என் மலர்
விருதுநகர்
- குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பேரணி-கைெயழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- மனிதசங்கிலி நடந்தது.
விருதுநகர்
விருதுநகரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். பின்னர் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.
தொடர்ந்து விழிப்பு ணர்வு பிரசார வாகனத்தை யும் கலெக்டர் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு, மனித சங்கிலி போன்றவற்றில் கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழி லாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) மைவிழிச்செ ல்வி, விருதுநகர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வேல்முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 11 இடங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மனிதசங்கிலி நடந்தது.
இதேபோல் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், சாத்தூர், அருப்புக் கோட்டையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம் நடந்தது.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தெரிவித்து உள்ளார்.
- புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
- புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாமிநாதபுரத்தை சேர்ந்த மிக்கேல்ராஜ்(41). இவர் ஆலங்குளம் முக்கு ரோட்டில் பெட்டி கடை வைத்துள்ளார். ரோந்து போலீசார் இவரது கடையில் சோதனையிட்டபோது 2½ கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது.
அதனை பறிமுதல் செய்த ஆலங்குளம் போலீசார் மிக்கேல்ராஜை கைது செய்தனர். சிவகாசி மாரிமுத்து தெருவை சேர்ந்தவர் சிவா. இவர் அந்த பகுதியில் உள்ள தியேட்டரின் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார்.
போலீசார் ரோந்து சென்று சோதனையிட்டபோது 150 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் நிறுவனத்தில் ரூ.24 லட்சம் மோசடி செய்த ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பாலிதீன் பைகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் பேராளி ேராட்டில் பாலிதீன் பைகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் அலுவலராக சாஸ்திரி நகரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் உள்ளார். இவர் அங்கு 7 வருடங்களாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்காமலும், அனுமதி பெறாமலும் பேப்பர் ரோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தஞ்சாவூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து வாங்கியுள்ளார். பின்னர் தனது மகன் கவுதமன் பெயரில் உள்ள நிறுவனத்தின் பெயரில் ேபாலி ரசீதுகளை தயார் செய்து ரூ.24 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் கணக்காளராக பணிபுரியும் பாலாஜி நகரை சேர்ந்த செல்வ ராஜன்(வயது72) விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன், கவுதமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- நரிக்குடி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடத்தை வீடுபோல் மூதாட்டி பயன்படுத்துகிறார்.
- பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் நிழற்கூடம் அருகே பிளாஸ்டிக் பாட்டில்கள் மலைபோல் குவிந்து கிடக்கும் காட்சி.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் பயணி கள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து பஸ் பயணிகள் மதுரை, ராமேசுவரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளுக்கு செல்வது வழக்கம். இந்த நிழற்கூடத்தை மூதாட்டி ஒருவர் தனது வீடு போல் ஆக்கிரமித்து பயன் படுத்தி வருகிறார்.
அவர் இந்த நிழற்கூடத்தில் பஸ் பயணிகள் யாரும் அமர விடாமலும், அவதூறாக பேசி யும் வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மூதாட்டி நரிக் குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பஸ் நிலையம் அருகிலேயே மலை போல் குவித்து வைத்திருப்ப தால் அதிலிருந்து வரும் துர்நாற்றங்களால் நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன், பயணிகளும் முகம் சுழித்து வருகின்றனர்.
பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளும் நிழற்குடைக்குள் அமர விரும்பாமல் மூக்கை பிடித்துக்கொண்டு மணிக் கணக்கில் நிழற்குடைக்கு வெளியி லேயே வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து நரிக்குடி ஊராட்சி நிர்வாகமும், சுகா தாரத்துறை அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிக ளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட் களை ஒழிக்க பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் நரிக்குடி பஸ் நிலையத்தில் பொது இடத்தில் பிளாஸ்டிக் பொருட் களை குவித்து வைத்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வரும் மூதாட்டியை பஸ் நிலை யத்தில் இருந்து அகற்றுவதுடன், அவரது உறவினர்கள் அல்லது காப்பகத்தில் சேர்க்க ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நரிக்குடி பஸ் நிலையத்தை பொதுமக்கள் மற்றும் பயணிகளின் முழு மையான பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வேர்ல்டு விஷன் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு பேரணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
ராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான சுமதி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இதில் வக்கீல்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை வாலிபரின் தொல்லை குறித்து மாணவி தனது தந்தையுடன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் 2 பேரும் தங்களது அந்தரங்க தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுடைய புகைப்படங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அதில் பேசிய நபரும், இன்ஸ்டாகிராம் முகப்பில் இருந்த நபரின் புகைப்படமும் வெவ்வேறாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அது குறித்து கேட்டபோது அழகான தோற்றத்தில் காட்சியளிக்கும் நபரை சமூக வலைதளத்தில் முகப்பில் வைத்தால் இளம்பெண்களை மயக்கலாம் என அந்த வாலிபர் கூறியதாக தெரிகிறது.
