என் மலர்
விளையாட்டு
புதுடெல்லி:
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்டு 24-ந் தேதி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
வேறு எந்த பாராலிம்பிக்கிலும் இல்லாத வகையில் ஜப்பானில் நடந்த பாராலிம்பிக்கில் இந்தியர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. அதிக பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தனர்.
இந்தியாவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என ஆக மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்தது. அவனி லெகரா, மனிஷ் நார்வல் (துப்பாக்கி சூடுதல்), பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர் (பேட் மிண்டன்), சிமாஅன்டில் (ஈட்டிஏறிதல்) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தனர்.
தமிழக வீரர் மாரியப்பன், பிரவீன்குமார், நிஷாத்குமார் (உயரம் தாண்டுதல்), பவினா படேல் (டேபிள்டென்னிஸ்), சுகாஸ் யதிராஜ் (பேட் மிண்டன்), யோகேஷ் கதுனியா (வட்டு எறிதல்), தேவேந்திர ஜஜகாரியா (ஈட்டி ஏறிதல்), சிங்ராஜ் அதானா (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜர் (ஈட்டி எறிதல்), சிங்ராஜ் அதானா, அவனிலெகரா (துப்பாக்கி சுடுதல்), சரத்குமார் (உயரம் தாண்டுதல்), ஹர்விந்தர் சிங் (வில்வித்தை), மனோஜ் சர்க்கார் (பேட்மிண்டன்) ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர்.
இந்த நிலையில் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பதக்கம் வென்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அவர்களும் குருப் போட்டோவும் எடுத்து கொண்டனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களது திறமையை பற்றி பிரதமர் கேட்டறிந்தார்.
இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் டோனியின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.
MS Dhoni after making a surprise entry into the Indian dressing room for #t20worldcup2021 😄 pic.twitter.com/xhJtxqes7m
— Wasim Jaffer (@WasimJaffer14) September 8, 2021
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வசிம் ஜாஃபர், 'சிவாஜி' படத்தில் ரஜினி சொல்லும், 'பேர கேட்ட உடனே சும்மா அதிருதில்ல...' என்று வசனத்தின் மீம்-ஐ பகிர்ந்து, 'இந்திய அணிக்கு டோனி சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தவுடன் இப்படித்தான் இருக்கிறது' என்றுள்ளார். இது வைரலாகியுள்ளது.
மான்செஸ்டர்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 151 ரன் வித்தியாசத்திலும், ஓவலில் நடந்த 4-வது டெஸ்டில் 157 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (10-ந் தேதி) தொடங்குகிறது.
இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் பின் தங்கி இருந்து பெற்ற வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கடைசி டெஸ்டை டிரா செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றிவிடும். இங்கிலாந்து மண்ணில் இதற்கு முன்பு 3 தடவை இந்தியா டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. 1971-ல் அஜித் வடேகர் தலைமையிலான அணி 1-0 (3 டெஸ்ட்) என்ற கணக்கிலும், 1986-ல் கபில்தேவ் தலைமையிலான அணி 2-0 (3) என்ற கணக்கிலும், 2007-ல் ராகுல் டிராவிட் தலைமையில் 1-0 என்ற கணக்கிலும் (3) கைப்பற்றி இருந்தது.
14 ஆண்டுகளுக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைக்கும் ஆர்வத்தில் உள்ளது.
இந்திய அணியின் பேட்டிங்கில் தற்போது ரகானே மட்டுமே மோசமான நிலையில் உள்ளார். இதனால் அவர் இந்த டெஸ்டில் நீக்கப்படும் நிலையில் உள்ளார். வெற்றி அணி என்பதால் கோலி அதில் மாற்றம் செய்ய மாட்டார் என்ற கருத்து நிலவுகிறது.
அஸ்வினுக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டெஸ்டிலாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விவாதம் அதிகமாக எழுந்து வருகிறது. ஒருவேளை அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் ஜடேஜா நீக்கப்படலாம்.
ரோகித்சர்மா ஒரு சதம், 2 அரை சதத்துடன் 368 ரன்னும், ராகுல் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 315 ரன்னும் எடுத்து உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா 18 விக்கெட்டும், சிராஜ் 14 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்துஅணிக்கு இந்தடெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. டிரா செய்தாலோ, தோற்றாலோ தொடரை இழந்து விடும். இதனால் தொடரை சமன் செய்ய அந்தஅணி வீரர்கள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.
ஜோரூட் 3 சதம், ஒரு அரை சதத்துடன் 564 ரன்கள் குவித்து உள்ளார். அவர் ஒருவரே அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.
இரு அணிகளும் நாளை மோதுவது 131-வது டெஸ்ட் ஆகும். இதுவரை 130 போட்டியில் இந்தியா 31-ல், இங்கிலாந்து 49-ல் வெற்றி பெற்று உள்ளன. 50 டெஸ்ட் டிரா ஆனது.
இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மான்செஸ்டர்:
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.அவர் இந்திய அணிக்கு 2 உலக கோப்பை (2007-ல் 20 ஓவர், 2011-ல் ஒருநாள் போட்டி) மற்றும் ஐ.சி.சி. சாம்பியன் டிராபி கோப்பையை (2013) பெற்றுக்கொடுத்து இருக்கிறார்.
34 வயதான அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகிழ்ச்சியும், நன்றியும் மட்டுமே இப்போது என்னை வரையறுக்கும் இரண்டு வார்த்தைகளாகும்.
இவ்வாறு அஸ்வின் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.
அவர் கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடினார். அஸ்வின் 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அஸ்வின் உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தற்போது திகழ்கிறார். அவர் 79 டெஸ்டில் ஆடி 413 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டன் விராட் கோலி அவருக்கு ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) - ஆறாம் நிலை வீரரான பெரிடினி (இத்தாலி) மோதினார்கள்.இதில் ஜோகோவிச் 5-7, 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு கால்இறுதியில் 4-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 7-6 (7-8), 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹாரீசை தோற்கடித்தார்.
அரைஇறுதியில் ஜோகோவிச் - சுவரேவ் மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 17-வது வரிசையில் உள்ள மரியா ஷகாரி (கிரீஸ்) 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 4-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவை (செக் குடியரசு) அதிர்ச்சிகரமாக வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

அவர் அரை இறுதியில் இங்கிலாந்தை சேர்ந்த எம்மா ரடுகானுவை சந்திக்கிறார். ரடுகானு கால் இறுதியில் 6-3, 6-4 என்ற கணக்கில் பெலின்டா பென்சிக்கை (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி கரமாக தோற்கடித்தார்.






