என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் தகவல் தொழில்நுட்ப அணியின் களப்பணிகள் ஒருங்கிணைப்பாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தயா. இளந்திரையன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வளவனூர் ப. அன்பரசு, துணை அமைப்பாளர்கள் சாம்பசிவம், கிருஷ்ணராஜ், பாலாஜி, சசி ரேகா பிரபு, தொகுதி நிர்வாகிகள் தேவா, குரு ராமலிங்கம், மகாலட்சுமி செந்தில், ரகுபதி, கதிரவன், நாராய ணமூர்த்தி, குமரவேல், மூகாம்பிகை நாராயணன், புளிச்சப்பள்ளம் ராதிகா சித்தானந்தன், கோட்டக்குப்பம் ஜாகிர், திருக்கோயிலூர் தொகுதி விக்னேஷ், ஆசைத்தம்பி பரிமளம், திருநாவுக்கரசு, மேகநாதன், நவீன் குமார், விக்னேஷ், அகமது ஷெரிப், சுப ஸ்ரீ, செல்வகுமார், தேவன், மோகன், ராஜேஷ், சசிகலா கபிரியேல், அபுபக்கர், கோமதி பாஸ்கர், சந்திரசேகர், செல்வகுமார், அருண், வள்ளி ராஜேஷ், முத்தமிழ், இராமு, சுப்புலட்சுமி மணிகண்டன், அரவிந்தன், கபிலன், புஷ்பராஜ், மனோஜ் குமார், மணிகண்டன், பூவராகவன், சரவணன், யுவராஜ், சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து க்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் வரவேற்றார். நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலா ளரும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் இஸ்ரோ திட்ட இயக்கு னராக செயலாற்றி இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டி ற்கும் பெருமை சேர்த்த நமது விழுப்புரம் மாவட்டம் வீரமுத்து வேலுக்கு பாராட்டு களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தும், உலக செஸ் விளையாட்டு போட்டியில் 2-வது இடத்தில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் வயது வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து க்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செந்தமி ழ்ச்செல்வன், மாசிலாமணி, சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம், மாநில தீர்மானகுழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பொதக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, மணிமாறன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், செஞ்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    • டிப்பர் லாரிகள் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் எதிர்புறம் வந்து செல்ல தொடங்கின.
    • டிப்பர் லாரிகள் அவர்களுக்குறிய சாலையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே கொந்தாமூர் பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு கருங்கல் ஜல்லி, கிரஷ்ஷர் பவுடர் போன்றவைகளை ஏற்றிச் செல்ல டிப்பர் லாரிகள் ஏராளமாக வந்து செல்லும். அவ்வாறு வரும் டிப்பர் லாரிகள் சாலை வழியாக சென்றால் பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதாலும், அதிக நேரம் ஆகும் என்பதாலும், ஊருக்குள் உள்ள குறுக்கு வழிகளில் செல்லும். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்ததால், அப்பகுதி மக்கள் அந்த வழியில் டிப்பர் லாரிகள் செல்ல முடியாதவாறு மூடிவிட்டனர். இதை யடுத்து டிப்பர் லாரிகள் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் எதிர்புறம் வந்து செல்ல தொடங்கின. திண்டிவனத்தை சேர்ந்த வாலிபர் புதுவைக்கு சென்று நேற்று இரவு திண்டிவனம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இரவு 9 மணியளவில் கொந்தாமூர் மேம்பாலத்தின் கீழுள்ள சர்வீஸ் ரோட்டில் வந்த போது, எதிரில் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வாலிபரை அப்பகுதி மக்கள் மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகவல் அறிந்த கொந்தாமூர் பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் புதுவை - திண்டிவனம் சாலையில் திரண்டனர். கருங்கல் குவாரிக்கு செல்லும் லாரிகள், அதற்குரிய சாலையில் செல்ல வேண்டும். குறுக்கு வழியிலும், சாலையின் எதிர்புறத்தில் வருவதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் டிப்பர் லாரிகள் அவர்களுக்குறிய சாலை யில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை யேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலினால் புதுவை - திண்டிவனம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • 25,000 பனை விதைகள் ஏரி, குளங்கள் மற்றும் புறம்போக்கு பகுதிகளில் நடப்பட்டது.
    • 10,000 எண்ணிக்கையில் மேற்படி மர கன்றுகள் நடப்பட்டது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தில் பனை மர விதைகள் நடுப்பணி நடைபெற்றது. இப்பணியயினை திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தாய்த் திருநாட்டின் சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்வுகளைத் தொடர்ந்து என் மண் - எனது தேசம் என்ற சிறப்பு விழிப்புணர்வு திட்ட செயலாக்கத்தின் அடிப்படையில் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றி யத்தைச் சேர்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுமார் 25,000 பனை விதைகள் ஏரி, குளங்கள் மற்றும் புறம்போக்கு பகுதிகளில் நடப்பட்டது.

