என் மலர்
திருநெல்வேலி
- திருநெல்வேலியில் உள்ள பிரபல இருட்டுக் கடைக்கு சென்றார்.
- அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்வா சாப்பிட்டார்.
நெல்லை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சென்றனர்.
அவர்களை கடை உரிமையாளர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள் வழங்கிய அல்வாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார்.
அதன்பின் இருட்டுக் கடை என பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கடை உரிமையாளர்களிடம் கேட்டார்.
முந்தைய காலத்தில் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அல்வா விற்பனை நடைபெற்றது என்றும், அப்போது மக்கள் அந்தக் கடையை 'இருட்டாக இருக்கும் கடை' எனக்கூறி அழைத்ததால் 'இருட்டுக் கடை' என பெயர் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அல்வா தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து கேட்டு தெரிந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பணம் கொடுத்து அல்வா வாங்கிச் சென்றார்.
- விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
- தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் "வாழ்த்துகள்" என்று எழுதி கையொப்பமிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு காரில் புறப்பட்டார். அவருக்கு பாளை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, உற்பத்தியையும் தொடங்கி வைத்தார்.
பின்னர், தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் "வாழ்த்துகள்" என்று எழுதி கையொப்பமிட்டார்.
பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தித்திறன் கொண்ட விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிறுவனத்திலும் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- மகாத்மா காந்தி தினசரி சந்தை, வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
நெல்லை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு காரில் புறப்பட்டார். அவருக்கு பாளை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கங்கைகொண்டான் சிப்காட் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்து, விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அரசினர் சுற்றுலா மாளிகை செல்கிறார்.
பின்னர் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
அவர் அங்கிருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கத்தையும் திறந்து வைக்கிறார்.
மேலும் நயினார்குளம் தெற்கு பகுதியில் ரூ.11.03 கோடி மதிப்பீட்டிலான மேம்படுத்தப்பட்ட பணி களையும் திறந்து வைக்கிறார்.
அதன்பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி எதிரே நேருஜி கலையரங்கில் தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
அப்போது நெல்லை மத்திய மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க.வுக்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர், நகர செயலாளர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வட்ட செயலாளர்கள் என மொத்தம் 155 நிர்வாகிகளை அவர் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
அப்போது, வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்த லில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்.
கலந்துரையாடலின்போது நிர்வாகிகளின் கருத்துகளையும் அவர் கேட்கிறார். இதில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு ஏற்கனவே அடையாள அட்டை தி.மு.க. தலைமையில் இருந்து வழங்கப்பட்டு விட்டது.
இந்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் நேருஜி கலையரங்கம் அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அப்போது அவர் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைகின்றனர்.
தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை சுற்றுலா மாளிகையில் வைத்து மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காலை 9.30 மணி அளவில் புறப்பட்டு பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு செல்கிறார். அங்கு புதிதாக ரூ.78 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 6 மாடி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டமான ரூ.1,060 கோடியில் முடிவுற்றுள்ள தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற 24 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஏற்கனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட மேற்கு புறவழிச்சாலை திட்டத்தின் பகுதி-1 திட்டப்பணி உள்ளிட்ட 20 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் விழா மேடையில் எழுச்சியுரை ஆற்றும் அவர், 75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
2 நாட்கள் சுற்றுப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ரூ.9 ஆயிரத்து 368 கோடி மதிப் பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் போது வழி நெடுகிலும் நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
மேலும் வண்ணார்பேட்டையில் தொடங்கி, விழா மேடை வரையிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு-ஷோ' சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
அப்போது பொதுமக்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்க ஏதுவாக இரும்பு தடுப்புகள் பொருத்தப் பட்டுள்ளது. மேலும் செல்லும் வழியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மேடை களும் அமைக்கப்பட்டுள்ளது.
- மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
- நெல்லையில் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப் பயணம்.
நெல்லை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லையில் நாளை முதல் 2 நாட்கள் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக நாளை பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து நெல்லைக்கு காரில் புறப்படுகிறார்.
