என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியில், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்-2), இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா (குரூப்-1) ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் இருந்து விளையாடும். இலங்கை, வங்காள தேசம், அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். 

    இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அணியில், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியின் வழிகாட்டியாக முன்னாள் கேப்டன் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

    டோனி, விராட் கோலி

    அணியில் இடம்பெற்ற வீரர்கள்: 

    விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி.

    இவர்கள் தவிர மாற்று வீரர்களாக ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர், தீபக் சாகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 24-ந் தேதி மோதுகின்றன. நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும், தகுதி சுற்று அணிகளுடன் நவம்பர் 5 மற்றும் 8-ந் தேதிகளிலும் இந்திய அணி மோதுகிறது.
    சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ரவி சாஸ்திரி மற்றும் அணியைச் சேர்ந்த சிலர் கலந்துகொண்டதாக தெரிகிறது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது, ரவி சாஸ்திரி தொற்றிலிருந்து விடுபட சிகிச்சை எடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, சாஸ்திரிவுடன் இருந்த சக பயிற்சியாளர்கள் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

    சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ரவி சாஸ்திரி, மற்றும் அணியைச் சேர்ந்த சிலர் கலந்துகொண்டதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் கேப்டன் விராட் கோலியும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியால் கூட ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

    இதுபோன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து எந்த தகவலும் கொடுக்கமால் சென்றது தவறு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளது. இதனால், பயோ பபுள் விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில் ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து பிசிசிஐ தரப்பு கூறுகையில், 'கொரோனா தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இங்கிலாந்தில் அந்நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. எனவே மக்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்' என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரவி சாஸ்திரி மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனத் தெரிகிறது.
    ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறாத காரணம் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.
    லண்டன்:

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 4வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் நடந்துமுடிந்தது. இதில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா, தொடரில் 2 - 1 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்திய அணி வெற்றி பெற்றாலும், அணியின் நட்சத்திர வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வினை ஏன் இதுவரை தொடரின் ஒரு போட்டியில் கூட சேர்க்கவில்லை என்று சமூக வலைதளங்களில் வைரலாக பேசபட்டு வந்தது. ரசிகர்களும் ஆங்காங்கே கேள்வி கேட்டு வந்தனர்.  

    அஸ்வின் கடைசியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக மீண்டும் ரவிந்திர ஜடேஜா அணியில் இடம்பெற்று விளையாடினார். ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறாத காரணம் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். 

    4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம்பெற்றிருந்தால் இந்தியாவுக்கு இன்னும் சாதகமான சூழல் இருந்திருக்கும் என பேசப்பட்டு வந்தது. 

    இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரருமான டிவில்லியர்ஸ் டுவீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், 'டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு ரசிகராக 4வது டெஸ்ட் போட்டியைப் பாருங்கள். அணி தேர்வு குறித்தும் பிற தேவையற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்துவதை விடுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல விளையாட்டை தவறவிடுகிறீர்கள். 

    இந்தியா, மிகச் சிறப்பாக விளையாடியது. விராட் கோலி பிரமாதமாக அணியை வழிநடத்தினார். இறுதிப் போட்டியைக் காண ஆவலுடன் இருக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
    ஒரு டெஸ்ட் போட்டியில் எப்படி யுக்தி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பதை 4வது போட்டி வெற்றியின் மூலம் விராட் கோலி நிரூபித்துக் காட்டியுள்ளார் என மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
    லண்டன்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று, தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், இன்னாளில் மிகவும் பிரபலமான வர்ணனையாளராக இருக்கும் மைக்கேல் வாகன், இந்திய கேப்டன் விராட் கோலி பற்றி புகழாரம் சூட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

    வாகன், 'விராட் கோலி மிகச்சிறந்த கேரக்டர். ஒரு டெஸ்ட் போட்டியில் எப்படி யுக்தி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பதை அவர் 4வது போட்டி வெற்றியின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

    விராட் கோலி களத்தில் சரியாக நடந்து கொள்வதில்லை என்று புகார் கூறுபவர்கள் உற்சாகத்தை வெறுப்பவர்களாக இருப்பார்கள். விராட் கோலி போன்றவர்கள் கிரிக்கெட்டுக்கு மிக மிக அவசியம். அவரைப் போன்ற ஆட்களால்தான் இந்த விளையாட்டை மேலும் மேலும் ஆர்வமுடையதாக மாற்ற முடியும்.

