என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.
    • இந்திய அணி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரைறுதியில் நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது.

    சென்னை:

    5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 7-4, 7-4, 7-2 என்ற நேர்செட்டில் டீகான் ரஸ்செலை தோற்கடித்தார். ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 7-1, 7-6, 7-1 என்ற நேர்செட்டில் வான் நிகெர்க்கை விரட்டியடித்தார். மற்றொரு பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 7-3, 7-4, 7-4 என்ற நேர்செட்டில் ஹாய்லி வார்டை வீழ்த்தினார்.

    இந்திய அணி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது. முன்னதாக எகிப்து அணி கால்இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றியது.

    மற்றொரு கால்இறுதியில் ஹாங்காங் 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. ஜப்பான்-மலேசியா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஆனால் செட் கணக்கின் அடிப்படையில் ஜப்பான் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டியது. அரைஇறுதியில் ஹாங்காங்- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

    • கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட இந்த சிலையை மெஸ்ஸி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்துள்ளார்.
    • இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

    உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். அதிகாலை 3 மணிக்கு வந்த அவரை ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

    இந்நிலையில் கொல்கத்தாவில் லேக்டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்ஸியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்ஸி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

    இதனையடுத்து மெஸ்ஸியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

    இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் உள்பட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மெஸ்ஸியுடன் ஷிப் ஷங்கர் பத்ரா என்ற அவரது தீவிர ரசிகரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 56 வயதான பத்ரா தனது வீட்டை அர்ஜென்டினா கொடி நிறத்தில் வர்ணம் தீட்டி அழகு பார்த்தவர். தான் நடத்திய டீ கடையை அர்ஜென்டினா ரசிகர் கிளப் என்ற பெயரில் மாற்றினார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மெஸ்ஸியை காண ஆர்வமாக உள்ளார். ஏற்கனவே ரூ.7 ஆயிரத்துக்கு இரு டிக்கெட் வாங்கியுள்ள நிலையில் இப்போது மெஸ்ஸியை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.

    கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு மெஸ்ஸி பிற்பகல் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு இரவில் காட்சி கால்பந்து போட்டியில் ஆடுகிறார். நாளை மும்பைக்கு செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 15-ந்தேதி டெல்லிக்கு புறப்படும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார். 3 நாள் இந்திய பயணத்தில் அவர் மொத்தம் 72 மணி நேரம் செலவிடுகிறார்.

    • மெஸ்ஸியுடன் ஷிப் ஷங்கர் பத்ரா என்ற அவரது தீவிர ரசிகரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • 56 வயதான பத்ரா தனது வீட்டை அர்ஜென்டினா கொடி நிறத்தில் வர்ணம் தீட்டி அழகு பார்த்தவர்.

    கொல்கத்தா:

    உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். 14 ஆண்டுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வருகை தருவதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். கொல்கத்தா முழுவதும் மெஸ்ஸியின் ஜூரம் ஆட்டுவிக்கிறது. அவரது கட்அவுட்கள், சுவரொட்டிகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

    கொல்கத்தாவிற்கு வந்தடைந்த மெஸ்ஸியை அவரது ரசிகர்கள் வழிநெடுகிலும் கூட்டமாக நின்று ஆரவாரமாக வரவேற்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • சூர்யவன்ஷி 95 பந்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • இதில் 14 சிக்சர்களும் அடங்கும்.

    துபாய்:

    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இதில் பீகாரைச் சேர்ந்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். அவர் 95 பந்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 14 சிக்சர்களும் அடங்கும்.

    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 32 பந்தில் 100-ஐ கடந்து டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இந்தியர்களில் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் (14 சிக்சர்) அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

    ஏற்கனவே, ஐ.பி.எல். மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    • தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.
    • பிரிடோரியா கேபிடல்ஸ் அணி கேப்டனாக கேசவ் மகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான ஏற்பாடுகளில் அனைத்து அணியினரும் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் சுழல்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ், பிரிடோரியா கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் கேசவ் மகராஜ் 33 போட்டிகளில் 27 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    • டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புனே:

    சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ந்டந்து வருகிறது.

    இந்நிலையில், புனேவில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீகர் பரத் 39 ரன்னும், நிதிஷ் ரெட்டி 25 ரன்னும் எடுத்தனர்.

