என் மலர்
விருதுநகர்
- ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
- பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி செயலாளர் திலீபன்ராஜா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்று ஆண்டறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தி னர், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் சபரிநாதன் கலந்து கொண்டார்.
விழாவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற மாணவி செல்வகுமாரிக்கு கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ரூ. ஆயிரம் ரொக்க பரிசை வழங்கினார். தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி சீதாலட்சுமிக்கு கல்லூரியின் முன்னாள் தமிழ் பேராசிரியர் முருகேசபாண்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. வணிகவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கலாமணிக்கு கல்லூரியின் முன்னாள் நிர்வாகி ராஜசேகரன் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
ஆங்கில பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கவிஇந்திரா, கணிதப்பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி துர்காதேவி, வரலாற்று பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கனகராஜ், அறிவியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவி கள் தேவி, ஜனனி, மேனகா தேவி, கணிப்பொறி பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி காளீஸ்வரி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கலை இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பின்பு கல்லூரி அளவில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் சந்துருவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற மாணவி அட்சயாவுக்கும் மாணவன் கார்்த்திக்ராஜாவுக்கும் நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
கல்லூரியில் பணிபுரியும் நிர்வாக அலுவலர், முதல்வர் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கல்லூரி செயலாளர் நினைவுப்பரிசு வழங்கினார். முடிவில் பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவிகள் மாதேஸ்வரி, முத்துப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
- தகவல் அறிந்த ஜெயில் போலீஸ் சூப்பிரண்டு ரமா பிரபா மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
- வேனில் ஏறிய ஒரு கைதி திடீரென தலையால் கண்ணாடியில் மோதி ரகளை செய்தார்.
விருதுநகர்:
விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 10 பெண் கைதிகள் உள்பட 255 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
10 அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல்கள் இருப்பதால் ஜெயிலில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இவர்கள் சிறை அறையில் இருந்து வெளியே வரும்போது மற்ற அறையில் இருக்கும் கைதிகள் வெளி வருவதற்கு அனுமதியில்லை. பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கைதானவர்கள் தங்களது அன்றாட வேலைகளை முடித்து சிறை அறைக்கு சென்றபின் மற்ற கைதிகள் சிறை வளாகத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் குறிப்பிட்ட கைதிகளுக்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றில் பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் சிறையில் 5-வது அறையில் அடைக்கப்பட்டிருந்த வடிவேல் முருகன் என்ற கைதி பிளேடு வைத்திருப்பதாக ஜெயில் வார்டன்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த கைதியிடம் சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை. அதன் பின் கைதி வடிவேல் முருகன் நேற்று 3-வது அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு அவருடன் தங்கியிருந்த கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயில் வார்டன்களிடம் வாக்கு வாதம், ரகளையில் ஈடுபட்ட னர். மேலும் அவர்கள் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயில் போலீஸ் சூப்பிரண்டு ரமா பிரபா மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட 27 கைதிகளை மதுரை ஜெயிலுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை முதற்கட்டமாக 13 கைதிகள் மதுரை ஜெயிலுக்கு கொண்டு செல்ல போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். வேனில் ஏறிய ஒரு கைதி திடீரென தலையால் கண்ணாடியில் மோதி ரகளை செய்தார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதுடன் வேன் கண்ணாடியும் உடைந்தது.
அவருக்கு ஆதரவாக மற்ற கைதிகளும் கோஷமிட்டனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் 13 கைதிகள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக ஜெயிலில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஜெயிலில் கைதிகளின் ரகளை போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
- சில சமூக விரோதிகள் காட்டுக்குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
- சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான் உள்ளிட்ட அரிய வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சில சமூக விரோதிகள் காட்டுக் குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதன் காரணமாக வனத்துறையினரும் ராஜபாளையம் வனப்பகுதியில் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தி யுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வனச்சரக அலுவலர்கள் சக்தி பிரசாத், கதிர்காமன், வனவர் இள வரசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஆவாரம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
உடனே வனத்துறையினர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது அங்கிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. உடனே வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 6 பேர் தப்பிவிட, காளிராஜ் (வயது21) என்பவர் மட்டும் சிக்கினார். தொடர்ந்து வீட்டில் இருந்த 10 கிலோ மான் இறைச்சி, அரிவாள், கத்தி, எடை எந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காளிராஜை கைது செய்து விசாரித்தபோது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான வாழைக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் கும்பலாக சென்று மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
- நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் முள்ளிவேல் நகரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர்.
டி.கே.எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கோவில்பட்டி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார் அதன் பின் அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை இது குறித்து அவரது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் அடிக்கடி வெளியூரில் வசிக்கும் தனது மகன், மகள்களை பார்த்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியூரில் வசிக்கும் தனது பிள்ளைகளை பார்த்து வருவதாக கூறிச் சென்ற மணி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணியின் மனைவி பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சரை கலெக்டர் அழைத்து செல்லாததால் தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்தனர்.
- அமைச்சர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர்
தமிழக அரசின் நிலமீட்பு நடவடிக்கை தொடர்பாக பேட்டி அளிப்பதற்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 2 நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் ஜெயசீலன் அலுவலகத்தில் இல்லை. இந்த நிலையில் அமைச்சர் மட்டும் தனியாக பேட்டி அளித்து சென்றார்.
கலெக்டர் ஜெயசீலன் நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் ஆய்வு பணிக்காக சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்தார். கலெக்டர் அலுவலகத்தில் கூட்டங்கள் நடக்கும்போது அமைச்சர் பங்கேற்றால், கலெக்டர் அவரை வரவேற்று அழைத்து செல்வது மரபு.
