search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிறுவனத்தில் ரூ.24 லட்சம் மோசடி
    X

    தனியார் நிறுவனத்தில் ரூ.24 லட்சம் மோசடி

    • தனியார் நிறுவனத்தில் ரூ.24 லட்சம் மோசடி செய்த ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • பாலிதீன் பைகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் பேராளி ேராட்டில் பாலிதீன் பைகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் அலுவலராக சாஸ்திரி நகரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் உள்ளார். இவர் அங்கு 7 வருடங்களாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்காமலும், அனுமதி பெறாமலும் பேப்பர் ரோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தஞ்சாவூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து வாங்கியுள்ளார். பின்னர் தனது மகன் கவுதமன் பெயரில் உள்ள நிறுவனத்தின் பெயரில் ேபாலி ரசீதுகளை தயார் செய்து ரூ.24 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் கணக்காளராக பணிபுரியும் பாலாஜி நகரை சேர்ந்த செல்வ ராஜன்(வயது72) விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன், கவுதமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×