என் மலர்
விழுப்புரம்
- காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர்.
- சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் குடுமியான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். தொழிலாளி இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது முதல் மகள் ஜெயலட்சுமி (வயது 22) பி.எஸ்.சி பட்டதாரி. நேற்று காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் பிணமாக தொங்கிய ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரத்திற்கு சென்று விட்டு மீண்டும் செரலாபட்டிற்கு சென்றார்.
- மேல்சிகிச்சைக்கு புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செரலாபட்டு பகுதியை சேர்ந்தவர் பாவாடை (வயது 50). தொழிலாளி இவர் கடந்த 28-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்திற்கு சென்று விட்டு மீண்டும் செரலாபட்டிற்கு சென்றார். அப்போது சென்னை-திருச்சி சாலை இருவேல்பட்டு அருகே வழியாக மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த தனியார் வாகனம் மோதி பலத்த படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பாவாடையை திருவெண்ணை நல்லூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பாவாடை உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தோஷம் நீக்க பரிகாரங்கள் செய்வது வழக்கம்.
- தனக்கு திருமணம் ஆவதற்கு பரிகார பூஜை செய்ய கேட்டுக் கொண்டார்.
விழுப்புரம்:
திருவண்ணாமலை மாவட்டம் அடராப்பட்டில் குறி சொல்லும் மையம் நடத்தி வந்தவர் சரவணன் (வயது 42 )சாமியார். தாடியும் நீண்ட தலைமுடியும் வைத்திருப்பவர். இவர் தோஷம் நீக்க பரிகாரங்கள் செய்வது வழக்கம். இந்நிலையில் செஞ்சியை அடுத்த ஒதியத்தூரை சேர்ந்த பச்சையப்பன் மகன் திருமலை (வயது 35) சாமியார் சரவணனை அணுகி தனக்கு திருமணம் ஆவதற்கு பரிகார பூஜை செய்ய கேட்டுக் கொண்டார்.அதற்கு ஒரு லட்சம் பணம் பெற்றுக் கொண்டு செஞ்சியை அடுத்த பெருங்கப்பூர் ஏரி பகுதியில் உள்ள காளி கோவிலில் சாமியார் பரிகார பூஜைகள் செய்துள்ளார். ஆனால் பரிகார பூஜைகள் செய்து நீண்ட நாட்களாகியும் திருமண த்தடை நீங்காததால் விரக்தி அடைந்த திருமலை கடந்த 27-ந்தேதி மீண்டும் சாமி யாரை பூஜை செய்வதற்கு வரச் சொல்லி உள்ளார்.
பணம் வாங்கிக் கொண்டு திருமண தடை நீங்காததால் விரக்தி அடைந்த திருமலை சாமியாரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது .அப்போது ஆத்திரமடைந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாமியார் சரவணன் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் குடல் சரிந்த நிலையில் தனியாக விழுந்து கிடந்த சாமியாரை மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இது குறித்து சாமியார் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவு செய்த சத்தியமங்கலம் போலீசார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர். திரும லையை தனிப்படையினர் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் பதுங்கி இருந்த திருமலையை போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணா இன்று விழுப்புரம் வந்தார்.
- சிறு வயது முதலே ரஜினிகாந்த் யோகியின் காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கமான ஒன்று தான் என்றார்.
விழுப்புரம்:
பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கமாட்டார் என அவரது அண்ணன் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணா இன்று விழுப்புரம் வந்தார். விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அண்ணாமலை சைவ ஓட்டலை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் விழுப்புரத்தில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் வீட்டிற்கு சென்று அவரது தந்தைக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரிடம் நிருபர்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்காவது ஆதரவு அளிப்பாரா? என கேள்வி எழுப்பினர், அதற்கு சத்தியநாராயணா பதிலளிக்கும் போது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டார்.
இப்போதும் மட்டுமின்றி எப்போதும் அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கமாட்டார் என்றார். உத்திரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்தியநாத் காலில் விழுந்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது இது ஒன்றும் புதியது அல்ல. சிறு வயது முதலே ரஜினிகாந்த் யோகியின் காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கமான ஒன்று தான் என்றார்.
- குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
- மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்பு டைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் 452 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்கு 3சக்கர கை மிதிவண்டியினை கலெக்டர் பழனி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துணை கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்
- 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஓன்றியம், பனையூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், திருக்கோவில்களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், "மக்களை தேடி மருத்துவம்", "இல்லம் தேடிக் கல்வித்திட்டம்", "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "புதுமைப்பெண் திட்டம்", "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்தி ட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை பனையூர் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.
- மாணிக்கம் மொரட்டாண்டியில் வாடகை வீடு எடுத்து தங்கி பாய் வியாபாரம் செய்து வருகிறார்.
- புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.
விழுப்புரம்:
திருச்சி மாவட்டம் துவாரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 70). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள மொரட்டாண்டியில் வாடகை வீடு எடுத்து தங்கி பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பாய் வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்பினார். வானூர் அருகேயுள்ள டோல்கேட்டை கடந்து வீட்டிற்கு செல்ல முயற்சித்தார். அப்போது திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணிக்கத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், இன்று காலை அவர் இறந்து போனார். இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நட்பு காதலாக மாறியது. 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய சதீஷ்குமார்.
