search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெய்ப்பூரில் 80 கி.மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய டாக்டர்
    X

    ஜெய்ப்பூரில் 80 கி.மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய டாக்டர்

    ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற வாக்குப்பதிவின்போது இருதய நோய் மருத்துவர் 80 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து வந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார். #Jaipurcardiologist #parliamentelection
    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிஎல் சர்மா என்ற இருதய நோய் மருத்துவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் டோங்க் மாவட்டத்தில் உள்ள சோடா கிராமம் ஆகும். இங்குதான் இவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் இருந்து மருத்துவமனை 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

    சோடா கிராமம் சவாய்மாதோபுர் மக்களவை தொகுதிக்குள் வருகிறது. இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடிவு செய்தார். மேலும், மக்களுக்கு ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் எண்ணினார்.

    இதனால் ஜெய்ப்பூரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சைக்கிளிலேயே பயணம் செய்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

    இதுகுறித்து சர்மா கூறுகையில் ‘‘வாக்குப்பதிவு மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றின் விழிப்புணர்வுக்காகத்தான் இதை செய்தேன். என்னுடைய கிராமத்தை அடைய நான்கு மணி நேரம் ஆனது. நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சைக்கிள் ஓட்டுகிறேன். சைக்கிள் ஓட்டுவது இருதயத்திற்கு நல்லது’’ என்றார்.

    ராஜஸ்தானில் இன்று 13 மக்களை தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. #Jaipurcardiologist #parliamentelection
    Next Story
    ×