என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
- முதுகுவலி காயத்தில் இருந்து மீண்டுள்ள கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
அடிலெய்டு:
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகுவலி காயத்தில் இருந்து மீண்டுள்ள கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அத்துடன் அவரே கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.
- பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார்.
- விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
துபாய்:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஒருநாள் பேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார். தென் ஆப்பிரிக்க தொடரில் அசத்திய விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதன் காரணமாக டேரில் மிட்செல் ஒரு இடம் சரிந்து 3-வது இடத்திற்கும், இப்ராஹிம் சத்ரன் ஒரு இடம் சரிந்து 4-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியா தரப்பில் சுப்மன் கில் 5-வது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 10-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷித் கான் மாற்றமின்றி முதலிடத்திலும் ஆர்ச்சர் 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்தியாவின் குல்தீப் யாதவ் கிடுகிடுவென 3 இடங்கள் எகிறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியா தரப்பில் இவர் மட்டுமே டாப்-10 இடத்திற்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மாற்றமில்லை. அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய தரப்பில் அக்சர் படேல் 10-வது இடத்தில் உள்ளார்.
- சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியவை.
- நான் எப்போதும் விரும்பும் ஒரு வீரர் இந்த சாதனையை முறியடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ராஞ்சியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 3 சிக்சர் பறக்க விட்டார். இதையும் சேர்த்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிக்சர் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் விரட்டிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். கடந்த 15 ஆண்டுகளாக இச்சாதனை பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (351 சிக்சர்) வசம் இருந்தது. அவரை ரோகித் சர்மா முந்தினார்.
38 வயதான ரோகித் சர்மா இதுவரை 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் உள்பட 11,427 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 352 சிக்சரும், 1,071 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்நிலையில் நான் எப்போதும் விரும்பும் ஒரு வீரர் இந்த சாதனையை முறியடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியவை. இது இப்போது சிறப்பாக உள்ளது. நான் எப்போதும் விரும்பும் ஒரு வீரர் இந்த சாதனையை முறியடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டெக்கான் சார்ஜர்ஸ் பயிற்சி செஷன்களின் போது, நான் அவரது பேட்டிங்கைப் பார்த்தேன். அவரது பேட்டிங் திறன் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு நாள் ரோகித் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று எனக்குத் தெரியும், அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துள்ளார்.
இவ்வாறு அப்ரிடி கூறினார்.
- இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- அயர்லாந்துக்கு 10-வது இடம் கிடைத்தது.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின.
இதில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டிராசை கதன் இந்த 2 கோலையும் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 9-வது இடத்தை பிடித்தது. அயர்லாந்துக்கு 10-வது இடம் கிடைத்தது.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, ஜப்பான், சிலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 11 முதல் 16-வது இடங்களை பிடித்தன.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. உலக கோப்பையை வெல்லப் போவது ஜெர்மனியா? ஸ்பெயினா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி 8-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. தோல்வி எதையும் சந்திக்காமல் அந்த அணி 10-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது.
ஸ்பெயின் அணி முதல் முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. முதல் கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு 3-வது இடமான வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் 2 முறை சாம்பியன்களான இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
ரோகித் தலைமையிலான இந்திய அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி 3-வது இடத்தை பிடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
- சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
- இதில் 3 முறை மட்டுமே 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க்கா அணி 12.3 ஓவரில் 74 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதில் 3 முறை மட்டும் 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடைசியா விளையாடிய 13 20(9), 10(7), 5(8), 47(28), 29(19), 4(3), 12(10), 37*(20), 5(10), 15(12), 46(40), 29(16), 4(2).
அதேபோல சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக கடைசி 10 போட்டியில் 3 சதம் விளாசியுள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து இரு சதம் விளாசி அணியின் தொடக்க வீரராக நிரந்தர இடம் பிடித்த சஞ்சு சாம்சனை நீக்கி கில்லை தொடக்க வீரராக களமிறங்கினர். ஆனால் கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. சஞ்சுவின் தொடக்க வீரர் இடத்தையும் பரித்துவிட்டு பின் வரிசையில் இறக்கி அவரது நம்பிக்கையை இழக்கும் வண்ணம் செய்தனர். அதனை தொடர்ந்து அணியில் இருந்தே சஞ்சு சாம்சனை தூக்கினர்.
சதம் அடித்தும் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடியும் ஒரு வீரரை அணியில் இருந்து நீக்குவது இந்திய அணியால் மட்டுமே முடியும் என ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.
- ஜான் கேம்பல், பிராண்டன் கிங் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது.
- நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னா் 4 விக்கெட்டும், மிச்சேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
வெல்லிங்டன்:
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டெஸ்ட் வெல்லிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜான் கேம்பல், பிராண்டன் கிங் ஆகியோர் களமிறங்கினர்.
இரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. கிங் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஹாட்ஜ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேம்பல் 44 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து கேப்டன் ரோஸ்டன் சேஸ் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. இதில் சாய் ஹோப் 48 ரன்னிலும் சேஸ் 29 ரன்னிலும் வெளியேறினர்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 75 ஓவர்களில் 205 ரன்னில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பிளேர் டிக்னா் 4 விக்கெட்டும், மிச்சேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை ஆடியது. இன்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன் எடுத்து இருந்தது.
- இந்தியா 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது.
- இந்தியா அடுத்த ஆட்டத்தில் பிரேசிலை நாளை சந்திக்கிறது.
சென்னை:
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.
இதில் முதல் ஆட்டத்தில் தேசிய சாம்பியனான தமிழகத்தின் ேவலவன் செந்தில்குமார் 7-6, 7-6, 7-5 என்ற நேர் செட்டில் சுவிட்சர்லாந்தின் ராபின் கடோலாவை வீழ்த்தினார். ஜோஸ்னா சின்னப்பா 7-1, 5-7, 7-2, 7-2, 7-0 என்ற செட் கணக்கில் ஸ்டெல்லா காப்மேனை 18 நிமிடங்களில் மடக்கினார்.
அபய்சிங், அனாஹத் சிங் ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தனர். முடிவில் இந்தியா 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் பிரேசிலை நாளை சந்திக்கிறது.
- மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 7 பேர் ஆடும் கால்பந்து போட்டியில் களம் காண்கிறார்.
- 15-ந்தேதி டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார்.
கொல்கத்தா:
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பணமாக இந்தியாவுக்கு வருகிறார். 14 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் அவர் மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
வருகிற 13-ந்தேதி அதிகாலை கொல்கத்தா வந்தடையும் மெஸ்ஸி, அங்கு நிறுவப்பட்டுள்ள அவரது 70 அடி உயர சிலையை திறந்து வைக்கிறார். ஆனால் பாதுகாப்பு கருதி அவர் ஓட்டலில் இருந்தபடி காணொலி வாயிலாக சிலையை திறந்து வைக்கிறார். உலகிலேயே மெஸ்ஸியின் உயரமான சிலையாக இது இருக்கும்.
பின்னர் கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் நடக்கும் கால்பந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவரை பார்ப்பதற்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து ஐதராபாத் செல்லும் அவர் இரவில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து காட்சி போட்டியில் ஆடுகிறார்.
14-ந்தேதி மும்பைக்கு கிளம்பும் கால்பந்து சூப்பர் ஸ்டார் மெஸ்ஸி 45 நிமிடங்கள் நடைபெறும் பேஷன் ஷோவில் ஒய்யாரமாக வலம் வர உள்ளார். அவருடன் அர்ஜென்டினா நடுகள வீரர் ரோட்ரிகோ டி பால், அவரது நீண்ட கால கிளப் வீரர் உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ் ஆகியோரும் இணைகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்கிறார்கள். முன்னதாக மாலை 5 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 7 பேர் ஆடும் கால்பந்து போட்டியில் களம் கண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். இளம் கால்பந்து வீரர்களும் அவருடன் இணைந்து விளையாட இருக்கிறார்கள். அத்துடன் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக 15-ந்தேதி டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- தென் ஆப்பிரிக்கா 6-வது முறையாக இது மாதிரியான தோல்வியை தழுவியது.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 9-வது முறையாக இந்தியா 100 ரன்னுக்கு வெற்றியை பெற்று சாதனை படைத்தது. ஐ.சி.சி. முழு நேர உறுப்பினர்களின் வேறு எந்த அணியும் 9 முறை இது மாதிரியான வெற்றியை பெற்றது கிடையாது. மற்ற அணிகள் 4 தடவைதான். 100 ரன்னுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளன.
கனடா அணி அதிகபட்ச மாக 10 தடவை 100 ரன்னுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 2023-ம் ஆண்டு நியூசிலாந்தை 168 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதே மிகப்பெரிய வெற்றியாகும்.
தென் ஆப்பிரிக்கா 6-வது முறையாக இது மாதிரியான தோல்வியை தழுவியது. வேறு எந்த ஐ.சி.சி. முழு நேர நாடுகளும் இப்படி தோற்றது இல்லை. இந்தியாவிடம் மட்டும் 3-வது தடவையாக 100 ரன்னுக்கு மேல் தோற்றது. 74 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்காவின் குறைந்த பட்ச ஸ்கோராகும்.
