search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பிய தந்தை விபத்தில் பலி
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பிய தந்தை விபத்தில் பலி

    • உடன் சென்ற நண்பரும் உயிரிழப்பு
    • கார்த்திக்ராஜா மணிகண்டன் அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு சென்றார்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கலை சேர்ந்தவர் குமார் மகன் கார்த்திக்ராஜா (வயது 28). தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவிக்கு பண்ருட்டியில் நேற்று குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக கார்த்திக்ராஜா அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (24) என்ற நண்பரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு சென்றார். குழந்தையை பார்த்து விட்டு இன்று பகல் 11 மணியளவில் பண்ருட்டியில் இருந்து பரிக்கலுக்கு புறப்பட்டனர். அப்போது திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள அரசூர் பாலம் அருகே காலை 11.30 மணிக்கு வந்த போது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி எதிரில் வந்த டாடா ஏஸ் வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக்ராஜா, மணிகண்டன் ஆகியோர் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

    தகவல் அறிந்த திருவெண்ணை நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பிய தந்தை, அவரது நண்பர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் பரிக்கல் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×