அந்த வாலிபரின் இந்த நடவடிக்கை மாணவிக்கு பிடிக்கவில்லை. எனவே தன்னுடன் பழகுவதை விட்டுவிடுமாறு மாணவி கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர், மாணவிக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் மற்றும் செயல்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். மேலும் அவர் சென்னை வாலிபரின் தொல்லை குறித்து தனது தந்தையுடன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சிவா (வயது19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
- விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது.
- 10 பெரிய அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற 10 பெண் கைதிகள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
10 பெரிய அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கொலை மிரட்டல் இருப்பதால் ஜெயிலில் பாதுகாப்பு மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதற்கு மற்ற கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளேடு வைத்திருந்ததாக சந்தேகம் ஏற்பட்ட ஒரு கைதி வேறொரு அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு மற்ற கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து வார்டன்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தனர். அப்போது சிறையில் இருந்த பொருட்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த உயர் போலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கைதிகளை சமரசம் செய்தனர். மேலும் ரகளை செய்த கைதிகள் மதுரை மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர். இதற்காக கைதிகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட போது ஒரு கைதி தலையால் வேன் கண்ணாடியில் மோதினார். இதில் கண்ணாடி உடைந்து அந்த நபருக்கும் காயம் ஏற்பட்டது.
மேற்கண்ட சம்பவங்களால் விருதுநகர் மாவட்ட ஜெயில் போர்க்களமானது.இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஜெயில் போலீஸ் சூப்பி ரண்டு ரமா பிரபா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் ஜெயிலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், 3 பேரையும் தாக்கியதாகவும் வடிவேல் முருகன், கண்ணன், மலைக்கண்ணன், முத்துப்பாண்டி, முத்தழகு, முத்துகிருஷ்ணன், ராமர், பாலாஜி, பார்த்தி, ஜோதி மணி, செந்தில்குமார், பால குமார், கார்த்திக் பாண்டி உள்பட 23 கைதிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கனகராஜ் தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- குருவம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். டாக்டரான இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் வீட்டில் உள்ள ஒரு அறையின் அலமாரியில் சீட்டு பணம் ரூ.6 லட்சத்தை வைத்து பூட்டி, அதன் சாவியை மேலே வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பணத்தை எடுக்க அலமாரியை திறந்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.6லட்சம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் கனகராஜ் தனது குடும்பத்தினர் மற்றும் கிளினிக்கில் வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்தார்.
ஆனால் யாரும் பணத்தை எடுக்கவில்லை என்று கூறினர். இதையடுத்து டாக்டர் கனகராஜ் தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் கனகராஜ் தனது புகாரில், தன்னுடைய வீட்டில் வேலைக்கார பெண்ணாக பணிபுரியும் அழகாபுரி தொட்டிய பட்டிைய சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி குருவம்மாள் (வயது60) பணத்தை திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் குருவம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
- மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 15-ந் தேதி பிரதோஷம், 17-ந் தேதி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
10 வயது உட்பட்ட வர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.
- சமத்துவபுரம் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
- அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ஆதித்தனேந்தல் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவ புரம் குடியிருப்பு உள்ளது. இங்கு 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட வீடுகள் மராமத்து செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிறது. எனவே சமத்துவ புரம் வீடுகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஆதித்த னேந்தல் சமத்துவபுரத்தில் வீடுகளை புனரமைக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படிய அதிகாரிகளும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து வீடுகளை பராமரிக்க பாதிப்புகளுக்கு ஏற்றவாறு ரூ.35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.51 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நிதி பரா மரிப்பு பணிக்கு போதாது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என சமத்துவ புரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை கண்டித்தும், கூடுதல் பராமரிப்பு நிதி ஒதுக்க கோரியும் இன்று காலை நரிக்குடி-ராமேசு வரம் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட் டோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் நிதி விவகாரம் ெதாடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
- மாட்டை கொன்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் குல்லூர் சந்தையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ராமுத்தாயி. கருத்து வேறுபாடு காரண மாக இவர் தனது கணவர் மாரிகண்ணனை பிரிந்து வந்து விட்டார்.
சம்பவத்த ன்று மாமனார் வீட்டுக்கு வந்த மாரிகண்ணன் வீட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை கத்தியால் வெட்டி கொன்றார். இதற்கு உடந்தையாக அவரது நண்பர் பாலமுருகன் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரவி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- 9 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகே பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி ராஜபாளையம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி தலைமை வகித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் சோலையப்பன், மாவட்ட பொது செயலாளர் போத்திராஜ், பட்டியலின மாவட்ட துணை தலைவர் கதிரேசன் மற்றும் முத்துக்குமார். செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஏராளமான நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய அரசு 9 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.