    80 மற்றும் 90களில் ஆஸ்திரேலியாவின் ஷேர் வார்ன் அப்படிப்பட்ட ஒரு கேரக்டராக இருந்தார். இப்போது கோலி இருக்கிறார்' என்று உச்சபட்ச புகழாரத்தை சூட்டியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவானும், அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக் 2021 தொடரில் விளையாட உள்ளார். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்ற இளம் இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்தினார். தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக் 2021 தொடரில் விளையாட உள்ளார்.

    இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா ஏற்கெனவே திருமணம் ஆனவர். இவர் தனது முதல் கணவரை 2012ம் ஆண்டு விவாகரத்து செய்து ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார்.  ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும்  ஷிகார், ஆயிஷாவுக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை ஷிகர் தவான் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவார். கிரிக்கெட் தொடருக்காக வெளிநாடு சென்றாலும், தனது குடும்பத்தையும் தவான் அழைத்து செல்வார். 

    இந்த நிலையில் ஷிகர் தவானும், ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா முகர்ஜி தங்களது விவாகரத்து குறித்து ஒரு நீண்ட இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார்.

    அதில், “விவாகரத்து என்ற வார்த்தை அழுக்கானது. நான் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்ய உள்ளேன். வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை, எவ்வளவு அர்த்தங்கள் அதில் புதைந்திருக்கின்றன என்பதை முதல் முறை விவாகரத்து ஆகும் போது புரிந்து கொண்டேன். முதல் முறை விவாகரத்து ஆகும் போது மிகவும் பயந்தேன் நான் மிகவும் தவறான ஒரு விஷயத்தை செய்வதாகவும், தோல்வி அடைந்தவளாகவும் உணர்ந்தேன்.

    சுயநலக்காரியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாக உணர்ந்தேன். என்னுடைய பெற்றோரை கைவிட்டதாக உணர்ந்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு அநீதி கொடுத்ததாக கருதினேன். விவாகரத்து அவ்வளவு மோசமான வார்த்தை. 

    இப்போது நினைத்துப் பாருங்கள் இரண்டாவது முறையாக நான் அதனை கடந்து செல்கிறேன். இது மிகவும் கொடூரமானது. இரண்டாவது முறையாக திருமணம் முறிந்த பின்னர் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் விவாகரத்தின் அர்த்தங்களை கற்றுக்கொண்டேன்.

    விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பதுவாகும். சில நேரங்களில் நாம் செய்யும் எதுவுமே வேலைக்கு ஆகாது. ஆனால் அது பரவாயில்லை. எனது உறவுகள், எதிர்கால உறவுகளுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடங்களை கற்றுத்தருவது தான் விவாகரத்து. நான் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் வலிமையானவளாக இருப்பதே விவாகரத்து. விவாகரத்து என்பதற்கு நீங்கள் என்னென்ன அர்த்தங்கள் கொடுக்கிறீர்களோ அது தான் விவாகரத்து” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆனால், விவாகரத்து தொடர்பாக ஷிகார் தவான் தனது நிலையை உறுதிப்படுத்தவில்லை. ஷிகர் தவான் மனைவியின் இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான ‌ஷபலென்கா (பெலாரஸ்) - 8-வது வரிசையில் உள்ள பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) மோதினார்கள்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள டேனில் மெட்வதேவ் (ரஷியா) கால் இறுதியில் ஆலந்தை சேர்ந்த ஜாண்ட்ஸ்குல்ப்பை எதிர்கொண்டார்.

    இதில் மெட்வதேவ் 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 2019 அமெரிக்க ஓபனில் 2-வது இடத்தை பிடித்த அவர் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளார்.

