என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காஞ்சிபுரம் ரவுடி கொலை: காரில் தப்பிச்சென்ற 2 வாலிபர்கள் விக்கிரவாண்டி டோல்கேட்டில் கைது
    X

    காஞ்சிபுரம் ரவுடி கொலை: காரில் தப்பிச்சென்ற 2 வாலிபர்கள் விக்கிரவாண்டி டோல்கேட்டில் கைது

    • காரை போலீசார் சுற்றி வளைத்து காரில் இருந்த 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
    • காஞ்சிபுரம் ரவுடி தலையை துண்டாக வெட்டி கொலை செய்து வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட்டில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது வெள்ளை நிற ஹோண்டா கார் வந்தது. இந்த காரை போலீசார் சுற்றி வளைத்து காரில் இருந்த 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் குமரன் (வயது 21), விக்னேஷ் (23) என்பதும், இவர்கள் காஞ்சிபுரம் ரவுடி தலையை துண்டாக வெட்டி கொலை செய்து வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து கார் மற்றும் காரில் இருந்த கத்தி, ஹெல்மெட் போன்றவைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களிடம் 2 வாலிபர்களையும் விக்கிரவாண்டி போலீசார் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×