அவருக்கு பாளை கே.டி.சி. நகரில் வைத்து நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து கங்கைகொண்டான் சிப்காட் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு டாடா பவர் சோலர் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைக்கிறார். விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
பின்னர் அங்கிருந்து நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகை வரும் முதலமைச்சர், மாலை 5 மணியளவில் புறப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பாளை மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து அங்கு வைத்து காணொலி காட்சி வாயிலாக டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறார். மேலும் நயினார்குளம் தெற்கு பகுதியில் மேம்படுத்தப்பட்ட பணிகளையும் காணொலி காட்சி வாயிலாகவே திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து பாளை நேருஜி கலையரங்கில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைகின்றனர். பின்னர் இரவில் அரசினர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி அளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாளை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் காணொலி காட்சி வாயிலாக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற 24 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் நெல்லை நகருக்கான மேற்கு புறவழிச்சாலை பகுதி-1 திட்டப்பணி உள்ளிட்ட 20 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் 75 ஆயிரத்து 84 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இந்த 2 நாட்கள் சுற்றுப்பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ரூ.9 ஆயிரத்து 368 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக 7-ந்தேதி காலை முதலமைச்சர் மருத்துவ கல்லூரி மைதானத்திற்கு புறப்படும்போது வழிநெடுகிலும் நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
மேலும் வண்ணார்பேட்டையில் தொடங்கி விழா மேடை வரையிலும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு- ஷோ' நிகழ்த்துகிறார். அப்போது பொதுமக்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்க ஏதுவாக இரும்பு தடுப்புகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் செல்லும் வழியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த மேடைகளில் முதலமைச்சர் ஏறி பொதுமக்களிடையே கையசைக்க உள்ளார்.
அவரது வருகையையொட்டி பிரமாண்ட வரவேற்பு பதாகைகள், வழிநெடுகிலும் கட்சி கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு, முக்கிய மேம்பாலங்கள் வர்ணம் பூசப்பட்டு பளிச்சென காட்சியளிக்கிறது.
பாளை மார்க்கெட்டை சுற்றிலும் தூய்மை பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. நேருஜி கலையரங்கம் அருகே சாலை விரிவுப்ப டுத்தப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்த சாலையோர தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
- இன்று காலை குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது.
- டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். இவர் ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், டவுன் கண்டியப்பேரி பகுதியை சேர்ந்த சுமதி தேவி என்பவருக்கும் திருமணம் ஆகி 1 மகன் உள்ளார். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சுமதி தேவிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று 45 நாள் ஆனதற்கான தடுப்பூசியை சுமதி தேவி, டவுனில் தொண்டர் மேல தெரு அம்மா உணவகம் அருகே உள்ள பாலர்வாடியில் நடந்த முகாமில் செலுத்தியுள்ளார்.
பின்னர் நேற்று இரவு குழந்தை தூங்கியது. இன்று காலை குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. உடனே ஆம்புலன்ஸ் மூலமாக கண்டியப்பேரி அரசு ஆரம்ப ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழந்தையை ஆம்புலன்ஸ் மூலமாக டாக்டர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அங்குள்ள டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்த போது வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுமதி தேவி மற்றும் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர். கண்டியப்பேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதால் தான் குழந்தை இறந்தது என்று அவர்கள் புகார் கூறி ஆதங்கப்பட்டனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இன்று காலை 8.30 மணிக்கு கண்டியப்பேரி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை சுயநினைவு இல்லாமல் இறந்த நிலையில் தான் வந்தது என்று தெரிவித்தனர்.
மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போட்டதில் ஏதேனும் பிரச்சனையா? என்பதை சுகாதாரத்துறையினரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி விட்டனர்.
- அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாகும்.
- இதுவரை இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழை 105 நாட்கள் நீடித்துள்ளது.
