என் மலர்
இந்தியா
- வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார்.
- கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
திருவனந்தபுரம்:
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 17-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஐயப்பன் கோவிலில் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் இன்று திருவனந்தபுரம் வருகிறார். இன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார். பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.
பின்னர் 23-ந்தேதி வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார். தொடர்ந்து 24-ந்தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி இன்றும், நாளையும் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
- பழைய டெல்லியில் உள்ள பாரம்பரியமிக்க ஸ்வீட் கடைக்கு ராகுல் காந்தி சென்றார்.
- அங்கு இரண்டு வகையான ஸ்வீட்களை செய்து அசத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழைய டெல்லியில் உள்ள நூற்றாண்டு பாரம்பரியமிக்க பழமையான ஸ்வீட் கடையான Ghantewala sweet shop-க்கு சென்றார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மறைந்த அவரது தந்தை ராஜீவ் காந்திக்கு இமார்தி (Imarti), பெசான் லட்டுகள் (Besan Laddus) பிடிக்கும். இதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என ஸ்வீட் கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்பான வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஊழியர் ஒருவர் உதவியுடன் இரண்டு ஸ்வீட்களையும் தயாரித்தார். பின்னர் அக்கடையின் ஊழியர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
பின்னர் ராகுல் காந்தி வருகை தந்தது குறித்து கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் கூறியதாவது:-
அவரது தந்தை ராஜீவ்காந்திக்கு பிடித்தமான இரண்டு ஸ்வீட்களை அவரே செய்து ருசி பார்த்தார். பின்னர் கடையில் உள்ள ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவரிடம் விரைவில் திருமணம் செய்யுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் திருமணம் செய்தால்தான் நாங்கள் ஸ்வீட் ஆர்டர் வாங்க முடியும் எனத் தெரிவித்தேன்.
இவ்வாறு சுஷாந்த் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தி அவரது வீட்டிற்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு ஸ்வீட் வாங்க விரும்பினார். இது உங்கள் கடை போன்றது" என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
முன்னதாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் "பழைய டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கந்தேவாலா இனிப்புக் கடையில் இமார்டி மற்றும் பெசன் லட்டுகளை தயாரிக்க முயற்சித்தேன். பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மதிப்புமிக்க கடையின் இனிப்பு இன்றும் அப்படியே உள்ளது. தூய்மையானது, பாரம்பரியமானது மற்றும் இதயத்தைத் தொடுவது. தீபாவளியின் உண்மையான இனிப்பு தட்டில் மட்டுமல்ல, உறவுகளிலும் சமூகத்திலும் உள்ளது" என வீடியோ வெளியிட்டு குறிப்பிட்டிருந்தார்.
- இன்று காலை விக்ராந்த் போர்க்கப்பலில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
- அப்போது இந்தியா விரைவில் மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளை ஒழிக்கும் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்திய பிரதமர் இன்று ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு-வை சந்தித்தார். அப்போது பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல் துணை ஜனாதிபதி பொன் ராதாகிருஷ்ணனையும் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இன்று தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் வீரர்கள் மத்தியில் தீபாவளி கொண்டாடினார். வீரர்கள் இனிப்பு வழங்கினார். பின்னர் போர் விமான சாகசங்களை கண்டு களித்தார்.
வீரர்கள் மத்தியில் பேசும்போது "கடந்த சில வருடங்களில் பாதுகாப்புப்படை வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தால், இந்தியா மற்றொரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளது. இந்த சாதனை, மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றியது.
இந்தியா நக்சலைட், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து விடுதலையின் விளிம்பில் உள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்னதாக 125 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் வன்முறை அதிகமாக இருந்தது. இந்த மாவட்டங்களில் எண்ணிக்கை தற்போது 11 மாவட்டங்களாக குறைந்துள்ளன. 11 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு, முதன்முறையாக சுதந்திரமான காற்றை சுவாசித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்" என்றார்.
- கணவனின் தம்பி, தங்கையுடன் பழகி வந்துள்ளார்.
- வீட்டில் எதிர்ப்பு கிளம்ப, விலகி சென்றதால் கொழுந்தன் மீது, அண்ணிக்கு ஆத்திரம்.
தங்கையிடம் நன்றாக பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியதால், ஆத்திரம் அடைந்த அண்ணி கொழுந்தனின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மவு ஐமாவில் உள்ள மல்கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் அசாரே. இவரது மகன் உதய். இவர் மஞ்சு என்பவரை திருமணம் செய்து உள்ளார்.
உதயின் இளைய சகோதரர் உமேஷ். இவருக்கு 20 வயது ஆகிறது. இவர் மஞ்சுவின் இளைய சகோதரியுடன் பழகி உள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.