    மெட்வதேவ் அரை இறுதியில் கனடாவைச் சேர்ந்த அகுர் அலிஸ்மியை எதிர்கொள்கிறார். அவர் கார்லோஸ் அல்காரஸ் கார்பியாவுக்கு (ஸ்பெயின்) எதிரான கால் இறுதியில் 6-3, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது கார்பியா போட்டியில் இருந்து விலகியதால் அலிஸ்மி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    மற்ற கால்இறுதி ஆட்டங்களில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) - ஹாரீஸ் (தென் ஆப்பிரிக்கா), ஜோகோவிச் (செர்பியா) - பெர்டினாட்டி (இத்தாலி) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான ‌ஷபலென்கா (பெலாரஸ்) - 8-வது வரிசையில் உள்ள பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) மோதினார்கள்.

    இதில் ‌ஷபலென்கா 6-1 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று முதல் முறையாக அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த லேலா பெர்னாண்டஸ் 6-3, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீராங்கனையான எலினா சுவிட்டோலினாவை (உக் ரைன்) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.

    அரைஇறுதி ஆட்டத்தில் ‌ஷபலென்கா- லேலா பெர்னாண்டஸ் மோதுகிறார்கள். இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் பென்சிக் (சுவிட்சர்லாந்து) -எம்மா (இங்கிலாந்து), பிளிஸ்கோவா (செக் குடியரசு)- ‌ஷகாரி (கிரீஸ்) மோதுகிறார்கள்.

    கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது என வார்னே கூறியுள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்டில் இந்தியா 157 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

    முதல் இன்னிங்சில் பின்தங்கி இருந்து இந்த டெஸ்டில் இந்தியா பெற்ற வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. இந்த டெஸ்டில் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 10-ந் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் ஓவல் மைதானத்தில் இந்தியா பெற்ற வெற்றியை ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே வெகுவாக பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

    விராட் கோலி மற்றும் ஒட்டுமொத்த இந்திய அணிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மற்றொரு அற்புதமான வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது.

    உலகின் சிறந்த டெஸ்ட் அணி இந்தியாதான் என்று என்னால் தெளிவாக சொல்ல முடியும். இந்த பட்டத்தை உங்களுக்கு (இந்தியா) மட்டுமே தர முடியும்.

    இவ்வாறு வார்னே கூறி உள்ளார்.

    இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்ற நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்கிறது.
    சென்னை:

    கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் இந்தியா, ரஷியா அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த போட்டி இன்று (புதன்கிழமை) முதல் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பிரான்ஸ், பெலாரஸ், சுலோவேனியா, மால்டோவா, எகிப்து, சுவீடன், ஹங்கேரி, சீனா, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் அந்த பிரிவில் அங்கம் வகிக்கின்றன.

    5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்கிறது. ஓபன், பெண்கள், ஜூனியர் ஓபன், ஜூனியர் பெண்கள் ஆகிய 4 பிரிவுகளில் பந்தயங்கள் நடக்கிறது. இந்திய அணியில் ஆனந்த், விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, அதிபன், கோனேரு ஹம்பி, ஹரிகா, தானியா சச்தேவ், ஆர்.வைஷாலி, நிஹால் சரின், பிரக்ஞானந்தா, வைஷாலி, சவிதா ஸ்ரீ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த போட்டி குறித்து ஆனந்த் கூறுகையில், ‘அனுபவம் மற்றும் இளம் வீரர்களின் சரியான கலவையாக இந்திய அணி உள்ளது. நாங்கள் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்று நம்புகிறோம்’ என்றார்.
    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது.
    லண்டன்,

    இந்தியாவுக்கு எதிரான நான்காவது போட்டியின் தொடக்கத்தில் நன்றாகவே ஆடினோம் என்றும், இறுதியில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோம் என்றும் தோல்வி குறித்து கருத்து கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்.  

    உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவர் ஜோ ரூட். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அணியில் விக்கெட்டுகள் சரியும் போது, களத்தில் இறங்கி  பேட்டிங்கை தாங்கி பிடிப்பார்.

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. போட்டியின் 5வது நாளான நேற்று உணவு இடைவேலைக்கு முந்தைய பகுதியில் இங்கிலாந்து ஓரளவு தாக்குப்பிடித்தது. அதன்பின்னர் விக்கெட்டுகளை மளமளவென இழந்து, இந்தியாவிடம் தோல்விகண்டது. 

