search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டண உயர்வை கண்டித்து விக்கிரவாண்டி டோல்கேட்டை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் 200 பேர் கைது
    X

    விக்கிரவாண்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பிய தே.மு.தி.க.வினரை படத்தில் காணலாம்.

    கட்டண உயர்வை கண்டித்து விக்கிரவாண்டி டோல்கேட்டை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர் 200 பேர் கைது

    • 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
    • சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், இதனை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் விக்கிரவாண்டி டோல்கேட்டை தே.மு.க.தி.க.வினர் இன்று காலை முற்றுகையிட்டனர். விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். விக்கிரவாண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார், தே.மு.தி.க.வினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இருந்தபோதும் தே.மு.தி.க.வினர் டோல்கேட்டை முற்றுகையிட முயற்சித்தனர். இதையடுத்து தே.மு.தி.க.வினரை கைது செய்த போலீசார், சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×