என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைடு பந்துகளை வீசினார்.
    • 4 ஓவர்கள் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைடு பந்துகளை வீசி மோசமான சாதனை படைத்தார்.

    அதாவது டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக வைடு வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார். இதற்கு முன்பு கலீல் அகமது 6 வைடு பந்துகளை வீசியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானார்.
    • கடந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி முல்லன்பூரில் நடைபெற்று வருகிறது . இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து இந்திய அணி 214 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானார்.

    முன்னதாக கடந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதில் 3 முறை மட்டும் 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடைசியா விளையாடிய 13 20(9), 10(7), 5(8), 47(28), 29(19), 4(3), 12(10), 37*(20), 5(10), 15(12), 46(40), 29(16), 4(2).

    ஆனால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக கடைசி 10 போட்டியில் 3 சதம் விளாசியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து இரு சதம் விளாசி அணியின் தொடக்க வீரராக நிரந்தர இடம் பிடித்த சஞ்சு சாம்சனை நீக்கி கில்லை தொடக்க வீரராக களமிறங்கினர். ஆனால் கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. சஞ்சுவின் தொடக்க வீரர் இடத்தையும் பரித்துவிட்டு பின் வரிசையில் இறக்கி அவரது நம்பிக்கையை இழக்கும் வண்ணம் செய்தனர். அதனை தொடர்ந்து அணியில் இருந்தே சஞ்சு சாம்சனை தூக்கினர்.

    தொடர்ந்து தொடர்ந்து சொதப்பும் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணிக்கு கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    • முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..

    இந்நிலையில், முல்லன்பூர் மைதானத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகள் இன்று திறக்கப்பட்டது.

    • தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இன்று 2 ஆவது டி20 போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. 

    • 10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி தொடங்குகிறது.
    • 20 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    துபாய்:

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் கடந்த உலக கோப்பையில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள், 20 ஓவர் தர வரிசையில் உள்ள 3 நாடுகள் ஆகிய 12 அணிகள் நேரடியாக இடம் பெற்றன. மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வானது.

    இவை 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில் டி20 உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை tickets.cricketworldcup.com தளத்தில் இன்று மாலை 6.15க்கு தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • 2025-ல் டென்னிஸ் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.
    • ஜோகோவிச், மெட்வதெவ் மற்றும் ரூப்லெவ் ஆகியோர் போட்டிகளின் போது விரக்தியால் தங்கள் ராக்கெட்டுகளை உடைத்துள்ளனர்

    2025-ல் டென்னிஸ் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதில் முக்கியமாக ஜோகோவிச், டேனியல் மெட்வதெவ் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் போட்டிகளின் போது விரக்தியால் தங்கள் ராக்கெட்டுகளை உடைத்துள்ளனர். அந்த சம்பவம் இந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவங்களை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    யுஎஸ் ஓபன் 2025:

    இந்த தொடரின் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ரஷ்ய வீரர் டேனியல் மெட்வதெவ் (Daniil Medvedev) பிரெஞ்ச் வீரர் பெஞ்சமின் போன்சி (Benjamin Bonzi) ஆகியோ மோதினார். இந்த போட்டி லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 25-ந் தேதி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் போன்சி 6-3, 7-5, 6-7(5), 0-6, 6-4 என்ற கணக்கில் வென்றார்.

    இந்த போட்டியின் மூன்றாவது செட்டில், போன்சி போட்டியை வெல்லும் நிலையில் (5-4, 40-30 – match point) சர்வ் செய்யும் போது, அவரது முதல் சர்வ் ஃபால்ட் (fault) ஆனது. அப்போது, ஒரு போட்டோகிராஃபர் தவறுதலாக கோர்ட்டில் நடந்து போட்டோகிராஃபர் பிட் (pit) இல் சென்றார், இது போட்டியை சிறிது நேரம் தடை செய்தது.

