என் மலர்
விழுப்புரம்
- கைசெலவுக்கு பணம் இல்லாததால் திருடியது அம்பலம்
- ஆணியின் மதிப்பு ரூ.15 ஆயிரம்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காட்ராம்பாக்கத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய நிலங்களில் பாசனத்திற்காக திறந்துவிடப்படும், அவ்வாறு ஏரியில் உள்ள மதகில் திருகுமுறை ஆணியை திறந்தால் அதிலிருந்து பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும். இந்த திருகுமுறை ஆணியை மர்மநபர்கள் சில நாட்களுக்கு முன்பாக திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கிளியனூர் போலீசார் திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் காட்ரா ம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வெங்கடேசன் மகன் மதியரசன் (வயது 24) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் திருகுமுறை ஆணியை திருடிச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், கைச்செலவுக்கு பணம் இல்லாததால் இதனை திருடிச் சென்று பழைய இரும்பு கடையில் போட்டதாகவும், அந்த பணத்தை செலவு செய்துவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து அவரை கைது செய்த கிளியனூர் போலீசார், திருடிச் சென்ற திருகுமுறை ஆணியை எங்கு விற்பனை செய்தார். இந்த திருட்டு சம்பவத்தில் அவருடன் வேறு யாரேணும் சம்மந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுப்போன திருகுமுறை ஆணியின் மதிப்பு ரூ.15 ஆயிரம் என பொதுப் பணித்து றை அதிகாரிகள் தெரிவி த்தனர்.
- நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாமியார் தலையில் கல்லைப் போட்டு மருமகள் கொலை செய்தார்.
- பாஸ்கரின் மனைவி சங்கீதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாண்டியன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மனைவி சின்னபாப்பா (வயது 65). இவரது மகன் பாஸ்கர் (33). மாற்றுத்திறனாளி. அவரது மனைவி சங்கீதா ஆகியோர் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
மருமகள் சங்கீதாவின் நடத்தை தொடர்பாக மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அவ்வாறு நேற்று இரவு இருவருக்குமிடையே வாயத்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சங்கீதா அருகில் இருந்த கல்லை எடுத்து மாமியார் சின்னபாப்பாவின் தலையில் போட்டுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் கிழே விழுந்த சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே துடித்துக் கொண்டிருந்தார்.
அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூதாட்டி இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மூதாட்டி சின்னபாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாஸ்கரின் மனைவி சங்கீதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாமியாரின் தலையில் கல்லை போட்டு மருமகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
- 423 மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 423 மனுக்கள் பெறப்பட்டது அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68,400 மதிப்பீட்டில் தையல் எந்திரமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,35,400 மதிப்பீட்டில் திறன்பேசியும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36,200 மதிப்பீட்டில் 3 சக்கர மிதிவண்டியும், 12 பயனாளிகளுக்கு புதிரை வண்ணார் சாதிச்சான்றிதழ் என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். இக்கூட்டத்தில், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா , தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நேற்று இரவு குடிப்பதற்காக அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.
- மணிகண்டன் இறந்த நிலையில் தொங்கியபடி இருந்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் நேற்று இரவு குடிப்பதற்காக அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால், அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, வீட்டிற்குள் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மணிகண்டனின் மனைவி வீட்டிற்குள் சென்று பார்த்தார். வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு கொண்ட மணிகண்டன் இறந்த நிலையில் தொங்கியபடி இருந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருவெண்ணைநல்லூர் போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாஸ்கர் மாடி யில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அல்லாசாமி கோவில் தெரு வைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). சமையல்காரர். இவர் நேற்று இரவு வீட்டின் மாடியில் நடந்து கொண்டி ருந்தார். திடீரென நிலை தடுமாறிய பாஸ்கர் மாடி யில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பாஸ்கரை மீட்ட அவரது குடும்பத்தார், 108 ஆம்பு லன்ஸ் மூலம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பாஸ்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
- இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.
திண்டிவனம் நகரம் லயன் சங்கம் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் வெண்மணி, பட்டணம் ஆத்தூர் ஊராட்சி,ஊரல் ஊராட்சி ஆகியவை இணைந்து திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் சிறப்பு மருத்துவம்,எலும்பு முறிவு சிகிச்சை, மருத்துவம், பொது மருத்துவம் ,முகப்பேர் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் சிகிச்சை மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் சர்க்கரை நோய் மருத்துவம் ஆகியவை இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.
இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 500 பேர் கலந்து கொண்டனர். இதில் இதற்கான ஏற்பாடுகளை ஊரல், பட்டணம், வெண்மணியாத்தூர், ஒன்றிய கவுன்சிலர் ஊரல் சிலம்பரசன், ஊரல் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை ஆகியோர் செய்து இருந்தனர்.லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர்.
செஞ்சி:
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையின் அமைச்சராக பதவி வகித்து வருபவர் செஞ்சி மஸ்தான்.
இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பாக செஞ்சியில் நடந்த தி.மு.க. செயல்வீரர்களின் கூட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டு, நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீரை செஞ்சி நகர தி.மு.க. செயலாளர் பொறுப்பிலிருந்து தலைமைக்கழகம் விடுவித்தது.
இந்நிலையில் தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து இன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ள மொக்தியார் அலி மஸ்தான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பெரும்புகை மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் ரோமியன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மொக்தியார் அலி, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் ஆவார்.
இதேபோல விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ள ரிஸ்வான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பள்ளியம்பட்டு கிராமம் கபூர் சாகிப் தெருவில் வசிக்கும் ஷேக்வாகித் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் ஆவார்.
மேலும், ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகியுடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென தி.மு.க. தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, மருமகன் ரிஸ்வான் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம் நகராட்சியில் உள்ள 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சிவா அவரது வீட்டில் இருந்து அருகே உள்ள டீ கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- சிவா சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வேம்முண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சிவா (வயது 52). இவர் அவரது வீட்டில் இருந்து அருகே உள்ள டீ கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம்-திருவண்ணாமலை சாலை சிப்காட் அருகே எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவா சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் பால்கறக்க சென்றார்
- மேலும் மகேஸ்வரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வி,புதூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 70) முதியவர். இவர் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியில் வீடுகளில் உள்ள கறவை மாடுகளில் பால்கறக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் பால்கறக்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (43) முதியவர் வரும் வழியில் வந்து அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். அந்த தகராறில் முதியவர் இந்திரஜித்தை மகேஸ்வரன் பலமாக தாக்கினார். இந்த தாக்குதலில் முதியவர் கீழே சாய்ந்தார். இதனையடுத்து மகேஸ்வரன் சாலையில் கிடந்த கல்லை எடுத்து முதியவர் தலையில் போட்டு கொலை செய்தார். உடனே மகேஸ்வரன் அங்கிருந்து தப்பி சென்றார். காலையில் அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் இந்திரஜித் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து முதியவரை கொலை செய்த மகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான மகேஸ்வரன் மீது வளவனூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மகேஸ்வரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. வளவனூர் அருகே இன்று காலை பால்கறக்க சென்ற முதியவரை வழிமறித்து கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மளிகை கடையில் பதுக்கி விற்பனை செய்வதாக ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது.
- சேகரைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கத்தில் குட்கா பொருள்கள் மளிகை கடையில் பதுக்கி விற்பனை செய்வதாக ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்துஅந்தக் கடையில் திடீரென சோதனை செய்த போலீசார் அங்கு பதுக்கி விற்பனை செய்த 20 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப், குட்கா,போதை பொருட்களை பறிமுதல் செய்து அதே பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் சேகரை( வயது 55) கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மங்காளூர்- விழுப்புரம் தேசிய நெஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் மோசடி.
- ஓய்வுபெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.
2019ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, மங்காளூர்- விழுப்புரம் தேசிய நெஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், நடைபாதையில் 2.1 மீட்டருக்கு பதிலாக 0.90 மீட்டர் மட்டுமே டைல்ஸ் கற்களை பதித்து மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக பணியில் உள்ள 2 அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
- ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்பட இதுவரை 6 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளது.
- வழக்கு விசரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை ஆமர்வு நீதிமன்றம் உத்தரவு.
அமைச்சர் பொன்முடி வழக்கில் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை துணை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதாகல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர், கட்டாயப்படுத்தி தன்னிடம் கையெழுத்து வாங்கியதாக ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியை அளித்துள்ளார்.
ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்பட இதுவரை 6 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வழக்கு விசரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை ஆமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






