என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
    • இதனால் பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

    ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து கடந்த ஜூன் 4-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பிற அலுவலர்கள் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்தித்து பேசினர். அதன்பிறகு டி.கே.சிவகுமார் கூறும்போது, , சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா ஆணையத்தின் பரிந்துரைகளை கர்நாடக கிரிக்கெட் சங்கம் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு பெரும் கூட்டங்களுக்கு பொருத்தமற்றது, பாதுகாப்பற்றது என்று ஆணையம் தெரிவித்தது. இதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
    • 3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ. ) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.

    டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள்.

    சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.

    இந்த நிலையில் இருவரையும் ஏ பிளஸ் கிரேடில் இருந்து ஏ வரிசைக்கு தரமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ நிலைக்கு கீழிறக்கப்பட்டால் கோலி, ரோகித் சர்மாவின் ஊதியத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படும்.

    அதே நேரத்தில் ஜடேஜா 20 ஓவர் ஆட்டத்தில் ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்டில் தீவிரமாக விளையாடுவதால் ஏ பிளஸ் கிரேடில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

    ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

    • சாம்சன் தொடக்க வீரராக 3 சதங்கள் அடித்தார்.
    • அபிஷேக் சர்மாவுக்கு அடுத்தபடியாக நல்ல சராசரியைக் கொண்ட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சாம்சன் தன்னை நிரூபித்தார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    இந்நிலையில் எந்த தவறும் செய்யாத சாம்சனை சொதப்பும் கில்லுக்கு பதிலாக ஓப்பனிங்கில் விளையாட வைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் ஜோடியை மாற்றும் அளவுக்கு என்ன தவறு செய்தார்கள் என்ற கேள்வியை நான் கேட்கிறேன்? சம்சானுக்கு முன் கில் டி20 அணியில் இருந்தார் என்று சூர்யகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

    ஆனால் சாம்சன் வாய்ப்பைப் பெற்ற போது 3 சதங்கள் அடித்தார். அதன் பின்பே அபிஷேக், திலக் வர்மா ஆகியோரும் சதங்களை அடித்தார்கள். எனவே அவருடைய சதம் நமது இளம் வீரர்களை உத்வேகமடைய வைத்துள்ளது. அந்த சமயத்தில் இந்தியாவுக்காக அடுத்த டி20 ஓப்பனர் யார்? என்ற நிலைமையே இருந்தது.

    அந்த சூழ்நிலையில் அபிஷேக் சர்மாவுக்கு அடுத்தபடியாக நல்ல சராசரியைக் கொண்ட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சாம்சன் தன்னை நிரூபித்தார். இருப்பினும் அவரை மிடில் ஆர்டருக்கு நகர்த்திய நீங்கள் தற்போது மெதுவாக கழற்றி விட்டுள்ளீர்கள். சாம்சன் என்ன தவறு செய்தார்? என்பதே என்னுடைய கேள்வி. தற்சமயத்தில் துணைக் கேப்டனாக இருந்தாலும் கில்லுக்கு எதுவும் வேலை செய்யாததால் அழுத்தத்திற்குள் இருக்கிறார். எனவே பெரிதாக எந்த தவறும் செய்யாத சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

    என்று கூறினார்.

    • 18 வயதான ஆர்யன் இடக்கை பேட்ஸ்மேன்.
    • ஜான் ஜேம்ஸ் வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஆவார்.

    மெல்போர்ன்:

    16-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோத உள்ளன. 5 முறை சாம்பியனான இந்தியா 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 'சி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. அயர்லாந்து, ஜப்பான், இலங்கை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இந்த நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆலிவர் பீக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் ஆர்யன் ஷர்மா, ஜான் ஜேம்ஸ் ஆகிய இரு இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    18 வயதான ஆர்யன் இடக்கை பேட்ஸ்மேன். சுழற்பந்தும் வீசுவார். இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரை சேர்ந்தவர்கள். 2005-ம் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். ஆர்யன் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான். ஜான் ஜேம்ஸ் வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஆவார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் வயநாடு ஆகும்.

    ஆர்யன், ஜேம்ஸ் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள்.

    அது மட்டுமின்றி இலங்கையை பூர்விகமாக கொண்ட நடேன் கூரே, நிதேஷ் சாமுவேல், சீனா வம்சாவளியான அலெக்ஸ் லீ யங் ஆகியோரும் ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வாகியுள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணி வருமாறு:- ஆலிவர் பீக் (கேப்டன்), கேசி பார்டன், நடேன் கூரே, ெஜய்டன் டிராப்பர், பென் கார்டன், ஸ்டீவன் ஹோகன், தாமஸ் ஹோகன், ஜான் ஜேம்ஸ், சார்லஸ் லச்முன்ட், வில் மலாஜ்சுக், நிதேஷ் சாமுவேல், ஹைடன் ஷில்லர், ஆர்யன் ஷர்மா, வில்லியம் டெய்லர், அலெக்ஸ் லீ யங்.

    • ‘பி’ பிரிவில் இடம் பெற்ற இந்தியா முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது.
    • கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    சென்னை:

    5-வது உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

    'பி' பிரிவில் இடம் பெற்ற இந்தியா முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் நேற்று பிரேசிலுடன் மல்லுகட்டியது. இதில் தேசிய சாம்பியனான தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் 7-5, 7-2, 7-2 என்ற நேர் செட்டில் பிரேசிலின் பெட்ரோ மோமெட்டோவை வீழ்த்தினார்.