    மத்திய பிரதேச அணி சார்பில் ஷிவம் ஷுக்லா 4 விக்கெட்டும், திரிபுரேஷ் சிங் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய மத்திய பிரதேச அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. நிதிஷ்குமார் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை நிதிஷ் ரெட்டி பெற்றுள்ளார்.

    அடுத்து இணைந்த ரிஷப் சௌகான்-ராகுல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரிஷப் சௌகான் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

    இறுதியில், மத்திய பிரதேச அணி 17.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணி வெற்றியைப் பதிவுசெய்தது.

    • ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
    • பெண்கள் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான அனுபமா உபாத்யாயா உடன் மோதினர்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் ஆதிக்கம்
    • மலேசியாவை 297 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

    2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இன்று துபாயில் தொடங்கியது. இத்தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

    இந்த நிலையில் இன்று ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் போட்டியைத் தொடங்கின. அதன்படி இந்திய அணி, யுஏஇயையும், பாகிஸ்தான் மலேசிய அணியையும் எதிர்கொண்டன. முதல் போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 433 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 434 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய யுஏஇ அணி தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்தது. இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 234 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    மறுபுறம், தொடரின் இரண்டாவது போட்டியில் மலேசிய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மலேசியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 346 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மலேசியா, 19.4 ஓவர்களிலேயே 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் 297 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானும் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • ஆஸ்திரேலிய அணி 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.
    • தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் வெலிங்டனில் நடைபெற்ற இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இன்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில் ஆஸ்திரேலிய அணி 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற்ற நியூசிலாந்து (66.67 சதவீதம்) அணி சில புள்ளிகள் கூடுதலாக பெற்ற நிலையில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இதனால் 3-வது இடத்தில் இருந்த இலங்கை அணி (66.67 சதவீதம்) 4-வது இடத்திற்கு இறங்கியுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் (50.00 சதவீதம்) மற்றும் இந்தியா (48.15 சதவீதம்) அணிகளும் தலா ஒரு இடம் சரிந்து 5 மற்றும் 6-வது இடத்திற்கு இறங்கியுள்ளன.

    இங்கிலாந்து (30.95 சதவீதம்) 7-வது இடத்திலும், வங்கதேசம் (16.67 சதவீதம்) 8-வது இடத்திலும் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (4.76 சதவீதம்) கடைசி இடத்திலும் உள்ளன.

    • அஞ்சா இதயத்துடன், ஒருபோதும் தலை குனியா மன உறுதியுடன் திரும்புகிறேன்
    • ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே இந்திய பெண்

    பாரிஸ் ஒலிம்பிக் 2024 இறுதிப் போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடைப் பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

    இந்த திடீர் ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஹரியானாவின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார் வினேஷ் போகத். அதில் வெற்றியும் பெற்றார். இந்நிலையில் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக "லாஸ் ஏஞ்சல்ஸ் 2028-ஐ நோக்கி அஞ்சா இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் திரும்புகிறேன்" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், முன்னாள் ஆசிய சாம்பியன் ஆவார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். மூன்று முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் ஆவார். 

    • நீரஜ் சோப்ரா டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை திருமணம் செய்து கொண்டார்.
    • ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானின் 2-வது திருமணம் நவம்பர் மாதம் நடந்தது.

    2025-ம் ஆண்டில், உலகம் முழுவதும் பல விளையாட்டு வீரர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதில், பல திருமணங்கள் தனிப்பட்டவை அல்லது பொது அறிவுக்கு வராதவை. ஆனால் பிரபலமான மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், 23 விளையாட்டு வீரர்கள் (அல்லது வீராங்கனைகள்) திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை திருமணங்களில் இருவரும் விளையாட்டு வீரர்களாக இருந்தால் இருவரையும் தனித்தனியாக குறிக்கும்.

    அமெரிக்க கால்பந்து (NFL) வீரர்கள்: ஜோஷ் ஆலன் (பஃபலோ பில்ஸ் குவார்ட்டர்பேக்): நடிகை ஹெய்லி ஸ்டெயின்ஃபெல்ட்டை மே 31, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.


