என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டிரைவர்-கடை உரிமையாளர் தற்கொலை
- டிரைவர்-கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டனர்.
- சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது42). மேலகண்ட மங்கலத்தில் உள்ள மில்லில் டிரைவராக வேலை பார்த்தார். இவரது மனைவி கவிதா (37).
ராஜேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டார். இதனை கவிதா கண்டித்தார். இதில் மனமுடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த மின்விசிறி யில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடை உரிமையாளர்
சிவகாசி தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாந்தினி ரத்தினா (27). இவர்கள் 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை.
இந்த நிலையில் கடைக்கு வந்த பெண்ணிடம் மணி கண்டன் பேசிக் கொண்டி ருப்பதை பார்த்து மனைவி கண்டித்தார். இதையடுத்து இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்