search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 தொகுதி இடைத்தேர்தல்- மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு பொறுப்பாளர்கள் நியமனம்
    X

    4 தொகுதி இடைத்தேர்தல்- மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கும் 4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். #MakkalNeedhiMaiam
    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கும் 4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகிறார்கள்.

    ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளின் பொறுப்பாளராக செயற்குழு உறுப்பினர் சவுரிராஜனும் ஒட்டப்பிடாரம் தொகுதி பார்வையாளர்களாக ஆர்.தங்கவேலு, ஜான்சன் தங்கவேலு, ஜே.எபினேசர், கே.பிரபு ஆகியோரும் திருப்பரங்குன்றம் தொகுதி பார்வையாளர்களாக கே.குருவைய்யா, வி.அண்ணாமலை, வி.ஷாஜி, ஜே.விஜய்பாஸ்கர் ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.

    சூலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக செயற்குழு உறுப்பினர் சினேகனும் தேர்தல் பார்வையாளர்களாக ஆர்.மூகாம்பிகா, சிகே.அருண், ஆர்.சுதாகரன், எம்.பிரபு மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்காக தேர்தல் பொறுப்பாளராக ஏ.சந்திர சேகரனும் தேர்தல் பார்வையாளர்களாக தருமபுரி ராஜசேகரன், ஆர்.ஹரிஹரன், பூவை.ஏ.ஜெகதீஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.’

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam
    Next Story
    ×