என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.
    பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி கடந்த 2003-04-ம் ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. பாகிஸ்தான் நடத்தும் தொடரை இரு அணிகளும் பொது இடமான யு.ஏ.இ.யில் இரு அணிகளும் விளையாடி வந்தன.

    இந்த நிலையில் 2004-க்கும் ஆண்டுக்குப்பின் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி வருகிற 17-ந்தேதி நடக்கிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது போட்டி 21-ந்தேதியும் நடக்கிறது. அதன்பின் செப்டம்பர் 25-ந்தேதி முதல் அக்டோர் 3-ந்தேதி வரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் ராவல்பிண்டியிலும், டி20 கிரிக்கெட் தொடர் லாகூரிலும் நடக்கிறது.

    பொதுவாக தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உள்நாட்டு நடுவர்களை பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக சில அனுபவம் குறைந்த நடுவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சில நேரங்களில் தவறான முடிவுகளை கொடுத்து விடுகின்றனர். நடுவர்கள் முடிவில் பேட்ஸ்மேன்கள் அல்லது பீல்டிங் செய்யும் அணிக்கு சந்தேகம் ஏற்பட்டால் டி.ஆர்.எஸ். முறை மூலம் 3-வது நடுவரிடம் முறையிடலாம். இதனால் நடுவர் அவுட் கொடுத்த போதிலும், டி.ஆர்.எஸ். மூலம் அந்த முடிவு திரும்பப்பெற வாய்ப்புள்ளது.

    ஆனால் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் டி.ஆர்.எஸ். முறை கடைபிடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    ஒரு தொடரில் டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்த ஐ.சி.சி.யிடம் அனுமதி பெற வேண்டுமாம். போட்டியை நடத்தும் அணி, ஒளிபரப்பு உரிமம் பெற்ற நிறுவனம் இதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடைசி நேரத்தில் நியூசிலாந்து தொடருக்கான உரிமத்தை விற்றுள்ளது. இதன்காரணமாக டி.ஆர்.எஸ்.-க்கு அனுமதி பெற முடியவில்லையாம்.

    ஆகையால், இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் மிகவும் கவனமாக விளையாட வேண்டும். ஒருவேளை நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டாலும் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். அதுபோல் பந்து பேட்டில் உரசிச் சென்று நடுவர் கவனிக்காமல் விக்கெட் கொடுக்காமல் இருந்துவிட்டால், அது பந்து வீச்சாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

    இதையும் படியுங்கள்...
      10 வருடங்கள் நாட்டுக்காக விளையாடியதை மறந்துட்டாங்க -இம்ரான் தாஹிர் ஆவேசம்
    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ரோகித் சர்மா உள்பட மூன்று மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்துள்ளனர்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடர் 14-ந்தேதியுடன் முடிவடையும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. அதன்பின் 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றன.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் (10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை) முடிந்த உடன் யு.ஏ.இ. செல்ல இருந்தனர். ஆனால்  இந்திய அணியின் பயிற்சியாளர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட, ஐந்தாவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதனால்  ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருக்கும் வீரர்கள் உடனடியாக யு.ஏ.இ. சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், யார்க்கர் புகழ் பும்ரா ஆகியோர் இங்கிலாந்து மான்செஸ்டரில் இருந்து யு.ஏ.இ. புறப்பட்டனர். அவர்கள் இன்று காலை யு.ஏ.இ. சென்றடைந்தனர்கள்.

    குடும்பத்துடன் சென்றுள்ள அவர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின் அணியுடன் இணைந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாட தயாராவார்கள். மூன்று பேரும் சிறப்பு விமானம் மூலம் சென்றடைந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோர் நாளை யு.ஏ.இ. சென்றடைகின்றனர்.
    நான் தேவைப்பட்டால் 50 வயது வரைகூட விளையாடத் தயார் என தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர் கூறினார் .

    உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற அக்டோபர் 17 முதல்  நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த  தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.  சமீபத்தில், இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

    இதையடுத்து, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் ஃபாஃப் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக,  இம்ரான் தாஹிர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். 

    இதுகுறித்து சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் கூறுகையில் "உலகக் கோப்பையில் விளையாட நான் தயாராக இருந்தேன். ஆனால்,  அணியிலிருந்து என்னை நீக்கியது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது.  கடந்த ஆண்டு கிரேம் ஸ்மித் என்னை தொடர்பு கொண்டு, 'உலகக் கோப்பையில் நீங்கள் விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.  அனைத்து கிரிக்கெட் லீக்குகளிலும் உங்கள் செயல்திறனை பார்த்ததால் தான் உங்களை தொடர்பு கொண்டு உலகக் கோப்பையில் விளையாட அழைக்கிறேன். மேலும் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஃபாஃப் டூ ப்ளெசிஸ் போன்றோருடனும் பேசப் போகிறேன்’ என கூறினார். ஆனால், அதன் பின்னர் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

