என் மலர்
விளையாட்டு
- மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
- முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைச்சுங் பூட்டியாவை சந்தித்தார்.
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது குழுவினரின் மூன்று நாள் இந்திய சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவடைந்தது.
கொல்கத்தா, ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த சுற்றுப்பயணத்தில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி வீரர்களும் லூயிஸ் சுவாரெஸ் மற்றும் அர்ஜென்டினா ரோட்ரிகோ டி பால் உள்ளிட்ட புகழ்பெற்ற வீரர்களும் அவருடன் வந்திருந்தனர்.
இன்று, மதியம் மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
மாலை 4 மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில், மெஸ்ஸி குழந்தைகளுடன் கலந்துரையாடி, கால்பந்து விளையாடினார்.
முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைச்சுங் பூட்டியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா ஆகியோரை அவர் சந்தித்தார். ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் 10வது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.
மேலும் 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட்டைப் பரிசாக வழங்கி, அவரைப் போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.
- முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது
- அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி நாளை மறுநாள் (டிச.17) நடைபெற உள்ளது.
இந்நிலையில் மிஞ்சியுள்ள இருபோட்டிகளில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீரர் அக்சர் படேல் விலகியுள்ளார். உடல்நலக்குறைவால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் ஷபாஸ் அஹ்மது சேர்க்கப்பட்டுள்ளார். தரம்சாலாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது காய்ச்சலால் விளையாடாத அக்சர் படேல், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் அதே காரணத்துக்காக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெறும் 21 ரன்களை மட்டுமே குவித்ததால், அக்சர் படேல் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார். இந்நிலையில் மிஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார் அக்சர் படேல்.
- 2-வது நாள் பயணமாக மெஸ்ஸி நேற்று மும்பை சென்றார்.
- 3-வது நாள் சுற்றுப்பயணமாக மெஸ்ஸி இன்று டெல்லி சென்றுள்ளார்.
புதுடெல்லி:
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார். அவரை கண்குளிர பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.
அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்ஸி அங்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடினார்.
இதனையடுத்து 2-வது நாள் பயணமாக அவர் நேற்று மும்பை சென்றார். அங்குள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர். மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கினார். இங்கு மெஸ்ஸி ஒரு மணி நேரம் செலவிட்டார்.
இதனையடுத்து மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் மெஸ்ஸி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் அவரிடம் கை கொடுக்க ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு முன் கொல்கத்தாவின் நிகழ்ச்சியில் இதற்கு ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்திருந்த நிலையில், ரசிகர்கள் அவரை காண முடியாமல் திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது.
- ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
- இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
மும்பை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நாளை (16-ந் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
இந்நிலையில் நாளை ஏலம் நடைபெற உள்ள சூழலில் ஏலப்பட்டியலில் இந்திய வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏதோ ஒரு ஐ.பி.எல். அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் அவரது பெயர் ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சியில் பெங்கால் அணியின் கேப்டனாக செயல்படும் அவர், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக கோப்பை செஸ் வரலாற்றில் இளம் வயதில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தரோவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்தியாவின் திவ்யா தேஷ்முக் ஜார்ஜியாவின் பாடுமியில் நடந்த பெண்கள் உலகக் கோப்பையை வென்றார்.
2025-ம் ஆண்டில் செஸ் உலகில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தன. இதோ சில முக்கியமான தகவல்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
அதன்படி முதலில் உலக கோப்பை செஸ் வரலாற்றில் இளம் வயதில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தரோவ் (Javokhir Sindarov) சாம்பியன் பட்டம் வென்றார். அவர் FIDE உலகக் கோப்பை 2025-ஐ வென்றார். இந்தியாவின் கோவாவில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 27 வரை நடந்த இந்தத் தொடரில், இறுதிப் போட்டியில் சீனாவின் வெய் யி (Wei Yi)-யை டைபிரேக்கரில் வீழ்த்தினார்.

பிரக்னானந்தா டாடா ஸ்டீல் சாம்பியன்:
இந்திய வீரர் ஆர். பிரக்னானந்தா (R Praggnanandhaa) ஜனவரி 17 முதல் பிப்ரவரி 2 வரை நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஸீயில் நடந்த டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரை வென்றார். உலக சாம்பியன் குகேஷ் (Gukesh Dommaraju)-ஐ ப்ளிட்ஸ் ப்ளேஆஃபில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இது பிரக்னானந்தாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று.

