search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைக்கேல் வாகன்"

    • இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
    • டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார்.

    இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தொழில்நுட்பத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பந்து பாதிக்கு மேல் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருப்பது தெரிந்தது. ஆனாலும் சிவப்பு லைட் ஒளிர்கிறது. எல்.பி.டபிள்யூ.வை கண்டறிய பயன்படுத்தப்படும் 'ஹாக்ஐ' நுட்பம் இந்த தொடர் முழுவதும் சராசரி அளவில் தான் இருக்கிறது. எப்படியோ அது இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் கதையை முடித்து விட்டது' என்று கூறியுள்ளார். இது சர்ச்சையானதும் அவர் தனது பதிவை நீக்கி விட்டார். இன்னொரு பதிவில் ரூட்டின் அவுட்டுக்கான ரீப்ளேயை ஏன் அதிக முறை போட்டு காண்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • சிறந்த அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசி இருக்கிறார்.
    • மூன்றாவது இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிரணிக்கு பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கிளப் பிரையர் ஃபயர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் வாகன், இந்திய இளம் வீரரான ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு பிரச்சினையாக உள்ளார் என்று தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய அவர், "இங்கிலாந்து அணிக்கு அவர் பிரச்சினை என்று நான் சொல்வேன். அவர் நம்பவே முடியாத வீரர். நான் அவரை மும்பையில் சந்தித்தேன், மறுநாளே அவர் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசினார். தற்போது அவர் உலகின் சிறந்த அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசி இருக்கிறார்," என்று தெரிவித்தார்.

     


    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய மூன்றாவது இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக வினோத் காம்ப்ளி தனது 21 ஆண்டுகள் 35 நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 224 ரன்களை விளாசினார்.

    இவரை தொடர்ந்து சுனில் கவாஸ்கர் தனக்கு 21 ஆண்டுகள் 283 நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 220 ரன்களை விளாசினார். இவர்கள் வரிசையில் தற்போது ஜெய்ஸ்வால் தனது 22 ஆண்டுகள் 37-வது நாளில் இரட்டை சதம் விளாசியுள்ளார். 

    • ரோகித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் சந்தேகமில்லை.
    • முதல் போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது.

    லண்டன்:

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியது.

    இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா தோல்வியடைந்திருக்காது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய டெஸ்ட் அணி விராட் கோலியின் கேப்டன்சியை பெரிதும் இழந்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது. ரோகித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தற்போது செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்.

    மேலும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகமிக சராசரியாக இருந்ததாக நான் கருதுகிறேன். களத்தில் அவர் சரியான திட்டங்களை தீட்டியதாகவோ அல்லது பந்து வீச்சு மாற்றங்களில் முனைப்புடன் இருந்ததாகவோ எனக்கு தெரியவில்லை.

    என்று வாகன் தெரிவித்தார்.

    • சமீபத்தில் நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பங்கேற்றார்.
    • திறமைகள் இருந்தும் சரியாக பயன்படுத்தாமல் குறைந்த வெற்றிபெறும் அணியாக இந்தியா திகழ்கிறது என்றார்.

    புதுடெல்லி:

    தனியார் விளையாட்டு சேனல் நடத்திய கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பங்கேற்றார்.

    அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா பயணம் திட்டமிட்டபடி அமையவில்லை. இந்திய அணி முதல் டெஸ்டில் அதிக வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவில் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை அந்த அணி இழந்தது. ஏராளமான திறமைகள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் குறைந்த வெற்றிகளை பெறும் அணியாக இந்தியா திகழ்கிறது. சமீபத்திய காலங்களில் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளில் அதிகம் வெற்றி பெறவில்லை. அவர்கள் மேலே வர தவறுகிறார்கள். திறமைகள் மற்றும் திறன்கள் அனைத்தையும் கொண்டு அவர்கள் இன்னும் அதிகமாக சாதித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    வாகனின் இந்தக் கருத்துக்கு முன்னாள் இந்திய வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    சர்வதேச கிரிக்கெட்டில், குறிப்பாக டெஸ்ட் வடிவத்தில் இந்தியா எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்து சிரிக்க வைக்கிறது.

    ஆம், நாங்கள் பல ஆண்டுகளாக ஐ.சி.சி. கோப்பையை வென்றதில்லை. விளையாட்டின் பவர் ஹவுஸ் என்று இந்தியாவை குறிப்பிடுகிறோம். இந்திய டெஸ்ட் அணி வெளிநாடுகளில் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. நாங்கள் பல சிறந்த முடிவுகளைப் பார்த்திருக்கிறோம்.

    விளையாட்டின் நீண்ட வடிவத்தில் வெளிநாடுகளில் இந்திய அணி வியக்கத்தக்க வகையில் செயல்பட்டுள்ளது. நல்ல மன உறுதியும், மனத்திறனும் கொண்ட ஒரு நல்ல கிரிக்கெட் அணி எங்கிருந்தும் மீண்டும் களமிறங்க முடியும் என்பதுதான் உண்மை. நாங்கள் இரு உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் தோற்றோம். நான் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் ஒரு டெஸ்ட் தொடரின்போது மீண்டும் திரும்புவது எப்போதும் சாத்தியமாகும் என தெரிவித்தார்.

    • டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார்
    • சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பாட் கம்மின்ஸ் பெற்றார்.

    டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, கேப்டனுக்கு இப்போது முப்பது வயதுதான் ஆகிறது. இன்னும் அவர் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் விளையாட வேண்டும். சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிராட்மேனுக்குப் பிறகு கம்மின்ஸ் இருப்பார். "டான் பிராட்மேனை விட சிறந்தவராக இருப்பார் என நினைக்கவில்லை, ஆனால் டான் பிராட்மேனுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பேட் கம்மின்ஸ் இருப்பார்" என நம்புவதாக தெரிவித்தார்

    ஏனென்றால், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவை அதன் 6-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு வழிநடத்தினார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பத்து விக்கெட்டுகள், இரண்டு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாக ஆடினார்.

    சமீபத்தில் துபாயில் நடந்த ஐபிஎல் விற்பனையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் ரூ 20.50 கோடிக்கு பேட் கம்மின்ஸ் ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு ஐபிஎல் வரலாற்றில் விலைமதிப்பற்ற வீரராக திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் கம்மின்ஸ் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்னுடைய சிறந்த நண்பரிடம் இருந்து தீபாவளி டிரிம் எனப்பதிவு.
    • வாகன் செயலை பாராட்டி கருத்து பதிவிட்டு வரப்படுகிறது.

    இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

    மைக்கேல் வாகன் மும்பையில் உள்ளார். அவர் மும்பை ஆர்மிஸ்டன் சாலையில் மரத்தடியில் அமர்ந்து முடி வெட்டிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளா். வீடியோவுடன் "என்னுடைய சிறந்த நண்பர் தினஜயாலிடமிருந்து தீபாவளி பார்ட்டி டிரிம் மற்றும் தலை மசாஜ்" எனப் பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு டுவிட்டரில் சேவ் செய்யும் படத்தையும் வெளியிட்டுள்ளார். மிகப்பெரிய நபரான மைக்கேல் வாகன் மரத்தடியில் அமர்ந்து சாலையோர நபரிடம் முடி வெட்டிய அவரது செயலை பெரும்பாலானோர் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள். அதனுடன் அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தார்.
    • கடைசி மூன்று ரன்கள் எடுக்கும்போது, விராட் கோலியின் சுயநல உணர்வை பார்த்தேன் என ஹபீஸ் விமர்சனம்.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 49-வது சதத்தை நிறைவு செய்தார். அத்துடன் சச்சின் தெண்டுல்கர் சாதனையை சதன் செய்தார்.

    விராட் கோலி இந்த சதத்தை மிகவும் மந்தமாக அடித்தார். அதற்கு காரணம் ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருந்தது. பந்து பேட்டிற்கு மிகவும் மெதுவாக வந்ததுதான். இதனால் பொறுமையாக கடைசி வரை ஆட்டத்தை கொண்டு சென்று சதம் அடித்தார்.

    ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான முகமது ஹபீஸ், விராட் கோலி சதத்தில் சுயநல உணர்வை கண்டேன் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன், விராட் கோலி பந்து வீச்சில் முகமது ஹபீஸ் க்ளீன் போல்டாகும் படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு "நீங்கள் விராட் கோலி பந்தில் போல்டாகினீர்கள். இதனால்தான் தொடர்ந்து அவரை சீண்டி வருவதாக என்று நான் பார்க்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வினை சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    • உலகின் தரம் வாய்ந்த சுழற்பந்து வீரரான அஸ்வினை தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்று என கங்குலி குறிப்பிட்டார்.

    லண்டன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வின் இடம்பெறவில்லை. அவரை சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு 4 வேகப்பந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அஸ்வினை நீக்கியது கடினமான முடிவு என்றும் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் அஸ்வினை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், கங்குலி, ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் தனது டுவிட்டர் பதிவில் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் இல்லை. அவரை நீக்கியது மிகப்பெரிய தவறு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான கங்குலி கூறும்போது, "ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர்கள். உலகின் தரம் வாய்ந்த சுழற்பந்து வீரரான அஸ்வினை 11 பேர் கொண்ட அணியில் தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்" என்றார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் நிக்கி பாண்டிங் கூறும்போது, "ஆடுகள தன்மையை பொறுத்து வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் ஆவார்" என்றார்.

    • ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றில் எந்த அணிகள் விளையாட போகின்றன என்பதை கணிப்பது எப்போதும் கடினமானது.
    • ஏனென்றால் அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருக்கும்.

    16-வது ஐபிஎல் சீசன் இன்று அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதுகின்றனர்.

    இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வெல்ல வாய்ப்பு இல்லை எனவும் ராஜஸ்தான் அணிதான் வெல்லும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து மைக்கேல் வாகன் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கானது என்று கருதுகிறேன். அந்த அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் என்றார்.