    நான் 10 வருடங்கள் நாட்டுக்காக விளையாடினேன். இப்போது நான் அவர்களுக்கு பயனற்றவன் ஆகிவிட்டேன். என்னை நீக்கியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாட்டிற்காக ஒரு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று பல கனவுகளுடன் இருந்தேன். இதுவரை எனக்கு அளித்த வாய்ப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், நான் ஓய்வு பெறத் திட்டமிடவில்லை. தேவைப்பட்டால் 50 வயது வரைகூட விளையாடத் தயார்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
    எனது பெற்றோர்களை முதன் முறையாக விமானத்தில் அழைத்துச் செல்ல முடிந்ததால் என்னுடைய ஒரு சிறிய கனவு நனவாகியது என நீரஜ் சோப்ரா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தடகள வீரரான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் எறிந்து தங்க பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதும் பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து உள்ளன. 

    பெற்றோர்களுடன் நீரஜ் சோப்ரா

    இந்த நிலையில் நீரஜ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பெற்றோர்களுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், எனது பெற்றோர்களை முதன் முறையாக விமானத்தில் அழைத்துச் செல்ல முடிந்ததால் என்னுடைய ஒரு சிறிய கனவு இன்று நனவாகியது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்தில் 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், மான்செஸ்டரில் இருந்து வீரர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரும் முயற்சியில் ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.
    புதுடெல்லி:

    இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு நிறுத்தப்பட்டன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே நடந்து முடிந்திருந்தன. 2-வது சுற்று லீக் ஆட்டங்கள், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. 

    ஐக்கிய அரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 27 நாட்கள் நடக்கும் போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. 

    ஐக்கிய அரபு அமீரகத்தில் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 2 முறை கோவிட் பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனையில் நெகட்டிவ் வரும் பட்சத்தில் பயோ-பபுள் சூழலுக்குள் அனுப்பப்பட்டு, போட்டியில் பங்கேற்பார்கள். ஏற்கனவே சில வீரர்கள் பரிசோதனை முடிந்து பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர்.

    தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை முடித்துள்ளதால் அங்கிருந்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளனர். அவர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தை அடைந்ததும், 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன்பின்னர் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் உள்ள வீரர்களுடன் இணைய வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனை உறுதி செய்யும்படி அணி நிர்வாகங்களுக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்தில் 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், மான்செஸ்டரில் இருந்து தங்கள் வீரர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரும் முயற்சியில் ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள் முயற்சி செய்துவருகிறார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம், தனது வீரர்களாக விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை துபாய்க்கு அழைத்து வருவதற்கு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் இருவரும் நாளை அதிகாலை துபாய் சென்றடைவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் ரத்தானதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மான்செஸ்டர்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    முதலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘பயிற்சி முகாமுக்குள் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருந்தத்தக்க வகையில் இந்தியா அணியை களம் இறக்க முடியவில்லை. இதனால் இந்தியா போட்டியை இழந்தது, என்று குறிப்பிட்டு இருந்தது.

    பின்னர் உடனடியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய அறிக்கையை வெளியிட்டது. அதில் 5-வது மற்றும் கடைசி டெஸ்டை இந்தியா இழந்தது என்ற குறிப்பு மாற்றப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக தெரிவித்தது.

    இதனால் இந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதா, ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா அல்லது இந்தியா இந்த டெஸ்டை இழந்ததா என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அதன்படி இந்த டெஸ்ட் தொடர் இன்னும் முடியவில்லை. இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்றும், கடைசி டெஸ்ட் மற்றொரு நாளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 5-வது டெஸ்ட் போட்டியை எப்போது நடத்துவது என்பது குறித்து வருகிற 22 அல்லது 23-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகியுடன் இது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். கடைசி டெஸ்ட் ரத்தானதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அந்த போட்டி வேறொரு நாளில் நடத்தப்படுகிறது.

    3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச் 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த ஆண்கள் ஒற்றையர் அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)- 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) மோதினார்கள்.

    மிகவும் விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார். ஆனால் அதற்கு அடுத்த செட்களில் ஜோகோவிச் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது செட்டை 6-2 என்ற கணக்கிலும், 3-வது செட்டை 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினார்.

    ஆனால் 4-வது செட்டை சுவரேவ் 6-4 என்ற கணக்கில் வென்றார். இருவரும் தலா 2 செட் கைப்பற்றியதால், வெற்றியை நிர்ணயம் செய்யும் 5-வது மற்றும் கடைசி செட் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த செட்டை ஜோகோவிச் 6-2 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஸ்கோர்: 4-6, 6-2, 6-4, 4-6, 6-2.

    இந்த வெற்றியை பெற ஜோகோவிச்சுக்கு 3½ மணி நேரம் தேவைப்பட்டது. 3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச் 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இன்னும் ஒரு ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றால் அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவர் மற்றும் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்சிலாம் வென்றவர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள டேனில் மெட்வதேவ் (ரஷியா)-கனடாவைச் சேர்ந்த பெலிக்ஸ் அகுர் அலிஸ்மி மோதினார்கள்.