2 விக்கெட் கைப்பற்றிய தன் மூலம் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமாரின் சாதனையை சமன் செய்தார். முதல் 6 ஓவரில் (பவர் பிளே) புவனேஷ்வர் குமார் 47 விக்கெட்டுகளை (1152 பந்துகள்) வீழ்த்தி இந்திய வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார்.
அர்ஷ்தீப் சிங் 750 பந்துகளில் 47 விக்கெட்டுகளை கைப்பற்றி சமன் செய்தார். பும்ரா முதல் 6 ஓவரில் 33 விக்கெட் (840 பந்து) எடுத்து 3 -வது இடத்தில் உள்ளார்.
- தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்றைய ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
புவனேஷ்வர்:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
பும்ரா டெஸ்ட்டில் 234 விக்கெட்டுகள், ஒருநாள் கிரிக்கெட்டில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் நேற்று நடந்த டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன.
- 6-ல் ஜெர்மனியும், ஒன்றில் ஸ்பெயினும் வெற்றி பெற்றன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.
14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
இதில் இன்றுஇரவு 8 மணிக்கு நடைபெறும் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் 'நம்பர் ஒன்' அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
7 முறை சாம்பியனான ஜெர்மனி அணி லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்தையும், கால்இறுதியில் பெனால்டி ஷூட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சையும், அரைஇறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவையும் தோற்கடித்து 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
ஸ்பெயின் அணி லீக் சுற்றில் எகிப்து, பெல்ஜியம், நமிபியாவையும், கால்இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், அரைஇறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும் வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 6-ல் ஜெர்மனியும், ஒன்றில் ஸ்பெயினும் வெற்றி பெற்றன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.
மொத்தத்தில் உலகக் கோப்பையை 8-வது முறையாக கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ஜெர்மனியும், முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்த ஸ்பெயினும் வரிந்து கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி, அர்ஜென்டினாவை சந்திக்கிறது. 2 முறை சாம்பியனான இந்தியா உள்ளூரில் நடைபெறும் இந்த போட்டியில் வெறுங்கையுடன் வெளியேறாமல் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்துடன் நிறைவு செய்ய போராடும். ஆனால் சமபலம் வாய்ந்த அர்ஜென்டினாவும் கடும் சவால் அளிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ் கூறுகையில், 'ஜெர்மனிக்கு எதிரான அரைஇறுதியில் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. ஆனால் எதிரணிக்கு தொடக்கத்தில் இருந்தே எளிதாக கோல் அடிக்கும் வாய்ப்புகளை வழங்கி தவறிழைத்து விட்டோம். நாங்கள் முதலில் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திவிட்டு, பிறகு தாக்குதலை தொடுத்து கோலுக்கான வாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். முந்தைய தவறுகளை திருத்தி கொண்டு அர்ஜென்டினாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை வெல்ல முயற்சிப்போம்' என்றார்.
7-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்-நியூசிலாந்து (பகல் 12.30 மணி), 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-நெதர்லாந்து (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையே சென்னையில் நேற்று நடந்த 15-வது இடத்தை நிர்ணயிப்பதற்கான ஆட்டத்தில் சிலி 2-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 15-வது இடத்தை சொந்தமாக்கியது. சுவிட்சர்லாந்து 16-வது இடம் பெற்றது.
13-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா- ஜப்பான் அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்ததால் வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் மலேசியா 3-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பதம் பார்த்தது.
11-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
- முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
- ஒருபுறம் சன்னி லியோனின் படத்தையும் மறுபுறம் இன்னொன்றையும் அவர் பதிவிட்டார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
முன்னாள் ஆபாச நடிகையும் இந்நாள் பாலிவுட் நடிகையுமான சன்னி லியோனின் புகைப்படத்தைப் அவர் பகிர்ந்து கொண்டார்.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் இளம் வீரர் சன்னி சந்துவின் அற்புதமான ஆட்டத்திற்கு அஸ்வின் இப்படித்தான் வாழ்த்து தெரிவிப்பாராம்.
ஒருபுறம் சன்னி லியோனின் படத்தையும் மறுபுறம் சென்னையில் உள்ள ஒரு சந்தின் புகைப்படத்தையும் அஸ்வின் பதிவிட்டார்.
இந்தப் பதிவு சன்னி (லியோன்) மற்றும் சந்து (தெரு) ஆகியவற்றை இணைத்து 'சன்னி சந்து' என்று பொருள்படும் வகையில் உருவாக்கப்பட்டது என்று ரசிக சிகாமணிகள் தீவிரமாக சிந்தித்து கண்டுபிடித்துள்ளனர்.