- உல்லாசமாக இருந்தது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). சேல்ஸ்மேன் வேலை செய்து வருகிறார். இவர் புதுவையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்தார். அப்போது அதே கடையில் பணியாற்றிய புதுவையை சேர்ந்த 21 வயது பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி, நட்பு காதலாக மாறியது. 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய சதீஷ்குமார், அவருடன் தனிமையில் உல்லாசமாக பலமுறை இருந்துள்ளார். சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை பார்ப்பதையும், பேசுவதையும் சதீஷ்குமார் நிறுத்திக் கொண்டார்.
அதிர்ச்சியடைந்த இளம்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ள சதீஷ்குமாரிடம் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து துணிக்கடைக்கு வேலைக்கு செல்வதையே சதீஷ்குமார் நிறுத்திவிட்டார். மேலும், அதிர்ச்சியடைந்த இளம்பெண், சதீஷ்குமாரை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார். தனக்கு நடந்த விஷயங்களை புகார் மனுவாக போலீசாரிடம் கொடுத்தார். அதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றிய சதீஷ்குமாருடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
புகாரைப் பெற்ற போலீசார், மரக்காணம் சதீஷ்குமாரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர் புகார் கொடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. மேலும், அவருடன் பழகவே இல்லை என்றும் கூறினார். இதையடுத்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுடன், சதீஷ்குமார் பலமுறை உல்லாசமாக இருந்தது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- சில இடங்களில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிர்கள் காய்ந்து போனது.
- பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
கடலூர்:
பண்ருட்டி பங்களா தெரு பிள்ளையார் கோவில் அருகில் பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து புதுப்பேட்டை சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த சம்பத் என்பவரது மகன் முருகன் (வயது 20) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து தங்கம், நல்ல நேரம், குமரன், விஷ்ணு உள்ளிட்ட 91 லாட்டரி சீட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
- புதுவை பகுதிகளிலிருந்து கடத்தி வரப்படும் மதுபானங்களில் விற்பனை எப்போதுமே அமோகமாக இருக்கும்.
- 15 கேன்கள் மற்றும் 100 மில்லிஅளவு கொண்ட 270 சாராய பாக்கெட்டுகள் இருந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி புதுவை மாநிலம் அருகில் உள்ளது. இதனால் புதுவை பகுதிகளிலிருந்து கடத்தி வரப்படும் கள்ளச்சாராயம் மற்றும் பீர் உள்ளிட்ட மதுபானங்களில் விற்பனை எப்போதுமே அமோகமாக இருக்கும். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன் மரக்கணம் அருகே எக்கியர் குப்பம் கடற்கரை ஓரமுள்ள வம்பா மணல் பகுதியில் விற்ற விஷ சாராயத்தை குடித்துவிட்டு எக்கியர் குப்பம், மரக்காணம் பகுதிகளில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.எஸ்.பி.,இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரையும் மேல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை தலை தூக்கி இருப்பதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர். மரக்காணம் அருகே கரிப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல கள்ளச்சாராய வியாபாரி வீட்டில் சாராயக்கேன்கள் மறைத்து வைத்திருப்பதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள்மற்றும் போலீசார் கரிப்பாளையம் கிராமத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு தோட்டத்தில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன்கள் மற்றும் 100 மில்லிஅளவு கொண்ட 270 சாராய பாக்கெட்டுகள் இருந்துள்ளது. போலீசார் இதனை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பிரபல கள்ளச்சாராய வியாபாரி லோகு மகன் ஞானவேல் வயது (24) என்பவரை கைது செய்து அவரிடம் இந்த சாராயம் எங்கிருந்து வந்தது. இதனை மொத்தமாக விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரிகள் யார் யார். அவர்கள் எங்கு உள்ளனர். மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் யார் யார் மொத்தமாக கள்ளச்சா ராயத்தை இறக்கி விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் பகுதியில் மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை தொடங்கி உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்திட திட்டமிடப்பட்டது.
- 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடை பெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், கோதண்டபாணிபுரம் ஊராட்சியில், கலெக்டர் பழனி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.1,000 பெற விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், மற்ற மாநிலங்கள் பாராட்டுகின்ற வகையிலும், பின்பற்றுகின்ற வகையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டமான, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், வருகிற செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்து, இவ்வாண்டிற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்கள். மேலும், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் வகையில், குடும்ப அட்டைதாரர் களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வழங் கப்பட்டு, விண்ணப்ப பதிவு முகாம் நடத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் வகையில், விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்திட திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 1027 விண்ணப்பப் பதிவு முகாம்கள் 24.7.2023 முதல் 4.8.2023 வரையும், 2-ம் கட்டமாக 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று கண்டாச்சிபுரம் வட்டம், கோதண்டபாணி புரம் ஊராட்சியில், கலை ஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், விண்ணப் பித்த பானுமதி விண்ணப் பத்தின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்நிகழ்வில், கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் கற்பகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- வேலை காரணமாக நேற்று விக்கிரவாண்டிக்கு மோட் டார் சைக்கிளில் வந்தார்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பாதிராப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 70). விவசாயி. இவர் சொந்த வேலை காரணமாக நேற்று விக்கிரவாண்டிக்கு மோட் டார் சைக்கிளில் வந்தார். அப்போது பேரணி கூட்ரோடு சாலையை கடக்க முயன்ற போது, சென்னை யில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தனசேகரன், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேேய பலி யானார். தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, தனசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






