என் மலர்
விருதுநகர்
- தொழிலாளி திடீரென இறந்தார்.
- முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யுள்ள அச்சம் தவிர்த்தான் கீழத்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி(வயது28). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது அவ ருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவி மாயமானார்.
- சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகேயுள்ள குன்னூர் ராஜீவ் காலனியை சேர்ந்த 17 வயதுடைய பெண் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் அரசு இறுதித்தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த மாணவி சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரை சேர்ந்தவர் கணேஷ்கு மார்(33). கடந்த சில மாதங்களாக இவருக்கும், இவரது மனை விக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த கணேஷ்குமார் திடீரென மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மின் கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் மீது தாக்குதல் நடந்தது.
- 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் அருணாசலம்(வயது23). இவருக்கும் தேராபட்டியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் கணவர் சம்பவத்தன்று அருணாச்ச லத்தை தனியாக அழைத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி தேராபட்டியை சேர்ந்த நாராயணன், கிருஷ்ணசாமி, அருண், ஆனந்த், வல்லரசு, தீபா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதி கொண்டனர்.
- 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
வெம்பக்கோட்டை ஆலங்குளத்தை அடுத்துள்ள உப்புப்பட்டியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி, அவரது கணவர் மருதுபாண்டி ஆகியோர் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த அஜய், குமரகுரு, விக்னேஸ்வரன் உள்பட 5 பேர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதில் மகாலட்சுமி, மருதுபாண்டி உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் விக்னேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மருதுபாண்டி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- கருந்திரிகள்-பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஜோதிபுரத்தை சேர்ந்த சதுரகிரி(வயது63), சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த பாண்டியராஜன்(59), நல்லையன்(59) ஆகியோர் அனுமதியின்றி கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 115 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி உசேன் காலனியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் அழகாபுரி ரோட்டில் அனுமதியின்றி தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்துள்ளார். இது தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.
- மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக உள்ளது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஆதித்தனேந்தல் கிராமத்தில் கடந்த 2009-ல் தி.மு.க. ஆட்சியின் போது ரூ.2.46 கோடி செலவில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இங்கு 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்டு 12 வருடங்களுக்கும் மேலான நிலையில் சமத்துவபுரத்தில் எந்தவொரு மராமத்து பணிகளும் மேற்கொள் ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சமத்துவபுரம் வீடுகள் புனரமைப்பு திட்டம் 2022 -23 நிலை-2 திட்டத்தின் கீழ் நரிக்குடி சமத்துவ புரத்தில் உள்ள வீடுகளை புனரமைக்க வேண்டி நரிக்குடி யூனியன் பி.டி.ஓ.,வாக இருந்த பிரின்ஸ் தலைமையிலான அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிப்புக்கு ஏற்றவாறு நிதிகளை வழங்கும் வகையில் கடந்த 1 வருட காலமாக ஆய்வுகள் மேற்கொண்டு அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் சமத்துவ புரத்தில் குடியிருந்து வரும் பயனாளிகளே தங்களது வீட்டிற்கான மராமத்து பணிகளை மேற்கொண்டு 2 மாத காலத்திற்குள் பணி களை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் பாதிப்புக்கு தகுந்தவாறு ரூ.35 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.51 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப்பட்ட தாக தெரிகிறது.
ஆனால் மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக இருப்ப தால் சேதமடைந்த வீடுகளில் வர்ணம் பூசுதல், சிறு சிறு பழுதுகள் பார்த்தல் போன்ற மராமத்து பணியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாகவும், கதவு, கழிவறை, வீட்டின் மேற்கூரையில் தட்டு ஓடு பதித்தல் போன்ற ஒவ்வொரு பணிக்கும் வீட்டின் உரிமையாளர்கள் செலவிட ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு நிர்ணயம் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் சிமெண்டு, மணல்,தட்டு ஓடுகளின் தற்போதைய விலைவாசி உயர்வு, வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் கூலி ஆகியவற்றை வைத்து கணக்கிட்டு பார்க்கும் போது தற்போது வழங்கப்பட்டுள்ள குறைவான தொகையால் மராமத்து பணிகளை இன்னும் தொடங்க முடியாத சூழ்நிலையே உருவாகி இருப்பதாக அந்த பகுதி பெண்கள் தெரிவித்தனர்.
- தொழிலாளி மர்மமாக இறந்தார்.
