என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்பட இதுவரை 6 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளது.
    • வழக்கு விசரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை ஆமர்வு நீதிமன்றம் உத்தரவு.

    அமைச்சர் பொன்முடி வழக்கில் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை துணை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதாகல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அப்போது அவர், கட்டாயப்படுத்தி தன்னிடம் கையெழுத்து வாங்கியதாக ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியை அளித்துள்ளார்.

    ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்பட இதுவரை 6 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், வழக்கு விசரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை ஆமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
    • 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.

    விழுப்புரம்:

    வேலூர் மாவட்டம் வாழப்–பந்–தல் கிரா–மத்தை சேர்ந்–த–வர் மொழிச்–செல்–வம் மனைவி பரி–மளா(வயது 33). இவ–ருக்கு கடந்த ஜூலை மாதம் கடு–மை–யான வயிற்று வலி ஏற்–பட்டது. இதை–ய–டுத்து அவர் சிகிச்–சைக்–காக முண்–டி–யம்–பாக்–கத்–தில் உள்ள விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வக்–கல்–லூரி மருத்–து–வ–ம–னையில் அனு–ம–திக்–கப்–பட்டார். அவ–ருக்கு கர்ப்–பப்–பை–யில் 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.

    அதைத் தொடர்ந்து கல்–லூரி முதல்–வர் கீதாஞ்–சலி தலை–மையில் மக–ளிர் மற்–றும் மகப்–பேறு துறை தலை–வர் ராஜேஸ்–வரி தலை–மை–யில் டாக்–டர்–கள் சங்–கீதா, இளை–ய–ராஜா, நித்–திய பிரி–ய–தர்–ஷினி, சிறு–நீ–ர–கத்–துறை நிபு–ணர்–கள் அரு–ண–கிரி, பாஸ்–கர், மயக்–க–வி–யல் நிபு–ணர் டாக்–டர்–கள் செந்–தில்–கு–மார், மகேந்–தி–ரன், திருச்–செல்–வம் உள்–ளிட்டோர் கொண்ட மருத்–துவ குழு–வி–னர் அறுவை சிகிச்சை செய்து, கட்–டியை அகற்றி சாதனை படைத்–த–னர்.

    இது–கு–றித்து முதல்–வர் கீதாஞ்–சலி கூறு–கை–யில், இது போன்ற அறுவை சிகிச்–சையைதனி–யார் மருத்–து–வ–ம–னை–யில் செய்–தால் ரூ.2 லட்சம் வரை செல–வா–கும். ஆகவே ஏழை, எளிய மக்–கள் இது போன்ற அறுவை சிகிச்–சை–க–ளுக்கு அரசு மருத்–து–வ–மனையை பயன்–ப–டுத்–திக் கொள்ள வேண்–டும் என்–றார். அப்–போது மருத்–துவ துணை கண்–கா–ணிப்–பா–ளர் புக–ழேந்தி, நிலைய மருத்–துவ அலு–வ–லர் ரவிக்–கு–மார், உதவி நிலை மருத்–துவ அலு–வ–லர் நிஷாந்த், நிர்–வாக அலு–வ–லர் சக்–தி–வேல் மற்–றும் அறுவை சிகிச்சை செய்த டாக்–டர்–கள் குழு–வி–னர் உடன் இருந்தனர்.

    • வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வருவார்.
    • செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வடபுத்தூரை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் செந்தில்குமார் (வயது 43). அதே ஊரில் கேபிள் வேலை செய்து வருகிறார். தினமும் காலையில் கேபிள் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வருவார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை, மாயமாகி விட்டார். அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே சந்தேகமடைந்த அவரது மனைவி ராதிகா செஞ்சி போலீசில் தனது கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கசாமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சித்திக் (வயது23). கடந்த ஏப்ரல் மாதம் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுங்காயங்களுடன் சென்னை இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது
    • தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சா வடிகளில் வசூலிக்கப்படும் கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்தது. இதனை கண்டித்தும், சுங்கச்சா வடிகளில் நடைபெறும் ஊழல்களை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விக்கி ரவாண்டி சுங்கச்சாவடியை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் முற்றுகையிட்டு இன்று காலை 11.30 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வாகனங்கள் செல்லும் பாதையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அவர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் திடீர் பரபரப்பு நிலவியது.