    குறிப்பாக இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்த பின்னரும், பின்னால் வந்த எந்த வீரரும் நிலைத்து ஆடவில்லை. ஜோ ரூட் மட்டும் தட்டுத்தடுமாறி 78 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். 

    அவர் களத்தில் இருந்தபோது பவுலிங் செய்ய வந்த ஜஸ்ப்ரீத் பும்ரா, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். நல்ல ஃபார்மில் இருந்த ஒல்லி போப்பை 2 ரன்னுக்கும், ஜானி பேர்ஸ்டோவை 0 ரன்னுக்கும் ஆட்டமிழக்கச் செய்து இந்தியாவுக்குச் சாதகமாக சூழலை மாற்றினார். 

    இதுகுறித்து, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ கூறியவாது,

    'இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவின் பந்துவீச்சு ஸ்பெல் (6-3-6-2) அதிரடியாக இருந்தது. இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அவரின் பவுலிங்கிற்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்ட தொடங்கத்தில் நன்றாகவே ஆடினோம். இறுதியில் வெற்றி வாய்ப்பு நழுவிவிட்டது'' என்று தெரிவித்தார்.
    எப்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் சிலர் மிகச் சிறப்பாக திறனை வெளிக்காட்டுவார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் வெற்றி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    3வது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் வாகன், இந்திய அணியை 'யுஸ்லெஸ்' என்று சாடியிருந்தார். அப்படிப்பட்டவர் தற்போது இந்தியாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.  

    அவர், 'எப்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் சிலர் மிகச் சிறப்பாக திறனை வெளிக்காட்டுவார்கள். இந்தியா அப்படியான ஒரு அணி. எப்போது நன்றாக விளையாட வேண்டுமோ அப்போது அதைச் செய்து காட்டியுள்ளது.

    இந்தியா, மிக வலுவான அணியாக உள்ளது. விராட் கோலி, யுக்திகளை வகுப்பதில் திறமையுடன் செயல்பட்டார். இந்தப் போட்டியைப் பொறுத்தவரை அவர் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டினார்' எனக் கூறியுள்ளார்.
    24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
    லண்டன்:

    இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக், ஜஸ்ப்ரீத் பும்ராவை வெகுவாக பாராட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் பும்ராவின் பந்துவீச்சு அபாரமாக இருந்த நிலையில், சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.   

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒல்லி போப்பின் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். இது டெஸ்ட் அரங்கில் அவர் கைப்பற்றும் 100-வது விக்கெட் ஆகும்.

    மேலும், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

    இதுகுறித்து, முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அதில், ''இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அனைத்து வித போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். பும்ரா ஒரு பீஸ்ட்' என்று புகழ்ந்துள்ளார்.

    மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், 'பும்ராவின் பந்துவீச்சு உண்மையிலே அபாரமானதுதான். டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சின் பெஸ்ட் இது' என்று பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.
    மூன்று 20 ஓவர் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கும் 23 வயதான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான அசம்கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    கராச்சி:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, தொடக்க ஆட்டக்காரர் ஷர்ஜீல் கான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி தொடர்களில் இடம் பெற்று இருந்த இந்த இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். பேட்ஸ்மேன் சோகைப் மசூத் அணியில் தொடருகிறார்.

    ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். மூன்று 20 ஓவர் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கும் 23 வயதான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான அசம்கான் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வீரர் மொயின்கானின் மகன் ஆவார். மாற்று வீரர்களாக உஸ்மான் காதிர், ஷாநவாஸ் தஹானி, பஹர் ஜமான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருமாறு:-

    பாபர் அசாம் (கேப்டன்), ஷதப் கான் (துணை கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆசிப் அலி, சோகைப் மசூத், அசம்கான் (விக்கெட் கீப்பர்), குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷகீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது ஹஸ்னைன்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி, லாகூரில் நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து 20 ஓவர் போட்டியிலும் (வருகிற 25-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை), ராவல்பிண்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டியிலும் (அக்டோபர் 13, 14-ந் தேதி) விளையாடுகிறது. இந்த இரண்டு போட்டி தொடரிலும் இதே பாகிஸ்தான் அணி விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×