மேக்னஸ் கார்ல்சனின் நார்வே செஸ் வெற்றி:
ஜூன் 6 வரை ஸ்டாவாங்கரில் நடந்த நார்வே செஸ் 2025-ஐ உலகின் நம்பவர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) ஏழாவது முறையாக வென்றார்.

ஆனால், இந்தத் தொடரில் உலக சாம்பியனான அவரை கிளாசிக்கல் செஸ்ஸில் குகேஷ் முதல் முறையாக வீழ்த்தினார். இது ஒரு பெரும் பாராட்டை குகேஷ்-க்கு பெற்றுக் கொடுத்தது.

பெண்கள் உலக சாம்பியன்:
சீனாவின் ஜு வென்ஜுன் (Ju Wenjun) ஏப்ரல் 3 முதல் 16 வரை ஷாங்காய் மற்றும் சோங்கிங்கில் நடந்த பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் 2025-ஐ வென்று, தனது ஐந்தாவது உலக தலைப்பைத் தக்க வைத்தார். சீனாவின் டான் ஜோங்கி (Tan Zhongyi)-யை 6.5-2.5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

பெண்கள் உலகக் கோப்பை:
இந்தியாவின் திவ்யா தேஷ்முக் (Divya Deshmukh) ஜூலை 5 முதல் 29 வரை ஜார்ஜியாவின் பாடுமியில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை 2025-ஐ வென்றார். இறுதியில் கொனேரு ஹம்பி (Koneru Humpy)-யை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தினார். இது திவ்யாவின் முதல் உலகக் கோப்பை வெற்றி.

ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம்:
லெவன் ஆரோனியன் (Levon Aronian) டிசம்பர் மாதத்தில் நடந்த ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை 1.5-0.5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ்:
ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1 வரை ரியாத்தில் நடந்த ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் தொடரை மேக்னஸ் கார்ல்சன் வென்றார். இறுதியில் அலிரேசா ஃபிரௌஜாவை (Alireza Firouzja) வீழ்த்தினார்.
கிராண்ட் செஸ் டூர் 2025:
பல தொடர்களில், வெஸ்லி சோ (Wesley So) சின்க்ஃபீல்ட் கப்-ஐ வென்றார், மேலும் ஆண்டு முழுவதும் பல இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

- காசிமாவை வாழ்த்தி, ரூ.50 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை முதலமைச்சர் வழங்கினார்.
- கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.
சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் காசிமா கேரம் உலக கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணியாக தங்கமும் காசிமா வென்றார்.
அதே சமயம் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவுகளிலும் கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்
இந்நிலையில் கேரம் உலக கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காசிமாவை வாழ்த்தி, ரூ.50 லட்சத்துக்கான ஊக்கத் தொகை காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