நெல்லை:
தமிழகத்திற்கு பெருமழை யையும், செழுமையையும் அளிக்கும் வடகிழக்கு பருவமழை நேற்றுடன் விலகியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கோடைகால மழை, தென்மேற்கு பருவமழை உள்ளிட்ட பருவமழை காலத்தில் தமிழகம் மழை பெற்றாலும், வடகிழக்கு பருவமழைக்கு ஈடாகாது. ஒவ்வொரு ஆண்டும் மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31 வரையிலான காலக்கட்டம் வடகிழக்கு பருவமழை காலமாகும்.
இந்த காலகட்டத்தில் தமிழகம் மட்டுமே அதிக மழை பெறும். இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு 105 நாட்கள் நீடித்துள்ளது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 98 நாட்கள் நீடித்திருந்தது.
வரலாற்றில் வடகிழக்கு பருவமழை மிக விரைவாக விலகிய ஆண்டு 1994-ம் ஆண்டாகும். அந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிக விரைவாக டிசம்பர் 14-ந்தேதியே தமிழ்நாட்டில் இருந்து விலகியுள்ளது.
அதேபோல வரலாற்றில் வடகிழக்கு பருவமழை மிக தாமதமாக விலகிய ஆண்டு 1933 ஆகும். 1933-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய பருவமழை 1934-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி தான் விலகியது.
கடந்த 1992-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை வரலாற்றிலேயே மிக குறைவாக 51 நாட்கள் மட்டுமே மழை நீடித்துள்ளது. 1992-ம் ஆண்டில் குறைவான நாட்கள் மழை பெய்தாலும் அந்த ஆண்டில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென்மாவட்டங்கள் உருக்குலைந்தது.
அந்த ஆண்டில் நவம்பர் மாதம் 14-ந்தேதி நெல்லை மாவட்டம் காக்காச்சியில் ஒரே நாளில் 965 மில்லிமீட்டர் மழை பெய்து தமிழகத்தை அதிரவைத்து விட்டது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் ஒரே நாளில் 540 மில்லிமீட்டர் மழை பதிவானது.
அம்பாசமுத்திரம் பகுதியில் 366 மில்லிமீட்டரும், அதே நாளில் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் 312 மில்லிமீட்டர் மழையும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 365 மில்லிமீட்டரும் மழை பதிவானது.
கடந்த அக்டோபர் முதல் இன்று வரையிலான கால கட்டத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து எஸ்டேட்டில் 3 ஆயிரத்து 436 மில்லிமீட்டர் (344 சென்டி மீட்டர்) மழை பதிவாகியுள்ளது. இது நாட்டிலேயே வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு பகுதியில் பதிவான அதிகபட்ச மழையாகும்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
- சாமித்தோப்பு பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 17-ந் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தலைமை பதி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்னதானம், அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 24-ந்தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் வைபவம் நடந்தது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,
25-ந்தேதி இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் திருவிழாவான 26-ந்தேதி இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனியை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர் சென்றது.
வடக்கு வாசல் முன்பு தேர் வந்ததும் பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, பழம் சுருள் வழங்கினர். தேரோட்ட விழாவில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் சாமித்தோப்பு பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து இழுக்கப்பட்ட தேர் மாலையில் திருநிலையை அடைந்தது.
இன்று இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கொடி இறக்கியதும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு போதிப்பும், சிறப்பு வேண்டுதலும் நடைபெறுகிறது.
விழாவில் அனைத்து சிறப்பு பணிவிடைகளையும் தலைமை குரு பால.பிரஜாபதி அடிகளார் தலைமையில் குருமார்கள் பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு, ஜனா. யுகேந்த், ஜனா. வைகுந்த், நேம்ரிஷ் செல்லா, அம்ரிஷ் செல்லா, கவுதம் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
- சைலேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் செந்திலை வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் (வயது 42).
கடந்த 2003-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த சைலேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
அப்போது தன்னுடன் பணியாற்றும் சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி கிராமத்தை சேர்ந்த செந்தில் (44) என்ற போலீஸ்காரருடன் சேர்ந்து இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, போக்சோ, தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.
