என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் செஞ்சி மஸ்தான்"
- சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
- பெண் கல்வி உயர்வதற்கு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்.
செஞ்சி:
விழுப்புரம் வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி செஞ்சி ஒன்றியம் அப்பம்பட்டில் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சையத் உஸ்மான் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்ற வகையில் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், என சம அந்தஸ்துடன் சம நிலைக்கு சகோதரத்துடன் எல்லோருக்கும் எல்லாம் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஆட்சி செய்து வருகின்றார்.
அந்த வகையில் பெண் கல்வி உயர்வதற்கு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் மஸ்ஜித் பாபு, விவசாய சங்க மாதவன், விடுதலை சிறுத்தைகள் நன்மாறன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிருந்தா, காரைஅய்யனார் மற்றும் இஸ்லாமியர்கள் கூட்டணி கட்சியினர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப பதிவு செய்யப்பட்ட 103 பேர் ஏஜெண்டுகளாக உள்ளனர்.
- பதிவு செய்யப்பட்ட ஏஜெண்டுகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உக்ரைனில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய மாணவர்கள் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வேளாண் கல்லூரி பயின்ற மாணவர்கள் எந்தவித தடையும் இல்லாமல் தமிழக அரசால் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மருத்துவக் கல்லூரி படித்து திரும்பிய மாணவ- மாணவிகளுக்கு அவ்வாறு இல்லை. இங்கு நீட் தேர்வில் இருப்பதால் மத்திய அரசிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். விரைவில் அவர்களும் படிப்பை தொடர ஏற்பாடுகள் செய்யப்படும்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப பதிவு செய்யப்பட்ட 103 பேர் ஏஜெண்டுகளாக உள்ளனர். பதிவு செய்யப்பட்ட ஏஜெண்டுகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் போலி ஏஜெண்டுகளாக செயல்பட்ட 4 பேர் மீது இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
விஷ சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் அமைச்சருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட படத்தை வைத்து விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், திருமண நாள், பிறந்தநாள் போன்றதற்கு வாழ்த்து பெற பலர் வருகிறார்கள். பொது வாழ்வில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். அதை வைத்து முடிவு செய்ய முடியாது. சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
- உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழக காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.
- கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 'மே' மாதம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்ற கள்ளச்சாராயத்தை அருந்தி சுமார் 22 பேருக்குமேல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, முக்கிய தி.மு.க. நிர்வாகி மரூர் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, உலகமே வியக்கும் வண்ணம் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து, தமிழக காவல்துறை இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தியது.
அதைத் தொடர்ந்து, மது விற்பனை மற்றும் சட்டவிரோதமாக பார்களை நடத்துதல் சம்பந்தமாக காவல் துறை கைது செய்தவர்களில், ஒரு அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சி தி.மு.க. நிர்வாகிகளான, செஞ்சி பேரூராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினர் லட்சுமி என்பவரின் கணவர் வெங்கடேசன், 16-வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியின் கணவர் அண்ணாதுரை, நரசிங்க ராயன்பேட்டை கிளையின் தி.மு.க. செயலாளர் சிவக்குமார், சக்கராபுரம் பகுதி தி.மு.க. நிர்வாகி தண்டபாணி ஆகிய 4 தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 வருடங்களாக இவர்கள் கைது செய்யப்படாததை மாவட்ட மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார்.
- சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் ஆடி அமைச்சர் செஞ்சி மஸ்தான் அனைவரையும் மகிழ்வித்தார்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நரசிங்கராயன் பேட்டையில் உள்ள ஹசரத் சையத்பாபா தர்காவின் 26-ம் ஆண்டு சந்தன குடம் மற்றும் உருஸ்முபாரக் திருவிழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார்.
இதனை தொடர்ந்து அனைவருக்கும் பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.
இதில் செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், நகர செயலாளர் கார்திக், ஊராட்சி மன்ற தலைவர் பிலால், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர்கள் காசியம்மாள் ஏழுமலை, ஏழுமலை, பாலகிருஷ்ணன், கவுன் சிலர் ஜான்பாஷா, நிர்வாகிகள் ஜே.எஸ். சார்தார், தொண்டரணி பாஷா உள்ளிட்ட உரூஸ் கமிட்டியினர் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர்.
செஞ்சி:
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையின் அமைச்சராக பதவி வகித்து வருபவர் செஞ்சி மஸ்தான்.
இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பாக செஞ்சியில் நடந்த தி.மு.க. செயல்வீரர்களின் கூட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டு, நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீரை செஞ்சி நகர தி.மு.க. செயலாளர் பொறுப்பிலிருந்து தலைமைக்கழகம் விடுவித்தது.
இந்நிலையில் தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து இன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ள மொக்தியார் அலி மஸ்தான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பெரும்புகை மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் ரோமியன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மொக்தியார் அலி, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் ஆவார்.
இதேபோல விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ள ரிஸ்வான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பள்ளியம்பட்டு கிராமம் கபூர் சாகிப் தெருவில் வசிக்கும் ஷேக்வாகித் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் ஆவார்.
மேலும், ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகியுடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென தி.மு.க. தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, மருமகன் ரிஸ்வான் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம் நகராட்சியில் உள்ள 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.
- எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
கோவை:
இஸ்ரேல் நாட்டில் இருந்து 8 பேர் இன்று கோவை வந்தனர்.
அவர்களை விமான நிலையத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நடைபெறும் நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. அவசர தேவைக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 132 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். கோவையை சேர்ந்தவர்கள் 25 பேரும், மற்றவர்கள் சென்னை விமான நிலையம் மூலமும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தொடர்பு கொள்பவர்களை இல்லம் வரை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.
ஒரு சிலர் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றோம். தேவைபட்டால் தொடர்பு கொள்கின்றோம் என்று தெரிவித்து இருக்கின்றனர். விருப்பத்தின் அடிப்படையிலேயே அழைத்து வருகின்றோம்.
எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.
எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக் ஆகியோரும் வரவேற்றனர்.
- ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். அதில், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டார். மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் செஞ்சி மஞ்தானுக்கு புதிய பொறுப்பு வழங்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர ஆலோசனை செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இருளர்கள், நரிக்குறவர்கள், மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்கள் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் அனைத்துப் பகுதிகளும் ஆயிரம் பேருக்கு குறையாமல் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
தமிழக அரசின் ஓராண்டு சாதனை தெருமுனை கூட்டங்கள் நடத்தியும் பிரசாரம் செய்தும் அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு விளக்க வேண்டும். 18 வயது பூர்த்தி செய்யப்பட்டவர்களை தி.மு.க.வில் இணைக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு கார்டு வாங்கி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேது நாதன், மாசிலாமணி, செந்தமிழ் செல்வன், சீதாபதி சொக்கலிங்கம், திமுக தீர்மான குழு உறுப்பினர் சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரமணன், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் சேகர், நகர செயலாளர்கள் திண்டிவனம் கண்ணன்,செஞ்சி காஜா நசீர், அனந்தபுரம் சம்பத், சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார், சொக்கலிங்கம், தயாளன், நிர்மலா ரவிச்சந்திரன், யோகேஸ்வரி மணிமாறன், துணை சேர்மன் ராஜாராம் ,பழனி, ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், கவுன்சிலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






