என் மலர்
தேர்தல் செய்திகள்
பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா இருவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருப்பதாகவும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் புகார் தெரிவித்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பெண் எம்.பி. சுஷ்மிதா தேவ் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மற்ற தேர்தல் ஆணையர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மீது கூறியுள்ள புகார்கள் குறித்து எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதே போல் தேர்தல் விதிகளை மீறி ராகுல் காந்தி பல இடங்களில் பேசியதாக பாஜகவினர் அளித்த புகார் தொடர்பாகவும் தலைமை ஆணையர் ஆலோசனை நடத்தினார். #ElectionCommission #NarendraModi #Amitshah
பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23,29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பயங்கரவாதத்தினை உருவாக்கும் அனைவரும் இந்த காவலாளிக்கு எதிராக இருக்கிறார்கள். குற்றங்கள் புரிந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று ஜாமீன் கேட்பவர்கள், இந்த உறுதியான அரசினை கண்டு அஞ்சுகின்றனர். எதிர்க்கட்சியினர் அவர்களின் வெற்றிக்காக பாடுபடவில்லை, தங்களின் குறைந்த செல்வாக்கை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். #PMModi #PublicRally
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கும் 4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகிறார்கள்.
ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளின் பொறுப்பாளராக செயற்குழு உறுப்பினர் சவுரிராஜனும் ஒட்டப்பிடாரம் தொகுதி பார்வையாளர்களாக ஆர்.தங்கவேலு, ஜான்சன் தங்கவேலு, ஜே.எபினேசர், கே.பிரபு ஆகியோரும் திருப்பரங்குன்றம் தொகுதி பார்வையாளர்களாக கே.குருவைய்யா, வி.அண்ணாமலை, வி.ஷாஜி, ஜே.விஜய்பாஸ்கர் ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.
சூலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக செயற்குழு உறுப்பினர் சினேகனும் தேர்தல் பார்வையாளர்களாக ஆர்.மூகாம்பிகா, சிகே.அருண், ஆர்.சுதாகரன், எம்.பிரபு மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்காக தேர்தல் பொறுப்பாளராக ஏ.சந்திர சேகரனும் தேர்தல் பார்வையாளர்களாக தருமபுரி ராஜசேகரன், ஆர்.ஹரிஹரன், பூவை.ஏ.ஜெகதீஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.’
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam

மதுரை:
மதுரையில் அ.ம.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது. அவர்கள் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி அல்ல. மக்கள் வெறுக்கும் அணி.
எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி படுதோல்வி அடையும். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் அவர்கள் கோபத்துடன் பேசி வருகிறார்கள்.
மதுரையில் பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கோபமாக பேசி இருக்கிறார். இது ஏற்புடையதல்ல. ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிறபோது அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவும்.
இதனால் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார்.
தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளன. ஆனால் தோல்வி பயம் காரணமாக தேர்தல் விதிமுறைகளையும் மீறி விட்டு அமைச்சர்களும், அரசு கொறடாவும் சபா நாயகரை சந்தித்து பேசி உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #Panneerselvam
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
சூலூர் தொகுதியில் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் நாளை(1-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். திறந்தவேனில் நின்று அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் கோவை வருகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிப்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
தொடர்ந்து செஞ்சேரி மலை, சுல்தான்பேட்டை, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு ஆகிய 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார். பின்னர் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். மீண்டும் வருகிற 14-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் 2-வது கட்டமாக பிரசாரம் செய்கிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5, 6-ந்தேதிகளில் சூலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.
சூலூர் தொகுதியில் வெளிமாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சூலூர் பகுதியில் தேர்தல் களைகட்டியுள்ளது. #TNByPoll #ADMK #EdappadiPalaniswami
ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நேற்று (29-ந்தேதி) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் மோகன், தி.மு.க. வேட்பாளர் சண்முகையா, அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தரராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யா மற்றும் சுயேட்சைகள் உள்பட 37 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. ஓட்டப்பிடாரம் தொகுதியை பொறுத்தவரை 5 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 19 நாட்கள் மட்டுமே இருப்பதால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை நாளை (1-ந்தேதி) தொடங்குகிறார். தனது கட்சி சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து அவர் தொகுதி முழுவதும் திறந்த வேனில் சென்று மக்களை நேரடியாக சந்தித்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

பின்பு அவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். மே தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நாளை (1-ந்தேதி) காலை பேரணி மற்றும் நினைவேந்தல் கூட்டம் நடக்கிறது. பேரணி தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவில் தொடங்கி வி.வி.டி. சிக்னல் வழியாக சிதம்பரம் நகர் பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வந்து சேருகிறது.
இந்த பேரணியில் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். பின்பு நடக்கும் நினைவேந்தல் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
பின்னர் நாளை மாலை ஓட்டப்பிடாரம் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் திறந்த வேனில் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். தூத்துக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்க சந்திப்பில் மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் மாலை 6 மணிக்கு மாப்பிள்ளையூரணியிலும், இரவு 7 மணிக்கு தருவைகுளத்திலும், 7.30 மணிக்கு புதியம்புத்தூரிலும், 8 மணிக்கு ஓட்டப்பிடாரத்திலும் பிரசாரம் செய்கிறார்.
மறுநாள் (2-ந்தேதி) காலை 8.30 மணிக்கு ஸ்பிக்நகர் குடியிருப்போர் நலச்சங்க சந்திப்பில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். அன்று மாலை 5 மணிக்கு கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, தங்கம்மாள்புரம், கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளிலும், இரவு 7.30 மணிக்கு முடிவைத் தானேந்தல் கிராமத்திலும் பிரசாரம் செய்கிறார்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்வதால் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளதால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. #TNAssemblyElection #MKStalin
சென்னையில் தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். அதில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை தேர்தல் ஆணையம்தான் உறுதி செய்யும்.
தற்போது அந்த விவகாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரிக்கிறார். அவரிடம் இருந்து அறிக்கை பெறப்படும். அலுவலர்கள் செய்த தவறு வரிசையாக பட்டியலிடப்படும். அதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலரின் பதில் பெறப்படும்.
அதற்கான விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுதான் விசாரணை நடத்தப்படும். அனைத்து நடைமுறையையும் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த பிரச்சினையில் காலதாமதம் ஏற்படும்.
விசாரணை அதிகாரி அந்த நடிகர்களை சாட்சியாக விசாரிக்க முடியும். அலுவலர்கள் சொல்வது சரியா என்பதை நடிகர்கள் கூறும் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். முதலில் குற்றப்பதிவு செய்யப்படும். இரண்டாவதாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார். மூன்றாவதாக, விசாரணை அதிகாரியின் அறிக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு அவர் தகுந்த தண்டனையை விதிப்பார். அந்தத் தண்டனையை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். இதுதான் நடைமுறை.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo

பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.