இதனிடையே செந்தில் ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், புகாருக்குள்ளான 2 போலீஸ் காரர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். தகவல் அறிந்து 2 பேரும் தலைமறைவான நிலையில் நாகர்கோவிலில் பதுங்கியிருந்த சைலேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர் விசாரணையில் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மோகன் (50 ) என்பவரும் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் செந்திலை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், போலீஸ்காரர்கள் 2 பேரையும் 'சஸ்பெண்டு' செய்து உத்தரவிட்டுள்ளார். அதனை ஜெயிலில் இருக்கும் சைலேசிடம் இன்று போலீசார் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் செந்தில் வீட்டின் முன்பு அவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டதற்கான தகவலை அந்த கிராம நிர்வாக அதிகாரி மூலமாக சுவற்றில் போலீசார் ஒட்டிச்சென்றனர்.
- நாளை குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- சென்னையில் இருந்து நெல்லை மாநகர காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை:
நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், முக்கிய சாலைகள் மற்றும் பஸ், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று முதல் குடியரசு தினம் வரை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்திப்பு ரெயில் நிலையத்திலும் தண்டவாளங்கள், பார்சல் அலுவலகங்களில் போலீசார் சோதனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து நெல்லை மாநகர காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா, சந்திப்பு உதவி கமிஷனர் தர்ஷிகா ஆகியோர் மேற்பார்வையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ரெயில்வே போலீசாரும் அங்கு விரைந்து வந்து சோதனை செய்தனர்.
மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் ரெயில் நிலைய காத்திருப்பு அறைகள், பார்சல் அறைகள், பார்சல்கள் உள்ளிட்டவற்றை மெட்டல் டிடெக்டர் மூலமாகவும், மோப்பநாய் மூலமாகவும் போலீசார் சோதனையிட்டனர். மேலும் ரெயிலுக்கு காத்திருந்த பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.
குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் வண்ண வண்ண மின் விளக்குகளால் ரெயில் நிலையம் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தது. இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால், மிரட்டல் வந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த செல்போன் எண் 'சுவிட்ச் ஆப்' என்று வந்துள்ளது.
இதையடுத்து மர்ம நபர்கள் மதுபோதையில் புரளியை கிளப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். எனினும் மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நெல்லை வந்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
களக்காடு:
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.சி. ரோடு பகுதியில் விவசாய கூட்டுறவு வங்கி உள்ளது.
இந்த வங்கியில் கடந்த 17-ந்தேதி மதியம் முகமூடி அணிந்து வந்த 4 பேர் கும்பல் அங்கிருந்த வங்கி ஊழியர்கள் 5 பேரை அரிவாள், துப்பாக்கியை காண்பித்து மிரட்டி சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை அள்ளி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உல்லால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 8-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம், கேரளம், மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சென்றது.
இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிராமத்தைச் சேர்ந்த முருகாண்டி (வயது 36), ஜோசுவா ஆகிய 2 பேரை களக்காட்டில் மங்களூரு போலீசார் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்கம், ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், மும்பை பதிவு எண் கொண்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 துப்பாக்கி, 3 குண்டுகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இதில் தொடர்புடைய கண்ணன் மணி என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர்கள் 3 பேரும் கர்நாடகா சிறப்பு போலீஸ் படையினரிடம் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நெல்லை வந்தனர்.
அவர்கள் இரவோடு இரவாக முருகாண்டியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 16 கிலோ எடை கொண்ட வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை கைப்பற்றி உள்ளனர். இதுதொடர்பாக முருகாண்டியின் தந்தையிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த டாப் சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
- புல்லட் ராஜா யானையை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாக இரவோடு இரவாக கொண்டு சென்றனர்.
நெல்லை:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் புல்லட் ராஜா என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. அந்த 1 மாதத்தில் 48-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை புல்லட் யானை சேதப்படுத்தியது.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை சாப்பிட்டு விட்டு விளைநிலங்களை சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.
கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் நீலகிரி, பொள்ளாச்சி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சுமார் 75 பணியாளர்கள் கொண்ட வனக்குழுவினர் மற்றும் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த மாதம் 27-ந் தேதி சேரம்பாடி பகுதியில் புல்லட் யானை முகாமிட்டிருப்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று புல்லட் யானை மீது மயக்க ஊசியை செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த டாப் சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
சுமார் 1 மாதம் அங்கு வைத்து யானை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கிருந்து பாதுகாப்பான வனப்பகுதிக்கு கொண்டு சென்று யானை விடப்படும் என வனத்துறையினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் நேற்றிரவு முகாமில் இருந்து கனரக லாரியில் ஏற்றப்பட்ட புல்லட் யானை, சாலை மார்க்கமாக நெல்லையை வந்தடைந்தது.
தொடர்ந்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையிலான வனத்துறையினர் இந்த புல்லட் ராஜா யானையை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாக இரவோடு இரவாக கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மாஞ்சோலை வழியாக கோதையாறு அடர் வனப்பகுதியில் இறக்கிவிட வனத்துறையினர் பத்திரமாக யானையை அழைத்து சென்றனர்.
யானை கொண்டு வரப்பட்டதையொட்டி, களக்காடு முண்டந்துறை புலிகள் அம்பாச முத்திரம்காப்பக துணை இயக்குனர்கள் இளையராஜா, ராமேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர் யானை வரும் வழியில் எல்லாம் மின்சாரத்தை துண்டித்து மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். மேலும் நெல்லை வனத்துறை, மருத்துவ குழுவினரும் அவர்களுடன் செல்கின்றனர்.
ஏற்கனவே தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கு விடப்பட்டது. தற்போது மேலும் ஒரு காட்டு யானையான புல்லட் யானை கோதையாறு பகுதியில் வனத்துறையினர் விட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
கோதையாறு அடர் வனப்பகுதியானது அகத்தியமலை யானைகள் காப்பகமாக ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று இரவோடு இரவாக புல்லட் யானை அங்கு கொண்டு வரப்பட்டு அடர் வனப்பகுதியில் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
- நான் குறிப்பிட்டு பேசிய வேறு ஒரு ஞானசேகரனின் பெயரை குற்றவாளி ஞானசேகரனுடன் ஒப்பிட்டு சர்ச்சையாக்கி விட்டனர்.
- இந்த 2 பேர் ஒப்பீடு போல் நிறைய சம்பவங்களை ஒப்பிட்டு உள்ளேன்.
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் தம்பி ஞானசேகரன் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:
கடந்த 10-ந்தேதி நிரஞ்சன் என்ற தம்பி இந்தியாவின் வெற்றி என்று ஒரு புத்தகம் வெளியிட்டார்.
அதை வெளியிடப்போகும்போது நீங்கள் சொன்ன பெயருடைய ஒருவர் துண்டு போட வந்தார்.
அவர் ஞானசேகரன் என்றதும் பயமாக இருக்கிறது. நீ அந்த ஞானசேகரனா... என்றேன். அவரும் நான் அவர் இல்லை என்று கூறினார்.
அந்த ஞானசேகரனை கை காட்டி தான் என் தம்பி ஞானசேகரன் பெயர் கொண்டவர் தான் இந்த தவறு செய்துள்ளார். அதற்குத்தான் 3 ஐ.பி.எஸ். பெண் அதிகாரிகள் போட்டு இருக்கிறோம் என்று சொன்னேன்.
நான் குறிப்பிட்டு பேசிய வேறு ஒரு ஞானசேகரனின் பெயரை குற்றவாளி ஞானசேகரனுடன் ஒப்பிட்டு சர்ச்சையாக்கி விட்டனர்.
இந்த 2 பேர் ஒப்பீடு போல் நிறைய சம்பவங்களை ஒப்பிட்டு உள்ளேன். வீடியோவில் இன்னும் நிறைய இருக்கிறது. அதை நீங்கள் போய் கேளுங்கள். அதை எடுத்து போடுவதற்கு தயாரா என்று கேளுங்கள் என்று அவர் கூறினார்.