அதன்படி அமைச்சர் கலெக்டர் வருகைகாக காரில் சிறிது நேரம் காத்திருந்தார். ஆனால் கலெக்டர் வராததால் அதிருப்தி அடைந்த அமைச்சர் விருந்தினர் மாளிகைக்கு சென்று விட்டார். அமைச்சரை கலெக்டர் அங்கு சென்று சந்தித்தார். அப்போது, ஏன் அரசு நடைமுறைகளை மாற்றுகிறீர்கள்? என்று கலெக்டரிடம் அமைச்சர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் அமைச்சரை கூட்டத்திற்கு கலெக்டர் அழைத்து சென்றார். அங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. மூத்த அமைச்சரை கலெக்டர் வந்து கூட்டத்திற்கு அழைத்து செல்லாததால் கூட்டத்தில் பங்கேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- விபத்தில் சிக்கிய வாலிபர் பலியானார்.
- திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது.
விருதுநகர்
சிவகாசி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் தேசிங்கு ராஜா (வயது19). இவரது சகோதரர் பார்த்தசாரதி (22). இவர்கள் இருவரும் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் இருவரும் காயம் அடைந்தனர். பின்னர் வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் தேசிங்கு ராஜாவுக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் செல்லும் வழியில் தேசிங்குராஜா இறந்தார்.
இதுகுறித்து பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தை குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேசினார்.
- குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி களிலும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், பொதுமக்க ளுக்கு குடிநீர் வழங்கும் பணி தான் அரசின் முதன்மையான பணியாகும். ஆகவே அதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும். அதற்கு தேவை யான நிதி பெற்று தரப்படும்.மேலும் விருதுநகர் மாவட் டம் குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றார்.
தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ராஜபாளையம் நகராட்சி யில் 1 முதல் 21 வார்டு பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும் 22 முதல் 42 வார்டு பகுதி களில் 10 முதல் 15 நாட்க ளுக்கு ஒரு முறையும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனை சரி செய்து 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் கேட்கின்றனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட வேண்டும். பேரூராட்சி மற்றும் ஊராட்சி கிராம பகுதிகளிலும் முறையாக குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய இதுபோல் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர், கண்டிப்பாக கிராம பகுதிகளிலும் முறை யாக குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தார்.
கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சேர்மன்கள், கமிஷனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு பஸ் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போக்குவரத்து அதிகாரியிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு செல்லும் அரசு பஸ் வன்னியம்பட்டி, பெருமாள் தேவன்பட்டி, அட்டைமில், கீழராஜகுலராமன், வடகரை, கொருக்காம்பட்டி வழியாக தினசரி மகளிர் கட்டணமில்லா பஸ்சாக இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள கிராமப்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்- கலிங்கபட்டி பஸ் சரியாக இயக்கப்படாதது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழகத்தில் சிலர் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்கு காலை 10.30 மணிக்கு அந்த பஸ் புறப்பட்டது. பஸ்சில் கொருக்கும்பட்டியில் கல்லூரி மாணவி ஒருவர் ஏறி உள்ளார்.
அப்போது அவரிடம் நடத்துநர் தங்கவேலு, பஸ் சரியாக வர வில்லை என உங்கள் ஊரில் இருந்து புகார் அளித்துள்ள தாக கூறி மாணவியை அவதூறாக பேசி உள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், ரகுராமன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்ரீவில்லி புத்தூர் போக்குவரத்து கழகத்திற்கு வந்த ரகுராமன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட கண்டக்டர், மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 15 நாட்களில் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பணிமனை மேலாளர் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
- ஆண்டாள் கோவிலில் சுக்கிரவார ஊஞ்சல் சேவை நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
108 வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். இங்கு ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம், பங்குனி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். மேலும் ஆண்டு முழுவதும் பல்வேறு வைபவங்கள் நடைபெறும். அதில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை பிரசித்தி பெற்றது.
அதன்படி வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சுக்கிர வார ஊஞ்சல் சேவை நடந்தது. சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்- ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய ளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள்கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.
- ஆட்டோ டிரைவர்களிடம் கேட்ட பவித்ரா ஷியாம் குறைகளை கேட்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு செயல்படும் உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.
பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம், கட்டண கழிப்பறைகள், பயணிகள் அமரும் இருக்கைகள் ஆகியவற்றை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ஆட்டோ டிரைவர்களிடம் கேட்ட பவித்ரா ஷியாம் குறைகளை கேட்டார்.
- நூதனமாக பேசி 3 பவுன் நகையை திருடியவர் கைது.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
சிவகாசி
சிவகாசி நேரு காலனி சேர்ந்தவர் ஜோதி (வயது 38). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மதுரையில் வசிக்கும் உங்கள் சகோதரரின் நண்பர் என ஜோதியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனை நம்பிய ஜோதி அந்த நபரை வீட்டிற்குள் அழைத்து பேசினார். அப்போது அந்த நபர் தான் விருதுநகரில் உள்ள ரேசன் கடையில் வேலை பார்ப்பதாகவும், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தேவைப்பட்டால் இலவசமாக வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து ஜோதி அந்த நபருக்காக குளிர்பானம் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் வீட்டின் பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருடி கொண்டு தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- நரிக்குடி ஒன்றியம் சார்பில் கோடைகால சுற்றுலாவுக்கு புறப்பட்டனர்.
- ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவ லர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் அகத்தாகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகவள்ளி சீனிவாசன் தலைைமயில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு நர்கள், தூய்மைப்பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், நூலகர் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர்களை ஒருங்கிணைத்து நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அகத்தாகுளம் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கோடைகால சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். சுற்றுலா வாகனத்தை நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி (கி.ஊ) வழியனுப்பி வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவ லர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






