என் மலர்
2025 - ஒரு பார்வை

REWIND 2025: Temper ஆன டென்னிஸ் வீரர்கள்.. களத்தில் நொறுங்கிய ராக்கெட்டுகள்
- 2025-ல் டென்னிஸ் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.
- ஜோகோவிச், மெட்வதெவ் மற்றும் ரூப்லெவ் ஆகியோர் போட்டிகளின் போது விரக்தியால் தங்கள் ராக்கெட்டுகளை உடைத்துள்ளனர்
2025-ல் டென்னிஸ் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதில் முக்கியமாக ஜோகோவிச், டேனியல் மெட்வதெவ் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் போட்டிகளின் போது விரக்தியால் தங்கள் ராக்கெட்டுகளை உடைத்துள்ளனர். அந்த சம்பவம் இந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவங்களை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
யுஎஸ் ஓபன் 2025:
இந்த தொடரின் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், ரஷ்ய வீரர் டேனியல் மெட்வதெவ் (Daniil Medvedev) பிரெஞ்ச் வீரர் பெஞ்சமின் போன்சி (Benjamin Bonzi) ஆகியோ மோதினார். இந்த போட்டி லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 25-ந் தேதி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் போன்சி 6-3, 7-5, 6-7(5), 0-6, 6-4 என்ற கணக்கில் வென்றார்.
இந்த போட்டியின் மூன்றாவது செட்டில், போன்சி போட்டியை வெல்லும் நிலையில் (5-4, 40-30 – match point) சர்வ் செய்யும் போது, அவரது முதல் சர்வ் ஃபால்ட் (fault) ஆனது. அப்போது, ஒரு போட்டோகிராஃபர் தவறுதலாக கோர்ட்டில் நடந்து போட்டோகிராஃபர் பிட் (pit) இல் சென்றார், இது போட்டியை சிறிது நேரம் தடை செய்தது.
நடுவர் கிரெக் ஆலன்ஸ்வொர்த் (Greg Allensworth), வெளியாளர் தலையீடு (outside interference) காரணமாக போன்சிக்கு மீண்டும் முதல் சர்வ் (second first serve) அளித்தார், இது USTA விதிகளின்படி சரியான முடிவு.
இந்த முடிவால் கோபமடைந்த மெட்வெடெவ், நடுவருண்டன் வாக்குவாதம் செய்தார். அவர் நடுவரை "நீங்கள் ஒரு ஆணா?" என்று கேட்டு கிண்டல் செய்தார். மற்றும் ரசிகர்களை தூண்டி boo செய்ய வைக்க கை சைகைகள் செய்தார். மைக்ரோஃபோனில் பேசி, "அவர் வீட்டுக்கு செல்ல விரும்புகிறார், நண்பர்களே. அவர் இங்கு இருக்க விரும்பவில்லை. அவர் போட்டிக்கு பணம் பெறுகிறார் என்று நடுவரை குற்றம்சாட்டினார்.
இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, அவர்கள் boo, விசில், மற்றும் சத்தமிட்டனர், இது சுமார் 5-6 நிமிடங்கள் தாமதத்தை ஏற்படுத்தியது. போன்சி பல முறை சர்வ் செய்ய முயன்றார், ஆனால் சத்தம் காரணமாக முடியவில்லை.
மெட்வெடெவ் பின்னர் ரசிகர்களை அமைதிப்படுத்த முயன்றார், அவர்களுக்கு ஹார்ட் சிம்பல் காட்டினார். போன்சி இந்த சத்தத்தை "மிக அதிகமானது" என்று விவரித்தார், மேலும் இது போட்டியில் கவனம் செலுத்துவதை கடினமாக்கியது என்று கூறினார்.