    மேலும் பலன் தரும் மரக்கன்றுகள் (நாவல், இலுப்பை, புங்கண், மகாகனி, நெல்லி, வேம்பு, புளியங்கன்று, தென்னங் கன்று மேலும் பல வகை பலன் தரும் மரக்கன்றுகள்) சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாத்து மழை வளத்தை பெருக்கும் நோக்கத்துடனும் 10,000 எண்ணிக்கையில் மேற்படி மர கன்றுகள் நடப்பட்டது. இதில் தி.மு.க. நிர்வாகி நடன சிகாமணி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா வீரன், துணைத் தலைவர் பவானி மகாலிங்கம் மற்றும் வார்டு உறுப்பி னர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த டோல்கேட் எத்தனை ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது.
    • டோல்கேட்டில் சட்டமன்ற அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரையை ஏற்று இதனை நடைமுறை படுத்துகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை அரசு உறுதி மொழி குழு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். வீடூர் அணையை பார்வையிட சென்ற குழு வழியில் விக்கிரவாண்டி டோல் கேட்டை கடந்த போது அங்கு குழுவின் தலைவர் வேல்முருகன், டோல்கேட் அதிகாரிகளுடன் நடை முறைகள் குறித்து வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது: 

    விக்கிரவாண்டி டோல்கேட்டில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ், கவர்னர், அரசு அதிகாரிகள், அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் மட்டும் செல்ல தனியாக ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள 54 டோல்கேட்டுகளில் 25-க்கும் மேற்பட்ட டோல்கேட்டில் சட்டமன்ற அரசு உறுதி மொழிக்குழு பரிந்துரையை ஏற்று இதனை நடைமுறை படுத்துகின்றனர்.

    ஆனால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் நடைமுறை படுத்துவது இல்லை. இந்த டோல்கேட் எத்தனை ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துள்ளனரா என்றும், இது வரை டோல்கேட் மூலம் எத்தனை மரக்கன்று கள் நட்டுள்ளனர் போன்ற விபரங்கள் வெளி யிட வேண்டும். இதனை பின்பற்றாத டோல்கேட்டு கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு இக்குழு பரிந்துரை செய்ய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது சட்டப்பேரவை செய லாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் பழனி, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், கோட்டாட்சியர், பிரவீனாகுமாரி, குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • தடியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த னர்.
    • சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த சி.மெய்யூர் பிள்ளை யார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெமினி (வயது 33). செங்கல் சூளை தொழிலாளி. இவரது வீட்டின் எதிரில் 3 சென்ட் இடம் உள்ளது. இவரது பெரியப்பா கண்ணன் (60), இந்த 3 சென்ட் இடத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதை யடுத்து கண்ணன், அவரது மனைவி லட்சுமி (50), மகன் அய்யப்பன் (27) ஆகியோர் சேர்ந்து ஜெமினி யை தடியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த னர். தலையில் பலத்த காயமடைந்த ஜெமினி, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்தவ மனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜெமினியை தாக்கிய கண்ணன், லட்சுமி, அய்யப்பன் ஆகியோ ரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது.
    • உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம்

    கடலூர்:

    பனை மேம்பாட்டு இயக்க திட்டம் 2023-–24 ஆம் ஆண்டின் கீழ் விக்கிரவாண்டி பகுதிகளில் 2300 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது. அதன்படி கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரியில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரடியாக விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம் என்று உதவி இயக்குனர் ஜெய்சன் கூறினார்.