    ஜாலென் ஹர்ட்ஸ் (பிலடெல்பியா ஈகிள்ஸ் குவார்ட்டர்பேக்): பிரயோனா "பிரை" பர்ரோஸை (மார்ச்/ஏப்ரல் 2025) திருமணம் செய்து கொண்டார்.


    டிராவிஸ் ஹன்டர் (NFL வீரர்): லீனா லெனீயை மே 24, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.


    ஐயன் தாமஸ் (லாஸ் வேகாஸ் ரெய்டர்ஸ் வீரர்): அசாரியா அல்காரினை மே 25, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.


    லியோனார்ட் வில்லியம்ஸ் (சீஹாக்ஸ் டிபென்சிவ் எண்ட்): ஹெய்லி லூயிஸ் வில்லியம்ஸை 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.


    கால்பந்து (சாக்கர்) வீரர்கள்:பெதானி இங்கிலாந்து (இங்கிலாந்து & டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஸ்ட்ரைக்கர்): ஸ்டெஃப் வில்லியம்ஸை (முன்னாள் வேல்ஸ் மிட்பீல்டர்) ஜூன் 7, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    எல்லி கார்பென்டர் (ஆஸ்திரேலியா & லியோன் வீரர்): டேனியல் வான் டி டாங்கை (நெதர்லாந்து & லியோன் வீரர்) ஜூன் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    கத்ரினா கோரி (ஆஸ்திரேலியா வீரர்): கிளாரா மார்க்ஸ்டெட் (ஸ்வீடன் வீரர்) ஜூன் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    அல்பா ரெடோண்டோ (ஸ்பெயின் & ரியல் மாட்ரிட் ஃபார்வர்ட்): கிறிஸ்டினா மோன்லியோனை 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    இந்திய விளையாட்டு வீரர்கள்:

    நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், ஒலிம்பிக் பதக்க வென்றவர்): டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை ஜனவரி 19, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார். இது இமாச்சல பிரதேசத்தில் தனிப்பட்ட விழாவாக நடைபெற்றது.


    ஹிமானி மோர் (டென்னிஸ் வீராங்கனை): நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொண்டார்.

    லலித் யாதவ், இந்திய கிரிக்கெட் வீரர் (ஐபிஎல்-இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்), பிப்ரவரி 9, 2025-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.


    பிற விளையாட்டுகள்:

    ஹாரி சார்லஸ் (ஈக்வெஸ்ட்ரியன்/குதிரை ஓட்டம்): ஈவ் ஜாப்ஸை ஜூலை 26, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    டியா பிளான்கோ (சர்ஃபிங் வீராங்கனை): ப்ரோடி ஜென்னரை ஜூலை 12, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    பென் கிரிஃபின் (கோல்ஃப், PGA டூர் வீரர்): டானா மயெராஃபை டிசம்பர் 2025-ல் திருமணம் செய்து கொண்டார்.

    லோகன் பால் (பாக்ஸிங்/ரெஸ்லிங் வீரர்): நினா அக்டாலை ஆகஸ்ட் 15, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.

    ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானின் 2-வது திருமணம் நவம்பர் 2025-இல் இன்ஸ்டாகிராம் தான் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். முதல் திருமணத்திற்கு 10 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்றது. 

    • ரிவாபா ஜடேஜா பாஜக ஆளும் குஜராத்தின் கல்வி அமைச்சராக உள்ளார்.
    • என் கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டுக்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக ரவீந்திர ஜடேஜா உள்ளார். அவரின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக ஆளும் குஜராத்தின் கல்வி அமைச்சராக உள்ளார்.

    இந்நிலையில் துவாரகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிவாபா, "என் கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டுக்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார். ஆனாலும், இன்றுவரை அவர் எந்தவொரு போதைப் பழக்கத்தையோ அல்லது வேறு எந்த தீய பழக்கத்தையோ தொட்டது கூட கிடையாது.

    அவருக்குத் தனது பொறுப்பு என்னவென்று தெரியும். ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் சிலர் இது போன்ற பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை" என்று தெரிவித்தார்.

    தனது கணவனை புகழும் அதே வேளையில் ரிவாபா மற்ற வீரர்களை அவமதித்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    ×