    • உடன் சென்ற நண்பரும் உயிரிழப்பு
    • கார்த்திக்ராஜா மணிகண்டன் அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு சென்றார்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கலை சேர்ந்தவர் குமார் மகன் கார்த்திக்ராஜா (வயது 28). தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவிக்கு பண்ருட்டியில் நேற்று குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக கார்த்திக்ராஜா அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (24) என்ற நண்பரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு சென்றார். குழந்தையை பார்த்து விட்டு இன்று பகல் 11 மணியளவில் பண்ருட்டியில் இருந்து பரிக்கலுக்கு புறப்பட்டனர். அப்போது திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள அரசூர் பாலம் அருகே காலை 11.30 மணிக்கு வந்த போது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி எதிரில் வந்த டாடா ஏஸ் வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக்ராஜா, மணிகண்டன் ஆகியோர் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

    தகவல் அறிந்த திருவெண்ணை நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பிய தந்தை, அவரது நண்பர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் பரிக்கல் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • செயற்பொறியாளர் எம்.சிவகுரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்
    • பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கண்டமங்கலம், நவமால்மருதூர், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ராமரெட்டிக்குளம், வெள்ளாழங்குப்பம், மிட்டாமண்டகப்பட்டு, ஆலமரத்துக்குப்பம், வடுக்குப்பம், பாக்கம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தும் விழுப்புரம் கலெக்டர்.

    விழுப்புரம்:

    மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கபடாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில், முதற்கட்டமாக விழுப்புரம் நகராட்சியில் 16 அரசுப்ப ள்ளிகளில் 1,902 பேருக்கும், திண்டிவனம் நகராட்சியில் 6 அரசுப்பள்ளிகளில் 261 பேருக்கும் என மொத்தம் 22 அரசுப்பள்ளிகளில் 2,163 மாணவ, மாணவியர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் காலை உணவு வழங்கப்பட்டது. இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 2-ம் கட்டமாக விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் பொன்முடி, செஞ்சியில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரால் துவக்கி வைக்க ப்பட்டது. அன்றிலிருந்து, மாணவ, மாணவியர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், விழுப்புரம் நகராட்சியில் 1 அரசுப்பள்ளியில் 293 பேருக்கும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 5 அரசுப்பள்ளி களில் 215 பேருக்கும், செஞ்சி பேரூராட்சியில் 5 அரசுப்பள்ளிகளில் 442 பேருக்கும், அனந்தபுரம் பேரூராட்சியில் 4 அரசுப்பள்ளி களில் 276 பேருக்கும், மரக்காணம் பேரூராட்சியில் 11 அரசு ப்பள்ளிகளில் 719 பேருக்கும், வளவனூர் பேரூராட்சியில் 4 அரசுப்ப ள்ளிகளில் 295 பேருக்கும், விக்கிரவாண்டி பேரூராட்சி யில் 3 அரசுப்பள்ளிகளில் 314 பேரு க்கும், அரகண்ட நல்லூர் பேரூராட்சியில் 3 அரசுப்பள்ளிகளில் 91 பேருக்கும், திருவெண்ணெ ய்நல்லூர் பேரூராட்சியில் 2 அரசுப்பள்ளிகளில் 249 பேருக்கும், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 அரசுப்பள்ளிகளில் 3,956 பேருக்கும், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் 69 அரசுப்பள்ளி களில் 3,628 பேருக்கும், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் 82 அரசுப்பள்ளிகளில் 2,756 பேருக்கும், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 60 அரசுப்பள்ளி களில் 2,517 பேருக்கும், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் 64 அரசுப்பள்ளிகளில் 3,405 பேருக்கும், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் 86 அரசுப்பள்ளிகளில் 4,517 பேருக்கும், வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 88 அரசுப்பள்ளி களில் 3,967 பேருக்கும், காணை ஊராட்சி ஒன்றியத்தில் 75 அரசுப்பள்ளிகளில் 5,180 பேருக்கும், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அரசுப்பள்ளிகளில் 4,025 பேருக்கும், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 78 அரசு ப்பள்ளிகளில் 4,363 பேருக்கும், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 83 அரசுப்பள்ளிகளில் 3,394 பேருக்கும், முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64 அரசுப்பள்ளி களில் 5,116 பேரு க்கும், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 72 அரசுப்பள்ளிகளில் 6,101 பேருக்கும் என மொத்தம் 1,026 அரசு ப்பள்ளிகளில் 55,819 மாணவ, மாணவி யர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 22 அரசுப்ப ள்ளிகளில் 2,163 மாணவ, மாணவி யர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 1,026 அரசுப்பள்ளி களில் 55,819 மாணவ, மாணவியர்கள் என 1,048 அரசு ப்பள்ளி களில் பயிலும் 57,912 மாணவ, மாணவிய ர்களுக்கு முதல் -அமை ச்சரின் காலை உணவு திட்ட த்தின்கீழ், காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    • ரூ.15 ஆயிரம் அபராதம் விதிப்பு
    • உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை முகப்பு பகுதியில் ஏராளமான ஓட்டல்கள், பங்க் கடைகள், டீக்கடைகள் உள்ளன. இங்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில்உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், கதிரவன், ஸ்டாலின், ராஜரத்தினம், அன்பு பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் முண்டியம்பாக்கத்தில் ஓட்டல்கள், பங்க் கடை, டீக்கடை ஆகிய வற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஓட்டல்களில் சுகாதார மற்ற முறையில், காலாவதியான உணவு பண்டங்களையும், பேக்கரியில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்த கூடாத உப்பு, நிறமூட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 5 ஓட்டல்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றாததால் அந்த ஓட்டல்களுக்கு மொத்தம் ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அறிவுறு த்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் சட்ட நடவடிக்கைகள் தொட ரும் என ஓட்டல் உரிமையா ளர்களுக்கு எச்சரித்தனர். இந்த ஆய்வின் போது ஓட்டல்களில் கெட்டுப்போன வெஜ் பிரியாணி, பால் பாக்கெட், கீரிம் கேக், குளிர் பானங்கள், தேதி குறிப்பிடா மலும், காலாவதியான பிஸ்கட், உணவு பண்டங்கள் சுமார் 150 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்து அனைத்தையும் கீழே கொட்டி அழித்தனர்.

