட்வதேவ் (ரஷ்யா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்சு) ஆகியோர் மோதினர்.
- முதல் 2 செட்டை பெஞ்சமின் கைப்பற்றினார்.
நியூயார்க்:
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது.
இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் டேனியல் மெத்வதேவ் (ரஷ்யா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்சு) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டை பெஞ்சமின் கைப்பற்றினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் அடுத்த 2 செட்டை கைப்பற்றினார். பரபரப்பான இந்த ஆட்டத்தின் கடைசி செட்டை பெஞ்சமி கைப்பற்றினார்.
இதன் மூலம் 6-3, 7-5, 6-7(5-7), 0-6, 6-4 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு பெஞ்சமின் முன்னேறினார்.