    நடுவர் கிரெக் ஆலன்ஸ்வொர்த் (Greg Allensworth), வெளியாளர் தலையீடு (outside interference) காரணமாக போன்சிக்கு மீண்டும் முதல் சர்வ் (second first serve) அளித்தார், இது USTA விதிகளின்படி சரியான முடிவு.

    இந்த முடிவால் கோபமடைந்த மெட்வெடெவ், நடுவருண்டன் வாக்குவாதம் செய்தார். அவர் நடுவரை "நீங்கள் ஒரு ஆணா?" என்று கேட்டு கிண்டல் செய்தார். மற்றும் ரசிகர்களை தூண்டி boo செய்ய வைக்க கை சைகைகள் செய்தார். மைக்ரோஃபோனில் பேசி, "அவர் வீட்டுக்கு செல்ல விரும்புகிறார், நண்பர்களே. அவர் இங்கு இருக்க விரும்பவில்லை. அவர் போட்டிக்கு பணம் பெறுகிறார் என்று நடுவரை குற்றம்சாட்டினார்.

    இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, அவர்கள் boo, விசில், மற்றும் சத்தமிட்டனர், இது சுமார் 5-6 நிமிடங்கள் தாமதத்தை ஏற்படுத்தியது. போன்சி பல முறை சர்வ் செய்ய முயன்றார், ஆனால் சத்தம் காரணமாக முடியவில்லை.

    மெட்வெடெவ் பின்னர் ரசிகர்களை அமைதிப்படுத்த முயன்றார், அவர்களுக்கு ஹார்ட் சிம்பல் காட்டினார். போன்சி இந்த சத்தத்தை "மிக அதிகமானது" என்று விவரித்தார், மேலும் இது போட்டியில் கவனம் செலுத்துவதை கடினமாக்கியது என்று கூறினார்.

    போட்டோகிராஃபரின் கிரெடென்ஷியல் ரத்து செய்யப்பட்டது. மெட்வெடெவ் ரசிகர்களின் ஆக்ரோஷமான சத்தத்தால் போட்டியை விட்டு வெளியேறவில்லை (walk out) அல்லது முன்கூட்டியே விட்டு செல்லவில்லை. அவர் இந்த சம்பவத்துக்குப் பிறகு போட்டியைத் தொடர்ந்து விளையாடினார், மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை வென்றார், ஆனால் ஐந்தாவது செட்டில் தோற்றார்.

    போட்டி முடிந்த பிறகு, கோபத்தில் தனது ராக்கெட்டை அடித்து உடைத்தார். இந்த நடத்தைக்காக அவருக்கு மொத்தம் $42,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் டென்னிஸ் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    தாய்லாந்தின் காசிடிட் சாம்ரெஜுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தின் போது மெட்வெடேவ் தனது ராக்கெட்டால் நெட் கேமராவை அடித்து நொறுக்கினார். இந்தச் சம்பவத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    ஜெனீவா ஓபன் 2025:

    2025 ஜெனீவா ஓபன் (Geneva Open) டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னாள் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic) தனது 38வது பிறந்தநாளான மே 22 அன்று, இத்தாலிய வீரர் மேட்டியோ அர்னால்டி (Matteo Arnaldi) உடன் நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் கோபத்தில் தனது ராக்கெட்டை உடைத்தார். இது டென்னிஸ் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் ஜோகோவிச் பொதுவாக அமைதியான வீரராக அறியப்படுகிறார், ஆனால் அவ்வப்போது கோப தருணங்கள் காட்டியுள்ளார்.

    அந்த வகையில் ஜெனீவா ஓபன் ஒரு ATP 250 தொடர் போட்டி, களிமண் (clay) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் செட்டை 6-7(6) என்று இழந்த பிறகு, இரண்டாவது செட்டின் மூன்றாவது கேமில் அர்னால்டி ஜோகோவிச்சின் சர்வை பிரேக் செய்தார். இதனால் கோபமடைந்த ஜோகோவிச், கோர்ட்டில் தனது ராக்கெட்டை தரையில் வீசி உடைத்தார். இது ரசிகர்களிடம் பூ (boo) சத்தத்தை ஏற்படுத்தியது, மற்றும் ஜோகோவிச் அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார்.