போட்டோகிராஃபரின் கிரெடென்ஷியல் ரத்து செய்யப்பட்டது. மெட்வெடெவ் ரசிகர்களின் ஆக்ரோஷமான சத்தத்தால் போட்டியை விட்டு வெளியேறவில்லை (walk out) அல்லது முன்கூட்டியே விட்டு செல்லவில்லை. அவர் இந்த சம்பவத்துக்குப் பிறகு போட்டியைத் தொடர்ந்து விளையாடினார், மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை வென்றார், ஆனால் ஐந்தாவது செட்டில் தோற்றார்.
போட்டி முடிந்த பிறகு, கோபத்தில் தனது ராக்கெட்டை அடித்து உடைத்தார். இந்த நடத்தைக்காக அவருக்கு மொத்தம் $42,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் டென்னிஸ் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
தாய்லாந்தின் காசிடிட் சாம்ரெஜுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தின் போது மெட்வெடேவ் தனது ராக்கெட்டால் நெட் கேமராவை அடித்து நொறுக்கினார். இந்தச் சம்பவத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெனீவா ஓபன் 2025:
2025 ஜெனீவா ஓபன் (Geneva Open) டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னாள் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic) தனது 38வது பிறந்தநாளான மே 22 அன்று, இத்தாலிய வீரர் மேட்டியோ அர்னால்டி (Matteo Arnaldi) உடன் நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் கோபத்தில் தனது ராக்கெட்டை உடைத்தார். இது டென்னிஸ் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் ஜோகோவிச் பொதுவாக அமைதியான வீரராக அறியப்படுகிறார், ஆனால் அவ்வப்போது கோப தருணங்கள் காட்டியுள்ளார்.
அந்த வகையில் ஜெனீவா ஓபன் ஒரு ATP 250 தொடர் போட்டி, களிமண் (clay) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் செட்டை 6-7(6) என்று இழந்த பிறகு, இரண்டாவது செட்டின் மூன்றாவது கேமில் அர்னால்டி ஜோகோவிச்சின் சர்வை பிரேக் செய்தார். இதனால் கோபமடைந்த ஜோகோவிச், கோர்ட்டில் தனது ராக்கெட்டை தரையில் வீசி உடைத்தார். இது ரசிகர்களிடம் பூ (boo) சத்தத்தை ஏற்படுத்தியது, மற்றும் ஜோகோவிச் அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார்.
போட்டியின் போது ஜோகோவிச் ஒரு சிறிய காயத்தையும் சந்தித்தார் ஆனால் அதை சமாளித்து விளையாடினார். ஜோகோவிச் இந்த சம்பவத்துக்குப் பிறகு திரும்பி வந்து, போட்டியை 6-7(6), 6-3, 7-6(2) என்ற கணக்கில் வென்றார். போட்டிக்குப் பிறகு, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். பின்னர் ராக்கெட்டை உடைத்தது எனக்கு உதவியது போல் தோன்றுகிறது, ஏனெனில் அதன்பிறகு நான் சிறப்பாக விளையாடினேன் எனவும் கூறினார்.
இந்தியன் வெல்ஸ் 2025:
2025 இந்தியன் வெல்ஸ் (BNP Paribas Open) போட்டிக்கு தயாராகும் போது, ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் (Andrey Rublev) தனது பயிற்சி அமர்வில் கோபத்தில் ராக்கெட்டை உடைத்தார். இது மார்ச் 8, 2025 அன்று நடந்தது, அவர் அர்ஜென்டினா வீரர் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ (Francisco Cerundolo) உடன் பயிற்சி செய்து கொண்டிருந்த போது ரூப்லெவ் ஒரு தவறுக்குப் பிறகு கோபமடைந்து ராக்கெட்டை தரையில் வீசி உடைத்தார், இது அவரது கோப பிரச்சினைகளின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு, செருண்டோலோவுடன் போட்டியில் ராக்கெட்டை முழங்காலில் அடித்து ரத்தம் வரவழைத்த சம்பவம் உண்டு, இது இந்த பயிற்சியுடன் தொடர்புடையது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் வைரலானது.