- லூர்துராஜ் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் கலாவதி. இவரது மகன் லூர்துராஜ்(வயது36). அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவரது முதல் மனைவி சில வருடங் களுக்கு முன்பு இறந்து விட்டார். இதை யடுத்து லூர்துராஜ், பிரியங்கா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் லூர்து ராஜ் மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படு கிறது. இதில் பிரியங்கா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று லூர்து ராஜ் அதே பகுதியில் உள்ள ரோட்டில் கை, கால்களில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து லூர்துராஜ் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்னல் தாக்கியதில் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தில் செயல்பட்டு வரும் சேவுகன் என்பவரது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் நேற்று மாலை மழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் மட்டும் மழை பெய்த நிலையில் இடி, மின்னல் அதிகமாக இருந்தது. மின்னல் தாக்கியதில் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளத்தில் செயல்பட்டு வரும் சேவுகன் என்பவரது பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் அனுப்பங்குளம் பகுதியில் இடி, மின்னல் அடித்தப்படி இருந்தது. அப்போது சேவுகனின் பட்டாசு ஆலையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்னல் தாக்கி தீ பிடித்தது.
இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
மேலும் பட்டாசு ஆலையின் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. பட்டாசு ஆலை பூட்டப்பட்டிருந்த நேரத்தில் மின்னல் தாக்கி தீ பிடித்ததால் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
- தாய்-மகள் ஒரே நேரத்தில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தால் முத்துராமலிகாபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது97). இவர் முதலில் ராமசாமி என்பவரை திருமணம் செய்துள்ளார். இதில் அன்னலட்சுமி (75) என்ற மகள் உள்ளார்.
ராமசாமி 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனலட்சுமி, முத்துசாமி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு மாரியப்பன், பாலகிருஷ்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அவரது வீட்டில் தனலட்சுமியும், அன்னலட்சுமியும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் சிவராமச்சந்திரன் என்பவர் சந்தேகம் அடைந்து மாரியப்பனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மாரியப்பனும், வேலுச்சாமி மகன் சக்தி குமார் என்பவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு தனலட்சுமியும், அன்னலட்சுமியும் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.
அவர்கள் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. எனவே அவர்கள் 2 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இது பற்றிய புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி, அன்னலட்சுமி ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தனலட்சுமி வயது முதிர்வு காரணமாகவும், அன்னலட்சுமி உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என்றும், அவர்கள் ராணுவத்தில் பணியாற்றி இறந்த தங்களது உறவினர் ராமசாமி என்பவரின் பென்ஷனை பெற்று வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் அருகில் வசிப்பவர்கள் அவர்கள் வெளியில் சென்றிருக்கலாம் என நினைத்துள்ளனர். இதனால் தாயும், மகளும் இறந்து 2 நாட்களுக்கு பின்னரே தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
தாய்-மகள் ஒரே நேரத்தில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசாரிடம் ரகளை செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- பெரியமுத்துவை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் திருச்சி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மல்லாங்கிணறு முடியனூரைச் சேர்ந்த பெரிய முத்து என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரை அவதூறாக பேச தொடங்கினார். மேலும் போலீசாரை வாகன சோதனை செய்யவிடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்கு பையை போலீசார் சோதனையிட முயன்றனர்.
அப்போது அந்த சாக்கு பையை கீழே போட்டுவிட்டு அவர் தப்பி ஓடி விட்டார். அந்த சாக்கு பையில் 27 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியமுத்துவை தேடி வருகின்றனர்.
- தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- மணிகண்டராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ராஜபாளையம் நகராட்சி பகுதிக்கானதாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்டப்பணியின் தொடக்க விழா சங்கரன்கோவிலில் நடந்தது.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா, மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தலைமை பொறியாளர் ரகுபதி, தனுஷ்குமார் எம்.பி.,
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் ராஜபாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடைத்திட்ட தொடக்க விழா மற்றும் ராஜபாளையம் ஒன்றிய கிராமப்பகுதிகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்றனர்.
இதில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- மாரிமுத்துவை கைது செய்தனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெயமணி (27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பாலமுருகனுடன் சேர்ந்து பெயிண்டிங் வேலை பார்ப்பவர் மாரிமுத்து (21). இவர் அடிக்கடி பாலமுருகன் வீட்டுக்கு வந்து குழந்தையை கொஞ்சுவது போல் நோட்டமிட்டு கொண்டு இருப்பாராம். இதனை ஜெயமணி கண்டித்துள்ளார். இந்த நிலையில் பாலமுருகன் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த மாரிமுத்து ஜெயமணியிடம் அத்துமீறி நடக்க முயன்றார். ஆனால் ஜெயமணி வீட்டின் வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார்.
இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் ஜெயமணிக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு மாரிமுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.






