என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நியூசிலாந்து அணி 278 ரன்னில் 9 விக்கெட்டை இழந்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
    • 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

    வெல்லிங்டன்:

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கான்வே அரை சதம் அடித்தார். அவர் 67 ரன்னும், வில்லியம்சன் 37 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். 6-வது வீரராக களம் இறங்கிய மிச்சேல் ஹாயும் அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 278 ரன்னில் 9 விக்கெட்டை இழந்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    இதனையடுத்து 73 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சேம்பல் 14 ரன்களுடனும் ஆண்டர்சன் பிலிப்ஸ் டக் ஆகி வெளியேறினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

    • மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார்.
    • மெஸ்ஸியுடன் ரசிகர்கள் சிறப்பு புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிப்பு.

    அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். 13-ந் தேதி ஐதராபாத் வரும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியுடன் ரசிகர்கள் சிறப்பு புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். ஒரு புகைப்படத்திற்கு ரூ. 10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி கூறியதாவது:-

    மெஸ்ஸி வருகிற 13-ந் தேதி மாலை ஐதராபாத் வருகிறார். ஃபலக்னுமா அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மெஸ்ஸியை சந்திக்கலாம். நிகழ்வில் நீங்கள் அவருடன் புகைப்படம் எடுக்கலாம். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரூ.9.95 லட்சம் (ஜிஎஸ்டி) கூடுதலாக செலவாகும். இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் மாவட்ட செயலியில் கிடைக்கும். 100 பேர் மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும்.

    உப்பல் மைதானத்தில் 3 மணி நேர நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுகளில் மெஸ்ஸி பங்கேற்பார்.

    பின்னர் நடைபெறும் அணிவகுப்பில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மெஸ்ஸியை கவுரவிப்பார். மாவட்ட செயலியில் அனைத்து வகையான டிக்கெட்டுகளும் கிடைக்கும்.

    இந்த நிகழ்வுக்கு கிரிக்கெட் வீரர்கள் அழைக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு கட்டத்தில் 0-2 என்ற கணக்கில் இந்தியா பின்தங்கி இருந்தது.
    • கடைசி 15 நிமிடங்களில் 4 கோல்கள் அடித்து இந்தியா முத்திரை பதித்தது.

    2 முறை சாம்பியனான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் முறையாக வெண்கலம் பதக்கம் பெற்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

    இந்தியாவின் இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஒரு கட்டத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது. கடைசி 15 நிமிடங்களில் 4 கோல்கள் அடித்து முத்திரை பதித்தனர்.

    49-வது நிமிடத்தில் அங்கீத் பால் (பெனால்டி கார்னர்), 52-வது நிமிடத்தில் மன்மீத்சிங் (பெனால்டி கார்னர்), 57-வது நிமிடத்தில் ஷர்தானந்த் திவாரி (பெனால்டி ஸ்டிரோக்), 58-வது நிமிடத்தில் அன்மோல் எக்கா (பெனால்டி கார்னர்) ஆகியோர் இந்திய அணிக்கான கோலை அடித்தனர்.

    இந்திய அணி அர்ஜென்டினாவை வீ்த்தி வெண்கல பதக்கம் வென்றது குறித்து தலைமை பயிற்சியாளர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கூறியதாவது:-

    இந்திய வீரர்கள் நெருக்கடியை சிறப்பாக கையாண்டனர். கடைசி 15 நிமிடத்தில் ஒரு அணியாக ஆடினார்கள். அழுத்தத்தில் இருந்து விடுப்பட்டு ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறினேன். அவர்கள் அதை சிறப்பாக செய்தனர். ஆனால் கடுமையான சவாலை எதிர் கொண்டு அவர்கள் இந்த வெற்றியை பெற்றனர். எல்லாவற்றையும் திட்டமிட்டோம். வீரர்களின் அபாரமான செயல்பாட்டை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதின
    • இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி கடந்த 28-ந்தேதி சென்னை, மதுரையில் தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

    இதில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி ஸ்பெயினை வீழ்த்தியது. ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டைபிரேக்கில் ஜெர்மனி 3-2 என்ற கணக்கில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஸ்பெயினுக்கு 2-வது இடம் கிடைத்தது அந்த அணியின் சிறப்பான நிலை இதுவாகும். இதற்கு முன்பு ஸ்பெயின் அணி 2 முறை (2005, 2023), 3-வது இடத்தை பிடித்ததே சிறந்ததாக இருந்தது.

    முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ரோகித் தலைமையிலான இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

    துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெர்மனி அணிக்கு உலக கோப்பையை வழங்கினார். அந்த அணி வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்தார். மேலும் ஸ்பெயின் வீரர்களுக்கு வெள்ளி பதக்கத்தையும், இந்திய வீரர்களுக்கு வெண்கல பதக்கத்தையும் அணிவித்தார்.

    சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் தயாப் இக்ரம், பீகார் மாநில விளையாட்டு துறை மந்திரி ஸ்ரேயாசி சிங், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கி, செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    ஜூனியர் உலக கோப்பையில் வெண்கல பதக்கம் வென்று சாதித்த இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. அணியில் உள்ள பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தலா ரூ.2½ லட்சம் வழங்கப்படுகிறது.

    2005, 2021, 2023 ஆகிய 3 முறை இந்திய அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தோற்று 4-வது இடத்தை பிடித்தது. தற்போதுதான் முதல் முறையாக சொந்த மண்ணில் 3-வது இடத்திற்கான போட்டியில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்தது.

    முன்னதாக நடந்த 5-வது இடத்திற்கான போட்டியில் பெல்ஜியம்-நெதர்லாந்து அணிகள் மோதின. போட்டியின் முடிவில் 3-3 என்ற சமநிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 5-வது இடத்தை பிடித்தது. நெதர்லாந்துக்கு 6-வது இடம் கிடைத்தது.

    பிரான்ஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 7-வது இடத்தை பிடித்தது. நியூசி லாந்துக்கு 8-வது இடம் கிடைத்தது. 

    • முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 12.3 ஓவரில் வெறும் 74 ரன்னில் சுருண்டது.
    • கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    சண்டிகர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    கட்டாக்கில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி பஞ்சாப்பின் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகரில் இன்று நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் இந்திய அணி திலக் வர்மா, அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரது கணிசமான பங்களிப்பால் 175 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் மிரட்டினர். இந்தியாவின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா 12.3 ஓவரில் வெறும் 74 ரன்னில் சுருண்டது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு இந்த வெற்றி கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது. இதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் தென் ஆப்பிரிக்காவை வெல்ல தீவிரம் காட்டுவார்கள்.

    ஹர்திக் பாண்ட்யா இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 100 விக்கெட் என்ற மைல் கல்லை எட்டுவார்.

    தொடக்க ஆட்டத்தில் மோசமான தோல்வியைத தழுவிய தென் ஆப்பிரிக்கா அதில் இருந்து மீண்டு எழுச்சி பெற முயற்சிக்கும்.

    அந்த அணியில் டிவால்ட் பிரேவிஸ், கேப்டன் மார்க்ரம், குயின்டான் டி காக், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை.

    இன்றைய போட்டியில் பேட்டால் பதிலடி கொடுக்க வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா:

    அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரீத் பும்ரா.

    தென் ஆப்பிரிக்கா:

    குயின்டான் டி காக், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டிவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டோனோவன் பெரேரா, மார்கோ யான்சென், லுதோ சிபாம்லா அல்லது கார்–பின் பாஷ் அல்லது ஜார்ஜ் லின்டே, கேசவ் மகராஜ், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ஜியா.

    • இந்தத் தொடர் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
    • தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் 6-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெறும் ஒரு தொழில்முறை 100 பந்து போட்டியே தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர். இதில் 8 அணிகள் பங்கேற்கும்.

    இந்தத் தொடரில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

    இந்தத் தொடரின் 6-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான லண்டன் ஸ்பிரிட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தினேஷ் கார்த்திக் ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் இதே பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
    • பெண்கள் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரகிருதி பாரத் உடன் மோதினர்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-8, 17-21, 21-18 என ஜப்பானின் அனா இவாகியை வீழ்த்தினார்.

    • ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்றது.
    • இதில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இன்று மாலை நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

    இதன்மூலம் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியது.

    கடந்த 2016-ம் ஆண்டு இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்றது.
    • இதில் ஜெர்மனி அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொண்டது.

    இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இதனால் ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • மந்தனாவின் தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டார்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. இவர் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்.

    இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

    மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. இதைதொடர்ந்து பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.

    தொடர்ந்து, திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில்," என் வாழ்க்கையில் கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகம் காதலிக்கவில்லை. இந்திய ஜெர்ஸியை அணிந்து நாட்டுக்காக விளையாடும்போது, எல்லா கஷ்டங்களும் மறந்துவிடும்!" என்றார்.

    • 2025 ஆசிய கோப்பையில் "நோ-ஹேண்ட்ஷேக்" சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
    • 2024-25 ஐ-லீக் (I-League) சீசனில் இன்டர் காஷி (Inter Kashi) மற்றும் சர்ச்சில் பிரதர்ஸ் எஃப்சி போட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    2025-ம் ஆண்டில் இந்திய விளையாட்டுக்களில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவங்கள் பல நடந்துள்ளது. இதில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் சர்ச்சையான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

    1. 2025 ஆசிய கோப்பையில் "நோ-ஹேண்ட்ஷேக்" சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    போட்டி நடைபெறும் இடம் மாற்றம்: ஆரம்பத்தில் இந்தியா நடத்துவதாக இருந்த 2025 ஆசிய கோப்பை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதட்டங்கள் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மாற்றப்பட்டது.