    இதில் மெட்வதேவ் 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    அவர் 2-வது முறையாக அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளார்.இதற்கு முன்பு 2019-ல் இறுதிப் போட்டியில் நுழைந்து நடாலிடம் தோற்று பட்டத்தை இழந்தார்.

    நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் - மெட்வதேவ் மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இளம் வீராங்கனைகளான எம்மா ராடுகானு (இங்கிலாந்து)- பெர்னாண்டஸ் (கனடா) மோதுகிறார்கள். முதல் கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

     

     

    20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக இருப்பது நல்ல பலனை அளிக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும், கருத்து தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டோனி தலைமையில் இந்திய அணி 2 உலக கோப்பையையும் மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. இதனால் அவர் அணிக்கு ஆலோசகராக இருப்பது நல்ல பலனை அளிக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும், கருத்து தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதை கபில்தேவ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இது ஒரு நல்ல முடிவு. டோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று ஒரு ஆண்டுதான் ஆகிறது. சிறப்பு நிகழ்வாக உலக கோப்பையில் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டது மிக முக்கியமானதாகும். பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்று 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் இதுபோன்ற வாய்ப்பை பெற முடியும்.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    சர்வதேச போட்டியில் ஒட்டுமொத்தத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் இருக்கிறார்.
    பியூனஸ் அயர்ஸ்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் அடுத்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க கண்ட அணிகளுக்கான தகுதி சுற்று போட்டியில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, பொலிவியாவை எதிர்கொண்டது.

    தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது. 34 வயதான மெஸ்சி 14-வது, 64-வது, 88-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். அவர் சர்வதேச போட்டியில் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடிப்பது இது 7-வது முறையாகும்.

    இந்த போட்டியில் மெஸ்சி 2-வது கோலை அடித்தபோது சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்த தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார். அவர் 153 சர்வதேச போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு பிரேசில் முன்னாள் கதாநாயகன் பீலே (77 கோல்கள், 92 ஆட்டங்களில்) அதிக கோல் அடித்த தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த வீரராக விளங்கினார். அவரது சாதனையை மெஸ்சி முறியடித்து இருக்கிறார்.

    சர்வதேச போட்டியில் ஒட்டுமொத்தத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ (180 ஆட்டங்களில் ஆடி 111 கோல்கள்) முதலிடத்தில் இருக்கிறார். இந்த வரிசையில் மெஸ்சி 5-வது இடத்தை ஜாம்பியா வீரர் காட்பிரையுடன் இணைந்து வகிக்கிறார்.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், இங்கிலாந்தின் எம்மா ராட்கானு ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ், தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள கனடா வீரர் பெலிக்ஸ் அஜெர் அலியாசிசை எதிர்கொண்டார்.

    இதில் மெத்வதேவ் 6-4, 7-5, 6-2  என்ற கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மெட்வதேவ் ஜோகோவிச் அல்லது ஸ்வரெவுடன் மோத உள்ளார்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இலங்கை அணி 2-1 என தொடரைக் கைப்பற்றியது.
    கொழும்பு:

    தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  

    அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. மார்கிராம் 48 ரன்னும், ஹென்ரிக்ஸ் 38 ரன்னும், டி காக் 36 ரன்னும் எடுத்தனர்.
     
    ஹசரன்காவை பாராட்டும் சக வீரர்கள்

    164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தினேஷ் சண்டிமால் ஓரளவு தாக்குப் பிடித்து 66 ரன்கள் எடுத்தார். சமிகா கருணரத்னே 22 ரன்னும் எடுத்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது மார்கிராமுக்கு வழங்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
    உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் தோற்று வெளியேறினார்.
    நியூயார்க்:

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சபலென்கா (பெலாரஸ்), 73-ம் நிலை வீராங்கனையான கனடாவின் 19 வயது லேலா பெர்னாண்டசுடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லேலா பெர்னாண்டஸ் 7-6, 4-6,  6-4 என்ற நேர்செட்டில் சபலென்காவை முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இதேபோல், மற்றொரு அரையிறுதியில், தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, தகுதிச்சுற்று மூலம் முன்னேறிய 150-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தை சேர்ந்த 18 வயது இளம் புயல் எம்மா ராட்கானுவை எதிர்கொண்டார்.

    இதில் எம்மா ராட்கானு 6-1, 6-4 என்ற நேர்செட்டில் மரியா சக்காரியை வெளியேற்றி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் ‘ஓபன் எரா’வரலாற்றில் (1968-ம் ஆண்டு முதல்) அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் தகுதிச்சுற்று வீராங்கனை என்ற சிறப்பை தனதாக்கினார். இந்த போட்டித் தொடரில் அவர் இதுவரை ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×