    அதேபோல் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் கூறும்போது:-

    ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்றில் எந்த அணிகள் விளையாட போகின்றன என்பதை கணிப்பது எப்போதும் கடினமானது. ஏனென்றால் அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் இடையே போட்டி இருக்கும். கோப்பையை டெல்லி அணி வெல்லும் என்று கருதுகிறேன் என்றார்.

    • 6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும்.
    • கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர்.

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜோ ரூட் நிதானமாக ஆடி சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

    இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 315 எடுத்துள்ளது. ஹாரி புரூக் 184 ரன்களுடனும் ஜோ ரூட் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும். 24 வயதாகும் அவர் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 807 ரன்களை குவித்துள்ளார்.

    புரூக்கின் மிரட்டல் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர். தற்போது அடுத்த 10 ஆண்டுகளில் அதே குழந்தைகள் ஹாரி புரூக்கை போல விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்' என கூறியுள்ளார்.   

    • இந்திய அணியை மிகவும் குறைவான செயல்பாட்டை கொண்ட அணி என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்திருந்தார்.
    • ஒன்றரை வருடங்களாக இந்தியாவுக்காக விளையாடி வருவதால், சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை வெளிப்படுத்த அவர்களுக்கு போதுமான நேரம் கிடைத்துள்ளது.

    வெல்லிங்டன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அவர்களுடைய கருத்தை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும். சர்வதேச அளவில் விளையாடும் போது நாங்கள் யாருக்கும் எங்களை நிரூபிக்க அவசியமில்லை என நினைக்கிறேன். இது ஒரு விளையாட்டு, இதில் நீங்கள் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வீர்கள். அதற்கான முடிவுகள் நடக்கும் போது நிச்சயம் நடக்கும். நாங்கள் இன்னும் டி20 கிரிக்கெட்டில் சில விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

    அதனை வருங்காலங்களில் சரி செய்து சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்வி எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் தொழில் முறை கிரிக்கெட் வீரராக இருக்கும் நீங்கள் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டு அதில் இருந்து மீண்டு வந்து எப்படி வெற்றி அடைய வேண்டும் என்பது குறித்து தான் யோசிக்க வேண்டும் . முன்னேறிச் செல்வது மட்டும்தான் ஒரே வழி.தவறுகளை திருத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

    அடுத்த டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அடுத்த டி20 உலக கோப்பைக்கான பயணம் நியூசிலாந்து தொடருடன் தொடங்குகிறது. இது ஒரு புதிய தொடக்கம். எங்களுக்கு இன்னும் நிறைய காலங்கள் இருக்கிறது.

    அதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அமர்ந்து பிறகு யோசிப்போம். இப்போது எங்களுடைய வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்ப.ம் எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செய்யப்படவுள்ளார்.

    இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது

    • அடிலெய்டு அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
    • தொடக்க வீரர்கள் போதுமான அளவிற்கு விளையாடாதது தோல்விக்கு முக்கிய காரணம்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் அடிலெய்டில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் மோதின. இதில் 169 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி இங்கிலாந்து அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும்போது இந்திய அணியின் குறைகளை சுட்டிக் காட்டி வெளிநாட்டு விமர்சகர்கள் விமர்சனம் செய்தனர். அப்போது அவர்கள் சமூக வலைத்தளத்தில் இந்திய வல்லுனர்கள், ரசிகர்களால் கடுமையான அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.

    இருந்தாலும் மைக்கேல் வாகன் போன்றோர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்கள். இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் போன்றோர் பதிலடி கொடுத்தும், ட்ரோல் செய்தும் வந்தனர்.

    நேற்று இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்திய அணியை விமர்சிக்க பயப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் மைக்கேல் வாகன், கிரிக்கெட் வல்லுனர்கள் இந்திய அணியை விமர்சிக்க பயப்படுகிறார்கள். மேலும், அவர்கள் வேலையை இழந்து விடுவோம் என அஞ்சுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ''யாருமே இந்திய அணியை விமர்சிக்க விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள். பண்டிட்ஸ் இந்தியாவில் ஒருநாள் வேலையை இழந்துவிடுவோம் என கவலைப்படுகிறார்கள்.

    ஆனால், தற்போது நேரடியாக பேச வேண்டிய நேரம். அவர்கள் சிறந்த வீரர்களுக்கு பின்னால் மறைந்து கொள்ள முடியும். ஆனால், இது ஒட்டுமொத்தமாக ஒரு அணி சரியான வழியில் விளையாடுவதை பற்றியது. அவர்களின் பந்து வீச்சாளர்கள் தேர்வு தரம் குறைவாகவே இருந்தது. மேலும், மிகவும் நேர்த்தியான வகையில் அதிரடியாக பேட்டிங் செய்யவில்லை. சுழற்பந்து வீச்சிலும் குறைபாடு.

    ஒயிட் பால் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் செயல்திறன் மிகவும் குறைவாக உள்ளது. இந்திய பிரிமீயர் லீக்கில் உலகின் ஒவ்வொரு வீரர்களும், அவர்களின் பேட்டிங் திறமையை எப்படி முன்னேற்றினார்கள் எனச் சொல்கிறார்கள். ஆனால், இந்தியா இதுவரை சாதித்தது என்ன?'' என்றார்.

    ×