    போட்டியின் போது ஜோகோவிச் ஒரு சிறிய காயத்தையும் சந்தித்தார் ஆனால் அதை சமாளித்து விளையாடினார். ஜோகோவிச் இந்த சம்பவத்துக்குப் பிறகு திரும்பி வந்து, போட்டியை 6-7(6), 6-3, 7-6(2) என்ற கணக்கில் வென்றார். போட்டிக்குப் பிறகு, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். பின்னர் ராக்கெட்டை உடைத்தது எனக்கு உதவியது போல் தோன்றுகிறது, ஏனெனில் அதன்பிறகு நான் சிறப்பாக விளையாடினேன் எனவும் கூறினார்.

    இந்தியன் வெல்ஸ் 2025:

    2025 இந்தியன் வெல்ஸ் (BNP Paribas Open) போட்டிக்கு தயாராகும் போது, ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் (Andrey Rublev) தனது பயிற்சி அமர்வில் கோபத்தில் ராக்கெட்டை உடைத்தார். இது மார்ச் 8, 2025 அன்று நடந்தது, அவர் அர்ஜென்டினா வீரர் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ (Francisco Cerundolo) உடன் பயிற்சி செய்து கொண்டிருந்த போது ரூப்லெவ் ஒரு தவறுக்குப் பிறகு கோபமடைந்து ராக்கெட்டை தரையில் வீசி உடைத்தார், இது அவரது கோப பிரச்சினைகளின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்பு, செருண்டோலோவுடன் போட்டியில் ராக்கெட்டை முழங்காலில் அடித்து ரத்தம் வரவழைத்த சம்பவம் உண்டு, இது இந்த பயிற்சியுடன் தொடர்புடையது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் வைரலானது.

    • ஐ.பி.எல். மினி ஏலம் அபுதாபியில் வருகிற 16-ந் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.
    • ஏலப்பட்டியலில் மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2026) மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது. இதையொட்டி மொத்தம் 177 வீரர்கள் அணிகளில் தக்கவைக்கப்பட்டு, 71 பேர் விடுவிக்கப்பட்டனர். தற்போது 10 அணிகளுக்கும் சேர்த்து 31 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 77 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான ஐ.பி.எல். மினி ஏலம் அபுதாபியில் வருகிற 16-ந் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

    ஏலத்துக்கு முதலில் 1,355 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். பிறகு அணி நிர்வாகங்களின் வேண்டுகோளுக்கு இணங்க தென் ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக், ஜார்ஜ் லின்டே, இலங்கையின் துனித் வெல்லாலகே உள்பட 35 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். 1,390 பேர் அடங்கிய வீரர்களின் பட்டியல் 10 அணிகளுக்கும் அனுப்பப்பட்டு தங்களுக்கு விருப்பமான வீரர்கள் குறித்து கடந்த 5-ந் தேதிக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

    10 அணிகளிடம் இருந்து கிடைத்த பட்டியலை ஆய்வு செய்த ஐ.பி.எல். நிர்வாகம் இறுதி ஏலப்பட்டியலை நேற்று வெளியிட்டது. அதன்படி இறுதி ஏலப்பட்டியலில் மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 240 பேர் இந்தியர்கள், 110 பேர் வெளிநாட்டினர். இவர்களில் 224 இந்தியர் உள்பட 238 பேர் சர்வதேச போட்டியில் ஆடாதவர்கள். 112 வீரர்கள் சர்வதேச அனுபவம் பெற்றவர்கள்.

    இந்நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக, அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பங்கேற்கிறார். ஆஷஸ் தொடர் வர்ணனையில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. துபாயில் வரும் டிச. 16-ம் தேதி நடைபெறும் ஏலத்தில் ஒரு அணி சார்பில் அதிகபட்சம் 8 பேர் பங்கேற்கலாம்.

    • கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை.
    • ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்.

    இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

    இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

    இதற்கிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. இதைதொடர்ந்து பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.