- மெஸ்சி இன்று காலை மும்பையில் இருந்து டெல்லி செல்வதாக இருந்தது.
- பிற்பகலில் மெஸ்சி டெல்லி சென்றடைவார் என்று தகவல் வெளியானது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்சி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நேற்று அவர் மும்பை சென்றார்.
அங்கு காட்சிப் போட்டியில் விளையாடினார். இதில் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
மெஸ்சி இன்று காலை மும்பையில் இருந்து டெல்லி செல்வதாக இருந்தது. டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பிற்பகலில் மெஸ்சி டெல்லி சென்றடைவார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மெஸ்ஸியின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
- விராட் கோலி தற்போது 84 சர்வதேச சதங்களுடன் உள்ளார்.
- இந்தியா அடுத்த 2027 உலகக் கோப்பை வரை சுமார் 30-35 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி. இவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அவர் 2008-ல் அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடினார். 3 வடிவத்திலும் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் 84 சதங்களுடன் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். (டெஸ்டில் 30, ஒருநாள் போட்டிகளில் 53, டி20யில் 1).
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 53 சதங்கள் அடித்து, சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இலக்கை துரத்திச் சென்று அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர். சேஸிங்கின் போது மட்டும் 26 சதங்களுக்கு மேல் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 27,000க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி தற்போது 84 சர்வதேச சதங்களுடன் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 16 சதங்கள் தேவை. அவர் இந்த மைல்கல்லை எட்டுவது சாத்தியமா என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
37 வயதிலும் அவர் மிக உயர்ந்த உடல் தகுதியுடன் உள்ளார். இது இன்னும் சில ஆண்டுகள் அவர் விளையாட உதவும். அவர் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். சமீபத்திய ஒருநாள் தொடர்களில் அவர் தொடர்ந்து சதங்கள் அடித்து வருகிறார்.
இருந்தாலும் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், அவர் விளையாடும் ஒரே வடிவம் ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே. இந்தியா அடுத்த 2027 உலகக் கோப்பை வரை சுமார் 30-35 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது.
அவர் 16 சதங்களை எட்ட, கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் ஒரு சதம் அடிக்க வேண்டும். 2027 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோலி 2027 உலகக் கோப்பையில் 11 போட்டிகள் வரை விளையாட முடியும். ஒருவேளை இந்தியா சீக்கிரமே வெளியேறினால் குறைந்தபட்சம் 6 போட்டிகள் விளையாடும்.
புள்ளிவிவர ரீதியாகப் பார்த்தால் இது மிகவும் கடினமான இலக்காகத் தெரிகிறது. ஆனால், கோலியின் திறமை, அனுபவம் மற்றும் தீவிரமான ஆட்ட வேட்கையைக் கருத்தில் கொள்ளும்போது, கிரிக்கெட்டில் எதையும் சாத்தியமற்றது என்று சொல்லிவிட முடியாது.
விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 1000க்கும் அதிகமான பவுண்டரிகளை (1027 ஃபோர்ஸ்) அடித்துள்ளார். அவரது டெஸ்ட் சராசரி ஒரு கட்டத்தில் 55.10 என்ற உச்சத்தை எட்டியது. குறிப்பாக இந்தியாவில் நடந்த போட்டிகளில் இவரது சராசரி 55.58 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே சிக்சரை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இன்னிங்சின் முதல் பந்தில் 3 முறை சிக்ஸர் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு ரோகித், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒருமுறை முதல் பந்தில் சிக்சர் பறக்கவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் 2 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
- 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. 2-வது போட்டியில் விளையாடிய கஸ் அட்கின்சனுக்கு பதிலாக ஜோஸ் டங் அணியில் இடம் பிடித்துள்ளார். மற்றப்படி எந்த மாற்றமும் இல்லை.
3-வது போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால் தொடரை இழந்துவிடும் நிலையில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.
இங்கிலாந்து அணியில் ஆடும் லெவன்:-
க்ராலி, டக்கெட், போப், ரூட், ப்ரூக், ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கார்ஸ், ஆர்ச்சர், ஜோஷ் டோங்.
- இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது.
- இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையை இந்திய அணி பெற்றது.
12 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா 7-3, 2-7, 7-5, 7-1 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ கா யிக்கு அதிர்ச்சி அளித்தார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங் 7-1, 7-4, 7-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் லாவை வீழ்த்தினார். 3-வது ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் 7-2, 7-2, 7-5 என்ற செட் கணக்கில் ஹோ டோமாட்டோ ஹோவை மடக்கினார். முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் கடைசி ஆட்டத்தில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் களம் இறங்க அவசியம் இல்லாமல் போய் விட்டது.
முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியா, இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையையும் பெற்றது. இந்த வெற்றி, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் ஸ்குவாஷ் போட்டியில் சாதிப்பதற்கு இந்தியாவுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அதில், உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, அபய்சிங், அனாஹத் சிங், வேலவன் செந்தில்குமார் ஆகியோர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அவர்களின் வெற்றி முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது. இந்திய ஸ்குவாஷ் அணியின் வெற்றி நமது நாட்டை பெருமைப்படுத்தி இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
- மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் இரு நாட்கள் நடந்தது.
- 7 வயதான மணிகா பவன் ராஜாஜி வித்யாஷரம் பள்ளியில் படித்து வருகிறார்.
சென்னை:
தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் இரு நாட்கள் நடந்தது.
இதில் 8 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பிரிவில் சென்னை மாணவி மணிகா தன்டோல், பீம் பிரிவில் தங்கப்பதக்கமும், புளோர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். 7 வயதான மணிகா பவன் ராஜாஜி வித்யாஷரம் பள்ளியில் படித்து வருகிறார்.