    கை குலுக்க மறுப்பு: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகளிலும், இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்துவிட்டனர்.

    இந்திய நிலைப்பாடு: இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இது அணி நிர்வாகம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட "கூட்டு முடிவு" என்றும், "விளையாட்டுத் திறனுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்கள் உள்ளன" என்றும் தெரிவித்தார்.

    பாகிஸ்தான் எதிர்வினை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இது "விளையாட்டு உணர்வுக்கு எதிரானது" என்று கூறி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் (ACC) முறையிட்டது. மேலும், போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்-ஐ (Andy Pycroft) நடுவர் குழுவிலிருந்து நீக்கக் கோரியது, ஆனால் இந்தக் கோரிக்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ICC) நிராகரிக்கப்பட்டது.

    வீரர்களுக்கு அபராதம்: போட்டியில் நடத்தைக் குறியீட்டை மீறியதற்காக, இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் உள்ளிட்ட வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் ஹாரிஸ் ரவூஃப் இரண்டு போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டார்.

    2. கோப்பை வழங்கும் விழாவில் சர்ச்சை:

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகும் இதே நிலைப்பாடு தொடர்ந்தது. இந்திய அணி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள் துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க மறுத்தது, இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்திய அணி, கோப்பையை எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் காலித் அல் சரூனியிடமிருந்து (Khalid Al Zarooni) பெறத் தயாராக இருந்தது. ஆனால், மொஹ்சின் நக்வி அதற்குக் கீழ்ப்படிய மறுத்து, தாமே கோப்பையை வழங்க வலியுறுத்தினார். இதன் காரணமாக, பரிசளிப்பு விழா ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானது, இறுதியில் கோப்பை வழங்கப்படாமலேயே நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. தற்போது வரை கோப்பையை இந்திய அணி வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    3. ஆர்சிபி முதல் முறை கோப்பை மற்றும் கூட்ட நெரிசல் சர்ச்சை

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கோப்பையை முதன்முறையாக வென்றது. ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது. 18 ஆண்டுகளாக கோப்பைக்காகக் காத்திருந்த ஆர்சிபி அணிக்கு 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் கனவை நனவாக்கியது. இது விராட் கோலி போன்ற நீண்ட நாள் வீரர்களின் கனவை நனவாக்கிய ஒரு உணர்வுப்பூர்வமான வெற்றியாக அமைந்தது.

    வெற்றிக்குப் பிறகு, பெங்களூருவில் உள்ள எம். சின்னசுவாமி ஸ்டேடியம் அருகே அணிக்கு பாராட்டு விழா மற்றும் கோப்பை காட்சிப்படுத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போதுதான் சோகம் நிகழ்ந்தது.

    ஜூன் 4, 2025 அன்று நடந்த கொண்டாட்டத்தின் போது, ஆர்சிபி அணிக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், வீரர்களைப் பார்க்கவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

    மைதானத்திற்கு வெளியே மற்றும் நுழைவாயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்பு வேலிகள் தள்ளப்பட்டு, நெரிசல் உருவானது.

    இந்தத் துயர சம்பவத்தில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

    போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அனுமதிகள் பெறாமல் ஆர்சிபி நிர்வாகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததே நெரிசலுக்குக் காரணம் என்று கர்நாடக அரசு குற்றம் சாட்டியதுடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தப்பட்டது.

    கர்நாடக மாநில அரசு உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் (இருபது லட்சம் ரூபாய்) நிதி உதவி அறிவித்தது.

    4. 2024-25 ஐ-லீக் (I-League) சீசனில் இன்டர் காஷி (Inter Kashi) மற்றும் சர்ச்சில் பிரதர்ஸ் எஃப்சி (Churchill Brothers FC) இடையேயான கோப்பைக்கான போட்டி ஒரு பெரும் குழப்பம் மற்றும் சட்டப் போராட்டங்களால் நிறைந்த ஒரு "ரோலர்கோஸ்டர்" அனுபவமாக இருந்தது. இந்த விவகாரம் இந்திய கால்பந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2024-25 சீசன் இறுதிவரை நான்கு அணிகள் கோப்பை வெல்லும் வாய்ப்புடன் இருந்தன. இதில் சர்ச்சில் பிரதர்ஸ் மற்றும் இன்டர் காஷி அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருந்தன.

