search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முள்வேலியை மாடு முட்டியதால் இரு குடும்பத்தினரிடையே தகராறு-2 பேர் கைது
    X

    முள்வேலியை மாடு முட்டியதால் இரு குடும்பத்தினரிடையே தகராறு-2 பேர் கைது

    • சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே பையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ் (வயது 30), பிரகாஷ் (40). இருவரும் உறவினர்கள். இவர்களின் வீடுகளுக்கு நடுவில் முள்வேலி உள்ளது. பிரகாஷ் வீட்டில் வளரும் மாடு முள்வேலியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தோஷ் குடும்பத்திற்கும், பிரகாஷ் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் குடும்பத்தார் 4 பேர் மீதும், பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் குடும்பத்தார் 4 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பிரகாஷ், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×