    • யாரும் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு மர்ம கும்பல் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது.
    • அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட காவல் நிலையங்களான ஒலக்கூர், வெள்ளிமேடு பேட்டை, ரோஷனை போன்ற காவல் நிலையங்கள் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் யாரும் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு மர்ம கும்பல் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது. இந்த நிலையில் போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று ஒலக்கூர் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனதராசன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் 2 பேரும் பல்வேறு பகுதிகளில் நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதில் ஒருவர் வானூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 23), வானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் இவர்கள் 2 பேரும் யாரும் இல்லாத வீட்டை நோட்டமிட்டு பணம் நகையை கொள்ளை அடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் போலீசார் இவர்களிடம் இருந்த 7 பவுன் தங்க நகை, செல்போன், லேப்டாப் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்து முருகனை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை விழுப்புரம் மாவட்ட சிறுவர் சீர்திருத்த சிறார் இல்லத்தில் சேர்த்தனர்.

    • நீரில் விஷம் கலக்கப்பட்டதா ? போலீசார் விசாரணை
    • ஏரியில் நீர் குறைவாக இருந்ததால் வெப்பம் தங்காமல் மீன்கள் இறந்ததா,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஜூன் மாதம் மழவராயநல்லூர், பள்ளத் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 75) என்பவர் மீன் வளர்ப்பதற்கு குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வந்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரியில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் நேற்று காலை 7 மணியளவில் ஏரிக்கு சென்று பார்த்தார். அப்போது ஏரியில் ஏராளமான ஜிலேபி, கட்லா மற்றும் இதர கெண்டை வகை என சுமார் 1.5 டன் மதிப்பிலான மீன்கள் நீரில் இறந்தும், கரை ஒதுங்கியும் கிடந்தது. வேறுசில வகை மீன்கள் நல்ல நிலையில் ஏரியில் உள்ளது. இது சம்பந்தமாக ஏரியின் குத்தகைதாரர் நாராயணசாமி திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யாரேனும் நீரில் விஷம் கலந்தனரா, அல்லது ஏரியில் நீர் குறைவாக இருந்ததால் வெப்பம் தங்காமல் மீன்கள் இறந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். ஏரியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதற்காக தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மோதி தூக்கி வீசியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
    • பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராமன் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 63 ) விவசாய கூலி தொழிலாளி இவர் நேற்று சைக்கிளில் அரசூர் சென்று விட்டு மீண்டும் நேற்று மாலை மாமந்தூர் வருவதற்காக. அரசூர் வங்கி எதிரே சைக்கிளை தள்ளி கொண்டு ரோட்டை கடக்கும் போது திருச்சியில் இருந்து சென்னை சென்ற கார் மோதி தூக்கி வீசிதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை திருவெண்ணை நல்லூர் போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராமன் இறந்து விட்டதாக தெரி வித்தனர். இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை செய்து வருகிறார்

    • மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டது.
    • கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40) கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தனது வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் செயலிழந்து மயக்க நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு கல்லூரி டீன் கீதாஞ்சலி தலைமையில் எலும்பியல் துறை தலைவர் அறிவழகன் ,டாக்டர்கள் அஞ்சன் ராமச்சந்திரநாத், விக்ரம், பொன்னப்பன், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், தோசிப் சுப்பிரமணியம், மணிகண்டன் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கழுத்து எலும்பில் பிளேட் பொரு த்தினர். இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டதன் பேரில் தற்போது கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். தற்பொழுது அவர் முழுமையாக குணமாகி எவ்வித துணையும் இன்றி தனியாக நடக்கின்றார்.

    இது போன்ற மருத்துவ சிகிச்சையை வெளியே தனியார் மருத்து வமனையில் செய்தால் ரூபாய் 3.5 லட்சம் செலவாகும்.மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்தார். உண்டு உைறவிட டாக்டர் ரவிக்குமார், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன், நிர்வாக அலுவலர் சிங்காரம் மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் உடன் இருந்தனர்.

    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இவர்களுக்கு 3 வருடம் முன்பு திருமணம் நடந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 3 வருடம் முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1 வயது குழந்தை உள்ளான். இந்நிலையில் விவசாய கூலித்தொழிலாளியான அருள் 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த ஜீவா அந்த துக்கத்தில் இருந்து விடுபடாமல் நாள்தோறும் சோகத்தில் இருந்து வந்தார். இதனால் சரியாக சாப்பிடாமலும், எந்த வேலையையும் சரிவர செய்ய முடியாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கணவர் இறந்த துக்கம் அதிகமாகவே நேற்று மனஉளைச்சலில் இருந்த ஜீவா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்தார். கத்தியால் கழுத்தில் அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்தார். 

    இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கம் வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜீவாவை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கிளியனூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி கத்தியால் கழுத்தை அறுத்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×