    மார்ச் 30, 2025 அன்று இரு அணிகளும் மோதிய போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. சர்ச்சில் பிரதர்ஸ் அணி கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இந்தக் கோல் சர்ச்சைக்குரியதாக இருந்தது (பந்தை கையால் தொட்டிருக்கலாம் என்ற சந்தேகம்).

    சீசன் முடிவில், சர்ச்சில் பிரதர்ஸ் 40 புள்ளிகளுடனும், இன்டர் காஷி 39 புள்ளிகளுடனும் இருந்தன. இதனால், சர்ச்சில் பிரதர்ஸ் கோப்பையை வென்றதாகத் தோன்றியது.

    போட்டியின் முடிவுகள் களத்தில் தீர்மானிக்கப்பட்டாலும், டைட்டில் வெற்றியாளர் யார் என்பதில் நீதிமன்ற வழக்குகள் தலையிட்டன:

    தகுதியற்ற வீரர் விவகாரம்: இன்டர் காஷி அணி, சீசனின் ஆரம்பத்தில் ஒரு போட்டியில் தகுதியற்ற வீரரான ஸ்பானிஷ் ஸ்ட்ரைக்கர் மரியோ பார்கோவை (Mario Barco) களமிறக்கியதாக சர்ச்சை எழுந்தது.

    அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (AIFF) மேல்முறையீட்டுக் குழு, இன்டர் காஷி தகுதியற்ற வீரரை பயன்படுத்தியதால், சம்பந்தப்பட்ட போட்டிகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் கழிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், சர்ச்சில் பிரதர்ஸ் 2025 ஏப்ரல் 20 அன்று சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டனர்.

    இந்த முடிவை எதிர்த்து இன்டர் காஷி அணி சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்தது.

    நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 2025 ஜூலை 18 அன்று CAS தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. AIFF-ன் முந்தைய முடிவை CAS ரத்து செய்தது. இன்டர் காஷி அணிக்கு எதிரான புள்ளிக்குறைப்பு முடிவை நீக்கியதுடன், புள்ளிகள் அட்டவணையை மீண்டும் சரிசெய்ய AIFF-க்கு உத்தரவிட்டது.

    CAS தீர்ப்பின்படி, திருத்தப்பட்ட புள்ளிப்பட்டியலில் இன்டர் காஷி 42 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது, சர்ச்சில் பிரதர்ஸ் 40 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்தது.

    இதன் விளைவாக, இன்டர்காஷி எஃப்சி 2024-25 ஐ-லீக் சாம்பியன்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது மற்றும் இந்தியன் சூப்பர் லீக்கிற்கு (ISL) பதவி உயர்வு பெற்றது.

    5. இந்தியன் சூப்பர் லீக் ஒத்திவைப்பு

    இந்தியன் சூப்பர் லீக் (ISL) 2025-26 சீசன் ஒத்திவைக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், லீக்கை நடத்தும் அமைப்பான கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு லிமிடெட் (FSDL) மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) இடையேயான ஒப்பந்தச் சிக்கல்கள் ஆகும்.

    AIFF மற்றும் FSDL இடையே 2010 இல் கையெழுத்திடப்பட்ட 15 ஆண்டுகால மாஸ்டர் ரைட்ஸ் ஒப்பந்தம் (MRA), 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதியுடன் காலாவதியாகிறது.

    புதிய ஒப்பந்தத்தை (MRA) புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக நடந்து வந்தபோதிலும், எந்த ஒரு சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. இதனால், டிசம்பர் மாதத்திற்குப் பிறகு லீக்கின் வணிக ரீதியான எதிர்காலம் குறித்த தெளிவின்மை நிலவியது.

    ஒரு உறுதியான ஒப்பந்தம் இல்லாத நிலையில், 2025-26 சீசனை திறம்படத் திட்டமிடவோ அல்லது வணிகமயமாக்கவோ முடியாது என்று FSDL உணர்ந்தது. இதன் காரணமாக, ஜூலை 2025 இல், லீக் "தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக" FSDL அறிவித்தது.

    AIFF-ன் வரைவு அரசியலமைப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை FSDL உடன் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட AIFF-க்கு சட்டரீதியான தடைகள் இருந்தன.

    இந்த நிச்சயமற்ற நிலை கிளப்புகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மத்தியில் பெரும் கவலையையும், நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியது. சில கிளப்புகள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாகக் கூட அறிவித்தன.

    இருப்பினும், செப்டம்பர் 2025 இல் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, லீக் தொடங்குவதற்கு ஒரு வழியை வகுத்தது. அதன்படி, 2025-26 சீசன் அக்டோபர் கடைசி வாரத்தில் அல்லது டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
    • முதுகுவலி காயத்தில் இருந்து மீண்டுள்ள கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

    அடிலெய்டு:

    இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகுவலி காயத்தில் இருந்து மீண்டுள்ள கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அத்துடன் அவரே கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.

    ×