என் மலர்
இந்தியா

ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
- இன்று காலை விக்ராந்த் போர்க்கப்பலில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
- அப்போது இந்தியா விரைவில் மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளை ஒழிக்கும் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்திய பிரதமர் இன்று ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு-வை சந்தித்தார். அப்போது பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல் துணை ஜனாதிபதி பொன் ராதாகிருஷ்ணனையும் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இன்று தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் வீரர்கள் மத்தியில் தீபாவளி கொண்டாடினார். வீரர்கள் இனிப்பு வழங்கினார். பின்னர் போர் விமான சாகசங்களை கண்டு களித்தார்.
வீரர்கள் மத்தியில் பேசும்போது "கடந்த சில வருடங்களில் பாதுகாப்புப்படை வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தால், இந்தியா மற்றொரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளது. இந்த சாதனை, மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றியது.
இந்தியா நக்சலைட், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து விடுதலையின் விளிம்பில் உள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்னதாக 125 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் வன்முறை அதிகமாக இருந்தது. இந்த மாவட்டங்களில் எண்ணிக்கை தற்போது 11 மாவட்டங்களாக குறைந்துள்ளன. 11 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு, முதன்முறையாக சுதந்திரமான காற்றை சுவாசித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்" என்றார்.