    இதேபோல் இந்தியாவின் அனாஹத் சிங் 7-4, 7-0, 7-2 என்ற செட்டில் லாரா சில்வாவையும், அபய்சிங் 7-3, 7-1, 7-1 என்ற செட்டில் டியாகோ கோப்பியையும் சாய்த்தனர். இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவை எதிர்த்து ஆட இருந்த புருனா மார்செசி விலகியதால் ஜோஸ்னா களம் இறங்காமலேயே வெற்றி பெற்றார்.

    முடிவில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் கால்இறுதிக்கும் முன்னேறியது.

    இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் ஹாங்காங்- சுவிட்சர்லாந்து, ஜப்பான்- மலேசியா, ஆஸ்திரேலியா- நடப்பு சாம்பியன் எகிப்து அணிகள் மோதுகின்றன.

    • இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று மோதுகிறது.
    • இதில் சூர்யவன்ஷி 171 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    இதில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் இன்று 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சூர்யவன்ஷி மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதனை தொடர்ந்து ஆரோன் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.

    இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி 171 ரன்களில் ஆட்டமிழந்தார். 29 ரன்னில் தனது முதல் இரட்டை சதத்தை அவர் தவறவிட்டார். இதில் 9பவுண்டரிகள், 14 சிக்சர்கள் அடங்கும். இதுவரை இந்திய அணி 32.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

    • அர்ஷ்தீப்சிங் ஒரு ஓவரில் மட்டும் எக்ஸ்டிரா வகையில் 7 வைடுகளை வாரி வழங்கினார்.
    • பும்ரா, அர்ஷ்தீப்சிங் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிறைய தடுமாற்றத்தை சந்தித்தது.

    ஆட்டத்தின் 11-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் வீசினார். பனியின் தாக்கத்தால் பந்து ஈரமானதால் அதை சரியாக பிடித்து வீச முடியாமல் சிரமப்பட்டார். அந்த ஓவரில் மட்டும் எக்ஸ்டிரா வகையில் 7 வைடுகளை வாரி வழங்கினார். இதையும் சேர்த்து அந்த ஓவரில் மொத்தம் 13 பந்துகள் வீசினார்.

    இதனை பார்த்த இந்திய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டக் அவுட்டில் இருந்து கோபமாக கத்தினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

    ஐ.சி.சி.யின் முழு உறுப்பினர் நாடுகளில் ஒரு ஓவரில் அதிக பந்துகள் போட்ட மோசமான பவுலர்களின் வரிசையில் பாகிஸ்தானின் நவீன் உல்-ஹக்கை (கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரே ஓவரில் 13 பந்து வீசினார்) சமன் செய்தார்.

    இந்த ஆட்டத்தில் இந்திய பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, அர்ஷ்தீப்சிங் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இருவரும் இணைந்து மொத்தம் 99 ரன்களை விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது.

    இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவின் தடுமாற்றம் தொடருகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசி 20 இன்னிங்சில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் 13-வது தோல்வி இதுவாகும். 20 ஓவர் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக இந்தியா சந்தித்த அதிக தோல்வி இதுதான்.

    • இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் டிரா ஆனது.
    • 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 205 ரன்னும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 278 ரன்னும் எடுத்தன. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 128 ரன்னில் சுருண்டது. ஜேக்கப் டபி 5 விக்கெட் வீழ்த்தினார். 56 ரன் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் டிரா ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் 18-ந் தேதி தொடங்குகிறது.

    • டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது.
    • 20 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    துபாய்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் கடந்த உலகக் கோப்பையில் முதல் 7 இடங்களைப் பிடித்த அணிகள், டி20 தர வரிசையில் உள்ள 3 நாடுகள் ஆகிய 12 அணிகள் நேரடியாக இடம் பெற்றன. மீதியுள்ள 8 நாடுகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வானது. இவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும். அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    40 லீக் ஆட்டம், சூப்பர் 8 சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது.

    இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும், இலங்கையில் கொழும்பு, கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை tickets.cricketworldcup.com தளத்தில் நேற்று மாலை 6.15க்கு தொடங்கியது.

    குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ரூ.150, ரூ.250, ரூ.300, ரூ.500, ரூ.600, ரூ.750 ஆகிய விலைகளிலும் விற்கப்படுகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிக்கெட்டின் தொடக்க விலை ரூ.750 ஆகும்.

    விற்பனை தொடங்கிய உடனே ஏராளமான ரசிகர்கள் இந்த இணைய தளத்தை அணுகியதால் சிறிது நேரம் இணைய தளமே முடங்கியது.

    • ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
    • பெண்கள் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தாய்லாந்தின் டிடாரோன் கிளிபைசன் உடன் மோதினர்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-7, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 25 நிமிடங்களில் முடிவடைந்தது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 213 ரன்களைக் குவித்தது.
    • அந்த அணியின் டி காக் அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்தார்.

    சண்டிகர்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 பஞ்சாப்பின் சண்டிகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் 90 ரன்கள் குவித்தார். டெனோவன் பெரைரா 30 ரன்னும், மார்க்ரம் 29 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டக் அவுட்டானார். அபிஷேக் சர்மா 17 ரன்னிலும், சூர்யகுமார் 5 ரன்னிலும், அக்சர் படேல் 21 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் திலக் வர்மா தனியாக போராடினார். அவர் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி 19.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.

    • அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைடு பந்துகளை வீசினார்.
    • 4 ஓவர்கள் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைடு பந்துகளை வீசி மோசமான சாதனை படைத்தார்.

    அதாவது டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக வைடு வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார். இதற்கு முன்பு கலீல் அகமது 6 வைடு பந்துகளை வீசியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×