search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி-வியாபாரி உள்பட 4 பேர் மாயம்
    X

    கல்லூரி மாணவி-வியாபாரி உள்பட 4 பேர் மாயம்

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி-வியாபாரி உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காமராஜர் நகரை சேர்ந்தர் லட்சுமி(வயது40). இவரது மகள் முனீஸ்வரி(20). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே செல்போன் டவர் அமைத்தபோது அதில் வேலை செய்த ஒருவருடன் முனீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வியாபாரி

    மல்லாங்கிணறு அருகே உள்ள கண்டியநேந்தல் பகுதியை சேர்ந்தவர் அஜித்(21). காய்கறி வியா பாரம் செய்து வருகிறார்.வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து அஜித்தின் தாய் மாரி யம்மாள் மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி

    ஏழாயிரம்பண்ணை தேவர் நகரை சேர்ந்தவர் மோகன்(56). இவரது முதல் மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது 4 மாத பெண் குழந்தையை அவர் தத்தெடுத்து வளர்த்தார்.அதன்பின்னர் பாண்டிசெல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. வளர்ப்பு மகள் தற்போது 10-ம் வகுப்பு முடித்துள்ளார். பிளஸ்-1 சேர்ப்பதற்காக சாத்தூரில் உள்ள பள்ளிக்கு அழைத்து செல்வதாக அவரிடம் மோகன் கூறியுள்ளார்.

    அதிகாலையில் பார்த்தபோது மகளை காணவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்ைல. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஏழாயிரம்பண்ணை போலீசில் மோகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னறர்.

    மாணவன்

    சாத்தூர் சத்திரப் பட்டியை சேர்ந்தவர் பொன்னுகிளி. இவரது மகன் சாத்தூர் பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறார். குருலிங்காபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு திரு விழாவுக்காக சென்றார். அவரது கையில் ரூ.1000 பணம் கொடுத்து பாட்டி ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்ை. இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் பொன்னுகிளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×