    அதனை தொடர்ந்து, திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

    இந்நிலையில் கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை என ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை. இந்திய ஜெர்சியை அணிவதுதான் எங்களை இயக்கும் உந்துசக்தி. எல்லாப் பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிடும். அந்த ஒரு எண்ணமே வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவுகிறது. ஒரு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது. அதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் என் மனதில், நான் எப்போதும் ஒரு உலக சாம்பியன் என்று அழைக்கப்பட வேண்டும் என்றே விரும்பினேன்.

    என ஸ்மிருதி மந்தனா கூறினார்.

    • முதல் 2 போட்டிகளிலும் ரன்கள் எடுக்காததால் கடைசி ஒருநாள் போட்டியில் பதட்டமாக இருந்தேன்.
    • நான் எப்படி விளையாடலாம், என்ன செய்ய வேண்டும் என்று ரோகித் என்னிடம் விளக்கிக்கொண்டே இருந்தார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் பெரிய அளவில் விளையாடாத தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

    இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய தொடங்கிய போது பதட்டமாக இருந்ததாகவும் ரோகித் அடிக்கடி என்னிடம் பேசி விளக்கி கொண்டே இருந்ததாக ஜெய்ஸ்வால் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த இரண்டு போட்டிகளிலும் ரன்கள் எடுக்காததால் கடைசி ஒருநாள் போட்டியில் நான் பேட்டிங் செய்ய தொடங்கியபோது, பதட்டமாக இருந்தேன். அந்த இன்னிங்சில், நான் எப்படி விளையாடலாம், என்ன செய்ய வேண்டும் என்று ரோகித் என்னிடம் விளக்கிக்கொண்டே இருந்தார்.

    நிறைய டாட் பந்துகளை ஆடியதால் அழுத்தத்தில் இருந்தேன், மேலும் ஒரு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டியிருந்தது. அப்போது ரோகித் என்னிடம், 'நீ நிதானமாக விளையாடு, நான் ரிஸ்க் எடுக்கிறேன்' என்று சொன்னார். நான் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதற்காக, அவரே பெரும்பாலான ரிஸ்க்குகளை எடுத்துக்கொண்டார்.

    என ஜெய்ஸ்வால் கூறினார்.

    • பும்ரா 81 போட்டியில் 101 விக்கெட்டை எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.
    • அர்ஷ் தீவ் சிங் 107 விக்கெட்டுகளை (69 போட்டி) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

    நியூ சண்டிகர்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2-வது ஆட்டம் நியூ சண்டிகரில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 74 ரன்னில் சுருட்டி 101 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்யும் வேட்கையில் இருக்கிறது.

    இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட்டை வீழ்த்தும் ஆர்வத்தில் உள்ளார். அவர் 121 போட்டிகள் விளையாடி 99 விக்கெட் எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட் கைப்பற்றினால் அவர் 100-வது விக்கெட்டை தொடுவார்.

    100-வது விக்கெட்டை எடுக்கும் 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெறுவார். கடந்த போட்டியின் போது பும்ரா 100 விக்கெட்டை தொட்டார். அவர் 81 போட்டியில் 101 விக்கெட்டை எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அர்ஷ் தீவ் சிங் 107 விக்கெட்டுகளை (69 போட்டி) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

    முதல் 20 ஓவர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்தி அரை சதத்தை பதிவு செய்தார். அதோடு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    • நியூசிலாந்து அணி 278 ரன்னில் 9 விக்கெட்டை இழந்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
    • 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

    வெல்லிங்டன்:

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கான்வே அரை சதம் அடித்தார். அவர் 67 ரன்னும், வில்லியம்சன் 37 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். 6-வது வீரராக களம் இறங்கிய மிச்சேல் ஹாயும் அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 278 ரன்னில் 9 விக்கெட்டை இழந்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    இதனையடுத்து 73 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சேம்பல் 14 ரன்களுடனும் ஆண்டர்சன் பிலிப்ஸ் டக் ஆகி வெளியேறினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

    ×