search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sathuragiri sundara mahalingam temple"

    • எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
    • மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    நாளை (15-ந் தேதி) பிரதோஷம், 17-ந் தேதி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

    • எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
    • மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 15-ந் தேதி பிரதோஷம், 17-ந் தேதி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயது உட்பட்ட வர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

    சித்திரை மாத அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வருகிற 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் வருகிற 2-ந் தேதி பிரதோஷமும், 4-ந் தேதி அமாவாசையும் வருவதை முன்னிட்டு 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கோடை விடுமுறையால், 4 நாட்களுக்கு பக்தர்கள் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால், தாணிப்பாறையில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழியில் குடிக்க தண்ணீர் இல்லை. இதனால் கோவிலுக்கு குழந்தையுடன் வரும் பெண்கள், முதியோர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    இந்தநிலையில் கோவில் பகுதியில் குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வருகிற பவுர்ணமியையொட்டி சதுரகிரி மகாலிங்கசாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட சாப்டூரில் தென் மாவட்ட அளவில் பிரசித்திபெற்ற சதுரகிரி மகாலிங்க சாமி கோவில் உள்ளது. மலை மீது உள்ள இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்கள் சாமி கும்பிட செல்வார்கள். பக்தர்கள் மலையேறுவதற்கு தாணிப்பாறை வனத்துறை கேட்டுகள் 4 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டு அனுமதி அளிக்கப்படும். மேலும் காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை ஏறவும், இறங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படும்.

    இந்தநிலையில் வருகிற 22-ந்தேதி அன்று பவுர்ணமி வருகிறது. அதற்காக இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் சாமி கும்பிட செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வனத் துறையினர் கூறும்போது, தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் சதுரகிரி மலை பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மழை பெய்யாமல் இருந்தால் மட்டுமே மலை மீது ஏறவும், இறங்கவும் அனுமதி அளிக்கப்படும். மேலும் நிலைமைக்கு ஏற்றவாறு அனுமதிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும். அதுவும் பக்தர்கள் நலன்கருதி முடிவு எடுக்கப்படும். அதன்படி வருகிற பவுர்ணமியையொட்டி பக்தர்கள் சாமி கும்பிட செல்வதற்காக 4 நாட்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் மழை பெய்தால் அனுமதி அளிக்கப்படமாட்டாது. எனவே கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வனத் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.
    ×