    • 11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
    • கடந்த 22-ந்தேதி விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொன்முடி ஆஜரானார்.

    விழுப்புரம்:

    கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாகக் கனிமவளத்துறைக்கும் அமைச்சராக இருந்து வந்தார்.

    அந்தக் காலக்கட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான பொன்.கவுதமசிகாமணி, குமாா், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 போ் மீது கடந்த 2012-ம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த 22-ந்தேதி விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொன்முடி ஆஜரானார். பொன்.கவுதமசிகாமணி ஆஜராகவில்லை. பொன்.கவுதமசிகாமணி எம்.பி மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

    • விண்ணப் பத்தில் குறிப்பிட்டுள்ளவைகளை சரிபார்த் தார்.
    • விக்கிர வாண்டி தாலுகா முண்டி யம்பாக்கம், பாப்பனப்பட்டு ஊராட்சியில் ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தாலுகா வில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். விக்கிர வாண்டி தாலுகா முண்டி யம்பாக்கம், பாப்பனப்பட்டு ஊராட்சியில் நேற்று விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு செய்தார். இதில் கலை ஞர் மகளிர் உரிமை திட்ட த்தின் கீழ் ரூ. 1000 பெற விண்ணப்பத்தவர்க ளின் வீடுகளுக்கு நேரில் சென்று விண்ணப் பத்தில் குறிப்பிட்டுள்ள வங்கி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண் உள்ளிட்டவை களை கலெக்டர் சரிபார்த் தார். ஆய்வின் போது தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், வருவாய் ஆய்வா ளர்கள் தெய்வீகன், ராஜேஷ், வி.ஏ.ஓ. க்கள் அபி ராமி, விண்ணரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அசைவ ஓட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.
    • உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப் பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் எம்.ஆர்.எஸ். கேட் அருகே உள்ள அசைவ ஓட்டல் ஒன்றில், இன்று சிலர் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட னர். அதில், பழைய கோழி இறைச்சி இருந்ததை கண்டு, உணவு பாதுகாப்புதுறை அதி காரிகளுக்கு தகவல் தெரிவித்த னர். தகவலறிந்த, உணவு பாது காப்பு துறை அதிகாரிகள், திண்டிவனம் எம்.ஆர்.எஸ். கேட் அருகே உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு மாவட்ட நிய மன அலுவலர் டாக்டர். சுகந்ததன் தலைமை யில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில், 10 கிலோ நிற மேற்றப்பட்ட கோழி இறைச்சி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, அதை பறி முதல் செய்து அழித்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்ட கடைகளில் சோத னை நடத்தினார். சோதனை யில் பரோட்டா டிசைன் 32 கிலோ மற்றும் கார்பெண்ட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழ தார்கள் 150 கிலோ மற்றும் ப்ரூட் மிக்ஸர் ஜூஸ் 90 லிட்டர் போன்றவை கள் பறி முதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப் பட்டது. மேலும் 4 கடைகளுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப் பட்டது. இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடை பெறும் என உணவு பாது காப்புத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.

    ×