எனினும் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக அசாரே குடும்பத்தினர் அண்ணனுக்கு திருமணம் முடித்த அதே வீட்டில் திருமணம் முடிக்க விருப்பம் இல்லை என்பதால் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக உமேஷ் மஞ்சுவின் தங்கையின் தொடர்பில் இருந்து வெளியேற முயன்றார். மேலும் ஒரு மற்றொரு பெண்ணுடன் நெருங்கி பழகுவதில் ஆர்வம் காட்டியுள்ளார்.
இதனால் மஞ்சுவின் சகோதரி மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளார். யாரிடமும் பேசாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனால் அவருக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
தன் தங்கையின் இந்த நிலைக்கு கொழுந்தன்தான் காரணம். இதனால் பழி வாங்க வேண்டும் என மஞ்சுவுக்கு கடுமையான கோபம் ஏறியது.
ஒருநாள் வீட்டில் எல்லோரும் தூங்கும் வரை காத்திருந்தார் மஞ்சு. எல்லோரும் தூங்தியதை உறுதிப்படுத்திய பின்னர், கொழுந்தன் உமேஷ் படுத்திருந்த அறைக்கு சென்றுள்ளார். அங்கு சமையல் அறையில் உள்ள கூர்மையான கத்தியுடன் சென்ற அவர், கொழுந்தனை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்னர் மர்ம உறுப்பை கடுமையாக தாக்கி, அறுத்துள்ளார். இதனால் உமேஷ் வலியால் துடிதுடித்து ஐயோ என கத்தினார். உடனே மஞ்சு அந்த இடத்தில் இருந்து வெளியேறி தப்பிவிட்டார்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உமேஷ் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரை மருத்துவர்கள் காப்பாற்றினார். ஆனால் காயங்கள் முழுமையாக குணமடைய 6 முதல் 7 மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மர்ம மனிதர்கள் யாரோ தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் கொழுந்தனை தாக்கியது அண்ணி என்பது தெரியவந்தது.
இதற்கிடையே போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்பதை அறிந்த மஞ்சு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
- ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும். இல்லை எதிரியாக ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும்.
- தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடும்போது தலைவர்களை எதிர்த்து பேச வேண்டியிருக்கும்.
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (NDA)- இந்தியா கூட்டணிக்கும் (India Bloc) இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. அந்தக் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் 55 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.
இன்றுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் முடிவடைந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் 60 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் ஒரே தொகுதியில் இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை நட்பான சண்டை என இந்தியா கூட்டணி அழைக்கிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக்சன சக்தி கட்சியின் தலைவரான சிராக் பஸ்வான், நட்பான சண்டை என்பது கிடையாது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள ஒற்றுமையின்மையை குறித்து அவர் கூறியதாவது:-
ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும். இல்லை எதிரியாக ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும். தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடும்போது அவர்களுடைய தலைவர்களை எதிர்த்து பேச வேண்டியிருக்கும். அது எப்படி இன்னொரு தொகுதிகளில் பாதி்ப்பை ஏற்படுத்தாமல் இருக்கும். இந்தியா கூட்டணியில் உள்ள பிளவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும்.
நான் அரசியலை நன்றாக புரிந்தவன். தொகுதி பங்கீடுகளில் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் இந்தியா கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு கூட செய்ய முடியவில்லை. ஒரு தேர்தலில் பெரிய கூட்டணி பிளவு படும் விளிம்பில் இருப்பது போன்றதை இதற்கு முன் நான் பார்த்ததில்லை.
இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சி தலா 101 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்தியா கூட்டணியில் லாலு கட்சி (RJD) 143 இடங்களிலும், காங்கிரஸ் 55 இடங்களிலும், சிபிஐ-எம்எல் 20 தொகுதிகளிலும், சிபிஐ 6 தொகுதிகளில், சிபிஐ-எம் 4 தொகுதிகளிலும், விஐபி 15 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் 60 தொதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
- நக்சலைட், மாவோயிஸ்ட் ஆதிக்கம் 100 மாவட்டங்களில் இருந்து 11 மாவட்டங்களாக குறைந்துள்ளது.
- 11 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் உள்ளன.
பிரதமர் மோடி இன்று ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் ஆயுதப்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
அப்போது படை வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
கடந்த சில வருடங்களில் பாதுகாப்புப்படை வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தால், இந்தியா மற்றொரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளது. இந்த சாதனை, மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றியது.
இந்தியா நக்சலைட், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து விடுதலையின் விளிம்பில் உள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்னதாக 125 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் வன்முறை அதிகமாக இருந்தது. இந்த மாவட்டங்களில் எண்ணிக்கை தற்போது 11 மாவட்டங்களாக குறைந்துள்ளன. 11 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு, முதன்முறையாக சுதந்திரமான காற்றை சுவாசித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- பிரதமரின் SHRI திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள மாநில அமைச்சர் தெரிவித்திருந்தார்.
- இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக கூட்டணி வெளிப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
பிரதமரின் SHRI திட்டத்தில் கேரள மாநில இணைய இருப்பதாக, அம்மாநில அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்திருந்தார். ஆனால், நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை பெறுவதற்காகத்தான் அந்த திட்டத்தில் இணைகிறோம். கேரளாவில் தற்போது உள்ள கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் வராது எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக இடையிலான ரகசிய கூட்டணி, பிரதம்ர் SHRI திட்டத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் குற்றம்சாட்டியுள்ளார்.
- கடற்படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி இரவு உணவு அருந்தினார்.
- இன்று காலை, ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் ஒரு யோகா அமர்வில் அவர் கலந்து கொண்டார்,
நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி கோவா கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படை கப்பலில் தீபாவளியை கொண்டாடினார்.
ஐஎன்எஸ் விக்ராந்தில் இருந்தபோது, பிரதமர் மோடி மிக் 29 கே போர் விமானங்களால் சூழப்பட்ட விமான தளத்திற்குச் சென்றார்.
பிரதமர் மோடி முன்பு ஐஎன்எஸ் விக்ராந்தின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் பல்வேறு தேசபக்தி பாடல்களைப் பாடினார்கள். இதில் ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப்படைகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் அவர்களால் எழுதப்பட்ட பாடல் அடங்கும்.
கடற்படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி இரவு உணவு அருந்தினார். இன்று காலை, ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் ஒரு யோகா அமர்வில் அவர் கலந்து கொண்டார்,
ஐஎன்எஸ் விக்ராந்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி ஒரு ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார். இதனையடுத்து அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
- ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய இராணுவம் முன்னணியில் இருக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறோம் என்று இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பேசியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பாகிஸ்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கர் மாவட்டத்தில் ராணுவ வீரர்களிடம் பேசிய உபேந்திர திவேதி, "தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய இராணுவம் முன்னணியில் இருக்க வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் முதல் தூணாக மாறி பொதுமக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும். இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது" என்று தெரிவித்தார்.
- புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று மக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது.
புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
- பீகார் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
- தி புளுரல்ஸ் பார்ட்டி 243 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் இரு கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த முறை பீகாரில் குறிப்பிடும் கட்சியாக 'தி புளுரல்ஸ் பார்ட்டி' திகழ்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகளான புஷ்பம் பிரியா சவுத்ரி ஆரம்பித்திருக்கும் இந்தக் கட்சிதான் அங்கு புதிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த முறை 243 இடங்களிலும் அவரது கட்சி போட்டியிடுகிறது, பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்சிக்கு நகரம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

தர்பங்காவைச் சேர்ந்த முன்னாள் ஜே.டி.யு எம்.எல்.ஏ. வினோத் குமார் சவுத்ரியின் மகள்தான் இந்த புஷ்பம் பிரியா.
1987, ஜூன் 13-ம் தேதி பிறந்த புஷ்பம் பிரியா தர்பங்காவில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன்பின், பட்டப்படிப்புக்காக புனே சென்றார். தொடர்ந்து இங்கிலாந்தில் உயர்கல்வியை படித்தார்.
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டுப் படிப்பில் முதுகலைப் பட்டமும், 2019-ல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இதையடுத்து, அரசியலில் ஈடுபட்ட அவர் பீகார் அரசின் சுற்றுலா மற்றும் சுகாதாரத் துறைகளில் ஆலோசகராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், பீகாரின் தர்பங்காவிலிருந்து போட்டியிடும் புஷ்பம் பிரியா சவுத்ரி, கருப்பு உடை மற்றும் மாஸ்க் மூலமே வலம் வருகிறார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

எனது கட்சியின் பெயர் மக்களின் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கிறது. பன்மை என்பது அனைத்துச் சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதாகும்.
நான் வித்தியாசமானவள். எங்களுக்கென சொந்த சித்தாந்தம் உள்ளது.
அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை உடை அணிகிறார்கள் என்று எனக்குத் தெரியாததால் கருப்பு நிறத்தை அணிகிறேன்.
தேர்தல் அரசியலில் வெற்றியைப் பெறும்வரை மாஸ்க்கை கழற்றமாட்டேன் என தெரிவித்தார்.
இந்த முறை 243 இடங்களிலும் அவரது கட்சி போட்டியிடுகிறது, பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்சிக்கு நகரம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
- தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை தொடர்ந்து மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சுயசார்பு உற்பத்தியை கொண்டாடுங்கள்.
140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பை கொண்டாடுவோம்.
தீபாவளி நாளில் இந்தியர்களின் படைப்பாற்றலைக் கொண்டாடுவோம்
இந்தியப் பொருட்களை வாங்குவதை உறுதி செய்யுங்கள்
நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களில் பகிருங்கள். இப்படி செய்வதன் மூலம் மற்றவர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்க ஊக்குவியுங்கள் என பதிவிட்டுள்ளார்.






