என் மலர்
செய்திகள்

எம்எஸ் டோனி- விராட் கோலி
இந்திய அணிக்கு 'கம்-பேக்' கொடுக்கும் டோனி: ரஜினி மீம் போட்டு வரவேற்ற முன்னாள் வீரர்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனிக்கு 'மென்டார்' பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் டோனியின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வசிம் ஜாஃபர், 'சிவாஜி' படத்தில் ரஜினி சொல்லும், 'பேர கேட்ட உடனே சும்மா அதிருதில்ல...' என்று வசனத்தின் மீம்-ஐ பகிர்ந்து, 'இந்திய அணிக்கு டோனி சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தவுடன் இப்படித்தான் இருக்கிறது' என்றுள்ளார். இது வைரலாகியுள்ளது.
இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் டோனியின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் டோனி, மீண்டும் சர்வதேச அரங்கில் முக்கிய பொறுப்பில் செயலாற்ற உள்ளது பலரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
MS Dhoni after making a surprise entry into the Indian dressing room for #t20worldcup2021 😄 pic.twitter.com/xhJtxqes7m
— Wasim Jaffer (@WasimJaffer14) September 8, 2021
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வசிம் ஜாஃபர், 'சிவாஜி' படத்தில் ரஜினி சொல்லும், 'பேர கேட்ட உடனே சும்மா அதிருதில்ல...' என்று வசனத்தின் மீம்-ஐ பகிர்ந்து, 'இந்திய அணிக்கு டோனி சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தவுடன் இப்படித்தான் இருக்கிறது' என்றுள்ளார். இது வைரலாகியுள்ளது.
Next Story






